என் மலர்
நீங்கள் தேடியது "ஓம்பிர்லா"
- பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.
- தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமை யில் பாஜ.க. கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.
இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
24 மற்றும் 25-ந்தேதிகளில் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். பாராளுமன்ற மரபுபடி சபையின் மூத்த உறுப்பினரை தற்காலிக தலைவராக தேர்வு செய்வார்கள். அந்த வகையில் தற்போது கேரள மாநில மேவலிக்கரா தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதன் பிறகு சுரேஷ் எம்.பி. தற்காலிக சபாநாயகராக இருந்து புதிய எம்.பி.க்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
எம்.பி.க்கள் அனைவரும் பதவி ஏற்று முடித்ததும் பாராளுமன்றத்துக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்பவில்லை.
எனவே சபாநாயகர் பதவியை பாரதீய ஜனதா தக்கவைத்துக்கொள்ளும் என்று உறுதியாகி இருக்கிறது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான புரந்தேஸ்வரி 6 தடவை எம்.பி.யான ராதா மோகன்சிங், முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா ஆகிய 3 பேரில் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
ஓம்பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன. தெலுங்கு தேசம் வலியுறுத்தும் பட்சத்தில் ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். யாருக்கு சபாநாயகர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்பது 25-ந்தேதி தெரிந்து விடும்.
அன்று பிரதமர் மோடி சபாநாயகர் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 26-ந்தேதி சபாநாயகர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பா.ஜ.க. ஏற்க மறுத்துள்ளது.
துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை பா.ஜ.க. மேலிடம் நியமனம் செய்துள்ளது.
ராஜ்நாத்சிங் கூட்டணி கட்சிகளுடன் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஓரிரு நாட்களில் இதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
- பாராளுமன்றத்தில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமை யிலான கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்தனர். ஆனால் இந்த தடவை பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் சபாநாயகர் தேர்தல் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை சபாநாயகர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டது இல்லை. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் ஏகமனதாக தேர்வாகி இருக்கிறார். ஆனால் இந்த தடவை இந்தியா கூட்டணிக்கு 232 எம்.பி.க்கள் இருப்பதால் அவர்கள் வேட்பாளரை நிறுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா சார்பில் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய ஓசையின்றி ஆலோசனை நடந்து வந்தது. ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரி புதிய சபாநாயகர் ஆகலாம் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் கடந்த சில தினங்களில் அதில் மாற்றம் ஏற்பட்டு கடந்த முறை சபாநாயகராக இருந்த ஓம்பிர்லா மீண்டும் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிக்கையை பாராளுமன்ற செயலாளர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக நேற்று மாலை முதல் புதிய சபாநாயகர் தொடர்பாக அடுத்தடுத்து பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா வீட்டில் நேற்று இரவு நீண்ட நேரம் ஆலோசனை நடந்தது. ராஜ்நாத்சிங், அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதித்தனர்.
இன்று காலை சபாநாயகர் தேர்தல் தொடர்பாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் அவர் போனில் பேசினார்.
ஏற்கனவே அவர் இது தொடர்பாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தி இருந்தார். இதையடுத்து இன்று காலை சபாநாயகர் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் ஒருமித்த கருத்து உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க. தலைவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.
காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரிடமும் ராஜ்நாத்சிங் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராகுல் ஒரு நிபந்தனையை விதித்தார். துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு ராஜ்நாத்சிங் மற்ற தலைவர்களுடன் ஆலோசித்து பதில் சொல்வதாக தெரிவித்தார். ஆனால் அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் தங்களை பா.ஜ.க. அவமதிப்பதாக கருதினார்கள்.
ராகுல்காந்தி இது தொடர்பாக பேட்டியளித்தபோது, "சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க நாங்கள் தயார். ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும்" என்று கூறினார். இதையடுத்து பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் அலுவலகத்துக்கு காங்கிரசை சேர்ந்த கே.சி.வேணுகோபால், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு இருவரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது துணை சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அதை ஏற்க ராஜ் நாத்சிங் மறுத்து விட்டார்.
இதையடுத்து பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ராஜ்நாத்சிங் அலுவலகத்தில் இருந்து கே.சி.வேணுகோபாலும், டி.ஆர்.பாலுவும் புறப்பட்டு சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களில் சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது. கேரளாவை சேர்ந்த 8 தடவை எம்.பி.யான சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் பாராளுமன்ற அலுவலகத்தில் சுரேஷ் தனது மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து ஆளும் கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதன் மூலம் சபாநாயகர் பதவிக்கு பாரதிய ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் 1946-ம் ஆண்டு முதல் இதுவரை சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதே கிடையாது.
இதற்கு முன்பு 17 தடவை அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் சபாநாயகர் அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சி துணை சபாநாயகர் பதவியை முன்நிறுத்தி போட்டியை உருவாக்கி இருக்கிறது. இதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு ஓம்பிர்லா வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நாளை சபாநாயகர் பதவிக்கு ஓட்டெடுப்பு நடக்கும்போது எத்தகைய நடைமுறைகளை கையாள்வது என்று ஆலோசனை நடத்தினார்கள்.
பாராளுமன்றத்தில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர். எனவே ஓட்டெடுப்பில் ஓம்பிர்லா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது முறையாக சபாநாயகர் ஆகும் ஓம்பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.
- காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலராம் ஜாகருக்கு அடுத்தபடியாக 2-வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகி உள்ளார்.
- ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தபோதுதான் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அவர் கூறுகையில்,
* அவையின் இருக்கையில் ஓம் பிர்லா அமர்ந்திருப்பது இந்த அவையின் அதிர்ஷ்டம்.
* தேசத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இந்த அவை உங்களுக்கு துணை நிற்கும்.
* 18-வது மக்களவை பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருவதை நாம் பார்க்கிறோம்.
* காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலராம் ஜாகருக்கு அடுத்தபடியாக 2-வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகி உள்ளார்.
* 2-வது முறை சபாநாயகராக உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு மிகப்பெரியது.
* எதிர்காலத்திலும் எங்களை வழிநடத்த உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.
* 17-வது மக்களவையில் பல்வேறு மிக மிக முக்கியமான சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.
* ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தபோதுதான் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
* 3 புதிய குற்றவியல் நடைமுறை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
* மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
* 17-வது மக்களவையில் ஓம் பிர்லாவின் பங்களிப்பு அளப்பரியது.
* அவையில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை ஓம் பிர்லா மேற்கொண்டார்.
* ஓம் பிர்லா தலைமையில் ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
* வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு சிந்தனையை அடைய தேசம் சரியான பாதையில் செல்கிறது.
* மக்களவை என்பது வெறும் நான்கு சுவர் அல்ல 140 கோடி மக்களின் விருப்ப மையம்.
* கொரோனா போன்ற மிக சிக்கலான கால கட்டங்களிலும் அவையை திறம்பட நடத்தினார் என்று கூறினார்.
- ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
- இந்திய அரசியலமைப்பை காக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து ராகுல் காந்தி கூறுகையில்,
* எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம், இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த எங்களை அனுமதிப்பதன் மூலம், இந்திய அரசியலமைப்பை காக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
* எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை எதிரொலிக்கும். உங்களையும் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
#WATCH | Leader of Opposition, Rahul Gandhi says "We are confident that by allowing the Opposition to speak, by allowing us to represent the people of India, you will do your duty of defending the Constitution of India. I'd like to once again congratulate you and also all the… pic.twitter.com/HU9BYyS7xm
— ANI (@ANI) June 26, 2024
- இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.
- எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுடெல்லி:
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் உரையாற்றினார். அவர் கூறுகையில்,
* முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.
* இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.
* எமர்ஜென்சியின்போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது.
* எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது என்று கூறினார்.
இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
எமர்ஜென்சியை நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.
- இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் உரையாற்றினார். அவர் கூறுகையில்,
* முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.
* இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.
* எமர்ஜென்சியின்போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது.
* எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது என்று கூறினார்.
இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
எமர்ஜென்சியை நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, 50 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு மற்றும் லாலன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.
- இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார்.
- அம்பானி, அதானி பேசிய பகுதிகளும் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் கடந்த 24-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 28-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அந்த விவாதத்தை தொடங்க முடியவில்லை. இந்தநிலையில் பாராளுமன்ற மக்களவையில் நேற்று இந்த விவாதம் தொடங்கியது.
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விவாதத்தில் பங்கேற்று சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீதும், பா.ஜ.க. தலைவர்கள் மீதும் ஆவேசமாக சுமத்தினார்.
அவரது ஆவேச பேச்சுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்தில் அனல் பறந்தது.
ராகுல்காந்தி பேசும் போது, "இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எந்த நேரமும் பயம், வன்முறை, வெறுப்புணர்வு, பொய்கள் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் இந்துக்கள் என்று சொல்ல முடியாது" என்றார். அவர் அப்படி பேசும்போது பா.ஜ.க. எம்.பி.க்களை பார்த்து கைநீட்டி குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு பிரதமர் மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பதில் அளித்து பேசுகையில், "ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தை வன்முறையாளர்கள் என்று சொல்வது தீவிரமான விஷயம் ஆகும்" என்றார்.
அதேபோல மத்திய மந்திரி அமித்ஷாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், "கோடிக் கணக்கான இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.
ராகுல் தனது பேச்சின் போது அக்னிவீர் திட்டம் பற்றியும் கடுமையாக குறைகூறி பேசினார். மேலும் தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி பற்றியும் குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராகுல்காந்தியின் பேச்சு பற்றி சபாநாயகர் ஓம்பிர்லா ஆய்வு நடத்தினார். ராகுல் காந்தியின் பேச்சு சபை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து ராகுல் காந்தி நேற்று விவாதத்தின் போது பேசிய பேச்சில் ஒரு பகுதியை நீக்குவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா முடிவு செய்தார். அதன்படி ராகுல் காந்தி பேச்சின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. இன்று காலை அதுபற்றிய தகவல்கள் வெளியானது.
இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் குறித்தும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குறித்தும் அவர் முன்வைத்த விமர்சனங்கள் நீக்கப்பட்டன. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறைகூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது.
- எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல்காந்தி தவறாகப் பயன்படுத்துகிறார்.
- அவரது கருத்துக்கள் தேச விரோத செயலாகும்.
புதுடெல்லி:
ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அவர் பல்கலை மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.
வேலையில்லா திண்டாட்டம், சீக்கியர்களின் நிலை மற்றும் இடஒதுக்கீடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறினார். வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறாக பேசுவதா? என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் அமெரிக்காவில் அவதூறாக பேசியது தொடர்பாக ராகுல்காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பா.ஜ.க. எம்.பி. சி.பி.ஜோஷி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல்காந்தி தவறாகப் பயன்படுத்துகிறார். ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகன் என்ற முறையில் அவர் வெளிநாட்டு மண்ணில், இந்தியாவை அவதூறாக பேசுவது எந்த வகையிலும் சரியானது அல்ல. இது போன்ற கருத்துக்களை ராகுல்காந்தி கூறுவதால் நாட்டின் சர்வதேச உறவுகள் பாதிக்கும்.
அவரது கருத்துக்கள் தேச விரோத செயலாகும். நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது. ராகுல்காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.