என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலிவுட் நடிகர்"

    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
    • நடிகர் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

    பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த இவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் மனோஜ் குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதவிட்டிருப்தாவது:-

    புகழ்பெற்ற நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன்.

    இந்திய சினிமாவின் அடையாளமாக அவர் இருந்தார், குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக நினைவுகூரப்பட்டார். அது அவரது படங்களிலும் பிரதிபலித்தது.

    மனோஜ் குமாரின் படைப்புகள் தேசிய பெருமையின் உணர்வைத் தூண்டின. அது மேலும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
    • 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.

    பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார்.

    மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.

    பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த இவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் மகனுடன் ஐஎஸ்பிஎல் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி போலி என தெரிய வந்துள்ளது.

    மும்பை:

    பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இவரது மகன் அபிஷேக் பச்சனும், மருமகள் ஐஷ்வர்யா ராயும் பாலிவுட்டில் நடித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, 81 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், அமிதாப் பச்சனுக்கு இதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் தான் உண்மையில் அபிஷேக் பச்சனுடன் ஐஎஸ்பிஎல் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்படவில்லை என அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்தார். நலமுடன் இருக்கிறேன். நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தி போலியானது என்றார்.

    அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது

    • கொள்ளை அடிக்கும் நோக்கில் மர்ம மனிதன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்துள்ளான்.
    • நடிகர் சைஃப் அலி கான் தேவரா, ஆதி புருஷ், ஓம்கரா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான். இவர் போபால் அரச குடும்பத்தை சேர்ந்தவர். மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி-நடிகை சர்மிளா தாகூர் தம்பதியினரின் மகன் ஆவார்.

    சைஃப் அலி கான் 2012-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சைஃப் அலி கான்-கரீனா கபூர் தம்பதி மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் வசித்து வருகிறார்கள். சைஃப் அலி கான் குடும்பத்தாருடன் வீட்டில் வழக்கம் போல் தூங்கிக்கொண்டு இருந்தார்.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம மனிதன் ஒருவன் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வந்தான். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர்.

    கொள்ளையனை பார்த்ததும் சைஃப் அலி கான் அதிர்ச்சி அடைந்தார். அவனை பிடிக்க முயன்றார். இருவரும் கடுமையாக மோதிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சைஃப் அலி கானை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

    இதில் அவரது உடலில் கழுத்து, முதுகு பகுதி (தண்டுவடம் அருகே), கை உள்ளிட்ட 6 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதில் 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.

    சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதை பார்த்து வீட்டில் இருந்த அனைவரும் அலறினார்கள். இதேபோல வீட்டில் இருந்த பணிப்பெண்ணும் கொள்ளையனால் தாக்கப்பட்டார்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சைஃப் அலி கான் பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இது குறித்து லீலாவதி மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி நீராஜ் உத்தமணி கூறியதாவது:-

    சைஃப் அலி கான் அதிகாலை 3.30 மணிக்கு எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவற்றில் 2 ஆழமான காயம். ஒரு காயம் அவருக்கு முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நிதின் டாங்கே, உடல் அழகு அறுவை சிகிச்சை நிபுணர் நீலா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர். நரம்பியல் அறுவை சிகிச்சை 2.30 மணி நேரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்து இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சைஃப் அலி கான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகே அவரது மனைவி கரீனா கபூர் மருத்துவமனைக்கு வந்தார்.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாந்த்ரா போலீஸ் உயர் அதிகாரிகள் சைஃப் அலி கான் வீட்டுக்கு சென்றனர். அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையனை குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறிய தாவது:-

    கொள்ளை அடிக்கும் நோக்கில் மர்ம மனிதன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சைஃப் அலி கானை தாக்கிய மர்ம மனிதனை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 படைகள் மும்பைக்கு வெளியே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்குரிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல சைஃப் அலி கான் வீட்டில் பணிபுரியும் 3 உதவியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீடு புகுந்து மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கேள்விப்பட்டதும் பாலிவுட் திரை உலகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சைஃப் அலி கான் தாக்கப்பட்டது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

    கொள்ளை முயற்சி சம்பவத்தில் சைஃப் அலி கான் தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதனால் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பொதுவாக பிரபலங்கள் வீடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த பாதுகாப்பையும் மீறி மர்ம மனிதன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு குளறுபடி தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சல்மான் கானை கொலை செய்யும் முயற்சியில் அவரது வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதே போல சல்மான்கானின் பங்களா வீட்டிலும் கொல்ல முயற்சி நடந்தது. பிரபல ரவுடியான பிஷ்னோய் கும்பல் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கொள்ளைக்காக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    54 வயதான நடிகர் சைஃப் அலி கான் தேவரா, ஆதி புருஷ், ஓம்கரா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    சைஃப் அலி கான் தாக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சைஃப் அலி கான், லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • பாந்த்ரா போலீஸ் உயர் அதிகாரிகள் சைஃப் அலி கான் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் - கரீனா கபூர் தம்பதி மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் வசித்து வருகிறார்கள்.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர்.

    கொள்ளையனை பார்த்ததும் சைஃப் அலி கான் அதிர்ச்சி அடைந்தார். அவனை பிடிக்க முயன்றார். இருவரும் கடுமையாக மோதிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சைஃப் அலி கானை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

    இதில் அவரது உடலில் கழுத்து, முதுகு பகுதி (தண்டுவடம் அருகே), கை உள்ளிட்ட 6 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதில் 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.

    சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதை பார்த்து வீட்டில் இருந்த அனைவரும் அலறினார்கள். இதேபோல வீட்டில் இருந்த பணிப்பெண்ணும் கொள்ளையனால் தாக்கப்பட்டார்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சைஃப் அலி கான் பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாந்த்ரா போலீஸ் உயர் அதிகாரிகள் சைஃப் அலி கான் வீட்டுக்கு சென்றனர். அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையனை குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில், குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் மாடி படிக்கட்டுகளில் இருந்து குற்றவாளி கீழே இறங்கி வருகிறார். அவனுக்கு கிட்டத்தட்ட 35 வயது இருக்கும் போலீசார் தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 12, 13வது மாடிகளில் சைஃப் அலிகானின் வீட்டின் பணியாளர்கள் 6 பேர் தங்கி உள்ளனர்.
    • பணியாளர்கள் 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் மும்பை, பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு சாரண் என்ற 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மேலே உள்ள 4 தளங்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவரது மனைவி பிரபல நடிகை கரீனா கபூர் ஆவார். நேற்று முன்தினம் இரவு சைஃப் அலிகான் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். தலா 3 படுக்கை அறைகள் கொண்ட அந்த 13 மாடி கட்டிடத்தின் வீடுகளில் 11 வது மாடி வீட்டில் சைஃப் அலிகான், கரீனா கபூர் தம்பதி ஒரு அறையிலும், மகன்கள் தைமூர் ஒரு அறையிலும், ஜெகாங்கீர் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    12, 13வது மாடிகளில் சைஃப் அலிகானின் வீட்டின் பணியாளர்கள் 6 பேர் தங்கி உள்ளனர்.

    அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் சத்தம் கேட்டதால் நடிகர் சைஃப் அலிகான் கண்விழித்தார். கரீனாகபூர் தனது மகன்கள் அறைக்கு சென்றுவிட்டு வந்திருக்கலாம் என்று நினைத்தபடி புரண்டு படுத்தார். ஆனால் சத்தம் அதிகரிக்கவே ஏதோ விபரீதம் நடக்கிறது என்று வெளியில் வந்து பார்த்தார்.

    அப்போது வேலைக்கார பெண் எலியம்மா பிலிப் மர்ம நபர் ஒருவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் சைஃப் அலிகான் யார் நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டே அருகில் சென்றார்.

    அப்போது அந்த மர்மநபர் நடிகர் சைஃப் அலிகானிடம் எனக்கு ரூ. 1 கோடி பணம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து அந்த மர்ம மனிதனுக்கும் நடிகர் சைஃப் அலிகானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைஃப் அலிகான் மீது சரமாரியாக குத்தினான்.

    முதல் கத்தி குத்து சைஃப் அலிகானின் கழுத்தில் விழுந்ததால் அவர் நிலை தடுமாறினார். அடுத்தடுத்து மார்பு, இடுப்பு, முதுகு மற்றும் கால்களில் குத்திய அந்த நபர் மற்ற அறைகளின் கதவை வெளியில் பூட்டி விட்டு சைஃப் அலிகானை மிரட்டினார்.

    பிறகு அந்த நபர் சைஃப் அலிகானின் மகன் ஜெகாங்கீர் தூங்கி கொண்டிருந்த அறை வழியாக வெளியேறி மழைநீர் குழாய் வழியாக இறங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சத்தம் கேட்டு மற்ற பணியாளர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் தப்பி ஓடி விட்டார்.

    அருகில் மற்றொரு வீட்டில் வசிக்கும் சைஃப் அலிகானின் மகன் இப்ராகீமுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிகாலை 3 மணிக்கு வந்து ஆட்டோ மூலம் நடிகர் சைஃப் அலிகானை மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தார்.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் முதுகில் மர்ம நபர் குத்திய கத்தியின் முனை 3 அங்குலத்தில் முறிந்து பாய்ந்து இருந்தது. அதை டாக்டர்கள் அகற்றினார்கள்.



    சுமார் 2 மணி நேர சிகிச்சைக்கு பிறகு நடிகர் சைஃப் அலிகான் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவரிடம் நேற்று போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

    நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த நபர் பணியாளர்கள் 6 பேரில் ஒருவருக்கு தெரிந்தவராக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து பணியாளர்கள் 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    பணிப்பெண்களில் ஒருவரான எலியம்மா பிலிப் மர்ம நபருடன் நீண்ட நேர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரிடம் போலீசார் நேற்று 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார்கள். இதன் மூலம் மர்ம நபர் எப்படி நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் வந்தான். எப்படி தப்பி சென்றான் என்பது தெரிய வந்துள்ளது.

    நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் சில பகுதிகளில் மட்டும் தான் கண்காணிப்பு கேமரா உள்ளது. அந்த கேமராக்களில் அந்த மர்மநபர் சிக்கவில்லை. என்றாலும் 6-வது மாடியில் இருந்துஅந்த நபர் மாடிப்படிகளில் இறங்கி செல்வது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.

    இதன்மூலம் அந்த நபர் பற்றி அடையாளம் தெரிந்துள்ளது. அவரை கைது செய்ய 10 தனிப்படைகளை மும்பை போலீசார் அமைத்து உள்ளனர். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

    நடிகர் சைஃப் அலிகானின் வீடு 11, 12, 13-வது மாடிகளில் அமைந்திருக்கிறது. அவ்வளவு எளிதில் அந்த வீட்டுக்குள் யாரும் செல்ல இயலாது. அந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே அந்த கட்டிடத்தின் நுணுக்கங்கள் தெரியும்.

    எனவே கட்டிட பணியாளர்கள் யாராவது இந்த செயல்களில் ஈடுபட்டார்களா என்று விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணைக்கு பிறகு 2 பேரை மும்பை போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து சைஃப் அலிகானை கத்தியால் குதிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜேம்ஸ் கேமரூன் எடுத்த அவதார் படத்தில் கதாநாயகனாகத் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
    • சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் கோவிந்தா இண்டர்வியூ செய்தார்.

    90களில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. தற்போது 61 வயதாகும் கோவிந்தா பாலிவுட் வட்டாரங்களில் தனது அனுபவங்களைப் பற்றி பிரஸ்தாபித்து வருகிறார்.

    அவ்வப்போது தனது கருத்துக்களுக்காக சினிமா பத்திரிகைகளின் முதல் பக்கத்திலும் இடம் பிடிப்பார். அப்படிதான் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் எடுத்த அவதார் படத்தில் கதாநாயகனாகத் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறி டிராலுக்கு உள்ளானார்.

    ஆனால் கோவிந்தா 90 களில் மார்க்கெட் உள்ள கதாநாயகன் என்பதையும் மறுக்க முடியாது.

    இந்நிலையில் தனக்கு வந்த ரூ.100 கோடி பட்ஜெட் பட வாய்ப்பை மறுத்ததற்காக கண்ணாடியில் பார்த்து என்னை நானே அறைந்து கொண்டேன் என்று கோவிந்தா உச் கொட்டியுள்ளார்.

    பீஷ்ம் இன்டர்நேஷனல் என்ற தனது யூடியூப் சேனலில் சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் பேசிய கோவிந்தா, ரூ.100 கோடி படத்தை நிராகரித்ததற்காக வருத்தப்படுகிறேன். எனக்கு வேலை இல்லை என்று அவர்கள்(பத்திரிகைகள்) எழுதுகிறார்கள். நானோ ரூ.100 கோடி படத்தை விட்டுவிட்டேன்.

    இதற்காக நான் என்னை கண்ணாடியில் பார்த்து அந்த பிராஜெக்டை மறுத்ததற்காக என்னை நானே அறைந்து கொண்டேன் என்று கூறினார். இந்த காலத்தில் கிளிக் ஆகும் பாத்திரம் இந்தப் படத்தில் இருந்தது என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×