என் மலர்
நீங்கள் தேடியது "டிஎன்பிஎல் 2024"
- டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது.
- நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து விட்டது. இந்த ஆண்டு நடைபெறும் டி.என்.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடக்கிறது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள், டி.என்.பி.எல். போட்டியில் விளையாட தகுதி பெற்றவர்கள் ஏலத்துக்கான இணையதளத்தில் பதிவு செய்து இருந்தனர். ஏலப்பட்டியலில் 690 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 62 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களையும், விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தையும் ஏற்கனவே அறிவித்து விட்டன. 8 அணிகளும் மொத்தம் 98 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.
டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது. பி.அபராஜித், என்.ஜெகதீசன், அருணாச் சலம், அய்யப்பன், ஜிதேந்தர் குமார், லோகேஷ் ராஜ், மதன்குமார், பிரதோஷ் ரஞ்சன் பவுல், ரஹீல்ஷா, சிபி, சிலம்பரசன் ஆகி யோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.28.70 லட்சம் செலவழித்து உள்ளது. 8 வீரர்களை விடுவித்துள்ளது.
நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் 20 வீரர்களை தேர்வு செய்யலாம். இதற்காக ரூ.70 லட்சம் செலவழிக்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கைவசம் ரூ.41.30 லட்சம் இருக்கிறது. அந்த அணி ஏலத்தில் 9 வீரர்களை தேர்வு செய்யலாம்.
சேலம் அணியில் தான் அதிகபட்சமாக 11 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். அந்த அணியின் கைவசம் தான் அதிகபட்சமாக ரூ.46.70 லட்சம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் அணியிடம் ரூ.45.90 லட்சம் உள்ளது. அந்த அணி 10 வீரர்களை தேர்வு செய்யலாம்.
- சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும் போட்டி நடைபெறுகிறது.
- இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது.
நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.
சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.
இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், சேப்பாக் கில்லீஸ் அணி டாஸ் வென்றதை தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
- டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- முதலில் ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்துள்ளது.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி கேப்டன் அந்தோனி தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கேப்டன் அஸ்வின் 5 ரன்னிலும், விமல்குமார் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.
மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 3வது விக்கெட்டுக்கு பாபா இந்திரஜித், ஷிவம் சிங் ஜோடி 82 ரன் சேர்த்தது.
பாபா இந்திரஜித் 33 ரன்னிலும், ஷிவம் சிங் 78 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.
திருச்சி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட் வீழ்த்தினார்.
- முதலில் ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய திருச்சி 144 ரன்கள் எடுத்து தோற்றது.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், மாலை 3.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் 33 ரன்னில் வெளியேறினார்.
திருச்சி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
அந்த அணியின் ராஜ்குமார் 17 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதன்மூலம் நடப்பு தொடரில் திண்டுக்கல் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
திண்டுக்கல் அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய சேலம் 180 ரன்களை குவித்தது.
- அந்த அணியின் கவின், விஷால் வைத்யா அரை சதமடித்தனர்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
- முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சுரேஷ் 38 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அவுட்டானார். நிதானமாக விளையாடிய ஜெகதீசன் 57 ரன்கள் அடித்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.
3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரையை வெற்றி பெற வைத்த முருகன் அஷ்வின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சேலத்தில் ஜூலை 11ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.
- இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.
சேலம்:
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.
சேலத்தில் ஜூலை 11-ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.
இன்றைய முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி டாஸ் வென்றதை தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
- டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய சேப்பாக் அணி 166 ரன்களை எடுத்துள்ளது.
சேலம்:
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 58 ரன்கள் எடுத்த நிலையில், சந்தோஷ் குமார் 41 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெகதீசன் அரை சதம் கடந்தார். பாபா அபராஜித் 24 ரன்னும், சித்தார்த் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார்.
நெல்லை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறஙகுகிறது.
- முதலில் ஆடிய சேப்பாக் அணி 166 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய நெல்லை அணி 168 ரன்களை எடுத்து வென்றது.
சேலம்:
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். சந்தோஷ் குமார் 41 ரன்னில் அவுட்டானார்.
நெல்லை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் அருண் கார்த்திக் 10 ரன்னில் அவுட்டானார்.
அஜிதேஷ் குருசாமி அதிரடியாக ஆடி 14 பந்தில் 30 ரன் எடுத்தார். அருண்குமார் 6 ரன்னிலும், சோனு யாதவ் 1 ரன்னிலும், ஈஸ்வரன் 9 ரன்னிலும், கிருபாகர் 3 ரன்னிலும் அவுட்டாகினர். மோகித் ஹரிஹரன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் அதிரடியாக ஆடிய ராஜகோபால் 53 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் நெல்லை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
- டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- முதலில் ஆடிய கோவை 160 ரன்களை எடுத்துள்ளது.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் அணியை நெல்லை அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்-திருப்பூ தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். சச்சின் 30 ரன்னிலும், சுஜய் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.
- துஷார் ரஹேஜா 81 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
- கோவை தரப்பில் முகமது, ஷாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் அணியை நெல்லை அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்-திருப்பூ தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். சச்சின் 30 ரன்னிலும், சுஜய் 27 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது.
இதையடுத்து திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களாக துஷார் ரஹேஜா- ராதாகிருஷ்ணன் களமிறங்கினர். இதில் ராதாகிருஷ்ணன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாத்விக் 12, விஜய் சங்கர் 16, பாலசந்தர் 4 என அடுத்தடுத்து வெளியேறினார். இதனையடுத்து துஷார் ரஹேஜா- முகமது அலி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
எளிதாக வெற்றியை உறுதி செய்யும் அளவில் விளையாடிய நிலையில் 35 ரன்னில் முகமது அலியும் 81 ரன்னிலும் துஷார் ரஹேஜாவும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. கோவை தரப்பில் முகமது, ஷாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருச்சி அணி 193 ரன்கள் குவித்தது.
சேலம்:
டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், இன்று இரவு நடந்த 7-வது லீக்கில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற
மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்னில் வெளியேறினார்.
வசீம் அகமதுடன் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர்.
இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. வசீம் அகமது 55 பந்தில் 90 ரன்னும், சஞ்சய் யாதவ் 60 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.