என் மலர்
நீங்கள் தேடியது "டி.குகேஷ்"
- தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் ஆகியவை சார்பில் டி.குகேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
- ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை ருமேனியாவில் நடைபெறும் செஸ் போட்டியில் டி.குகேஷ் பங்கேற்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
சென்னை:
கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் சமீபத்தில் நடந்த கேண்டிடேட் செஸ் போட்டியில் 17 வயதான சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் அவர் மோதுகிறார். உலக போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். குகேஷ்-டிங் லிரன் மோதும் உலக செஸ் போட்டி நவம்பரில் நடக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் ஆகியவை சார்பில் டி.குகேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த துணை தலைவர் அஜய் படேல், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலை வர் டி.வி. சுந்தர் தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் எம்.மாணிக்கம், அகில இந்திய செஸ் சம்மேளன முன்னாள் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், வேலம்மாள் கல்வி நிறுவனத்தை சேர்ந்த எம்.வி.எம்.வேல்மோகன், இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டரான மானுவேல் ஆரோன தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று டி.குகேஷை பாராட்டினர்.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து 'டி.குகேஷ் பேசும்போது சீன வீரர் டிங் லிரனுடன் மோதும் உலக செஸ் போடடியில் எனது சிறந்த நிலையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்' என்றார்.
ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை ருமேனியாவில் நடைபெறும் செஸ் போட்டியில் டி.குகேஷ் பங்கேற்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
- இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
- கடைசி சுற்றில் வெற்றி பெற்று தங்கம் வென்றதில் மகிழ்ச்சி.
புடாபெஸ்ட்:
அங்கேரியில் நடை பெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
டி.குகேஷ், பிரக்ஞானந்தா (இருவரும் சென்னை) அர்ஜூன் எரிகேசி, விதித் குஷாத்பி, அரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஓபன் பிரிவிலும் வைஷாலி (சென்னை), தானியா, ஹரிகா, வந்திகா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் பெற்றன.
11 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் ஓபன் பிரிவில் 21 புள்ளிகள் எடுத்தது. 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு சுற்று 'டிரா' ஆனது. தோல்வி எதையும் சந்திக்கவில்லை.
பெண்கள் பிரிவில் 19 புள்ளிகள் கிடைத்தது. 9 வெள்ளி பெற்றது. ஒரு சுற்றில் 'டிரா' செய்தது. ஒரு சுற்றில் தோல்வியை தழுவியது.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஆண்கள் அணி 2 முறையும் (2014, 2021) பெண்கள் அணி 1 தடவையும் (2022) வெண்கலப் பதக்கம் பெற்றன.
ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வெல்ல சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். 2 சுற்றில் 'டிரா' செய்தார். தங்கம் வென்றது குறித்து குகேஷ் கூறியதாவது:-
எனது ஆட்டத்தில் மிகுந்த முன்னேற்றத்தை காணமுடிந்தது. மேலும் அணியாக நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியான உணர்வை தருகிறது.
கடந்த காலங்களில் பல மோசமான தோல்விகளை தழுவி இருந்த போதிலும் இந்த முறை ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்ல முடிந்தது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

கடைசி சுற்றில் தோற்றாலும் டை பிரேக்கில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். நிச்சயமாக போட்டியில் வெல்வதே விரும்பினேன். அதன்படி கடைசி சுற்றில் வெற்றி பெற்று தங்கம் வென்றதில் நிம்மதி அடைந்தோம். கடந்த முறை தங்கம் வெல்லும் அணியாக நெருங்கி வந்து வாய்ப்பை இழந்தோம். இந்த முறை வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளித்தது.
உலக செஸ் சாம்பியன் போட்டி பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை. செஸ் ஒலிம்பியாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடினோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
- முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இப்போட்டி 14 சுற்றுகள் கொண்டதாகும். வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும்.
முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார். முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது, 5-வது,6-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்னும் 8 சுற்றுகள் மீதமுள்ளது. குகேஷ்-டிங் லிரென் மோதும் 7-வது சுற்று போட்டி நாளை நடக்கிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார். இதில் அவர் வெற்றி பெற்று முன்னிலை பெறுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
- இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்.
புதுடெல்லி:
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் துப்பாக்கி சூடு வீராங்கனை மனு பாக்கர், செஸ் வீரர் டி.குகேஷ், ஆக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், மாற்று திறனாளி வீரர் பிரவீன்குமார் ஆகியோர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
இதுகுறித்து குகேஷ் கூறியதாவது:-
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் எனக்கும் எனது சாதனைகளை அங்கீகரிக்கவும் மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை அறிவித்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லியில் அகில இந்திய செஸ் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
- ஒலிம்பிக்கில் செஸ் போட்டி ஒரு பகுதியாக இருப்பதை காண நான் விரும்புகிறேன்.
தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் டி.குகேஷ், சமீபத்தில் உலக சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார். இளம் வயதில் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு டெல்லியில் அகில இந்திய செஸ் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது. அப்போது குகேஷ் கூறியதாவது:-
ஒலிம்பிக்கில் செஸ் போட்டி ஒரு பகுதியாக இருப்பதை காண நான் விரும்புகிறேன். குறிப்பாக இந்தியாவில் ஒலிம்பிக் நடக்கும்பட்சத்தில் செஸ் சேர்க்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
செஸ், மிகவும் பிரபலத்தையும் ஆதரவையும் பெற்று வருகிறது என்று நான் நினைக்கிறேன். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதை ஒலிம்பிக் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதனால் ஒலிம்பிக்கில் செஸ் சேர்க்கப்படுவதை உண்மையிலேயே எதிர்நோக்குகிறேன்.
ஓரிரு நாட்களில் நெதர்லாந்தில் உள்ள விஜ்க் ஆன் ஜீயில் நடைபெறும் டாடா செஸ் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
- வைஷாலி 5 புள்ளியுடன் 8-வது இடத்திலும், திவ்யா தேஷ்முக் 2 புள்ளியுடன் 13-வது இடத்திலும் உள்ளனர்.
- பிரக்ஞானந்தா 5.5 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 9-வது சுற்று நடைபெற்றது.
உலக சாம்பியனான சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் சகநாட்டை சேர்ந்த மென்டோன்காவுடன் மோதினார். 43-வது காய் நகர்த்தலுக்கு பிறகு குகேஷ் வெற்றி பெற்றார்.
அதே நேரத்தில் மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். அவரை நெதர்லாந்தை சேர்ந்த அனிஷ் கிரி தோற்கடித்தார். இதேபோல ஹரி கிருஷ்ணா, ரஷிய வீரர் விளாடிமிர் வாசிலியேச்சிடம் தோற்றார். அர்ஜூன் எரிகேசி இந்த சுற்றில் சீன வீரருடன் டிரா செய்தார்.
9-வது சுற்று முடிவில் குகேஷ் மட்டும் 6.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்து சாட்டோரோவ் மற்றும் விளாடிமிர் தலா 6 புள்ளிகளுடன் உள்ளனர்.
பிரக்ஞானந்தா 5.5 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார். ஹரி கிருஷ்ணா 4 புள்ளியும், அர்ஜூன் எரிகேசி மென்டோன்கா தலா 2.5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த வைஷாலி 9-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக்குடன் 'டிரா' செய்தார்.
வைஷாலி 5 புள்ளியுடன் 8-வது இடத்திலும், திவ்யா தேஷ்முக் 2 புள்ளியுடன் 13-வது இடத்திலும் உள்ளனர்.
- டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது.
- 10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
விஜ்க் ஆன் ஜீ:
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரின் 10-வது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் உலக சாம்பியனான சென்னை கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் உள்ளூரைச் சேர்ந்த மேக்ஸ் வார்மெர்டமை எதிர்கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 34-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார்.
மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சுலோவெனியாவைச் சேர்ந்த விளாடிமிர் பெடோசிவை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகேசி, மென் டோன்கா ஆகியோர் தாங்கள் மோதிய ஆட்டங்களில் டிரா செய்தனர்.
உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ் செர்பிய வீரர் அலெக்சி ஷாரனாவை வீழ்த்தினார்.
10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவர் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 5 சுற்றுகளில் டிரா செய்தார். இன்னும் 3 ரவுண்டு எஞ்சியுள்ளது.
நோடிர்பெக் அப்து சாட்டோரோவ் 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். ஹரிகிருஷ்ணா 4.5 புள்ளியும், எரிகேசி , மெண்டோன்கா தலா 3 புள்ளியும் பெற்றுள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரக்ஞானந்தா சகோதரி ஆர்.வைஷாலி 10-வது சுற்றில் செக் குடியரசுவைச் சேர்ந்த வான் நூயனிடம் தோற்றார். அவர் 5 புள்ளியுடன் 10-வது இடத்தில் உள்ளார்.
- டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது.
- 11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
விஜ்க் ஆன் ஜீ:
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரின் 11-வது சுற்று நேற்று நடைபெற்றது.
உலக சாம்பியனான சென்னை கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் சீனாவைச் சேர்ந்த ஒய் வீவை எதிர்கொண்டார். 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் கிடைத்தது. குகேஷின் 6-வது டிரா இதுவாகும்.
மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அமெரிக்காவைச் சேர்ந்த பேபியானோ கருணாவை தோற்கடித்தார். இது அவரது 4-வது வெற்றியாகும். மற்ற இந்திய வீரர்களில் ஹரி கிருஷ்ணா, மென்டோன்கா ஆகியோரும் வெற்றி பெற்றனர். அர்ஜூன் எரிகேசி மோதிய ஆட்டம் டிரா ஆனது.
11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ் 7.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா 5.5 புள்ளியும், மெண்டோன்கா 4 புள்ளியும் , எரிகேசி 3.5 புள்ளியும் பெற்று உள்ளனர். இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ளன.