என் மலர்
நீங்கள் தேடியது "வேலை-வாழ்க்கை சமநிலை"
- நான் தந்தையானதும் விடுமுறைகளை குறித்த பார்வை மாறியது என்றார் பில் கேட்ஸ்
- வேலையை கடந்து ஒரு உலகம் உள்ளது என்றார் பில் கேட்ஸ்
கணினிகளுக்கான ஆபரேடிங் சிஸ்டம் எனப்படும் "இயங்கு முறைமை" தயாரிப்பதில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனம், மைக்ரோசாஃப்ட் (Microsoft). இதன் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates), உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர்.
தனது சிறு வயது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை மனம் திறந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பில் கேட்ஸ்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
எனது சிறு வயதில் வார இறுதி விடுமுறைகளை குறித்து எனக்கு பெரிய எண்ணம் இருந்ததில்லை. ஆனால், வயது அதிகரித்த போது அவற்றின் மகத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். குறிப்பாக, நானும் ஒரு தந்தையானதும் விடுமுறைகளை குறித்த எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. எனது குழந்தைகளின் வளர்ச்சியை காணும் பொழுது வேலையை கடந்தும் ஒரு உலகம் உள்ளது என்பதை முழுவதுமாக உணர தொடங்கினேன். வரவிருக்கும் ஆண்டிலிருந்து விடுமுறை நாட்களை அனுபவிக்க துவங்குங்கள். வேலையை கடந்து வாழ்க்கையின் செழுமையை உணர்ந்து கொள்ள அது உதவும். அது அடுத்து வரும் காலங்களில் வரும் சவால்களை எதிர்கொள்ள மிகவும் பயனுடையதாக அமையும்.
இவ்வாறு பில் பதிவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் இன்போசிஸ்-சின் (Infosys) நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி (Narayana Murthy) இந்திய இளைஞர்கள், வார விடுமுறைகளை குறைத்து கொண்டு ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க தயாராக வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
மத்திய, மாநில அரசுத்துறை அலுவலகங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, 5 நாட்கள்(40 மணி நேரம்) மட்டுமே ஊழியர்களுக்கு வேலை நாட்கள். ஒரு சில தனியார் நிறுவனங்களில் மட்டுமே இதே நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
பிற தனியார் நிறுவனங்களில் திங்கள் முதல் சனி வரை, 6 நாட்கள் (48 மணி நேரம்), ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். எனவே நாராயண மூர்த்தி தெரிவித்த "70-மணி-நேர வார வேலை நாட்கள்" என்பது வேலை-வாழ்க்கை சமநிலையை (work-life balance) நலிவடைய செய்யும் என்பதே பல உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இப்பின்னணியில், பில் கேட்ஸின் விடுமுறை செய்தியை சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பயனர்கள் விமர்சிக்கின்றனர்.
- அரசு மற்றும் பொது துறைகளில் வாரத்திற்கு 5 நாட்கள்தான் வேலை தினங்கள்
- தற்போது ஐடி துறையில் நாளைக்கு 10-11 மணி நேரம் பணியாற்றுகின்றனர்
இந்திய தகவல் தொடர்பு துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ் (Infosys). இதன் நிறுவனர்களில் ஒருவர், தற்போது 77 வயதாகும் பிரபல இந்திய கோடீசுவரரான என்ஆர் நாராயண மூர்த்தி (NR Narayana Murthy).
கடந்த 2023 அக்டோபர் மாதம், என்ஆர்என், "சில வருடங்களாவது இந்திய இளைஞர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்" என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அப்போதே நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தன.
அரசு துறை, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளது. அவர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பணியாற்ற வேண்டிய கணக்கில், வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே உழைக்கின்றனர்.
தனியார் துறையில் அனைத்து நிறுவனங்களிலும் சனிக்கிழமை விடுமுறை கிடையாது. அத்துறையில் பணிபுரிபவர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் பணியாற்றுகின்றனர்.
மென்பொருள் துறையில் பல வருடங்களுக்கு முன் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்றினால் போதும் எனும் நிலை இருந்தது.
கொரோனாவிற்கு பின் உலகளவில் பொருளாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால் தங்கள் வேலையை காப்பாற்றி கொள்ள ஐடி துறை ஊழியர்கள் 10 அல்லது 11 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.
இப்பின்னணியில் என்ஆர்என் இது குறித்து மீண்டும் பேசியுள்ளார்.
என்ஆர்என் தெரிவித்திருப்பதாவது:
தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களும் விவசாயிகளும் கடுமையாக உழைக்கின்றனர். உடல்ரீதியான உழைப்பிற்குத்தான் பெரும்பாலான இந்தியர்கள் செல்கின்றனர்.
பொருளாதாரத்தை மேலே கொண்டு வர பட்டம் பெற்று அலுவலகங்களில் அமர்ந்து பணியாற்றும் நாம், உடல்ரீதியாக கடினமாக உழைக்கும் மக்களுக்கு கடன் பட்டிருக்கிறோம் என உணர வேண்டும்.
சமூக வலைதளங்களில் பெரிதும் நான் விமர்சிக்கப்பட்டேன்.
என்னிடம் இது குறித்து பேச வந்திருந்தால் நான் என்ன தவறாக கூறி விட்டேன் என கேட்டிருப்பேன். அவர்கள் எனது துறை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்பதல்ல; எந்த துறையானாலும் சரி. ஆனால், அவ்வாறு யாரும் வரவில்லை.
இருந்தாலும் சில நல்ல உள்ளங்களும், அயல்நாட்டில் வாழும் இந்தியர்களும் என் கருத்தை வரவேற்றார்கள்.
நான் வாரத்திற்கு ஆறரை நாட்கள் உழைத்தவன். காலை 06:00 மணிக்கு கிளம்பி 06:20 மணிக்கு அலுவலகத்தில் இருப்பேன். மாலை 08:30 மணிக்கு மேல்தான் பணியை முடித்து புறப்படுவேன்.
நான் செய்து பார்க்காத எதையும் அறிவுரையாக பிறருக்கு கூறும் வழக்கம் எனக்கு கிடையாது.
இவ்வாறு என்ஆர்என் கூறினார்.
"என் கணவர் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்கும் வழக்கமுள்ளவர்" என அவர் மனைவி, சுதா மூர்த்தி தெரிவித்தார்.
ஓய்வின்றி உழைப்பதால் ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலை (work-life balance) சீர்குலைந்து விடும் என உளவியல் நிபுணர்களும், மனித வள வல்லுனர்களும் எச்சரிக்கின்றனர்.
- குறைந்த உடல் இயக்கம் ஒரு தேக்கமான சூழலை உருவாக்குகிறது.
- நியூரோட்ரான்ஸ்மிட்டர் உற்பத்தி மூலம் மூளையின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது வரை குடல் ஆரோக்கியம் முக்கிய காரணியாகும்.
பெருகி வரும் வேலை வாழ்க்கையும் அருகி வரும் தனிப்பட்ட வாழ்க்கையும் இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரத்தின் வெளிப்பாடு.
ஆரோக்கியத்தை முற்றிலுமாக சீர்குலைக்கும் அபாயங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த வாழ்க்கை முறை இளமையையும் உடல்நலனையும் உறிஞ்சிவதாக உள்ளது.
இளைஞர்கள் உட்பட அனைவரின் வேலையும் நாள் முழுவதும் நாற்காலிகளுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. இது மனம் மற்றும் உடல் ரீதியான சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. அதில் ஒன்றுதான் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள்.
நாள் முழுவதும் சேரில் உட்கார்ந்தே இருப்பது, வயிற்று உறுப்புகளை அழுத்துகிறது. இதனால் வீக்கம், வாயு, மலச்சிக்கல் மற்றும் தாமதமான குடல் இயக்கங்கள் ஏற்படுகின்றன.

உட்கார்ந்திருக்கும் தொடர் பழக்கம் குடலுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது மற்றும் செரிமான உறுப்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.
சீரில்லாத உட்காரும் முறை, உறுப்பு சீரமைப்பை சீர்குலைக்கிறது. செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் வாயு குவிவதற்கு வழிவகுக்கிறது.
கூடுதலாக, கட்டுப்படுத்தப்பட்ட உதரவிதான [diaphragm] இயக்கம் செரிமானத்தை எதிர்மறையாக பாதிக்கும். இந்த வாழ்க்கை முறை மலச்சிக்கல் மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற பிரச்சினைகளுடன் நெருக்கமாக தொடர்புடையது.
நீடித்த அசைவற்ற தன்மை குடல் பாக்டீரியா சமநிலையையும் பாதிக்கிறது. இது செரிமான செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. குறைந்த உடல் இயக்கம் ஒரு தேக்கமான சூழலை உருவாக்குகிறது. இது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் செயல்திறனைக் மட்டுப்படுத்துகிறது. இது உணவில் இருந்து ஊட்டச்சத்து பெறுதல் மற்றும் குடல் செயல்திறனைத் தடுக்கிறது.
குடல் பாக்டீரியா சமநிலையற்றதாக இருக்கும்போது, செரிமானம் மெதுவாகிறது, கழிவுகளை அகற்றுவது கடினமாகிறது. இரத்த ஓட்டம் குறைவதோடு வயிற்றில் அழுத்தம் அதிகரிப்பதால் மலச்சிக்கல் மோசமடைகிறது. சர்க்கரை உணவுகள், மன அழுத்தம், நீரிழப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற பிற காரணிகள் குடல் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கின்றன.
குடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம், ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன்கள், மன நல்வாழ்வு மற்றும் எடை ஒழுங்கை பாதிக்கிறது. ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பது, வீக்கத்தைக் குறைப்பது, மற்றும் நியூரோட்ரான்ஸ்மிட்டர் உற்பத்தி மூலம் மூளையின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது வரை குடல் ஆரோக்கியம் முக்கிய காரணியாகும்.
குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, சீரான உட்காரும் முறையை பயிற்சி செய்யுங்கள், நீரேற்றமாக இருங்கள், மேலும் வெளியின்போது இடைவேளை எடுத்து எடுத்து நடக்க வேண்டும். உங்கள் உணவில் நார்ச்சத்து, புரோபயாடிக்குகள் மற்றும் புளித்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள், அதே நேரத்தில் சரியான தூக்கம், வழக்கமான, மிதமான உடற்பயிற்சியும் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஒவ்வொருத்தரும் 90 மணி நேரம் உழைக்க வேண்டும். நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்
- பயணத்தையும் தனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொண்டார்.
பணி நேரம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்து L&T நிறுவன தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் பேசிய வீடியோ ஒன்று புயலை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அந்த வீடியோவில் அவர், "ஒவ்வொருத்தரும் 90 மணி நேரம் உழைக்க வேண்டும். நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்" என்று கூறினார்.

ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, "இந்தியர்கள் 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும்," என்று கூறியது பேசு பொருளானது. இந்த வரிசையில், தற்போது L&T தலைவர் 90 மணி நேரம் பணியாற்றுவது குறித்து தெரிவித்த கருத்துக்கு பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராதிகா குப்தா கருத்து தெரிவித்துள்ளார். "சாய்ஸ், கடின உழைப்பு மற்றும் மகிழ்ச்சி" என்ற தலைப்பில் எக்ஸ் இல் ஒரு நீண்ட பதிவில், ராதிகா குப்தா தனது பயணத்தையும் தனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அதில், இப்போது வேலை நேரம் பற்றி பேசலாம். எனது முதல் வேலையின் போது எனது தொடர்ந்து நான்கு மாதங்கள் வாரத்திற்கு 100 மணிநேரம் வேலை செய்தேன்.
ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்தேன். ஒரு நாள் மட்டுமே விடுமுறை (ஞாயிறு அல்ல - ஞாயிற்றுக்கிழமை கிளையன்ட் தளத்தில் இருக்க வேண்டியதால் திங்கள்கிழமை விடுமுறை கிடைத்தது). 90% நேரம், நான் பரிதாபகரமாக இருந்தேன். நான் அலுவலக கழிவறைக்குச் சென்று அழுதேன். இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடின உழைப்பு மற்றும் அதன் பலன் என்பது எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்பதில் இல்லை என்று தெரிவித்தார்.
- வருடத்துக்கு ரூ. 51 கோடி, அதாவது, எல்&டி ஊழியர்களை விட 535 அதிகம் சம்பளம் வாங்கும் சுப்ரமணியன் இதை சொல்லலாமா?
- வேலை நேரத்தின் அளவை விட, வேலையின் தரத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும்.
லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்என் சுப்ரமணியன், ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
எவ்வளவு நேரம் தான் வீட்டிலேயே உட்கார்ந்து மனைவியின் முகத்தை பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று அவர் பேசியது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
வருடத்துக்கு ரூ. 51 கோடி, அதாவது, எல்&டி ஊழியர்களை விட 535 அதிகம் சம்பளம் வாங்கும் சுப்ரமணியன் இதை சொல்லலாமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 70 ,மணி நேரம் வேலை பார்க்க சொன்ன இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கோஷ்டியில் தற்போது சுப்ரமணியன் இணைந்துள்ளார்.
இந்நிலையில் சுப்பிரமணியன் கருத்துக்கு பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பதிலடி கொடுத்துள்ளார்.

சனிக்கிழமையன்று ஒரு ஊடக நிகழ்வில் பேசிய மஹிந்திரா, நான் சமூக ஊடகத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறேன் என்று பலர் கேட்கின்றனர்.
நான் எக்ஸ் தளத்தில் நேரம் செலவிடுகிறேன், ஆனால் அது நான் தனிமையில் இருப்பதால் அல்ல. எனது மனைவி அற்புதமானவர், அவரை பார்த்துக்கொண்டே இருப்பதை நான் விரும்புகிறேன். எனவே நான் நண்பர்களை உருவாக்க சமூக ஊடகங்களை பயன்படுத்தவில்லை, தொழில் நிமித்தமாகவே அதை ஒரு கருவியாக பயன்படுத்துகிறேன்.
90 மணிநேர வேலை வார விவாதம் தவறானது. வேலை நேரத்தின் அளவை விட, வேலையின் தரத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். நாராயண மூர்த்தி மற்றும் பிறர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு . எனவே இதை நான் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
ஆனால் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும், இந்த விவாதம் தவறான திசையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். 10 மணிநேரம் ஆனாலும் என்ன அவுட்புட் செய்கிறாய்? என்பது முக்கியம். 10 மணி நேரத்தில் உலகையே மாற்றிவிடலாம்.
பல நாடுகள் நான்கு நாள் வேலை வாரத்தை பரிசோதித்து வருகின்றன. படிக்கவும், சிந்திக்கவும் நேரம் தேவை. நீங்கள் வீட்டில் நேரத்தை செலவிடாமல், படிக்காமல், நண்பர்களுடன் நேரத்தை செலவிடாமல் அது சாத்தியமில்லை.

நம் தொழிலை எடுத்துக் கொள்வோம், நீங்கள் ஒரு காரை உருவாக்குங்கள். ஒரு காரில் ஒரு வாடிக்கையாளர் என்ன விரும்புகிறார் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.
நாங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் எப்போதும் அலுவலகத்தில் இருந்தால், மற்ற குடும்பங்கள் என்ன வகையான காரில் உட்கார விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் எப்படி புரிந்துகொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பிய ஆனந்த் மஹிந்திரா, உங்கள் ஜன்னல்களைத் திற, காற்றை உள்ளே விடுங்கள். நீங்கள் எப்போதும் சுரங்கப்பாதையில் இருக்க முடியாது என்ற காந்தியின் கூற்றை மேற்கோள் காட்டினார்.