என் மலர்
நீங்கள் தேடியது "ரஞ்சி டிராபி கிரிக்கெட்"
- மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது.
- முதல் இன்னிங்சில் பரோடா அணி 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முஷிர் கான் 203 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த பரோடா 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சொலங்கி, ராவத் ஆகியோர் சதம் அடித்தனர். 36 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்ங்சியை ஆடிய மும்பை அணி 569 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஒரு கட்டத்தில் மும்பை அணி 337 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனுஷ் கோட்யான்- துஷார் தேஷ்பாண்டே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். இதன் மூலம் இந்த ஜோடி புதிய வரலாற்று சாதனையை படைத்து.
78 ஆண்டு கால முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 10-வது மற்றும் 11-வது பேட்டர் இருவரும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். தனுஷ் 120 (நாட் அவுட்) ரன்களுடன் தேஷ்பாண்டே 123 (அவுட்) ரன்களும் குவித்தனர். இதன் மூலம் பரோடா அணிக்கு 606 ரன்கள் இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. இன்று கடைசி நாள் என்பதால் மும்பை அணியே வெற்றி பெரும் நிலையில் உள்ளது.
- மும்பை அணிக்கு எதிரான அரைஇறுதியில் தமிழகத்தின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
சென்னை:
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 33 வித்தியாசத்தில் சவுராஸ்டிராவை வீழ்த்தி ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி இருந்தது.
மற்ற கால்இறுதி போட்டிகளில் மத்தியபிரதேசம் 4 ரன்னில் ஆந்திராவையும், விதர்பா 127 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவையும் தோற்கடித்தன. பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மும்பை அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
அரைஇறுதி ஆட்டங்கள் வருகிற 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடைபெறும் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் விதர்பா-மத்தியபிர தேச அணிகளும், மும்பையில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் தமிழ்நாடு-மும்பை அணிகளும் மோதுகின்றன.
மும்பை அணிக்கு எதிரான அரைஇறுதியில் தமிழகத்தின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதனால் வாஷிங்டன் சுந்தர் தமிழக அணியோடு இணைந்து கொள்கிறார். அவரது வருகை சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்
இதேபோல மும்பை அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார். அவர் இந்திய அணியில் இருந்து 2-வது டெஸ்டுக்கு பிறகு நீக்கப்பட்டார்.
- பிரித்வி ஷா எடை காரணமாக நீக்கப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.
- பிரித்வி ஷா போன்ற உடலமைப்பை கொண்டுள்ள எத்தனை பேர் 379 ரன்கள் அடித்துள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.
மும்பை:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
மும்பை அணியில் இடம் பெற்றிருந்த பிரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அதிக எடையுடன் இருப்பதாலும், வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் கூறி அவரை அணியில் இருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மும்பை அணியில் பிரித்வி ஷா நீக்கப்பட்ட முடிவை இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரஞ்சி அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு கலவையான காரணங்கள் செய்திகளாக காணப்படுகின்றன. ஒருவேளை அது அணுகுமுறை, நன்னடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தால் அதை புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் அவருடைய எடை காரணமாக நீக்கப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.
ஏனெனில் அவரின் உடலில் 35 சதவீதம் கொழுப்பு இருப்பதாலேயே நீக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரிந்துரைக்கிறது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் ஆட்டத்தை நாம் பார்த்தோம்.
அவருடைய உடல் எடை மற்றும் வடிவம் பற்றி பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் 150 ரன்கள் அடித்த அவர் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு பிட்னஸ், மெலிதான இடுப்பு மட்டுமே தேவையில்லை என்பதை காண்பித்தார். எனவே ஒரு வீரர் 150+ ரன்கள் அடித்தால் அல்லது ஒரு நாளில் 20 ஓவர் வீசினால் அதையே நாம் பிட்னஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பிரித்வி ஷா போன்ற உடலமைப்பை கொண்டுள்ள எத்தனை பேர் 379 ரன்கள் அடித்துள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிசிசிஐ-ன் விதிமுறையால் ம், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.
- விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார்.
மும்பை:
இந்திய அணியின் மூத்த வீரர்கள் உட்பட அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இனி இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. பிசிசிஐ-ன் விதிமுறையால், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.
இந்த நிலையில் மூத்த வீரரான விராட் கோலி தேசிய அளவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார். அவர் அப்போது டெல்லி மாநில அணிக்காக விளையாடி இருந்தார். இப்போதும் அவரது பெயர் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் பரிசீலனையில் உள்ளது. அவரை ரஞ்சி டிராபி அணியில் சேர்ப்பதா? வேண்டாமா? என குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
விராட் கோலிக்கு கழுத்து வலி ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக அவர் ஊசி செலுத்தி கொண்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் தான் இந்த குழப்பத்துக்கு காரணம். இந்த நிலையில். டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விராட் கோலியின் பெயரை அணியில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்ற முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.
விராட் கோலி விளையாட மறுத்ததால் கழுத்து வலி என்ற காரணம் சொல்லப்படுகிறதா? அல்லது உண்மையாகவே அவருக்கு கழுத்து வலி இருக்கிறதா? என சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி எந்த வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லையோ, அந்த வீரரை பிசிசிஐ நடத்தும் எந்த கிரிக்கெட் தொடரில் இருந்தும் நீக்கும் முடிவு எடுக்கப்படும் என்றும், ஐபிஎல் தொடரிலும் கூட அந்த வீரர் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.
- பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் சதமடித்தும் பஞ்சாப் அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி 23-ந் தேதி தொடங்கிய ஒரு போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான பஞ்சாப் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, மோசமான ஆட்டத்தின் மூலம் 55 ரன்னில் சுருண்டது. அதிகம் எதிர்பார்த்த நட்சத்திர வீரரான சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணி ஸ்மரண் ரவிச்சந்திரனின் இரட்டை (203) சதத்தால் 475 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் கர்நாடக அணி 420 ரன்கள் முன்னிலை பெற்றது.
கடினமாக சூழலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 213 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் வெளியேறி நிலையில் சுப்மன் கில் மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சில் சதம் விளாசியதன் மூலம் தன் மீதான விமர்சங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
- போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்சில் யார் அதிக ரன்கள் எடுத்தார்களோ அந்த அணி வெற்றி பெறும்.
- குஜராத் அணி 455 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒரு அரையிறுதிப் போட்டியில் மும்பை- விதர்பா அணிகளும் கேரளா- குஜராத் அணிகளும் மோதினர்.
இதில் குஜராத்- கேரளா அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்பாக சென்றது. முதலில் பேட்டிங் செய்த கேரளா அணி முதல் இன்னிங்சில் 457 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்க வீரர்களான பஞ்சால்- ஆர்யா தேசாய் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் குவித்தது.
ஆர்யா தேசாய் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சால் 148 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பரபரப்பான கட்டத்தில் 446 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்தது. இன்னும் 12 ரன்கள் எடுத்தால் முதல் இன்னிங்சில் கேரளா அணியை விட குஜராத் அணி முன்னிலை பெற்றுவிடும். அப்படி எடுத்து விட்டால் குஜராத் அணி வெற்றி பெற்று விடும். ரஞ்சி டிராபி போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்சில் யார் அதிக ரன்கள் குவித்துள்ளார்களோ அந்த அணி வெற்றி பெறும்.
அந்த வகையில் கடைசி ஜோடி விளையாடியது. கடைசியாக 3 ரன்கள் தேவை என்ற நிலையில் நாக்வஸ்வல்லா அதிரடியாக விளையாடுவார். அந்த பந்து சில்லி பாய்ண்டில் இருந்த கேரள வீரரின் ஹெல்மெட்டில் பட்டு சிலிப் திசையில் நின்று கொண்டிருந்த சச்சின் பேபி கையில் சிக்கியது.
கேரள வீரர்கள் அவுட் என தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். ஆனால் பேட்டர்கள் இருவரும் அவுட்டா இல்லையா என்பது போல களத்தில் நின்றனர். நடுவர்கள் இருவரும் ஆலோசித்து அவுட் என தெரிவித்தனர்.
2 முன்னிலையை பெற்றதால் கேரள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது உறுதி ஆகிவிட்டது. இன்று கடைசி நாள் என்பது குஜராத் அணி 2-வது இன்னிங்சில் விளையாட வாய்ப்பு இல்லை. கேரளா அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கேரளா அணி ரஞ்சி டிராபி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- மும்பையை 80 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வீழ்த்தியது.
- ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா- கேரளா அணிகள் வருகிற 26-ந் தேதி மோதுகின்றனர்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒரு அரையிறுதிப் போட்டியில் மும்பை- விதர்பா அணிகளும் கேரளா- குஜராத் அணிகளும் மோதினர்.
மும்பை விதர்பா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 270 ரன்கள் குவித்தது.
இதனால் விதர்பா 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. யாஷ் ரத்தோட்டின் சதத்தின் மூலம் (151) விதர்பா அணி 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணிக்கு 408 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சர்துல் தாகூர் - ஷம்ஸ் முலானி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் அரை சதம் கடந்தார். 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆனது. ஷம்ஸ் 46 ரன்களில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஷர்துல் 66 ரன்கள் என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் மோஹித் அவஸ்தி- ராய்ஸ்டன் டயஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். ஆனாலும் அவஸ்தி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா- கேரளா அணிகள் வருகிற 26-ந் தேதி மோதுகின்றனர்.