என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐடி ஊழியர்"

    • தரமணி சரக உதவி ஆணையாளர் அமீர் அகமது இதைப்பார்த்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • புவனேஷ் உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை அருகே பள்ளிக்கரணை, ராஜலட்சுமி, 8-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் புவனேஷ். (வயது 27).

    இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் சர்வீஸ் டெஸ்க் அனலிஸ்ட் ஆக இரண்டறை ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவர் வழக்கமாக மதியம் 3.30 மணி அளவில் பணிக்கு வந்து இரவு 1:30 மணியளவில் பணி முடித்து வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    நேற்று வழக்கம்போல் மதியம் 3.30 மணிக்கு பணிக்கு வந்தார், இவருடன் நாக வெங்கட சாய் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    நேற்றுஇரவு 12 மணியளவில் சிகரெட் பிடிப்பதற்காக அவர் வேலை செய்யும் பத்தாவது மாடியில் இருந்து உடன் வேலை செய்யும் நண்பர் நாக வெங்கடசாய் இருக்கும் கீழ் தளத்திற்கு வந்தார். இருவரும் புகை பிடித்தவாறே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    சிகரெட் புகைத்து விட்டு மீண்டும் மேலே வேலை செய்யும் இடத்திற்கு புவனேஷ் சென்றார். சற்று நேரத்தில் யாரோ மேலிருந்து கீழே விழும் சப்தம் கேட்கவே பணியாளார்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது புவனேஷ் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்தனர். கீழே விழுந்ததில் அவரது தலை சிதைந்து, கைகள் உடைந்து துண்டாகி இறந்து கிடப்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் இரவு ரோந்தில் அலுவலில் இருந்த தரமணி சரக உதவி ஆணையாளர் அமீர் அகமது இதைப்பார்த்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் புவனேஷ் உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இறந்து போன நபர் சுமார் 10லட்சம் ரூபாய் வரை வங்கி மூலம் கடன் வாங்கி உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

    • சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகள் விருந்தினர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன.
    • விடுதிகளின் அருகில் அறை கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    புயல் மழை காரணமாக சென்னையில் தரை தளங்களில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் உடனடியாக வடிந்து விடும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மழை ஓய்ந்து 4 நாட்களாகியும் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை.

    வீடுகளில் இருந்து வெள்ளம் வடிந்த இடங்களில் கூட வீடுகளுக்கும் அனைத்து பொருட்களும் சேதமாகி குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. ஓரிரு நாட்கள் மாடிகளில் இருந்த வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள் உணவு, குடிநீர் பிரச்சினை காரணமாக மின்சாரம் இருக்கும் உறவினர்களில் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல இயலாதவர்கள் லாட்ஜுகளில் அறை எடுத்து தங்குகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகள் விருந்தினர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து ஓட்டல்களுக்கு செல்கிறார்கள். முன்பதிவு செய்து சென்றாலும் பல லாட்ஜுகளில் அவர்கள் தங்குவதற்கு அறை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் விடுதிகளின் அருகில் அறை கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். சிலர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

    சென்னையில் லாட்ஜுகளுக்கு தட்டுப்பாடு நிலவியதால் பல லாட்ஜுகளில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் ஆக உயர்ந்தது. மேலும் ஓட்டல்களில் அறை கிடைத்தாலும் பால் மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்களின் உணவுத் தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

    • பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.
    • அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.

    மதுரை:

    மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்தவர் விஜய் நாராயணன். ஐ.டி. ஊழியரான இவர் கடந்த சில ஆண்டு களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கற்று தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் டேக் வாண்டோ மூலம் கற்களை குறைந்த நிமிடத்தில் கை யால் உடைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.

    இந்நிலையில் புதிய முயற்சியாக விஜய் நாராயணன் தனது வீட்டின் மாடியில் எரியும் 29 சிமெண்ட் கான்கிரீட் கற்களை 30 விநாடிகளில் அடுத்தடுத்து உடைத்து சாதனை படைத்து உள்ளார். இவரது சாதனையை கின்னஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.

    இதன் மூலம் இந்தியாவில் குறைந்த வினாடியில் அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்பு இந்த சாதனையை பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் 25 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை செய்திருந்தார். தற்போது விஜய் நாராயணன் மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.

    • தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர்
    • என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க நீதிபதி ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாடியிருக்கிறார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

    24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, கிட்டத்தட்ட 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

     

    மேலும் மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

    தூக்கிட்டு தற்கொலை செய்வதற்குப் பலமாதங்களாகத் திட்டமிட்டுள்ள சுபாஷ், இறப்பதற்கு முந்தைய தினம், இறக்கும் தினம், இறப்பதற்கு முன் என மூன்று காலங்களாக பிரித்துத் தான் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் அட்டவணையாகப் பட்டியல் போட்டு அதை வீட்டின் சுவர் மீது மாட்டி வைத்துள்ளார். அதில் உள்ளவற்றை முடித்தன் அடையாளமாக வரிசையாக டிக் செய்து அவர் குறித்து வைத்துள்ளார்.

     

    அந்த அட்டவணையில் தனது போனில் உள்ள கைரேகை பாஸ்வேர்டை அகற்றுவது, கார், பைக் மற்றும் ரூம் சாவிகளை குளிர்சாத பிரிட்ஜ் உள்ளே வைப்பது, ஆபீஸ் வேலையை முடித்து கம்பெனி லேப்டாப், சார்ஜரை அவர்களிடம் ஒப்படைப்பது போன்றவை குறிக்கப்பட்டு அதை முடிந்ததன் அடையாளமாக அதில் டிக் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தனது சேமிப்பை பாதுகாப்பு செய்வது, இறப்பதற்கு முன் குளிப்பது, தற்கொலை கடிதத்தை மேஜை மேல் வைப்பது வரை அதில் குறித்துவைத்து அனைத்தையும் முடித்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.   


    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

    • மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
    • திருமண தகராறு வழக்குகளில் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.

    24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

     

    விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

    பெங்களூரு போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

     

    எனவே நிகிதா சிங்கானியா குடும்பத்தினர் எங்கிருந்தாலும் 3 நாட்களுக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் என உத்தரப் பிரதேசம் சென்ற பெங்களூரு போலீஸ் அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

    அந்த நோட்டீஸில், கிடைத்த ஆதாரங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையிலும் சம்பவ சூழ்நிலை காரணமாக உங்களிடம் விசாரணை செய்யவேண்டியது அவசியமாக உள்ளது.

    எனவே நீங்கள் எங்கிருந்தாலும் பெங்களூரில் உள்ள விசாரணை அதிகாரி முன் இன்னும் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

    இதற்கிடையே டிசம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றம், தங்கள் கணவர்களுக்கு எதிராக பெண்கள் தாக்கல் செய்யும் திருமண தகராறு வழக்குகளில் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து எச்சரித்தது.

    செவ்வாயன்று நடைபெற்ற வேறு ஒரு விவாகரத்து வழக்கில், நிரந்தர ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய எட்டு அளவுகோல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. 

    • 24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார்.
    • வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டனர்

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.

    24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

    விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.

    மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதுல் மீதான வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

     

    இதற்கிடையே சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகினர். அவர்கள் மூன்று நாட்களுக்குள் போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டில் பெங்களூரு போலீஸ் நேற்று முன் தினம் நோட்டீஸ் ஒட்டியது.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஹரியானாவின் குருகிராமில் இருந்த நிகிதாவையும், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் இருந்த அவரது தாய் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைக்கு அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.   

    முன்னதாக சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகமாகவே இருப்பதாக தனது பதிவில் குற்றம் சாட்டிய அதுல் சுபாஷ்,

    நான் எவ்வளவு கடினமாக உழைத்து, என் வேலையில் சிறந்து விளங்குகிறேனோ, அவ்வளவு அதிகமாக நானும் என் குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுகிறோம், மிரட்டி பணம் பறிக்கப்படுகிறோம், மேலும் இதை ஒட்டுமொத்த சட்ட அமைப்பும் ஊக்குவிக்கிறது.

    இப்போது, நான் போனதால், பணமும் இருக்காது, என் வயதான பெற்றோரையும், என் சகோதரனையும் துன்புறுத்த எந்த காரணமும் இருக்காது என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

    மேலும் மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஹரிஷ் கிருஷ்ணா சூதாட்டம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையானார்.
    • கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அங்குள்ள அடகு கடையில் விற்று பணமாக மாற்றினார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், காஜி பேட்டையை சேர்ந்தவர் ஹரிஷ் கிருஷ்ணா (வயது 35). இவர் தெலுங்கானா மாநிலம், காஜில ராமத்தில் தங்கி இருந்து தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் மாதம் ரூ.1.10 லட்சம் சம்பளம் பெற்று வந்தார்.

    சூதாட்டம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையானார். இதனால் ஹரிஷ் கிருஷ்ணா உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கினார்.

    இவருடைய நடவடிக்கைகளை பிடிக்காத அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டு சென்றார். கடனை அடைக்க கொள்ளையனாக மாற முடிவு செய்தார்.

    இந்த நிலையில் தன்னுடன் வேலை செய்யும் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஹரிஷ் கிருஷ்ணா மணிகண்டன் வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்தார். இதன் மூலம் மணிகண்டன் வீட்டில் இல்லாததை அறிந்த ஹரிஷ் கிருஷ்ணா முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து மணிகண்டன் வீட்டிற்கு சென்றார்.

    வீட்டில் மணிகண்டனின் மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் கத்தியை காட்டி நகைகளை கேட்டார். அவர் நகைகளை கொடுக்க மறுப்பு தெரிவித்தார். நகைகளை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதில் பயந்துபோன மணிகண்டனின் மனைவி வீட்டில் இருந்த நகைகளை எடுத்து ஹரிஷ் கிருஷ்ணாவிடம் கொடுத்தார்.

    கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அங்குள்ள அடகு கடையில் விற்று பணமாக மாற்றினார்.

    இதுகுறித்து மணிகண்டன் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஹரிஷ் கிருஷ்ணாவை கைது செய்தனர்.

    • ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வரை உழைத்து சமீபத்தில் ரூ. 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராகியுள்ளார்.
    • நான் வெறுமையாகவும் அலட்சியமாகவும் உணர்கிறேன்.

    ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழில்நுட்ப ஊழியர், பதவி உயர்வுக்காக தனது திருமணம் எவ்வாறு முறிந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.

    சமூக ஊடகமான Blind தளத்தில் பெயர் குறிப்பிடாத அந்த நபர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அந்த நபர் மூன்று ஆண்டுகளாக, மிகவும் கடினமாக உழைத்ததாகவும், சில நேரங்களில் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் கூட உழைத்து கடைசியாக சமீபத்தில் ரூ. 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    ஆனால் வேலையில் மும்முரமாக இருந்ததால் தான் தவறவிட்ட பல முக்கியமான குடும்ப நிகழ்வுகளை அவர் இத்தருணத்தில் நினைவு கூர்ந்தார். பதவி உயர்வு ஆசை, தனது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு நெருக்கடியான நிலைக்கு கொண்டு வந்தன என்று பகிர்ந்துள்ளார். தற்போது தான் பெற்ற பதவி உயர்வு குறித்து வெறுமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

    தனது பதிவில் அவர் கூறியதாவது,

    3 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையில் சேர்ந்தேன். அங்கு பதவி உயர்வுக்காக அதிக எண்ணிக்கையிலான பணிகளை அங்கு செய்து வந்தேன். நிறுவனத்தின் ஐரோப்பா - ஆசியா குழுவை ஒருங்கிணைக்கும் அளவுக்கு உயர்ந்தேன். அதனால் என் மீட்டிங்- கள் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடைகின்றன.

    என் மகள் பிறந்த நாளில், கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் நான் மீட்டிங்ளில் இருந்தேன். என் மனைவிக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு இருக்கும்போது, மீட்டிங்கில் இருந்த பிரச்சனையால் அவளை உடன் இருந்து மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் அவள் விவாகரத்து கேட்டாள்.

    இன்று எனது பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்டது என்ற நல்ல செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் வெறுமையாகவும் அலட்சியமாகவும் உணர்கிறேன்.

    என் வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்வதை நிறுத்த முடியவில்லை. இந்த குழப்பமான காலத்தில், என்னிடம் உள்ளதைப் பற்றி நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இல்லையா? ஆனால் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? என்று தெரிவித்துள்ளார். 

    ×