என் மலர்
நீங்கள் தேடியது "ஒருநாள் கிரிக்கெட்"
- ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது இல்லாமல் போய் விட்டது என பந்து வீச்சாளர்கள் ஆதங்கம்.
கிரிக்கெட் சமீப வருடங்களாக பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் பேலன்ஸ் இல்லாமல் போய்விட்டது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக வகையில்தான் விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் பந்து வீச்சாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
50 ஓவர் போட்டிகளில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றபோது ஒரு புதிய பந்துதான் பயன்படுத்தப்படும். 30 ஓவர்களுக்குப் பிறகு பந்து பழையதாகிவிடும். இதனால் நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இன்காரணமாக கடைசி 10 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
பின்னர் இரண்டு பந்துகள் பயன்படுத்த ஐசிசி அனுமதி அளித்தது. அதன்படி ஒரு பக்கத்தில இருந்து ஒரு புதிய பந்தும், மற்றொரு பக்கத்தில் இருந்து ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படும். இதனால் ஒரு பந்து 25 ஓவர்தான் பயன்படுத்தப்படும்.
இதன் காரணமாக ரிவர்ஸ் ஸ்விங்-கை பார்க்க முடியாமல் போனது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடைசி 10 ஓவரில் சர்வ சாதாரணமாக ரன்கள் குவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் கடுமையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் அணி, இரண்டு பந்திற்குப் பதிலாக ஒரு பந்தை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.
இதனால் ஐசிசி ஒரு பந்தை பயன்படுத்துவது குறித்து யோசனை செய்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர்களால் கடும் நெருக்கடி கொடுக்க முடியும்.
- முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்னில் சுருண்டது.
- இங்கிலாந்து 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் 39.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 202 ரன்னில் சுருண்டது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் 68 ரன்களும், ரூதர்போர்டு 63 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வில் ஜேக்ஸ் (73), ஹாரி ப்ரூக் (43 அவுட் இல்லை), ஜோஸ் பட்லர் (58 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 32.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதி (நாளைமறுதினம்) நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.
அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
- 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆட்டநாயகி விருதை தீப்தி சர்மாவும், தொடர் நாயகியாக ரேணுகா தாகூரும் தட்டி சென்றனர்.
மகளிர் கிரிக்கெட் போட்டியின் ஒருநாள் தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வந்தனர். முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 9 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஷெமைன் காம்பெல்லே - சினெல்லே ஹென்றி ஜோடி அணியை மீட்டனர். 46 ரன்கள் எடுத்த போது காம்பெல்லே அவுட் ஆனார். அடுத்து வந்த ஜைதா ஜேம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி அரை சதம் விளாசினார். அவர் 61 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 162 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மந்தனா 4 ரன்னிலும் ஹர்லீன் தியோல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து பிரதிகா ராவல் 18, கவுர் 32, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 என வெளியேறினார்.
இறுதியில் தீப்தி சர்மா (39) மற்றும் ரிச்சா கோஷ் (23) அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் 28.2 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
- கடந்த ஆண்டில் மந்தனா, 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார்.
- மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் இந்தியாவுக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் மூன்று அரைசதங்களும் அடங்கும். மேலும் பந்து வீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது வென்றவர்கள்
ஸ்டாஃபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) - 2012
சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2013
சாரா டெய்லர் (இங்கிலாந்து) - 2014
மெக் லானிங் (ஆஸ்திரேலியா) - 2015
சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2016
ஏமி சாட்டர்த்வைட் (நியூசிலாந்து) - 2017
ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2018
எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) - 2019
லிசெல் லீ (தென்னாப்பிரிக்கா) - 2021
நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் (இங்கிலாந்து) - 2022
சாமரி அதபத்து (இலங்கை) - 2023
ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2024
- டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
- இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே.
துபாய்:
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. இதில் பரம எதிரிகள் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டமும் (பிப்.23) அடங்கும்.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று மாலை தொடங்கியது. குறைந்த விலை ரூ.2,900ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது.
இதில் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் வாங்கத் தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே. ஒரு மணி நேரத்திற்குள் அந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. இதே போல் துபாயில் நடக்கும் முதலாவது அரைஇறுதிக்கான டிக்கெட்டுகளும் விற்று விட்டன. அரைஇறுதி முடிந்த பிறகே இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும்.
- இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
- இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் மீண்டும் ஜோரூட் களமிறங்குகிறார். கிட்டதட்ட 14 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ரூட் இடம் பிடித்துள்ளார். இவர் கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடினார்.
முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-
பென் டக்கெட், பில் சால்ட் (கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத்.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
- இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி:
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ரோர் அணிக்கு திரும்பி உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் ரோகித் சர்மா மேற்கொண்டு 134 ரன்கள் எடுத்தால் சச்சினின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இந்தத் தொடரில் ரோகித் சர்மா இன்னும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11,000 ரன்களை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்துவார். சச்சின் டெண்டுல்கர் 276வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.
ரோகித் சர்மா தற்போது 257 இன்னிங்ஸ்கள் விளையாடி, 10,866 ரன்களை குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி தனது 222-வது இன்னிங்சில் அந்த சாதனையை நிகழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இந்திய தரப்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 52 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 87 ரன்கள் குவித்த சுப்மன் கில் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் விராட் கோலி மற்றும் முகமது சமியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
2022 முதல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களில் முகமது ஷமி மற்றும் விராட் கோலியை சுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
முகமது சமி, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ஷ்ரேயாஸ் 4, ரோகித் சர்மா, குல்தீப் யாதவ் 3 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.
- 2-வது இன்னிங்சின் போது மின்விளக்கு பழுதானதால் கிட்டதட்ட 35 நிமிடங்கள் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியின் போது கட்டாக் மைதானத்தில் உள்ள மின்விளக்கு பழுதானது. இது குறித்து விரிவான விளக்கம் கேட்டு ஒடிசா கிரிக்கெட் வாரியத்திற்கு ஒடிசா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2-வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்விளக்குகள் எரியாததால் 35 நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடக்கிறது.
- இரு அணி வீரர்களும் அகமதாபாத்துக்கு சென்றடைந்தனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத்துக்கு சென்றடைந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் ஹோட்டலில் தேநீர் அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளம் ரசிகர் கேப்டன் ரோகித் சர்மாவிடம் தனது நெஞ்சில் ஆட்டோகிராப் போடும் படி கேட்டுக்கொண்டார். மேலும் அந்த சிறுவனிடம் ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா சிறிது நேரம் உரையாடினர்.
பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வாலிடமும் ஆட்டோகிராப் வாங்கிங் கொண்டு அந்த சிறுவன் அங்கிருந்து கிளம்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
- கராச்சி ஆடுகளம் பவுலிங்கை விட பேட்டிங்குக்கே அதிகமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றுள்ளது.
கராச்சி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில், மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1998-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. குறுகிய காலத்தில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.
கடைசியாக 2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தி மகுடம் சூடியது. அத்துடன் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நிறுத்துவதாக அறிவித்த ஐ.சி.சி., ஓரிரு ஆண்டுக்கு பிறகு சில நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் கோரிக்கையை ஏற்று சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை மீண்டும் நடத்தும் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டி தற்போது நடத்தப்பட உள்ளது. இதன்படி 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று முதல் அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் அதுவும் துபாயிலேயே நடத்தப்படும். மாறாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வராவிட்டால் இறுதிப்போட்டி லாகூரில் அரங்கேறும்.
இந்த கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
சாம்பியன்ஸ் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். அதனால் ஒவ்வொரு அணியினரும் நீயா-நானா? என்று வரிந்து கட்டி நிற்பார்கள்.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்திய இந்தியா, பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு தொடரில் வாகை சூடிய நியூசிலாந்து மற்றும் 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இடம்பெறவில்லை. ஆனாலும் பலம் வாய்ந்த அணியாகவே காணப்படுகிறது.
முதல் நாளான இன்று (புதன்கிழமை) கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த வாரம் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானை இரண்டு முறை தோற்கடித்து மிரட்டியது. அதனால் அவர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், வில் யங், டிவான் கான்வே, கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், சான்ட்னெர், பிரேஸ்வெல், மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்கே உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் வலுசேர்க்கிறார்கள். பந்து தாக்கி நெற்றியில் காயமடைந்த ரச்சின் ரவீந்திரா உடல்தகுதியை எட்டும்பட்சத்தில் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலிமையடையும்.
உள்ளூர் சூழல் பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சமாகும். முத்தரப்பு தொடரில் சோபிக்காத முன்னாள் கேப்டன் பாபர் அசாம் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இந்த போட்டியிலும் அவர் தொடக்க வீரராக இறங்குவதை கேப்டன் ரிஸ்வான் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் காயத்தில் இருந்து மீண்டு முழு உடல்தகுதியை எட்டி விட்டதாகவும் ரிஸ்வான் கூறினார். மற்றபடி ரிஸ்வான், சல்மான் ஆஹா, ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இவ்விரு அணிகள் இதுவரை 118 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 53-ல் நியூசிலாந்தும், 61-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றுள்ளது.
மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கராச்சி ஆடுகளம் பவுலிங்கை விட பேட்டிங்குக்கே அதிகமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 353 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது நினைவு கூரத்தக்கது.போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
நியூசிலாந்து: கான்வே, ரச்சின் ரவீந்திரா அல்லது வில் யங், வில்லியம்சன், டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, ஜேக்கப் டப்பி, வில்லியம் ஓ ரூர்கே.
பாகிஸ்தான்: பாபர் அசாம், பஹர் ஜமான், சாத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆஹா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்18 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.60 கோடியாகும். இதில் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.19½ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.9¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
- முதலில் பேட் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது.
அல் அமராட்:
உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தகுதி சுற்றின் ஒரு பகுதியான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக்2 ஓமனின் அல் அமராட் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா - ஓமன் இடையிலான ஒரு ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
அடுத்து 123 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது. இதனால் அமெரிக்கா 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓவர் எதுவும் குறைக்கப்படாமல் முழுமையாக நடந்த ஒரு நாள் போட்டி ஒன்றில் மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை அமெரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 125 ரன்களை இலக்காக நிர்ணயித்து எதிரணியை 87 ரன்னில் முடக்கி வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 40 ஆண்டு கால சாதனையாக அமெரிக்கா முறியடித்தது.
மேலும் ஓமன் தரப்பில் 5 பவுலர்களும், அமெரிக்கா தரப்பில் 4 பவுலர்களும் பந்து வீசினர். இவர்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்கள். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், முழுமையாக நடந்த ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட பந்து வீசாதது இதுவே முதல் நிகழ்வாகும்.