என் மலர்
நீங்கள் தேடியது "போச்சம்பள்ளி"
- பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
- தனியார் மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கடந்த 20-ந் தேதி வழக்கம்போல் பள்ளி முடிவடைந்த நிலையில், பள்ளியைவிட்டு வெளியேறிய 10-ம் வகுப்பு மாணவர்கள் 8 பேர், பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
பின்னர் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்று உள்ளனர். அடுத்த நாள் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர், அந்த 8 மாண வர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தது குறித்து சந்தேகமடைந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, 8 மாணவர்களுக்கும் உடல் நிலை சரியில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கழக ஆசிரியர் தலைவர் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்து உள்ளனர்.
அப்போதுதான் மாணவர்கள் அன்று மாலை குளிர்பானம் குடித்ததாக வும், அதன்பிறகு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட தாகவும் கூறியுள்ளனர்.
இதில் 8 மணாவர்க ளுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்த பின்பு 5 மாணவர்கள் உடல் நலன் பெற்று வீடு திரும்பிய நிலையில், இரு மாணவர்கள் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒரு மாணவன் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கு வந்த சிறப்பு மருத்துவக்குழு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பரிசோதித்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.
விரைவில் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் குளிர்பானத்தை அருந்தி விட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களது பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பேசியபோது, பள்ளியை விட்டு வெளியே சென்ற மாணவர்கள் குடித்த குளிர்பானத்தால்தான் உடல் உபாதைக்கு உள்ளாகி உள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாண வர்களை ஆசியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் இணைந்து கண்காணித்து வருகிறோம். பொதுத்தேர்வுக்கு தயாராகி விடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் காலாவதியான குளிர்பானம் குறித்து கேட்டதற்கு, காலாவதியான குளிர்பானம் என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் தான் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- போச்சம்பள்ளியில் புகழ்பெற்ற வார சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவது வழக்கம்.
- 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி.
போச்சம்பள்ளி:
நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் புகழ்பெற்ற வார சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவது வழக்கம்.
இந்நிலையில் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று வழக்கத்தை விட சுமார் 8 ஆயிரம் ஆடுகள் விற்பனைகாக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டுவந்தனர்.
அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கிய நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், கோலார், மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், மற்றும் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் ஆடுகளை வாங்கவும், விற்கவும் குவிந்தனர்.
வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ.12 ஆயிரத்திற்கு விலை போகும் நிலையில் பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரையில் விலை போனது.
இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஜோடி ஆடு ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரம் வரையில் விற்பனை ஆனாது. இன்று ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் பண புழக்கம் அதிகமாக உள்ள நிலையில் போச்சம்பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
- இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமேலம்பட்டி கிராமத்தில் கந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புறனமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து கோவில் கட்டுமான பணிகள் மற்றும் வண்ணம் தீட்டும் பணிகளை செய்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து விரதம் இருந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் காலை, மாலை என கடந்த 15 நாட்களாக பூஜை நடந்து வந்த நிலையில் வட மலைப்பட்டி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாமிக்கு சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
இதில் சாமிக்கு சீர் கொண்டு வந்து அதனை மேளதாளம் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலின் முன்பு இந்து, இஸ்லாமிய மக்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஆரத்தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் சீர்வரிசைகளை கோவில் நிர்வாகத்திடம் வழங்க அதனை பூசாரியிடம் கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். இரு சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்து கோவிலுக்கு சீர் கொண்டு வந்து பூஜை செய்து அன்னதான வழங்கிய சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.
- சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
- வளர்ப்புக்காக வாங்கி சென்ற ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்தில் இரண்டாவது பெரிய வாரசந்தையாகும் இந்த சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் வந்து செல்லும் நிலையில் இந்த சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் போச்சம்பள்ளி மற்றும் அதன் கிராமப்புறங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆடு, கோழி வளர்ப்புத் தொழில் பிரதான தொழிலாக உள்ள நிலையில் வறட்சி காலங்களில் விவசாயம் பொய்த்து போனாலும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு கைகொடுக்கும்.
இவ்வாறாக வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளை சந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் பொழுது அந்த ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ஆடுகளை கோவில் விழாக்களில் அசைவ விருந்துக்காகவும், ஆடுகளை வளர்ப்பதற்காகவும் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போச்சம்பள்ளி வார சந்தை தேடி ஆடுகளை வாங்க வந்து செல்கின்றனர்,
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரார் மணிகண்டன் (வயது35) என்பவர் ஆடுகளை வளர்க்க கடந்த வாரம் 20-க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளை சுமார் ரூ.2.38 லட்சம் கொடுத்து வாங்கி சென்றார். இதில் 8 ஆடுகள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டது. அப்போது அந்த ஆடுகளின் வயிற்றில் மண் கரைசல் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மணிகண்டனுக்கு ஆடுகளை விற்ற கரகூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகளிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரிகள் சரிவர பதிலளிக்காமல் மிரட்டியுள்ளனர். இதனால் மணிகண்டன் அவரது உறவினருடன் போச்சம் பள்ளி வாரசந்தையில் இன்று வியாபாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடு வியாபாரிகளின் தொழில் போட்டியின் காரணமாக சிலர் ஆட்டின் வாயில் சேற்று தண்ணீரை கரைத்து வாயில் ஊற்றி அதன் எடையை அதிகரித்து காட்டுகின்றனர். சிலர் இந்த மோசமான செயலால் ஈடுபட்டு வருவதால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமே பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் செயல்படாமல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
வளர்ப்புக்காக வாங்கி சென்ற ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
- சுமூக நிலை ஏற்படாத நிலையில் போலீசார் மேலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் வீட்டு மனை மற்றும் வீடு கட்டி கொடுத்த நிலையில் அப்பகுதியில் கிராம மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் அப்பகுதி மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு நிலம் கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் இது எங்களுக்கு சொந்தமான இடம் என கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
மேலும் இதுகுறித்து இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை கிராம மக்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் இந்த இடம் எங்களுக்கு சொந்தம் என்றும், இதில் யாருடைய புகைப்படத்திற்கும் மாலை அணிவிக்க கூடாது என்று கூறி சிலர் திடீரென்று தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன், பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சுமூக நிலை ஏற்படாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மேலும் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் வாடமங்கலம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.
- தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி குள்ளனுர் கோணனூர், வடமலம்பட்டி மற்றும் அதன் சுற்றிய வட்டார கிராமங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது.
கனமழைக்கு குள்ளனூர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்னார்.
மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரானது புகுந்து பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நேற்று இரவு பெய்த கனமழைக்கு குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்த நிலையில் வீட்டிலிருந்த அரிசி துணி மற்றும் பொருட்கள் ஆவணங்கள் சேதமாகியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தற்பொழுது குடியிருப்பு வாசிகள் வீட்டில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் கிராம மக்களுக்கு கூறுகையில்,

குள்ளனூர் கிராமம் முதல் போச்சம்பள்ளி வரையில் தண்ணீர் செல்லும் பாதையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்து மண் கொட்டி சமப்படுத்தப்பட்ட நிலையில் தண்ணீரானது செல்ல பாதை இல்லாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்து அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே தண்ணீர் செல்லும் பாதையை மீட்டெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த பகுதிகளை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் ஏரி கால்வாய் பகுதிகளை அகலப்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கவும், உடனே உணவு வழங்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- சக்திவேல் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு தலையின் பின்புறம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
- பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48) விவசாயி. இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழிலும் செய்து வந்தார்.
இவருக்கு லதா (45) என்ற மனைவியும், சுகாசினி (22), சுலேச்சனா (20), என்ற 2 மகள்களும், கலை (17) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை சக்திவேல் மகன் கலையை போச்சம்பள்ளியில் இருந்து அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இந்த நிலையில் சக்திவேல் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு தலையின் பின்புறம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்,
உடனே உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே உறவினர்கள் சக்திவேலின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சக்திவேல் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன் சக்திவேலின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சக்திவேலை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
சக்திவேலுக்கும் அவரது உறவினர்களுக்கிடையே நிலம் சம்பந்தாமாக பிரச்சனை இருப்பதால் யாராவது அவரை வெட்டி கொலை செய்தனரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தாமாக யாராவது வெட்டி கொன்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சக்திவேலின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.
- தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் ஊராட்சி சவுளுகொட்டாய், பூசாரி கொட்டாய், சின்ன பாளேத்தோட்டம் மற்றும் மொளுகனூர் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலையை பயன்படுத்தி வந்தனர்.
இந்த தார் சாலையானது தற்பொழுது வருவாய் துறை அதிகாரிகள் இந்த பாதையானது நீர் வழிப்பாதையெனவும் இந்த தார் சாலையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கிராமங்களுக்கு செல்ல வேறுமாற்று பாதை இல்லாத நிலையில் தற்பொழுது கிராம மக்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தார் சாலையை தூர்வாரி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரின் முகப்பு வரை கால்வாய் தூர்வாரும் பணியானது முடிவுற்ற நிலையில் தற்போது கிராம மக்கள் பயன்படுத்தி வந்த தார் சாலையில் தூர்வார அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.
கிராம மக்கள் மாற்று பாதை அமைத்து தந்த பின்னரே கால்வாயினை தூர்வார வேண்டும் என நூதன முறையில் வீடுகளின் முன்பும், தெருக்களின் முன்பும் கருப்பு கொடியினை கட்டி தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வீடுகளில் முன்பு கருப்பு கொடிகளை கட்டி பாதை கேட்டு போராட்டம் நடத்தி வரும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் விரைந்து பாதைக்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- ஆசிரியர்கள் 3 பேரும் பணி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
- போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய மாணவி பள்ளி ஆசிரியர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் ஆறுமுகம் (வயது48), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்களை போலீசார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் தனி அறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் 3 பேரும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும், பள்ளி கல்வி துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக பள்ளிக்கு நேற்று முன்தினம் விடுமுறை விடப்பட்டது.
இதற்கிடையே அரசு தொடக்கப்பள்ளி இணை இயக்குனர் சாந்தி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து நேற்று 2-வது நாளாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
நேற்று 2-வது நாளாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகிருஷ்ணன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள மற்ற மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி பள்ளியை திறக்க அதிகாரிகள் முடிவு செய்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது.
அப்போது மாணவர் களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு இன்று காலை திரண்டு வந்து இனி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி திடீரென்று ஆசிரியர்களு டனும், அதிகாரிகளுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பள்ளி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான ஆசிரியர்கள், வேறு மாணவிகள் யாரிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைதான 3 பேருக்கு ஆதரவாக நீதிமன்ற வழக்கு களில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக போவ தில்லை என்று கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இதேபோல் மாணவி கூட்டு பலாத்காரத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.