என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய அரசு"
- பல கணக்குகள், பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.
- முடக்கப்பட்ட பல கணக்குகள் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையவை
இந்திய அரசின் உத்தரவுகளை ஏற்று, இந்தியாவிற்குள் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட சில கணக்குகள், பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இந்திய அரசின் உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விதிமுறைகளால் அரசின் உத்தரவை இங்கு வெளியிட முடியவில்லை என்றாலும், அதன் வெளிப்படைத்தன்மை தேவை என்பதால் இதனை பொதுவெளியில் தெரியப்படுத்துகிறோம்" என X நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
X நிறுவனத்தால் முடக்கப்பட்ட பல கணக்குகள் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையவை என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்துள்ளது.
- ராகுல் டிராவிட்டின் சாதனைகள் நாடு முழுவதும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
- அதனால் இந்தியாவின் மிகப்பெரிய மரியாதையை ராகுல் டிராவிட்டுக்கு அளிக்க வேண்டும்.
மும்பை:
டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் பிசிசிஐ தரப்பில் ராகுல் டிராவிட்-க்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, உலகக்கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 3 ஐசிசி இறுதிப்போட்டிகளில் விளையாடி, ஒரு முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல் யு19 பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட் உலகக்கோப்பையை வென்றுள்ளார்.
3 ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவதற்கு முன்பாக, ராகுல் டிராவிட் யு19 இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அதேபோல் என்சிஏ-வில் தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்ற போது, ராகுல் டிராவிட் என்சிஏ தலைவராக வந்தார்.
அப்போது முதல் இந்திய இளம் வீரர்களை தயார்ப்படுத்தி வந்துள்ளார். சுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஷ்னாய், அபிஷேக் சர்மா, ரியான் பராக் என்று ஏராளமான வீரர்களை உருவாக்கியுள்ளார். அதேபோல் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், சிராஜ், சஞ்சு சாம்சன், விஹாரி உள்ளிட்டோரும் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் உருவான வீரர்கள் தான். அந்த அளவிற்கு இந்திய அணியில் ராகுல் டிராவிட்டின் தாக்கம் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அரசு ராகுல் டிராவிட்டுக்கு பாரத் ரத்னா விருது அளித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பாரத் ரத்னா விருது சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த தலைவர்களின் தாக்கம் அரசியல் கட்சியினரோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்ததால், விருதுகள் அளிக்கப்பட்டன.
அந்த தலைவர்களின் தாக்கம் அரசியல் கட்சியினரோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்ததால், விருதுகள் அளிக்கப்பட்டன. தற்போது ராகுல் டிராவிட்டின் சாதனைகள் நாடு முழுவதும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதனால் இந்தியாவின் மிகப்பெரிய மரியாதையை ராகுல் டிராவிட்டுக்கு அளிக்க வேண்டும்.
மக்கள் அனைவரும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்திய நாட்டின் தலைசிறந்த மகன் பாரத் ரத்னா ராகுல் டிராவிட் என்று சொல்வதற்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
இதற்கு முன்பாக கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு 2014-ம் ஆண்டு பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானின் பகவல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மசூத் அசார் உரையாற்றியதாக தகவல் வெளியானது.
- மசூத் அசார் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2001-ல் பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008-ல் மும்பை பயங்கரவாத தாக்குதல், 2019-ல் ஜம்மு-காஷ்மீரில் நடத்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின் பின்னால் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக வெளியான தகவல்களை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானின் பகவல்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மசூத் அசார் உரையாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என நீண்ட காலமாக மறுத்து வருகின்றனர். மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையென்றால், இது பாகிஸ்தானின் போலித்தனத்தை அம்பலப்படுத்தும்.
இந்தியா மீதான எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு உள்ளது. அவரை சட்டத்தின் முன் நிறுத்தி, பாகிஸ்தான் அரசு அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
- டெல்லியில் புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவன் திறப்பு விழா நடைபெற்றது.
- அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது
பீகாரை சேர்ந்த ஒருவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் தனக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தின் சோனுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் சவுத்ரி. கடந்த வாரம், 'இந்திய அரசுக்கு எதிராக சண்டையிட வேண்டும்' என்ற ராகுல் காந்தி சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் கையில் இருந்த பக்கெட்டை கீழே போட்டுவிட்டேன்.
'அதில் இருந்த 5 லிட்டர் பால் கொட்டியதில் எனக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு ராகுல் காந்தியே காரணம். நாட்டின் இறையாண்மைக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியது எனக்கு அதிர்ச்சி அளித்தது. எனவே ராகுல் காந்தியின் மீது, தேசத்துரோகத்திற்கான பிரிவு 152 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டும்' என்றும் கூறி ரோசரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் ஜனவரி 15 ஆம் தேதி டெல்லியில் புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பேசிய ராகுல் காந்தி, நமது போராட்டம் பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக மட்டுமே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் அப்படி நினைத்தால், உங்களுக்கு நிலைமை புரியவில்லை என்று அர்த்தம்.
பாஜக-வும், ஆர்எஸ்எஸ்-ம் சேர்ந்து, நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி விட்டன. அதனால், பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல், இந்திய அரசுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும் என்று பேசினார்.

இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்து எனக் கூறி அவரை பாஜக விமர்சித்தது. ராகுலின் பேச்சுக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.