search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமகிரி காலபைரவர்"

    • காலபைரவரின் கருணை பார்வையால் கையோடு திருமணம் நடைபெற்றுள்ளது.
    • எனவே ராமகிரி திருத்தலம் திருமண வரம் தரும் தலமாகவும் திகழ்கிறது.

    ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாக சொல்கிறார்கள்.

    சில ஜாதககாரர்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும்.

    அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள் 10 ம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

    அடுத்து சிலருக்கு கிரக அமைப்புகள் படி திருமண தோஷம் இருக்கும்.

    உரிய வயதிற்கு பிறகும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.

    இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள் ராமகிரி காலபைவரிடம் சரண் அடைந்தால் உரிய பலன் கிடைக்கும்.

    இந்த தலத்துக்கு வந்து காலபைரவருக்கு அபிஷேகம் செய்து உரிய வழிபாடு செய்தவர்களுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.

    காலபைரவரின் கருணை பார்வையால் கையோடு திருமணம் நடைபெற்றுள்ளது.

    எனவே ராமகிரி திருத்தலம் திருமண வரம் தரும் தலமாகவும் திகழ்கிறது.

    • வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கைஅமையும்.
    • மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.

    பைரவருக்கு பூசணிக்காய், தேங்காயில் தீபம் ஏற்றுவதை பெருபாலான பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

    ஆனால் ராமகிரி தலத்தில் பூசணிக்காய் மற்றும் தேங்காயில் எண்ணையை ஊற்றி தீபம் ஏற்ற தடை விதிக்கப்பபட்டுள்ளது.

    அகல் விளக்குகளில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் ராமகிரி ஆலயத்தின் அருகில் தேங்காய், பூசணிக்காய் போன்றவை விற்பனை செய்யப்படுவதில்லை.

    அகல் விளக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    என்றாலும் கால பைவரருக்கு பழம் வகைகளில் தீபம் ஏற்றுவது மிக சிறப்பானதாக கூறப்பட்டுள்ளது.

    எனவே பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தி இருப்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    1.தேங்காய்-குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்.

    2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி-நரம்பு வியாதி, திருமணம் தடை நீங்கும்.

    3.கொடை மிளகாய்-புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

    4.கொய்யா பழம்/ கத்திரிக்காய்-நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.

    5.பீட்ருட்- ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.

    6.பாகற்காய்-சனி பாதிப்பு நீங்கும், கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.

    7.வில்வபழம்- மாதுளம்-லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.

    8.ஆரஞ்சு பழம்-தொழில் விருத்தி ஏற்படும்.

    9.அன்னாசிப்பழம்-சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

    10.பப்பாளி பழம்-திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    11.இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.

    12.வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கைஅமையும்.

    13.மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.

    • சிவலிங்கத்தில் வாலினால் சுற்றிய தழும்புகள் இருப்பதை இன்றும் காணலாம்.
    • மூலஸ்தான லிங்கத்தின் எதிரில் ஆஞ்சநேயர் இருக்கும் ஒரே சிவாலயம் இது என்பது ஒரு தனிச்சிறப்பு.

    ஸ்ரீராமரின் பூஜை நிமித்தமாக ஆஞ்சநேயரால் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட சுயம்புலிங்கத்தை தந்திரமாக அவரிடமிருந்து வாங்கி, ஸ்ரீ காலபைரவர் இங்கு பிரதிஷ்டை செய்தார் அல்லவா?

    அந்த லிங்கத்தை ஆஞ்சநேயர் தன் வாலினால் பற்றி, பெயர்த்தெடுக்க முயற்சித்ததனால் ஈஸ்வரருக்கு வாலீஸ்வரர் எனக் காரணப் பெயர் உண்டாயிற்று.

    சிவலிங்கத்தில் வாலினால் சுற்றிய தழும்புகள் இருப்பதை இன்றும் காணலாம்.

    அவருக்கு எதிரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கை கூப்பியபடி வழிபடும் நிலையில் பக்த ஆஞ்சநேயராக விளங்குவதையும் நாம் காணலாம்.

    மூலஸ்தான லிங்கத்தின் எதிரில் ஆஞ்சநேயர் இருக்கும் ஒரே சிவாலயம் இது என்பது ஒரு தனிச்சிறப்பு.

    ஆஞ்சநேயர் தன் வாலினால் லிங்கத்தைச் சுற்றி இழுக்கும் தல வரலாற்றின் ஐதீக சிற்பம் ஆலய தூணிலும் செதுக்கப்பட்டு இருக்கிறது.

    மகா சிவராத்திரி அன்று ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

    இரவு வாண வேடிக்கைகளுடன், திரு வீதி உலாவும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்று ஆலயத்திற்கு வந்து வழிபடுகிறார்கள்.

    • சிலரது கொள்ளிக்கண் பார்வை மற்றவர்களது வாழ்க்கையை கடுமையாக பாதித்து விடும்.
    • இத்தகைய திருஷ்டியில் இருந்து தப்பிக்க ராமகிரி காலபைரவர் மிக சிறந்த வரபிரசாதியாக உள்ளார்.

    பிறரின் வாழ்க்கை வளர்ச்சிகள், முன்னேற்றங்கள்,உயர்வுகள், நல்லநிலைமைகள் போன்றவற்றை கண்டு, நம்மால் இவ்வாறு இருக்க முடியவில்லையே என்ற ஏக்க பெருமூச்சும் பொறுமலும், பொறாமையும் கொண்டு கெட்ட எண்ணங்கள் பலவற்றின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்பவரின் கண்பார்வையிலும், பேச்சிலும் கொடிய விஷத்தன்மைகள் நிரம்பி காணப்படும்.

    இத்தகையோரின் கண்பார்வையே திருஷ்டி தோஷமாக பிறரை பாதிக்கச்செய்கிறது.

    அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும்.

    இதுதான் முக்கியம்.

    சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள்.

    பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும்.

    சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்கவிடுவார்கள்.

    சிலர் நாக்கு வெளியே தொங்கவிட்டுக்கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள் சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள்.

    இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்ற சிலவற்றை செய்யலாம்.

    இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும் சில சமயம் சிலரது கொள்ளிக்கண் பார்வை மற்றவர்களது வாழ்க்கையை கடுமையாக பாதித்து விடும்.

    இத்தகைய திருஷ்டியில் இருந்து தப்பிக்க ராமகிரி காலபைரவர் மிக சிறந்த வரபிரசாதியாக உள்ளார்.

    அவரை மனம் உருக வேண்டினால் எவ்வளவு பெரிய திருஷ்டி தோஷமும் விலகி ஓடி விடும் என்பது பக்தர்களின் அனுபவம் ஆகும்.

    எனவே ராமகிரி காலபைரவரை வழிபட செல்லும் போது மனதுக்குள் திருஷ்டி தோஷம் விலகி ஓடவும் வேண்டிக் கொள்ளுங்கள்.

    • அப்படி குழந்தை செல்வத்தை அடைந்தவர்கள் வைத்து விட்டுப்போன
    • கல்நாய்க் குட்டி பொம்மைகள் நூற்றுக் கணக்கில் ஆலயத்தில் இருப்பதை இப்போதும் காணலாம்.

    குழந்தை செல்வம் வேண்டும் தம்பதியர் இங்கு வந்து நந்தி தீர்த்ததில் நீராடி காளிகாதேவி சமேத ஸ்ரீகால பைரவரை தரிசித்து அங்கிருக்கும் கல்நாய்குட்டியை எடுத்துக்கொண்டு நாய் வாகனத்தை மும்முறை வலம் வந்து நாய்குட்டி பொம்மையைக் கீழே வைத்து விட்டு குழந்தை செல்வம் அருள ஸ்ரீகால பைரவ மூர்த்தியிடம் பிரார்த்தித்துக்கொண்டு வணங்கிச்செல்வார்கள்.

    ஸ்ரீகால பைரவ சுவாமியின் பரிபூரண கருணாகடாட்சத்தினால் குழந்தை செல்வத்தைப் பெற்று, அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு புதிய ஒரு கல்நாய்க்குட்டி பொம்மையுடன் மீண்டும் ஆலயத்திற்கு வந்து நாய்க்குட்டி பொம்மையை நாய் வாகனத்திடம் வைத்துவிட்டு நிறைவான மனதுடன் தங்கள் இல்லம் திரும்புவார்கள்.

    அப்படி குழந்தை செல்வத்தை அடைந்தவர்கள் வைத்து விட்டுப்போன கல்நாய்க் குட்டி பொம்மைகள் நூற்றுக் கணக்கில் ஆலயத்தில் இருப்பதை இப்போதும் காணலாம்.

    குழந்தை செல்வம் வேண்டி பிரார்த்தனை செய்ய விரும்பும் தம்பதியர் ஆலய அர்ச்சகரை அணுகினால், அவர் பூஜாக்கிரமங்களை விரிவாக எடுத்துரைப்பதுடன் பூஜையையும் நடத்தி வைப்பார்.

    பக்தி சிரத்தையுடன் நம்பிக்கையும் கொண்டு ஸ்ரீ காளிகா தேவி சமேத ஸ்ரீ கால பைரவ சுவாமியை வழிபடும் தம்பதியர் குழந்தைச் செல்வம் பெறுவது உறுதி என்று அறுதியிட்டுச் சொல்கிறார்கள் பலன் அடைந்த தம்பதியர்கள்.

    • ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத் யோஜதம், அகோரம் ஆகியவை ஈசனின் 5 முகங்களை குறிக்கும்.
    • ராமகிரி கால பைரவர் ஆலயம் ஈசனின் பஞ்சமுக ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    சிவபெருமான் 5 முகங்களை கொண்டவர்.

    ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத் யோஜதம், அகோரம் ஆகியவை ஈசனின் 5 முகங்களை குறிக்கும்.

    ராமகிரி கால பைரவர் ஆலயம் ஈசனின் பஞ்சமுக ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    அதன்படி ஈசான முகம், ராமகிரி வா லீஸ் வரரை பிரபலிக்கிறது.

    சுருட்டப்பள்ளியில் உள்ள பள்ளிக் கொண்டீஸ்வரர் தத் புருஷ முகமாகவும், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி சம்பங்கி ராமேஸ்வரர் வாமதேவ முகமாகவும் அரிய துறையில் உள்ள வர மூர்த்தி சத்யோஜத முகமாகவும் மீஞ்சூர் அருகே காட்டூரில் உள்ள சிந்தா மணீஸ்வரர் அகோர முகமாகவும் கருதப்படுகிறார்.

    இந்த 5 முகங்களையும் கொண்ட 5 ஆலையங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது நல்லது என்று பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.

    • நாராயண வனத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் உள்ளது.
    • நாராயண வனத்தில் புகழ் பெற்ற சுரைக்காய் சித்தர் ஆலயமும் சிவாலயமும் அமைந்துள்ளது.

    அற்புதங்கள் நிறைந்த ராமகிரி கோவிலுக்கு சென்னையில் இருந்து மிக எளிதாக சென்று வரலாம்.

    சென்னையில் இருந்து காரில் செல்பவர்கள் செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக சென்றால் மிக எளிது.

    ஊத்துக் கோட்டையை தாண்டியதும் நாகலாபுரம் வரும்.

    அதை கடந்ததும் ராமகிரி ஊர்தான். சாலையின் வலது பக்கத்தில் பெரிய அலங்கார வளைவு கட்டப்பட்டுள்ளது.

    அதன் வழியாக உள்ளே சென்றால் அந்த பாதை கோவிலில் சென்றுதான் நிற்கும்.

    பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி செல்லும் பஸ்களில் செல்லலாம்.

    எக்ஸ்பிரஸ் பஸ்களில் செல்லாமல் சாதாரண பஸ்களில் சென்றால் ராமகிரி பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவார்கள்.

    அங்கிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பூண்டி, சீத்தஞ்சேரி, கச்சூர் வழியாக ஊத்துக்கோட்டைக்கு சென்று ராமகிரி செல்லலாம்.

    சென்னையில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் ராமகிரி தலம் உள்ளது.

    திருப்பதியில் 58 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூரில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைலிலும் அமைந்துள்ளது.

    அருகில் உள்ள பீச்சாட்டூரில் இருந்து 4 கிலோ மீட்டர் கடந்தால் இந்த தலத்தை அடையலாம்.

    நாராயண வனத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் உள்ளது.

    நாராயண வனத்தில் புகழ் பெற்ற சுரைக்காய் சித்தர் ஆலயமும் சிவாலயமும் அமைந்துள்ளது.

    திருப்பதி, திருத்தணி, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களுக்கு மையமாக ராமகிரி அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே ராமகிரியில் வழிபாடு செய்து விட்டு அருகில் உள்ள இந்த தலங்களுக்கும் சென்று வரும் வகையில் ஆன்மிக யாத்திரையை திட்டமிட்டு அமைத்துக் கொள்வது நல்லது.

    • அவரையும் வழிபட்ட பிறகு அருகில் இருக்கும் மண்டபத்துக்கு சென்று சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம்.
    • இந்த வரிசையில் தான் ராமகிரி கால பைரவர் ஆலயத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

    ராமகிரி கால பைரவர் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அங்கு எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்கு சில ஐதீகங்கள் உள்ளன.

    அவற்றை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ராமகிரி ஆலயத்துக்குள் நுழைந்ததும் இடது பக்கத்தில் நந்தி தீர்த்தம் இருப்பதை காணலாம்.

    அங்கு சென்று தீர்த்தத்தில் கால்களை நனைத்து, தலையில் தண்ணீரை தெளித்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அங்கிருந்து அருகில் உள்ள விநாயகரை வழிபட வேண்டும்.

    பிறகு நந்தி தீர்த்தத்தில் இருந்து ஏறி மேலே வந்ததும் அருகில் லிங்கம் ஒன்று இருப்பதை பார்க்க முடியும்.

    அவரை வழிபட்டு விட்டு ஆலயத்துக்கு செல்ல வேண்டும்.

    வழியில் உள்ள கடையில் 8 அகல் விளக்குகளை வாங்க வேண்டும்.

    8 அகல் விளக்கு மற்றும் அதை ஏற்றுவதற்கான எண்ணை, திரிகள் சேர்த்து ரூ.50 கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    8 அகல் விளக்குகளுடன் ஆலயத்தின் நுழைவுவாயில் வலது பக்கத்தில் இருக்கும் தீபம் ஏற்றும் பகுதிக்கு செல்ல வேண்டும்.

    அங்கு 8 அகல் விளக்குகளையும் ஏற்ற வேண்டும். அதன் பிறகே ஆலயத்துக்குள் நுழைய வேண்டும்.

    ஆலயத்தின் முக்கிய நுழைவு வாயில் அருகே இடது பக்கத்தில் தேங்காய் உடைப்பதற்கு என்று ஒரு இடம் உள்ளது.

    அங்கு தேங்காய் உடைத்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு கருவறை பகுதிக்கு சென்று கால பைரவரை வழிபட வேண்டும்.

    அவரை வழிபட்ட பிறகு 8 தடவை சுற்றலாம்.

    அல்லது ஒரே ஒரு தடவை சுற்றி வந்து வழிபாட்டை முடித்துக் கொள்ளலாம்.

    பைரவரை வழிபட்ட பிறகு அருகே உள்ள காளிகா தேவியையும் வழிபட வேண்டும்.

    பின்னர் அருகில் உள்ள சிவன் சன்னதிக்கு செல்ல வேண்டும்.

    வாலீஸ்வரர் என்ற பெயருடன் திகழும் சிவபெருமானை வணங்கி விட்டு அவருக்கு எதிரில் இருக்கும் பக்த ஆஞ்சநேயரையும் வழிபட வேண்டும்.

    சிவன் சன்னதியிலும் கோஷ்டத்துடன் கூடிய ஒரு பிரகாரம் உள்ளது.

    அந்த பிரகாரத்தில் சப்தமாதர்கள் மற்றும் பல்வேறு இறை மூர்த்திகள் உள்ளனர்.

    அவர்களையும் வழிபட வேண்டும்.

    இதையடுத்து அந்த சன்னதியில் இருந்து வெளியேறி வந்தால் அம்பாள் சன்னதியை காணலாம்.

    அங்கு மரகதாம்பாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    அவரையும் வழிபட்ட பிறகு அருகில் இருக்கும் மண்டபத்துக்கு சென்று சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம்.

    இந்த வரிசையில் தான் ராமகிரி கால பைரவர் ஆலயத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

    ஆனால் பைரவரை மட்டுமே பிரதானமாக வணங்குபவர்கள் சிவன் சன்னதிக்கு செல்லாமல்கூட வழிபாட்டை முடித்து விடுவதுண்டு.

    கால பைரவர் ஆலயத்தில் வழிபாடுகள் நிறைவு பெற்ற பிறகு மலை மீது இருக்கும் பாலமுருகர் ஆலயத்துக்கும் சென்று வழிபாடு செய்து வரலாம்.

    இந்த வழிபாடுகள் அனைத்தையும் சுமார் 45 நிமிடங்களில் செய்து முடித்து விடலாம்.

    • கோஷ்டத்தில் கஜ விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர்.
    • சப்த மாதர்களுக்கு அடுத்தபடியாக சபரிமலை அய்யப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.

    கருவறையில் கால பைரவர் இருக்கும் இடம் மிகப்பெரியதாகவும் இல்லாமல், மிகச்சிறியதாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் உள்ளது.

    அருகே மிகச்சிறிய தனி சன்னதியில் காளிகாதேவி இருக்கிறார்.

    பிரகாரம் சமதளமாக இல்லாமல் பாறை போன்ற நிலையில் உள்ளது. எனவே கருவறையை சுற்றி வருபவர்கள் கவனமுடன் வலம் வர வேண்டும்.

    அருகில் உள்ள வாலீஸ்வரர் சன்னதிக்கு செல்லும்போது இடது பக்கத்தில் முதலில் முருகர் சிலையை காணலாம்.

    அவரை வழிபட்ட பிறகு வாலீஸ்வரரை வழிபட செல்ல வேண்டும்.

    வாசலில் சந்திரமவுலீஸ்வரர், துவார விநாயகர் உள்ளனர்.

    அவர்களை வழிபட்டு உள்ளே சென்றால் வாலீஸ்வரரை காணலாம்.

    வாலி தனது வாலால் லிங்கத்தை கட்டி இழுத்ததை பிரதிபலிக்கும் வகையில் வாலீஸ்வரர் லிங்கம் சற்று சாய்ந்த நிலையில் இருப்பதை பார்க்க முடியும்.

    அவருக்கு நேர் எதிரில் பக்த ஆஞ்சநேயர் இருக்கிறார்.

    அவருக்கு பிறகுதான் இரண்டு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    இவர்களை வழிபட்ட பிறகு பிரகாரத்தை சுற்றி வரலாம்.

    அந்த பிரகாரத்தின் இடது பக்கத்தில் சப்த மாதர்கள் உள்ளனர்.

    கோஷ்டத்தில் கஜ விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர்.

    சப்த மாதர்களுக்கு அடுத்தபடியாக சபரிமலை அய்யப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.

    அவரை தொடர்ந்து அப்பர், வீர பத்திரர், அகத்தியர், ஆஞ்சநேயர் ஆகியோரை காணலாம்.

    சூரியனுக்கும் தனி வழிபாடு அங்கு நடக்கிறது.

    பிரகார வழிபாடு முடிந்ததும் மரகதாம்பிகையை பார்க்கலாம்.

    சுமார் 3 அடி உயரத்தில் அழகுற காட்சி அளிக்கும் மரகதாம்பிகை பெண்களின் குறை தீர்க்கும் தெய்வமாக திகழ்கிறாள்.

    இவ்வளவுதான் ராமகிரி ஆலயத்தில் உள்ள இறை சன்னதிகள் ஆகும்.

    சுமார் 30 நிமிடங்களில் வழிபாட்டை முடித்து விடலாம்.

    • எனவே இந்த ஆலயத்தின் ஆரம்ப புள்ளியை கணக்கிடுவது இயலாத நிலையில் உள்ளது.
    • ராமாயண கதையுடன் தொடர்புடையதாக இருப்பதால் இதன் பழைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    ராமகிரி கால பைரவர் ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.

    ராமாயண காலத்துக்கும் முற்பட்டதாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

    எனவே இந்த ஆலயத்தின் ஆரம்ப புள்ளியை கணக்கிடுவது இயலாத நிலையில் உள்ளது.

    ராமாயண கதையுடன் தொடர்புடையதாக இருப்பதால் இதன் பழைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆலயம் மிக மிக சிறிய ஆலயம்தான். பல்வேறு மன்னர்கள் இந்த ஆலயத்தில் திருப்பணிகள் செய்துள்ளனர்.

    ஆனால் அந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புகளில் சிறிதளவைதான் இப்போது காண முடிகிறது.

    பெரும்பாலும் ஆலயத்தின் 90 சதவீத பகுதிகள் சிதிலமடைந்து விட்டது போன்ற நிலையில் உள்ளது.

    நந்தி தீர்த்தம் அருகில் இருக்கும் சிறிய ஆலயம் முழுமையாக உருக்குலைந்து காணப்படுகிறது.

    ஆந்திர மாநில தொல்லியல் துறையினர் அந்த கட்டிட அமைப்பை பராமரித்து இருந்தால் பல புதிய தகவல்கள் கிடைத்திருக்கும்.

    ஆனால் பராமரிப்பு இல்லாததால் அவை மேலும் சிதிலமடையும் நிலையில் உள்ளன.

    ஆலயத்துக்குள் செல்ல ஒரே ஒரு பிரதான வழி மட்டுமே உள்ளது.

    தமிழக ஆலயங்களில் நுழைவுவாயில் இருபுறமும் கம்பீரமான துவார பாலகர்கள் இருப்பதை காண முடியும்.

    ஆனால் இந்த ஆலயத்தில் துவார பாலகர்களுக்கு பதில் இரண்டு மிகச்சிறிய சிலைகள் உள்ளன.

    அந்த சிலைகள் நமது கிராம பகுதிகளில் காணப்படும் நடுக்கல் போன்று உள்ளது.

    அந்த பகுதியில் 3 லிங்கங்கள் உள்ளன.

    மன்னர்கள் யாராவது அந்த லிங்கங்களை பிரதிஷ்டை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    • அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.
    • ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.

    காசியின் காலபைரவராகிய தன்னிடம் அனுமதி ஏதும் பெறாமல் அனுமன் லிங்கத்தை எடுக்க முயல்வது கண்டு கோபம் அடைந்த ஸ்ரீகால பைரவர், என் அனுமதி இல்லாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று அனுமனை தடுத்தார்.

    முதல் முறை சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போகும் போதும் இந்த காலபைரவர் ஏதோ சூழ்ச்சி செய்து காளிங்க மடுவில் தடுத்துவிட்டார்.

    இப்போது மறுபடியும் தன்னுடைய முயற்சிக்கு தடை செய்கிறார் என்று கோபம் அடைந்த அனுமன் கால பாரவரை தாக்கத் தொடங்கினார்.

    ஆணவத்தால் செய்த போராகையால் அனுமனுக்கு தோல்வியே கிட்டுகிறது.

    அந்த சமயத்தில் அங்கு வந்த முனிவர்கள் காலபைரவரை வணங்கி, "உலக நன்மைக்காகவும், ராமனின் பெருமைக்காகவும் இந்த சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

    அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.

    ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.

    தன் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்கு துணை புரிந்ததால் கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், சுயம்புலிங்கத்தை அனுமனுக்கு உறுதி செய்த பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் ஸ்ரீகால பைரவர் சாபமிட்டார்.

    அவரின் அந்த சாபப்படியே இன்றும் காசியின் நகர எல்லையில் கருடன் பறப்பதில்லை. அங்கே பல்லிகளும் ஒலிப்பதில்லை.

    • காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.
    • இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.

    "நான் கொண்டு வந்த லிங்கம் இங்கே வேரூன்றி நின்றதற்கு இந்த காளிங்க மடுகு தான் காரணம்.

    இது வற்றியிருந்தால் நான் லிங்கத்தை மாய சிறுவனிடம் கொடுக்காமல், தட்டுத்தடுமாறி சற்று தாமதமாகவாவது ராமேஸ்வரம் போய் சேர்ந்திருப்பேனே என்று மடுகின்மேல் ஆஞ்சநேயருக்கு கடும் கோபம் வந்தது.

    அருகில் இருந்த காரிகிரி என்ற மலையைப் பெயர்த்தெடுத்தார்.

    அந்த மடுகு மீது போட்டு "இந்த மலைப்பிரதேசம் இனி வனப்பிரதேசமாகப் போகக்கடவது என்று சபித்தார்.

    அந்த காரிகிரி மலையே இப்போது நாம் ராமகிரியில் காணும் பெரிய மலை.

    ராமேசுவரத்தில் எல்லோரும் காசி லிங்கத்திற்காக காத்திருப்பார்கள் என்பதால் நேரத்தை வீணாக்காமல் ஆஞ்சநேயர் மறுபடியும் காசிக்கு சென்றார்.

    இந்த முறை காசியில் தெரிந்த காட்சிகள் அனுமனுக்கு ஆச்சரியம் அளித்தது.

    காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.

    இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.

    அப்போது ஒரு குறிப்பிட்ட லிங்கத்திற்கு மேலே கருடன் வட்டமிட்டது.

    அதே நேரம் பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அதுவே சுயம்புலிங்கம் என்பதை உணர்ந்த அனுமன் அதனை எடுக்க முயன்றார்.

    ×