search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் தேர்வு முறைகேடு"

    • 5 கோடி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதி உள்ளனர்.
    • 4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பினர்.

    * நீட் முறைகேட்டால் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * நீட் முறைகேட்டுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார். அவர் கூறுகையில்,

    * நீட் தேர்வில் 7 ஆண்டுகளாக வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

    * 5 கோடி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதி உள்ளனர்.

    * 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்ததற்காக எந்த ஆதாரமும் இல்லை.

    * 4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது.

    * நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து முறையான விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்.
    • நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும்.

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

    நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

    எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும், ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும் என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், மனுத்தாக்கல் செய்த மாணவர்களில் எத்தனை பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று  கேள்வி எழுப்பியது.

    நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மருத்துவ படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • 12 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    பாட்னா:

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது.

    தேர்வுக்கு ஒரு நாள் முன்பு பீகார் மாநிலம் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. இதே போல ஜார்க்கண்ட், குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடை பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்குகளில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட 12 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் இருந்து நீட் தேர்வு வினாத் தாள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

    ஜார்க்கண்ட் பொகாரோ நகரை சேர்ந்த என்ஜினீயர் பங்கஜ் குமார் என்பவர் இந்த வினாத்தாள்களை திருடியதும் தெரியவந்தது. திருடிய வினாத்தாள்களை கசியவிட்டதில் ராஜூசிங் என்பவர் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளான என்ஜினீயர் பங்கஜ்குமார், ராஜூசிங் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கைதான பங்கஜ் குமார் கடந்த 2017-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்தவர் ஆவார். இவர்களையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டாக்டர்கள் 3 பேரும் 2021-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் அறைகளுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

    அவர்களின் லேப்-டாப் மற்றும் மொபைல் போன் களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.
    • போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியையும் எடுத்து வைத்தார்.

    நீட்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை என்று அதனால் விசாரணை அதிகாரியை மாற்றுங்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி காட்டமாக கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

    இந்த வழக்கின் பின்னணியானது கடந்த 2019ஆம் நடைபெற்ற நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் பலர் சேந்திருக்கிறார்கள். தேனி அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த சென்னை மாணவர் உதிப் சூர்யா என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்த போது பெரும் அதிர்ச்சி வெளியானது. 2019 ஆண்டு தேர்வில் உத்தர பிரதேசம், டெல்லி, கல்கத்தா, ராஜஸ்தான் போன்ற இடங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுந்திய சம்பவங்கள் நடைபெற்றது. இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் செய்தி ஊடகங்கள், பத்திரிக்கைகள் கண்ணபிண்ண என செய்திகளை வெளியிடுகிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அதற்கான ஆதாரங்களை காண்பித்தார்.

    அதற்கு பதில் அளித்த நீதிபதி செய்தி ஊடகங்கள் சரியாகத்தான் செய்திகளை வெளியிடுகிறது என்று கூறினார். மாணவர்களின் அனைத்து அணிகலன்களையும் கழற்றி சோதனை செய்யும் நீங்கள், போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியையும் எடுத்து வைத்தார்.

    அதுபோக நீட்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்றுங்கள் என நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறார்.

    மேலும் சிபிசிஐடி கேட்கும் வழக்கு குறித்த ஆவணங்களை தேசிய தேர்வு முகமை 19ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையானது உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
    • நீட் வினாத்தாள் கசிவு குறித்து மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது.

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, போனஸ் மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சையானது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. பீகார், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தியதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

    நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளியின் முதல்வர், துணை முதல்வரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 8-ந்தேதி நடந்த விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், "நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் முழுமையாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ஐ.ஐ.டி. சென்னை வழங்கிய அறிக்கையின்படி நீட் தேர்வில் எந்த ஒரு பெரிய அளவிலான முறைகேடும் நடக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்ய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "நீட் வினாத்தாள் கசிவு குறித்து மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது. கசிந்த நீட் வினாத்தாள் சிலருக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. பலருக்கு கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூட வினாத்தாள் கசிவு பரவலான அளவில் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது. ஆகவே மிகச்சிறிய அளவில் தான் நீட் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
    • பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

    சென்னை:

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, போனஸ் மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சையானது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. பீகார், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தியதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

    நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளியின் முதல்வர், துணை முதல்வரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 8-ந்தேதி நடந்த விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் முழுமை யாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி. தொழில்நுட்ப மதிப்பீடு, மதிப்பெண்கள் வினியோகம், நகரம் மற்றும் மையங்கள் வாரியாக ரேங்க் வினியோகம் போன்றவற் றின் தரவுகளை ஆய்வு மேற்கொண்டது.

    ஐ.ஐ.டி. சென்னை வழங்கிய அறிக்கையின்படி எந்த ஒரு பெரிய அளவிலான முறைகேடும் நடக்கவில்லை. எந்த அசாதாரணமும் இல்லை. மேலும் மோசடி காரணமாக பெரும்பாலான முறைகேடுகள், அதிக மதிப்பெண் பற்றிய எந்த ஆதாரமும் இல்லை.

    மதிப்பெண்களில் ஒட்டுமொத்த அதிகரிப்பு உள்ளது. குறிப்பாக 550 முதல் 720 வரை இந்த அதிகரிப்பு நகரங்கள் மற்றும் மையங்கள் முழுவதும் காணப்படுகிறது.

    பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

    கூடுதலாக அதிக மதிப் பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் பல நகரங்கள், பல மையங்களில் பரவி உள்ளனர். இது முறை கேடுக்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்பதை குறிக்கிறது.

    சென்னை ஐ.ஐ.டியின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம்.
    • சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது.

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

    நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

    எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

    ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனையடுத்து தலைமை நீதிபதி சந்திரசூட் மத்திய அரசை நோக்கி பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்,

    கசிந்த நீட் வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி?, வினாத்தாள் லாக்கருக்கு எப்போது அனுப்பப்பட்டது?, லாக்கர்களில் இருந்து எப்போது அவை எடுக்கப்பட்டன?, நாடு முழுவதும் எத்தனை மையங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டன?, நீட் மறுதேர்வு கோர முகாந்திரம் என்ன?, 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? அதில் முழு மதிப்பெண்கள் பெற்ற 6 தேர்வர்களும் அடக்கமா?

    நீட் தேர்வுத்தாள் கசிவு நடைபெறவில்லை என்று தேசிய தேர்வு முகமை நிலைப்பாடாக கொண்டாலும் 2 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டால் மொத்த தேர்வும் ரத்து செய்யப்படுவதில்லை. ஆனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது. நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம். எந்த கட்டத்தில் நீட் வினாத்தாள் கசிந்தது?, கசிவுக்கு காரணமானவர்கள் மீதும், பலனடைந்தவர்கள் மீதும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    டெலிகிராம், வாட்சப் போன்ற சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது. ஒரு இடம் மட்டும் இல்லாமல் பல இடங்களில் பெருமளவில் நீட் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    வினாத்தாள் கசிவின் தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும். எத்தனை மாணவர்களின் தேர்வு முடிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்ட மாணவர்களின் இருப்பிடங்கள் எங்கே உள்ளது.

    இறுதியாக நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம் என்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான பதிலை மத்திய அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
    • நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

    நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

    எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

    ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    • 10 மாணவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
    • நீட் தேர்வு முறைகேடு பற்றி பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளன.

    புதுடெல்லி:

    நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நீட் வினாத்தாளை கசிய விட்டு மோசடி செய்ததாக பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஒரு பள்ளி முதல்வர் நீட் வினாத்தாள் விற்பனையில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிய வந்தது. அவரை சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.

    இதற்கிடையே சி.பி.ஐ. நடத்திய முதல் கட்ட விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சிலருக்கும் நீட் தேர்வு முறைகேட்டில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 10 மாணவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

    நேற்று அதிரடியாக அந்த 10 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 10 மாணவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நீட் தேர்வு முறைகேடு பற்றி பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளன. நாளை மறுநாள் பாராளுமன்றம் மீண்டும் தொடங்கியதும் நீட் விவகாரத்தை விவாதத்துக்கு எடுக்க வலியுறுத்தி பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    2-ந்தேதி பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச உள்ள நிலையில் நீட் விவகாரம் அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஓரிரு நாட்களில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது.
    • ஜூலை 7-ந்தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இந்த குழுவிடம் கூறலாம்.

    புதுடெல்லி:

    மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்திலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது.

    இந்தநிலையில் மாணவர்களிடமிருந்து புகார்களை பெற மத்திய அரசு உயர்நிலைக்குழு ஒன்று அமைத்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் கூறியிருப்பதாவது,

    இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 7-ந்தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இந்த குழுவிடம் கூறலாம்.

    நீட் தேர்வு தொடர்பான புகார்கள் மட்டுமின்றி, பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை தெரிவிப்பதற்கான https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ என்று இணையதள முகவரியையும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    • ஜூலை 3-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.

    சென்னை:

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 3-ந்தேதி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    ஜூலை 3-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் என்பது பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சமூக நீதிக்கு எதிரான தேர்வு முறை. நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.

    நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜவாஹிருல்லா நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை விமர்சனம் செய்து பேசினார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்து பேசியதாகக் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கொந்தளித்து பேசினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.

    அப்போது சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை விமர்சனம் செய்து பேசினார்.

    அதை தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்து பேசியதாகக் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கொந்தளித்து பேசினார்.

    இதைத்தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரிய தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.

    அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

    ×