என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிஃப்டி"

    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தது.
    • நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 35 நிறுவன பங்குகள் உயர்ந்தது.

    தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று சரிவை சந்தித்தது. இந்நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்று உயர்ந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,087.39 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் படிப்படியாக சென்செக்ஸ் ஏறத்தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 77,082.51 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 77,747.46 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 317.93 புள்ளிகள் சரிந்து 77,606.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் உயர்ந்தது. 10 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சற்று உயர்ந்தது.

    நேற்று நிஃப்டி 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,433.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் நிஃப்டி ஏறுமுகமாக இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,412.20 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,646.45 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 105.10 புள்ளிகள் சரிந்து 23,591.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 35 நிறுவன பங்குகள் உயர்ந்தது. 15 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    • சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.
    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.

    தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 78,017.19 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,966.59 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் இறங்குவதுமாகவே சென்செக்ஸ் இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 77,194.22 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 78,167.87 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 728.93 புள்ளிகள் சரிந்து 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 6 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது.

    நேற்று நிஃப்டி 23,668.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,685.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் இறங்குவதுமாகவே நிஃப்டி இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,451.70 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,736.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 181.80 புள்ளிகள் சரிந்து 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 41 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 9 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.
    • நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 30 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 77,984.38 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 78,385.79 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக சென்செக்ஸ் இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 77,745.63 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 78,741.69 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்ந்து 78,017.19 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 10 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சற்று உயர்வை சந்தித்தது.

    நேற்று நிஃப்டி 23,658.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,762.75 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக நிஃப்டி இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,601.40 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,869.60 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 10.30 புள்ளிகள் உயர்ந்து 23,668.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 30 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 20 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    தொடர்ந்து 7 ஆவது நாளாக ஏற்றம் கண்டு வரும் சென்செக்ஸ் 0.04 சதவீதமும் நிஃப்டி 0.04 சதவீதமும் உயர்ந்து இன்று வர்த்தகம் ஆனது.

    • சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்தது.
    • நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்தது.

    இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.

    இன்றைய நாள் முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்து 77,984.38 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்து 23,658.95 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் சென்செக்ஸ் 1.4 சதவீதமும் நிஃப்டி 1.32 சதவீதமும் உயர்ந்து வர்த்தகம் ஆனது.

    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது.
    • நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது.

    இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று மதியம் 1,007 புள்ளிகள் உயர்ந்து 76,456 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக சென்செக்ஸ் 899.02 புள்ளிகள் உயர்ந்து 76,348.06 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று மதியம் 309 புள்ளிகள் அதிகரித்து 23,216 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக நிஃப்டி 283.05 புள்ளிகள் உயர்ந்து 23,190.65 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இன்று 1% உயர்ந்து வர்த்தகம் ஆனது. 

    • ஹெச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் உயர்வை சந்தித்தன.
    • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை சந்தித்தன.

    இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 74,169.95 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் சுமார் 450 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    இன்று குறைந்தபட்சமாக 74,480.15 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 75,385.76 புள்ளிகளிலும் வர்த்தகமாகி, இறுதியாக 1,131.30 (1.53 சதவீதம்) புள்ளிகள் உயர்ந்து 75,301.26 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 22,508.75 ஆக இருந்தது. இன்று காலை சுமார் நிஃப்டி 154 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சடமாக 22,599.20 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 22,857.80 புள்ளிகளிலும் வர்த்தகமாகி, இறுதியாக நிஃப்டி 22,834.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை 30 நிறுவன பங்குகளை முன்னணியாக கொண்டு செயல்படுகிறது. அதில் ஹெச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, இந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்டு டி பங்குகள் உயர்வை சந்தித்தன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை சந்தித்தன.

    • அந்நிய முதலீட்டாளர்கள் பெறுமளவில் இந்திய பங்குகளில் முதலீடு செய்கின்றனர்
    • முதல் முறையாக மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 70 ஆயிரத்தை தாண்டியது

    கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பலருக்கு தொழில் முடக்கமும் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் வருவாயை அதிகரிக்க பலர் இந்திய பங்கு சந்தைகளில் பணத்தை முதலீடு செய்ய தொடங்கினர்.

    2020 வரை சீரான அளவில் இருந்து வந்த முதலீட்டாளர் எண்ணிக்கை, அதற்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது. இதனால் பங்கு சந்தையில் பல முன்னணி பங்குகள் அதிக விலைக்கு வர்த்தகம் ஆக தொடங்கி தற்போது வரை முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

    உலகளாவிய பொருளாதார மந்த நிலை, சீன பொருளாதார சரிவு, அமெரிக்க-ரஷிய உறவில் சீர்கேடு, ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் என பல காரணிகள் இருந்தாலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்களும், இந்திய முதலீட்டாளர்களும் தொடர்ந்து விருப்பம் காட்டி வருகிறார்கள்.

    கடந்த மாதம், 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மூன்றில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், தெலுங்கானாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் வென்றது.

    இப்பின்னணியில், வார முதல் நாளான இன்று இந்திய பங்கு சந்தையில், வர்த்தக துவக்கத்திலேயே மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 69,825 எனும் அளவில் வர்த்தகமானது.

    சிறிது நேரத்தில் முதல் முறையாக 70,048 எனும் புதிய உச்சத்தை தொட்டது.

    கடந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கி அடுத்த காலாண்டிற்கான இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தங்கள் கணிப்பை அதிகரித்து அறிக்கை வெளியிட்டது. இத்துடன் உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதும், இந்திய பொருளாதாரத்தின் வலுவான உள்கட்டமைப்பும், இந்திய தொழில் நிறுவனங்களில் நிகர லாபம் அதிகரித்திருப்பதும் பங்கு சந்தையின் உயர்வுக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

    • விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்றவை ஏற்றம் கண்டன.
    • மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவை சந்தித்தன.

    மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில் வர்த்தகமானது. மும்பை பங்கு சந்தையில் இந்த உச்சம் இதுவரை இல்லாததாகும். நேற்று 71.437.19 புள்ளிகள் முடிவடைந்து, இன்று காலை 71,647.66 புள்ளிகளில் தொடங்கியது.

    இதுபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டி இன்று காலை 138.8 புள்ளிகள் உயர்ந்து 21,591.90-ல் வர்த்தகமானது. இதுவும் புதிய உச்சமாகும். நேற்று 21453.10 புள்ளிகளில் முடிவடைந்து இன்று காலை 21,477.65 புள்ளிகளில் தொடங்கியது.

    விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, என்.டி.பி.சி, மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்றவை ஏற்றத்தை கண்டன.

    மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவை சந்தித்தன.

    ஆசியாவில் ஷாங்காய் பங்கு சந்தை சரிவை சந்தித்த போதிலும் சியோர், டோக்கியோ, ஹாங்காங் போன்ற சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன. 

    • சந்தையில் முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்தது
    • 5 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் தருவதில் முன்னிலை வகித்தன

    கடந்த 2023ல் இந்திய பங்கு சந்தை சுமார் 20 சதவீதம் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தந்தது.

    சந்தை மூலதன மதிப்பின்படி அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் நாடுகளின் பங்கு சந்தைக்கு அடுத்த இடத்தில் இந்தியா உருவெடுத்தது.

    மியூச்சுவல் ஃபண்டுகளின் பெருக்கம், அயல்நாட்டு முதலீடு அதிகரிப்பு, பொருளாதார நிலையில் வளர்ச்சி, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.

    சந்தை முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடி எனும் அளவில் அதிகரித்தது.

    2023ல் சென்செக்ஸ் குறியீட்டில் 5 பங்குகள் மிக அதிக லாபம் ஈட்டி தந்தன.

    பெருமளவு உயர்வை கண்ட பங்குகள்:

    1. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) - 102 சதவீதம்

    2. என்டிபிசி லிமிடெட் (NTPC) - 96 சதவீதம்

    3. லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) - 69 சதவீதம்

    4. பவர் க்ரிட் கார்ப்பரேஷன் (Power Grid) - 55 சதவீதம்

    5. அல்ட்ரா டெக் சிமென்ட் (Ultra Tech Cement) - 51 சதவீதம்

    பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • நிஃப்டி 22,115 எனும் புதிய உயரத்தை எட்டியது
    • சென்செக்ஸ் 73,402 எனும் புதிய உயரத்தை எட்டியது

    ஜனவரி 15, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.

    பங்கு சந்தையில் பதிவு பெற்ற முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் பங்குகள் உயர்வை தொட்டன.

    நிறுவனங்களின் நம்பிக்கையூட்டும் காலாண்டு வருவாய், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு, நேர்மறையான உலக பொருளாதார குறியீடுகள், மக்களவை தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய கூடிய சாத்தியக்கூறு உள்ளிட்டவை பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    தேசிய பங்கு சந்தையின் (NSE) குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty), 22,053 என தொடங்கி முதல் முறையாக 22,115 எனும் புதிய உயரத்தை எட்டி, 22,097 எனும் அளவில் நிறைவடைந்தது.

    மும்பை பங்கு சந்தையின் (BSE) குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex), 73,049 என தொடங்கி முதல் முறையாக 73,402 எனும் புதிய உயரத்தை எட்டி 73,327 எனும் அளவில் நிறைவடைந்தது.

    இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது
    • 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 சரிந்து, 21,997 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 906 புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்நிலையில், அதானி குழும நிறுவன பங்குகள் இன்று ஒரே நாளில் ₹90,000 கோடி சரிவை கண்டுள்ளது. அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது. 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது.

    அதானி எண்டர்பிரைசஸ் 5.5% சரிவையும், அதானி போர்ட்ஸ் 5.3% சரிவையும் கண்டுள்ளது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், என்டிடிவி மற்றும் அதானி வில்மர் ஆகியவற்றின் பங்குகள் 4 முதல் 7 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.

    இதனால், அதானி குழுமத்தின் பங்குகள் ஒட்டுமொத்தமாக ரூ.90,000 கோடியை இழந்துள்ளது. இது அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமான ரூ. 15.85 லட்சம் கோடியில் 5.7%. ஆகும்.

    • மும்பை பங்குச் சந்தை முதன்முறையாக 75,499.91 புள்ளிகளை தொட்டுள்ளது.
    • இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23 ஆயிரத்தை நெருங்கியது.

    மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் நேற்று 74.221.06 சென்செக்ஸ் புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் 74.253 சென்செக்ஸ் புள்ளிகளுடன் தொடங்கியது.

    நேரம் செல்லசெல்ல வர்த்தகத்தின் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து கொண்டே சென்றது. மதியம் 3.15 மணியளவில் வர்த்தகம் 75,499.91 புள்ளியை தொட்டது. மும்பை பங்கு சந்தையில் இதுவரை இந்த உயரத்தை வர்த்தகம் தொட்டது கிடையாது.

    முதன்முறையாக 75,499.91 புள்ளிகளை தொட்டுள்ளது. இன்று குறைந்தபட்சமாக 74,158.35 சென்செக்ஸ் புள்ளிகளில் வர்த்தகமானது. அதன்பின் உச்சத்தை எட்டியது. நேற்றைய முடிவில் இருந்து கணக்கிடும்போது மும்பை பங்குச்சந்தை வர்த்தம் 1196.98 புள்ளிகள் அதிகரித்தது.

    அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23 ஆயிரத்தை நெருங்கியது. இன்று அதிகபட்சமாக நிஃப்டி 22,993.60 புள்ளிகளில் வர்த்தகமானது. 22,967.65 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

    மகிந்திரா அண்டு மகிந்திரா, லார்சன் அண்டு டூர்போ, ஆக்சிஸ் பேங்க், மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், இந்துஸ்இந்த் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், ஐசிஐசி பேங்க், டைட்டன், டாட்டா கல்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டட்ரிஸ் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்வை கண்டன.

    சன் பார்மா, பவர்கிரிட், என்டிபிசி பங்குகள் சரிவை சந்தித்தன.

    மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் பங்கு ஆதாயம் (ஈவுத்தொகை) கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பட்ஜெட் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்காகும். வரவிருக்கும் அரசின் வருவாய் உயர்வுக்கு இது உதவியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    புதன்கிழமையை பொறுத்தவரையில் ஆசிய பங்குசந்தைகளில் சியோல் பங்கு சந்தை ஏற்றத்தில் முடிவடைந்தது. ஷாங்காய், ஹாங்காங் இறக்கத்தில் முடிவடைந்தது. ஐரோப்பிய மார்க்கெட்டுகள் ஏறக்குறைய ஏற்றத்தில்தான் இருந்தது.

    ×