search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பங்கு சந்தை"

    • நேற்றைவிட இன்று 692.89 புள்ளிகள் குறைந்து 78,956.03 வர்த்தகம் நிறைவடைந்தது.
    • 208 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 24139 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.85 சதவீதம் குறைவாகும்.

    அதானி குழுமம்- செபி தலைவர் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்), இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) நேற்று கடும் சரிவை சந்திக்கும் என வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தினர்.

    ஆனால் நேற்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை வர்த்தகம் பின்னர் உயர்ந்து காணப்பட்டது. இறுதியாக மிகப்பெரிய அளவில் இல்லாமல் சற்று சரிவுடன் முடிவடைந்தது.

    ஆனால் இன்று இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 208 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை நேற்று சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து 79,552.51 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது.

    அதிகபட்சமாக 79,692.55 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. குறைந்தபட்சமாக 78,889.38 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நேற்றைவிட இன்று 692.89 புள்ளிகள் குறைந்து 78,956.03 வர்த்தகம் நிறைவடைந்தது. இது சுமார் 0.87 சதவீதம் குறைவாகும்.

    இந்திய பங்குச் சந்தை நி.ஃப்டி நேற்று 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 5 புள்ளிகள் குறைந்த 24,342.35 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக நிஃப்டி 24,539.95 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக நிஃப்டி 24116.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    இறுதியாக 208 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 24139 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.85 சதவீதம் குறைவாகும்.

    இன்று ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு 3.26 சதவீதம் (54.20) குறைந்து 1,605.90 ரூபாயாக உள்ளது. டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், ஜேஎஸ்எடபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன.

    டைட்டன், ஹெச்.சி.எல். டெக், நெஸ்லே, சன் பார்மா, ரிலையன்ஸ், மஹிந்த்ரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டது.

    • ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, இன்போசிஸ், இந்துதாஸ் யுனிலிவர், எல்&டி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
    • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, மாருதி சுசிகி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் சரிவடைந்தன.

    இந்திய பங்கு சந்தை, மும்பை பங்கு சந்தை வர்த்தகம் கடந்த வாரம் இறுதியில் உச்சத்தை தொட்டு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இன்று மும்பை பங்குசந்தை வர்த்தம் இதுவரை இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் 76 ஆயிரம் புள்ளிகளை தொட்டு வர்த்தகம் புதிய உச்சத்தை அடைந்தது.

    உச்சத்தை அடைந்த மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் மதியம் 12 மணிக்குப் பிறகு சரிவை சந்தித்தது. இறுதியாக மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 75,390 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

    இன்று காலை 75,655.46 சென்செக்ஸ் புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 76,009.68 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. இது இதுவரை இல்லாத வகையிலான உச்சமாகும். குறைந்த பட்சமாக 75175.27 புள்ளிகளில் வர்த்தமானது.

    நேற்று 75410.39 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 75,390.50 புள்ளிகளுடன் அதாவது நேற்றைவிட 19.89 புள்ளிகள் சரிவை சந்தித்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, இன்போசிஸ், இந்துதாஸ் யுனிலிவர், எல்&டி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்சிஎல் டெக் போன்ற நிறுவன பங்குகள் இன்று ஏற்றத்தை கண்டன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, மாருதி சுசிகி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    அதேபோல் இந்திய பங்குச்சந்தை நிஃப்டி இதுவரை இல்லாத அளவிற்கு 23110.80 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்று குறைந்த பட்சமாக 22871.20 புள்ளிகளில் வர்த்தகமானது. நேற்று 22957.10 புள்ளிகளுடன் இந்திய பங்குசந்தை வர்த்தகம் முடிவடைந்தது.

    இன்று நிஃப்டி 23038.95 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது, நிஃப்டி 22932.45 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

    • மதியம் 75,636.50 புள்ளிகளை எட்டி வர்த்தகமானது. இதுதான் இதுவரை இல்லாத வகையில் உச்சமாகும்.
    • இந்திய பங்குசந்தை நிஃப்டி இதுவரை இல்லாத அளவிற்கு 23,026.40 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.

    மும்பை பங்கு சந்தை நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 75,499.91 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. இறுதியில் 75,418.04 சென்செக்ஸ் புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

    இன்று காலை 9.15 மணிக்கு மும்பை பங்கு சந்தை 75,335.45 சென்செக்ஸ் புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. பின்னர் ஏற்றம் இறக்கமாக வர்த்தகம் இருந்து வந்தது. 75,560 புள்ளிகளை தொட்டது. பின்னர் 75.274 புள்ளிகளுக்கு இறங்கியது. மதியம் 2.30 மணியளவில் 75,636.50 புள்ளிகளை எட்டி வர்த்தகமானது. இதுதான் இதுவரை இல்லாத வகையில் உச்சமாகும். அதன்பின் படிப்படியாக குறைந்த வர்த்தகமானது.

    இறுதியாக வர்த்தகம் 75,410.39 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. நேற்றோடு 7.65 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் முடிவடைந்தது. இன்று குறைந்தபட்ச வர்த்தக புள்ளி 75244.22 ஆகவும், அதிகபட்சமாக 75636.50 ஆகவும் இருந்தது.

    அதேபோல், இந்திய பங்குசந்தை நிஃப்டி இதுவரை இல்லாத அளவிற்கு 23,026.40 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது. பின்னர் படிப்படியாக குறைந்து 22957.10 நிஃப்டி புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

    இன்று காலை 22614.10 புள்ளிகளுடன் இந்திய பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 22908.00 புள்ளிகளுடன் வர்த்தகமானது. அதிகபட்சமாக 23026.40 புள்ளிகளுடன் வர்த்தகமானது.

    மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் பங்கு ஆதாயம் (ஈவுத்தொகை) கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பட்ஜெட் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்காகும். வரவிருக்கும் அரசின் வருவாய் உயர்வுக்கு இது உதவியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    பவர் ஃபினான்ஸ் கார்பரேசன், ஹெச்ஏஎல், ஆர்இசிஎல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டிவிஸ் மோட்டார் கம்பெனி, அதானி டோட்டல் கியாஸ், அதானி க்ரீன் எனர்ஜி, கெய்க் (இந்தியா) ஹவெல்ஸ் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, எல்&டி, பாரத் ஏர்டெல், பிபிசிஎல் போன்ற பங்குகள் ஏற்றத்தை கண்டன.

    டோரண்ட் பார்மா, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், சோமாட்டோ, அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், பஜாஜ் ஹோல்டிங்ஸ், சோலமண்டலம் இன்வெஸ்ட், ஐஆர்எஃப்சி, டெக் மகிந்திரா போன்ற பங்குகள் சரிவை சந்தித்தன.

    • ஜனவரி மாதம் சென்செக்ஸ் முதல்முறையாக 73 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
    • நேற்று இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

    இன்று, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி, 1000 புள்ளிகள் சரிந்து 70,419 எனும் அளவில் வர்த்தகமாகியது.

    தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி 341 புள்ளிகள் சரிந்து 21,255 எனும் அளவில் வர்த்தகமாகியது.

    2024 ஜனவரி மாதம், சென்செக்ஸ், அதன் வரலாற்றில் முதல்முறையாக 73,000 புள்ளிகளை தொட்டது குறிப்பிடத்தக்கது.

    நேற்று (ஜனவரி 22) திங்கட்கிழமையாக இருந்தும், உத்தர பிரதேச மாநில அயோத்தியா நகரில், இந்துக்களின் கடவுளான பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    இதையொட்டி, நேற்று பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இம்மாதத்தின் முதல் சில நாட்களில் புதிய உச்சங்களை தொட்ட பங்கு சந்தை அதே நிலையில் நீடிக்க முடியாமல் தள்ளாடியது.

    ஜனவரி 23 செவ்வாய்கிழமையான இன்று பெரும் சரிவை சந்தித்தது.

    இம்மாதம், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்த எஃப்ஐஐ (FII) எனும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீட்டை திரும்ப பெற்று கொண்டதன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • நிஃப்டி 22,115 எனும் புதிய உயரத்தை எட்டியது
    • சென்செக்ஸ் 73,402 எனும் புதிய உயரத்தை எட்டியது

    ஜனவரி 15, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.

    பங்கு சந்தையில் பதிவு பெற்ற முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் பங்குகள் உயர்வை தொட்டன.

    நிறுவனங்களின் நம்பிக்கையூட்டும் காலாண்டு வருவாய், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு, நேர்மறையான உலக பொருளாதார குறியீடுகள், மக்களவை தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய கூடிய சாத்தியக்கூறு உள்ளிட்டவை பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    தேசிய பங்கு சந்தையின் (NSE) குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty), 22,053 என தொடங்கி முதல் முறையாக 22,115 எனும் புதிய உயரத்தை எட்டி, 22,097 எனும் அளவில் நிறைவடைந்தது.

    மும்பை பங்கு சந்தையின் (BSE) குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex), 73,049 என தொடங்கி முதல் முறையாக 73,402 எனும் புதிய உயரத்தை எட்டி 73,327 எனும் அளவில் நிறைவடைந்தது.

    இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சந்தையில் முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்தது
    • 5 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் தருவதில் முன்னிலை வகித்தன

    கடந்த 2023ல் இந்திய பங்கு சந்தை சுமார் 20 சதவீதம் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தந்தது.

    சந்தை மூலதன மதிப்பின்படி அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் நாடுகளின் பங்கு சந்தைக்கு அடுத்த இடத்தில் இந்தியா உருவெடுத்தது.

    மியூச்சுவல் ஃபண்டுகளின் பெருக்கம், அயல்நாட்டு முதலீடு அதிகரிப்பு, பொருளாதார நிலையில் வளர்ச்சி, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.

    சந்தை முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடி எனும் அளவில் அதிகரித்தது.

    2023ல் சென்செக்ஸ் குறியீட்டில் 5 பங்குகள் மிக அதிக லாபம் ஈட்டி தந்தன.

    பெருமளவு உயர்வை கண்ட பங்குகள்:

    1. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) - 102 சதவீதம்

    2. என்டிபிசி லிமிடெட் (NTPC) - 96 சதவீதம்

    3. லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) - 69 சதவீதம்

    4. பவர் க்ரிட் கார்ப்பரேஷன் (Power Grid) - 55 சதவீதம்

    5. அல்ட்ரா டெக் சிமென்ட் (Ultra Tech Cement) - 51 சதவீதம்

    பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • 5 நிறுவன பங்குகள் முதலீட்டிற்கு 50 சதவீத லாபத்தை ஈட்டி தந்தன
    • இவ்வருடம் முதல்முறையாக நிஃப்டி 21 ஆயிரத்தை கடந்து வர்த்தகமாகியது

    2020 கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு விதித்த ஊரடங்கு உத்தரவினால் பல இந்தியர்கள் வீட்டிலிருந்தே வருவாயை அதிகரிக்கும் வழிகளை தேடி வந்தனர். அவர்களுக்கு பங்கு சந்தை ஒரு நல்வாய்ப்பாக அமைந்ததனால், அப்போதிலிருந்தே இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    இவ்வருடத்தின் முதல் வர்த்தக நாளான ஜனவரி 2 முதல் கடந்த டிசம்பர் 21 காலம் வரை இந்திய பங்கு சந்தையில் பல பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டி தந்தன.

    குறிப்பாக 5 நிறுவன பங்குகள் 50 சதவீதத்தை கடந்து வர்த்தகமாகி உள்ளன.

    டாடா மோட்டார்ஸ் - ஜனவரி 2 அன்று 394 - டிசம்பர் 21 அன்று 708

    என்டிபிசி - ஜனவரி 2 அன்று 168 - டிசம்பர் 21 அன்று 301

    பஜாஜ் ஆட்டோ - ஜனவரி 2 அன்று 3573 - டிசம்பர் 21 அன்று 6246

    எல் அண்ட் டி - ஜனவரி 2 அன்று 2089 - டிசம்பர் 21 அன்று 3424

    கோல் இண்டியா - ஜனவரி 2 அன்று 224 - டிசம்பர் 21 அன்று 355

    முதல்முறையாக, மும்பை பங்கு சந்தை பிஎஸ்ஈ (BSE) குறியீட்டு எண் 70,000 தொட்டதும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி (Nifty) 21,000 தொட்டதும் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

    இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ், முதலீட்டாளர்களுக்கு 44 சதவீதம் லாபம் ஈட்டி தந்தது. ஜனவரி 2 அன்று 2715 என தொடங்கி டிசம்பர் 21 அன்று 3850 என வர்த்தகமாகியது.

    ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், உலகளாவிய பொருளாதார மந்தநிலை உட்பட பல சிக்கல்களுக்கு இடையே பங்கு சந்தை வலுவாக இருந்ததை சாதனையாக குறிப்பிடுகின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.

    • அந்நிய முதலீட்டாளர்கள் பெறுமளவில் இந்திய பங்குகளில் முதலீடு செய்கின்றனர்
    • முதல் முறையாக மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 70 ஆயிரத்தை தாண்டியது

    கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பலருக்கு தொழில் முடக்கமும் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் வருவாயை அதிகரிக்க பலர் இந்திய பங்கு சந்தைகளில் பணத்தை முதலீடு செய்ய தொடங்கினர்.

    2020 வரை சீரான அளவில் இருந்து வந்த முதலீட்டாளர் எண்ணிக்கை, அதற்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது. இதனால் பங்கு சந்தையில் பல முன்னணி பங்குகள் அதிக விலைக்கு வர்த்தகம் ஆக தொடங்கி தற்போது வரை முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

    உலகளாவிய பொருளாதார மந்த நிலை, சீன பொருளாதார சரிவு, அமெரிக்க-ரஷிய உறவில் சீர்கேடு, ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் என பல காரணிகள் இருந்தாலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்களும், இந்திய முதலீட்டாளர்களும் தொடர்ந்து விருப்பம் காட்டி வருகிறார்கள்.

    கடந்த மாதம், 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மூன்றில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், தெலுங்கானாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் வென்றது.

    இப்பின்னணியில், வார முதல் நாளான இன்று இந்திய பங்கு சந்தையில், வர்த்தக துவக்கத்திலேயே மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 69,825 எனும் அளவில் வர்த்தகமானது.

    சிறிது நேரத்தில் முதல் முறையாக 70,048 எனும் புதிய உச்சத்தை தொட்டது.

    கடந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கி அடுத்த காலாண்டிற்கான இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தங்கள் கணிப்பை அதிகரித்து அறிக்கை வெளியிட்டது. இத்துடன் உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதும், இந்திய பொருளாதாரத்தின் வலுவான உள்கட்டமைப்பும், இந்திய தொழில் நிறுவனங்களில் நிகர லாபம் அதிகரித்திருப்பதும் பங்கு சந்தையின் உயர்வுக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

    ×