என் மலர்
நீங்கள் தேடியது "QR Code"
- தண்ணீர் பாட்டில் பிஸ்கட் உள்ளிட்டவையும் பெற்றுக் கொள்ளலாம்.
- தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் எளிதாக வேண்டியதை விரும்பி சாப்பிடலாம்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் தனியார் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் புதிய டீக்கடை ஒன்றை திறந்து உள்ளது.
இந்த டீக்கடையில் டீ மாஸ்டர், பணியாளர்கள் கிடையாது.
கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கியூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்தால் போதும் தங்களுக்கு விருப்பமான டீயை வாங்கி குடிக்கலாம்.
மேலும் தண்ணீர் பாட்டில் பிஸ்கட் உள்ளிட்டவையும் பெற்றுக் கொள்ளலாம்.
நவீன தொழில்நுட்பத்திலான டீக்கடையை ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கமலாகர், மேயர் சுனில் ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்குமார் கூறுகையில், தற்போது டீ மாஸ்டர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.
மேலும் டீ மாஸ்டர்கள் அதிக அளவில் சம்பளம் கேட்கின்றனர். தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் எளிதாக வேண்டியதை விரும்பி சாப்பிடலாம்.
தற்போது ஆந்திரா தெலுங்கானாவில் ஒரே சமயத்தில் 600 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.
- யுடிஎஸ். மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் வகையில் ஒட்டப்பட்டு இருந்தன.
உடுமலை :
திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்தூர், பாலக்காடு - சென்னை மற்றும் கோவை - மதுரை, பொள்ளாச்சி - கோவை உள்ளிட்ட ெரயில்கள் உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்கின்றன.இந்நிலையில் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்காமல், டிக்கெட் பதிவு செய்ய, யுடிஎஸ். மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் க்யூ ஆர் கோடு அமைத்து, ெரயில்வே நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ரெயில் நிலையம் அறிவிப்பு பலகையில், க்யூஆர் கோடு பார் யுடிஎஸ் ஆன் மொபைல் ஆப் என எழுதப்பட்டுள்ளது. அதில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் வகையில் ஒட்டப்பட்டு இருந்தன.
இதை பயணிகள் ஸ்கேன் செய்தால் மொபைல் ஆப்பிற்குள் செல்கிறது. அதன்பின் யுடிஎஸ்., மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் இருந்து முன்பதிவில்லாத டிக்கெட் (அன் ரிசவர்டு) சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுக்குரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்து செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நேரம் வீணாகுவது, காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் இதுபோன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என ெரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல இடங்களில் நடக்கிறது.
- டி-ஷர்ட் அணிந்து நிதி திரட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நல்ல நோக்கத்திற்காக 'கிரவுட் பண்டிங்' முறையில் பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கைகள் பல இடங்களில் நடக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் ஒரு வாலிபர் 'கியூ-ஆர்' குறியீடுடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து நிதி திரட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியை சேர்ந்த பூஜா சன்வால் என்ற பெண் கன்னோட் ப்ளேஸ் பகுதியில் ரோகித் சலூஜா என்ற வாலிபர் அணிந்திருந்த 'கியூ-ஆர்' டி-ஷர்ட்டை பார்த்தார்.
அதில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சோனு என்ற முடிதிருத்தும் தொழிலாளியின் செல்போனை யாரோ திருடிவிட்டனர். இது அவரை மிகவும் வருத்தப்படுத்தியது. யாரிடமும் முரட்டுதனமாக பேசாத, அன்பான உள்ளம் கொண்ட அவரது முகத்தில் புன்னகையை வரவழைக்க புதிய போன் வாங்கி கொடுக்க நிதி திரட்டுகிறேன் என கூறப்பட்டிருந்தது.
பூஜா சன்வாலின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகிய நிலையில், சுமார் 37 பேர் அவருக்கு நிதியுதவி செய்தனர். இந்த பதிவை பார்த்த ஒரு பயனர், முடிதிருத்தும் நபரை கவனித்து கொள்வதற்காக அவரை மதிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். இதற்கிடையே ஒரு நிறுவனம் அந்த முடி திருத்தும் தொழிலாளிக்கு புதிய போனை வழங்கி உள்ளது.
- ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.
- கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது.
சென்னை:
பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.
கூரியர் தபாலில் உங்கள் பெயரில் போதை பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டி ஐ.டி. ஊழியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பது தொடர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் உங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகப் போகிறது, மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் என்பது போன்ற பொய்களை அள்ளி வீசியும் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் பொது மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் சுருட்டுகிறார்கள்.

இந்த நிலையில் கூகுள்பே, கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலமாக நடைபெறும் வியாபாரம் மூலமாகவும் உங்கள் வங்கி கணக்கில் தெரியாமல் பணம் அனுப்பி விட்டேன். அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்புங்கள் எனக் கூறி கியூஆர் கோடை அனுப்பியும் மோசடி நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆன்லைனில் அனுப்பப்படும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினால் மர்ம நபர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை சுருட்டி விடுவதாக போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, `ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அறிமுகம் இல்லாத நபர்களின் தேவையில்லாத அழைப்புகளை உடனடியாக துண்டித்து விட வேண்டும். தொடர்ந்து நீங்கள் பேசினால் உங்களை பயன்படுத்தி நிச்சயம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவார்கள் என்றார்.
- 14 மதுக்கடைகளிலும் அச்சிடப்பட்ட பில்கள் இன்று முதல் வழங்கப்பட்டன.
- ஒவ்வொரு பாட்டிலுக்கும் தனித்தனி பில்கள் போடப்படும்.
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் அதில் உள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கு (எம்.ஆர்.பி.) மேலாக விற்கப்படுகிறது. குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.50 வரை கூடுதலாக வசூலிக்கிறார்கள்.
எல்லா கடையிலும் அதில் உள்ள விலைக்கு மதுபாட்டில்கள் விற்பது இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படை யாக விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கியூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்து மின்னணு பண பரிவர்த்தனையின் வழியாக பணம் செலுத்தி மதுபானங்களுக்கான பில்லை பெறும் வசதியை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் கடந்த சில மாதங்களாக முயற்சி மேற்கொண்டது.
முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் இத்திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் உள்ளிட்ட 7 கடைகளிலும், ராமநாதபுரத்தில் 7 கடைகளிலும் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த 14 மதுக்கடைகளிலும் அச்சிடப்பட்ட பில்கள் இன்று முதல் வழங்கப்பட்டன. மேலும் மதுபானங்களில் கண்காணிப்பை உருவாக்க கலால் லேபில்களில் கியூ-ஆர் குறியீடுகளையும் அட்டைப் பெட்டிகளில் ஒரு பரிமாண பார்கோடுகளையும் சேர்த்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மது பாட்டிலில் அச்சிடப் பட்ட கியூ-ஆர் குறியீடு, விற்பனையாளர்களால் கை யடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டவுடன் பில் அச்சிடப்பட்டு வெளிவரும். ஒவ்வொரு பாட்டிலுக்கும் தனித்தனி பில்கள் போடப்படும்.
2 மாவட்டங்களில் இந்த புதிய முறையை அறிமுகப் படுத்தியுள்ளோம். இதன் மூலம் பெறப்படும் கருத்துக் களை பொறுத்து தேவைப் பட்டால் கணினியை மறு வடிவமைப்போம். ஓரிரு மாதங்களில் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் கணினி மயமாக்கப்டும்.
தமிழகம் முழுவதும் 4,800 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கடைகளையும் கணினி மயமாக்குவதன் மூலம் அதிகாரிகள் கண்கா ணிக்கவும், இருப்புகளை சரிபார்க்கவும் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பான்.2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவில் இதுவரை 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பான் கார்டை க்யூ ஆர் கோடு வசதி உடன் மேம்படுத்துவதற்காக ரூ.1,435 கோடி செலவில் வருமான வரித் துறையின் பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தற்போதுள்ள பான் கார்டு முழுமையாக மேம்படுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்படும். பின்னர் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான வணிக அடையாளமாக பான் கார்டு மாற்றப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் புதிய பான் கார்டுகளை விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பான் கார்டுகள் அப்கிரேடு செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூஆர் கோட் உடன் கூடிய பான் கார்ட் வேண்டும் என்றால் மட்டும் அப்ளை செய்து கொள்ளலாம். அது இலவசமாகவே வழங்கப்படும்.
இந்தியாவில் இதுவரை 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 98 சதவீதம் தனிநபர் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு பான்கார்டு கட்டாயம் ஆகும்.
- வருமான வரி செலுத்துவதற்கும் பான்கார்டு நிச்சயம் தேவை.
சென்னை:
இந்தியாவில் வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு பான்கார்டு கட்டாயம் ஆகும். அதே போல் ரூ.10 லட்சத்திற்கு நகை, வாகனம் வாங்குவதற்கும், வருமான வரி செலுத்துவதற்கும் பான்கார்டு நிச்சயம் தேவை.
இந்தியாவில் கடந்த மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி 42 கோடியே 10 லட்சம் ஆண்களும், 31 கோடியே 5 லட்சம் பெண்களும் என மொத்தம் 73 கோடியே 15 லட்சம் பேர் பான்கார்டு வைத்திருக்கிறார்கள். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும்.
இந்த நிலையில் மத்திய அரசு, ஆதார் போன்று பான்கார்டுகளையும் டிஜிட்டல் முறையில் வழங்க முடிவு செய்தது. அதற்காக ரூ.1,435 கோடி செலவிலான 'பான்கார்டு-2' திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை கடந்த மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி ஆன்லைன் மூலம் மட்டுமே பொதுமக்கள் பான்கார்டுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்காக ஒரு தனி 'போர்டல்' உருவாக்கப்பட உள்ளது.
அதே போல் பொதுமக்கள் செல்போன் எண், இ-மெயில் முகவரி மற்றும் புகைப்படங்களை எளிதாக 'அப்டேட்' செய்து கொள்ளலாம்.
இப்போது ஆதார் எண் கொடுத்து கைரேகை வைத்தால், அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி கொள்ளலாம். மேலும் டிஜிட்டல் 'லாக்' மூலம் ஆதாரை 'லாக்' செய்யலாம்.
அதேவசதி பான்கார்டிலும் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அச்சாரமாக பான்கார்டிலும் 'கியூஆர் கோடு' வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. எனவே 'கியூஆர் கோடு' பான்கார்டு வேண்டுபவர்கள், அதற்காக விண்ணப்பிக்கலாம்.

அதாவது பான்கார்டுகள் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்.எஸ்.டி.எல்.) மற்றும் யு.டி.ஐ. உள்கட்டமைப்பு தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் லிமிடெட் (யு.டி.ஐ.ஐ.டி.எஸ். எல்) ஆகியவை மூலம் தான் வழங்கப்படுகிறது. இதுதவிர வருமானவரித்துறை மூலம் உடனடி இ-பான்கார்டு பெற்றுக்கொள்ளலாம்.
எனவே ஏற்கனவே பான்காடு வைத்திருப்பவர்கள், என்.எஸ்.டி.எல். மூலமாக வாங்கி இருந்தால் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.Html என்ற இணையதளத்திலும், யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல். மூலம் வாங்கி இருந்தால் https://www.pan.utiitsl.com/PAN-ONLINE/CheckPANreprint.Action என்ற இணையதளத்திலும் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு எது என்று தெரியாவிட்டாலும், நீங்கள் ஏதாவது ஒரு இணையதளத்தில் விண்ணப்பித்தால் அதுவே அது சரியானதா அல்லது நீங்கள் மற்றொன்றில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதனை சொல்லிவிடும்.
இந்த இணையதளத்தில் நீங்கள் பான்கார்டு எண், ஆதார் எண், பிறந்த மாதம் மற்றும் ஆண்டை குறிப்பிட்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது முகவரி, செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவை தெரியும். அது சரியானதா என்பதனை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதன்பின்பு உங்களுடைய மெயில், செல்போன் அல்லது இரண்டுக்கும் ஓ.டி.பி. அனுப்பலாம். நீங்கள் அதில் எதை தேர்வு செய்கிறீர்களோ, அதற்கு ஓ.டி.பி. வரும். அந்த ஓ.டி.பி.யை கொடுத்து, அது ஏற்று கொள்ளப்பட்டால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டணத்தை செலுத்தி முடித்து விட்டால் போதும், உங்களது முகவரிக்கே 30 நாட்களுக்குள் பான்கார்டு வீட்டுக்கு வந்துவிடும்.
ஒருவேளை உங்களது பான்கார்டில் செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி தவறாக இருந்தால் முதலில் நீங்கள் அதனை அந்த இணையதளத்தில் உள்ள வசதிகள் மூலம் திருத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல் முகவரி மாறி இருந்தாலும், இப்போது உள்ள முகவரியை அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த பணியினை ஆதார கே.ஒய்.சி. மூலமாக எளிதில் செய்து கொள்ளலாம்.
- QR குறியீடுகளை போனில் ஸ்கேன் செய்தால் அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி தோன்றியது
- இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.
ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள கல்லறைகளில் திடீரென தோன்றிய மர்மமான QR குறியீடுகள் கடந்த சில மாதமாக ஒரு பெரும் புதிராக மக்களை பீதியில் ஆழ்த்தின.
கடந்த டிசம்பரில் அங்கு மர்மமான முறையில் ஒட்டப்பட்ட QR குறியீடு ஸ்டிக்கர்களை போனில் ஸ்கேன் செய்தால் அங்கு புதைக்கப்பட்டவரின் பெயர், முகவரி தோன்றியது வினோதமான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இந்த QR குறியீடு ஸ்டிக்கர்கள் மியூனிக்கில் உள்ள வால்ட்பிரைட்ஹாஃப், சென்ட்லிங்கர் ப்ரீட்ஹாஃப் மற்றும் ப்ரீட்ஹாஃப் சோல்ன் கல்லறைகளில் காணப்பட்டன.
சிலர் இதை ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்ட் என்றும், மற்றவர்கள் இது சில குறும்புக்காரர்களின் செயல் என்றும் கருதினர். கல்லறைகள் நிர்வாகத்தின் தலைவரான பெர்ன்ட் ஹோரோஃப், இதை மிகவும் விசித்திரமான சம்பவம் என்றும், இந்த ஸ்டிக்கர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று தனக்குப் புரியவில்லை என்றும் கூறினார்.

கல்லறைகளில் இருந்து ஸ்டிக்கர்களை அகற்றுவது அதிக செலவை ஏற்படுத்துவதால், இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.
இறுதியில், ஒரு உள்ளூர் தோட்டக்கலை நிறுவனம் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம் கல்லறைகளை சுத்தம் செய்து பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டது.
அதன் ஊழியர்களின் வசதிக்காக, எந்த கல்லறை சுத்தம் செய்யப்பட்டது, எந்த கல்லறை இன்னும் சுத்தம் செய்யப்பட உள்ளது என்பதை அவர்கள் அறியும் வகையில் QR குறியீடு ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தது.

இந்நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஆல்ஃபிரட் ஜான்கர் பேசுகையில், எங்கள் நிறுவனம் பெரிய அளவில் செயல்படுகிறது, அனைத்து வேலைகளும் முறையாக செய்யப்பட வேண்டும்.
கல்லறைகளைப் பழுதுபார்ப்பதற்கு கற்களை அகற்றி, சுத்தம் செய்து, பின்னர் மீண்டும் நிறுவ வேண்டும். இதனால் செயல்முறை சிக்கலானதாகிறது. எனவே குழப்பம் ஏற்படாமல் இருக்க அடையாளத்துக்காக இவ்வாறு செய்யப்பட்டது என்று விளக்கினார்.