என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் அருண் விஜய்"

    • தன்னைப் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது.
    • இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்

    தனது குடும்பத்தை பற்றி தவறான தகவல்களை யூடியூப் சேனலில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.

    அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், "தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

    • ரெட்ட தல படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்
    • இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் `ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.

    மேலும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரெட்ட தல படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் நாளை வெளியாகிறது.
    • வணங்கான் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்துள்ளார். திரைத்துறை மட்டுமின்றி, கார் ரேசிங் மற்றும் பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித்.

    அந்தவகையில், நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெறும் கார் ரேசில் பங்கேற்கிறார். இதற்காக துபாய் புறப்பட்டு சென்றுள்ள அஜித் தினந்தோரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்திய பயிற்சியின் போது நடிகர் அஜித் குமார் பந்தய களத்தில் விபத்தில் சிக்கினார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

    விபத்தில் சிக்கிய போதிலும், நடிகர் அஜித் குமார் நலமுடன் இருப்பதாகவும் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் பந்தயத்தில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் விபத்தில் சிக்கிய வீடியோவை பார்த்ததும், நடிகர் அருண் விஜய் அஜித்தின் மேலாளரை தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்.

    அருண் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வணங்கான் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களை சந்தித்த போது, "அஜித் சார் தனக்கு பிடித்த விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார். ரேசிங் எவ்வளவு ஆபத்தானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்."

    "வீடியோவை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே சுரேஷ் சாருக்கு போன் செய்தேன். அவர் நடிகர் அஜித் குமார் நலமுடன் இருப்பதாகவும், நாளையும் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். அந்தளவு துணிச்சலான நபர் தான் அஜித். அவருக்கு வாழ்த்துக்கள், கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும். எல்லா துறையிலும் ஆபத்து இருக்கிறது. அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்," என்றார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • என்னை அறிந்தால் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார்.
    • என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு பட வாய்ப்புகள் அதிகரித்தன.

    கடந்த 2015-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர், பார்வதி நாயர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

    அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது. இப்படத்தில் அஜித்துக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு பட வாய்ப்புகள் அதிகரித்தன.

    இந்நிலையில், 'என்னை அறிந்தால்' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், மீண்டும் அஜித்துடன் இணைவது குறித்து நடிகர் அருண் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வந்தது.
    • வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக அருண் விஜய் நடித்துள்ளார்.

    பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வந்தது.

    சமீப காலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அருண் விஜய்க்கு இந்த படம் ஒரு மைல்கல். விக்ரம், சூர்யாவை போலவே அருண் விஜய்யிடம் இருந்தும் சிறப்பான ஒரு நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பாலா.

    வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக அபாரமாக நடித்திருக்கும் அருண் விஜய் பல இடங்களில் கலங்க வைத்திருக்கிறார்.


    இவருடைய தங்கையாக நடித்திருக்கும் ரிதாவும், காதலியாக நடித்திருக்கும் நடிகை ரோஷினி பிரகாசும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளன.

    கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனியும் நேர்மையான நீதிபதியாக மிஷ்கினும் நடித்துள்ளனர்.


    இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் பிப்ரவரி 21 முதல் TENTKOTTA என்ற ஸ்ட்ரீமிங் தளத்தில் திரையிடப்பட உள்ளது. திரையரங்க வெளியீட்டைத் தவறவிட்ட பார்வையாளர்கள் இப்போது தங்கள் வீடுகளில் இருந்தபடியே படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படம் ’அச்சம் என்பது இல்லையே’.
    • இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, தேவி உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு 'தலைவி' படத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்தார்.

     

    அச்சம் என்பது இல்லையே படக்குழு

    அச்சம் என்பது இல்லையே படக்குழு

    இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார்.


    சினம்

    இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைத்துறையினர், படக்குழு என பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் சாந்தனு கூறியதாவது, "எனக்கு அருண் விஜய்யை மிகவும் பிடிக்கும். தனிநபராக அவரைப் பிடித்ததைத் தாண்டி, அவருடைய சினிமா வாழ்க்கை பயணமும் பிடிக்கும். மற்ற துறைகளில் திறமை இருந்தால் மட்டும் போதும். ஆனால், சினிமா துறையில் திறமையைத் தாண்டி வேறு சில விஷயங்களும் நமக்கு சாதகமாக நடக்க வேண்டியுள்ளது.


    சினம்

    எத்தனையோ தடைகள், விமர்சனங்களைத் தாண்டி இன்று தனக்கான இடத்தை அருண் விஜய் பிடித்திருக்கிறார். என்னுடைய ஒரு படம் சரியாக போகவில்லை என்று விஜய் அண்ணாவிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அப்போது அவரும் அருண் விஜய்யை உதாரணமாகச் சொல்லித்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். இத்தனை வருட கஷ்டங்களைத் தாண்டி இன்று நல்ல இடத்திற்கு அருண் விஜய் வந்துட்டாருல, அது மாதிரி உனக்கும் நடக்கும் என்றார்" என்று கூறினார்.

    • ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பார்த்திபன் அருண் விஜய் குறித்து பேசியுள்ளார்.

    நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சினம்

    சினம்

     

    இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைத்துறையினர், படக்குழு என பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, "நடிகர் அருண் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு சிறந்த நடிகருடைய நடிப்பை நேரில் பார்த்த சந்தோசம் எனக்கு கிடைத்தது. அவர் இன்னும் நிறைய உயரத்திற்கு செல்ல வேண்டும். அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது, அவருடைய பாடும் திறமையை பாராட்டி ஆக வேண்டும். இவ்வளவு நன்றாக பாடுவார் என எனக்கு தெரியாது. இயக்குனர் குமரவேலன் திறமையான இயக்குனர், அவருடன் மூன்று படங்கள் பணியாற்றியுள்ளேன். அவர் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட, அவர் இந்த படத்தில் சிறப்பான பணியை கொடுத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது, அனைவரும் படம் பாருங்கள் நன்றி என்றார்.

    அருண் விஜய்

    அருண் விஜய்

     

    இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது, "அருண் விஜய் வெற்றியை சந்திக்க பல காலம் ஆகியது. அவர் தனது தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே முன்னேறிய ஒருத்தர். இசையமைப்பாளர் சபீர் உடைய பாடல் மயக்கும் அளவில் இருக்கிறது. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார்.

    • ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    சினம்

    சினம்

    இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைத்துறையினர், படக்குழு என பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் பிரசன்னா கூறியதாவது, "பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு அருண் விஜய் உதாரணமாக இருக்கிறார்.

    பிரசன்னா

    பிரசன்னா

     

    அவர் எனது குடும்ப நண்பர். இயக்குனர் குமார் உடைய திறமை எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. காளி வெங்கட் சிறந்த குணசித்திர நடிகர். இசையமைப்பு படத்தின் கதையமைப்புடன் சேர்ந்து அமைந்து இருக்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் என்றார்.

    அருண் விஜய் - ஜி.என்.ஆர்.குமாரவேலன் 

    அருண் விஜய் - ஜி.என்.ஆர்.குமாரவேலன் 

     

    இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் கூறியதாவது, "என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது.

    சினம்

    சினம்

     

    நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது. கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்" என்றார்.

    • ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் கோவையில் திரையிடப்பட்டது.

    1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்யாசமானதாக இருந்தது. தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாஃபியா' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.

     

    சினம்

    சினம்

    தற்போது அருண் விஜய், ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    சினம்

    சினம்

    இந்நிலையில், கோவையில் உள்ள திரையரங்கில் சினம் படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டன. இதில் நடிகர் அருண்விஜய், நடிகை பாலக் லால்வாணி பங்கேற்றனர். பின்னர் அருண் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது, அனைத்து குடும்பத்திலும் இருக்கிற கோபத்தை தான் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம்.

    சினம்

    சினம்

     

    அதனையே கதை கருவாக கொண்டு இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான கேரக்டர் தான் இந்த படத்தில் உள்ளது. சாதாரண சப்-இன்ஸ்பெக்டர் அவனுக்கும் ஒரு குடும்பம், காதல் என ஆரம்பித்து அவனை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. எந்த இடத்தில் அவன் கோபம் அடைகிறான் என்பதை அழகா இயக்குனர் அமைத்துள்ளார் என்றார்.

    • 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய்.
    • தற்போது அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்யாசமானதாக இருந்தது. தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாஃபியா' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.


    சினம்

    தற்போது அருண் விஜய், ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார்.

    ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


    சினம்

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஒரு பெண்ணின் கொலை வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரியாக வரும் அருண் விஜய் கொலையை கண்டுபிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாக வைத்து அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    • அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் பார்டர்.
    • இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளார்.

    இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.

     

    பார்டர்

    பார்டர்

    இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. அதன்பின்னர் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

     

    பார்டர்

    பார்டர்

    பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை நீண்ட இடைவெளிக்கு பிறகு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×