search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூரோ 2024"

    • எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பை வென்றதில்லை.
    • யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று முடிந்தது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன. இதில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போன்று யூரோ கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை தவறவிட்ட அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. முன்னதாக 2020 ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

     


    தற்போது நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இருமுறை யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணியாக இங்கிலாந்து உள்ளது.

    நடைபெற்று முடிந்த 2024 யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. சர்வதேச அளவில் (யூரோ/ உலகக் கோப்பை) ஏழு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.

    முன்னதாக 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி இதே போன்று ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் அணி நடந்து முடிந்த யூரோ கோப்பை தொடரில் 15 கோல்களை அடித்துள்ளது. யூரோ கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் ஒரே தொடரில் இத்தனை கோல்களை அடித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர்.
    • நிகோ வில்லியம்ஸ் அதனை கோலாக மாற்றினார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் துவக்கம் முதலே கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர்.

    போட்டியின் முதல் பாதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி வரை போட்டி 0-0 என்ற கணக்கிலேயே இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து கோப்பையை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரமாக விளையாடினர். போட்டியின் 47 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் யமால் அசிஸ்ட் செய்ய நிகோ வில்லியம்ஸ் அதனை கோலாக மாற்றினார்.

     


    இதன்பிறகு ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியது. துவக்கம் முதலே போராடி வந்த ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டியில் ஒரு கோல் அடிக்கப்பட்டதை தொடர்ந்து விறுவிறுப்பாக மாறியது. ஸ்பெயின் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.

    இதன் முயற்சியாக 73 ஆவது நிமிடத்தில் பெலிங்கம் அசிஸ்ட் செய்ய இங்கிலாந்து வீரர் கோலெ பால்மர் கோல் அடித்து அசத்தினார். இதனால் போட்டி முடியும் தருவாயில் பரபர சூழல் உருவானது. இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் மற்றொரு கோல் அடித்து வெற்றி வாகை சூட இரு அணி வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டினர்.

    நீண்ட நேரம் நீடிக்காத போராட்டத்தால் 86 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மிகெல் ஒயர்சபால் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இவர் கோல் அடிக்க ககெரெல்லா அசிஸ்ட் செய்தார். இதைத் தொடர்ந்து போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி நான்காவது முறைாக யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முன்னதாக 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் அணி யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. யூரோ கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.
    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.

     


    முதல் பாதி போட்டி முடிவில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இதன் மூலம் போட்டி இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.

    போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடித்து வெற்றி பெறும் முனைப்பில் விளையாடினர். மாற்று வீரராக களமிறங்கிய ஒல்லி வேட்கின்ஸ் போட்டியின் 89-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    போட்டி முடிவில் நெதர்லாந்து வீரர்கள் மற்றொரு கோலை அடிக்க முடியாமல் தவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

    • கோலோ பிரான்ஸ் அணிக்கு முதலாவது கோலை அடித்தார்.
    • யூரோ கோப்பையில் கோல் அடித்த இளம் வீரர் ஆனார் ஸ்பெயின் அணியின் யமால்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் ராண்டல் கோலோ பிரான்ஸ் அணிக்கு முதலாவது கோலை அடித்தார்.

     


    துவக்கத்திலேயே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் யமால் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த போட்டில் சமனில் சென்று கொண்டிருந்தது. இந்த கோலை தொடர்ந்து 4-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் டேனி ஓல்மோ கோல் அடிக்க அந்த அணி 2-1 என முன்னிலை வகித்தது.

    போட்டி முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ்-ஐ வீழ்த்தியது. இதன் மூலம் 2024 யூரோ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முதல் அணியாக தகுதி பெற்றது.

    • கிறிஸ்டியானோ ரொனால்டோ 6-வது முறையாக யூரோ தொடரில் விளையாடி வருகிறார்.
    • 2016-ல் இவரது தலைமையில் போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். தற்போது யூரோ கோப்பையில் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இதுதான் தன்னுடைய கடைசி யூரோ கோப்பை தொடர் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். ரொனால்டோ 6-வது முறையாக யூரோ கோப்பை தொடரில் விளையாடுகிறார். அடுத்த தொடர் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் நடைபெற இருக்கிறது. அப்போது ரொனோல்டாவுக்கு 43-வது வயதாகிவிடம்.

    "சந்தேகமின்றி இது எனக்கு கடைசி யூரோ. நிச்சயமாக இதுதான். ஆனால் அதைப்பற்றி நான் உணர்ச்சிவசப்படுவதில்லை. கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் உற்சாகம், ரசிகர்களிடம் நான் காணும் உற்சாகம், எனது குடும்பம், மக்களின் ஆர்வம்... கால்பந்து உலகை விட்டு வெளியேறுவது அல்ல. நான் வெற்றி பெறுவதற்கு வேறு என்ன இருக்கிறது?. கால்பந்து பயணத்தில் நான் கொண்டுள்ள உற்சாம் காரணமாக இன்னும் இங்கே இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    2003-ம் ஆண்டு போர்ச்சுக்கல் அணியில் அறிமுகம் ஆனார். 2016-ம் ஆண்டு இவரது தலைமையில் போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. போர்ச்சுக்கல் அணிக்காக 130 கோல்கள் அடித்துள்ளார்.

    • வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
    • அந்த அணி 0-1 என்ற வகையில் முன்னணி பெற்றது.

    யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று த்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

    அந்த வகையில், நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டிகளில் ரோமானியா - நெதர்லாந்து அணிகளும், அதன் பிறகு நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகளும் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ரோமானியா - நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி அமைதியாகவே துவங்கியது.

    பிறகு, நீண்ட நேரம் பந்தை வைத்திருந்து நெதர்லாந்து அணியின் கோடி கேக்போ பெனால்டி பகுதி அருகே இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற வகையில் முன்னணி பெற்றது. இந்த கோல் மூலம் நடப்பு யூரோ கோப்பையில், கோடி கேக்போ தனது மூன்றாவது கோலை நிறைவு செய்தார்.

    இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மற்றொரு கோல் அடிப்பதில் முனைப்பு காட்டின. எனினும், போட்டியின் முதல் பாதி வரை மற்றொரு கோல் அடிக்கப்படவில்லை. இதன் காரணமாக முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என்ற வகையில் முன்னணியில் இருந்தது. போட்டியின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மலென் கோல் அடிக்க அந்த அணி 2-0 என முன்னணி பெற்றது.

    மறுபுறம் பதில் கோல் அடிக்க ரோமானியா அணி வீரர்கள் தீவிரம் காட்டினர். எனினும், அந்த அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் திணறினர். பிறகு சில நிமிடங்களில் மீண்டும் மலென் கோல் அடிக்க நெதர்லாந்து அணி 3-0 என்று தொடர்ச்சியாக முன்னணியில் இருந்தது. போட்டி முடியும் வரை ரோமானியா அணி கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 3-0 என்ற வகையில் போட்டியில் வெற்றி பெற்றது. 



    இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. இந்த போட்டி துவங்கிய 58 நொடியில் துருக்கி வீரர் மெரி டெமிரல் கோல் அடிக்க, அந்த அணி துவக்கத்திலேயே முன்னணி வகித்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா அணி கோல் அடிக்க முனைப்பு காட்டியது.

    எனினும், அந்த அணி வீரர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. போட்டியின் 59-வது நிமிடத்தில் துருக்கி அணி மற்றொரு கோல் அடித்தது. இதைத் தொடர்ந்து போட்டியின் 66-வது நிமிடத்தில் ஆஸ்திரியா கோல் அடித்தது. இதன் காரணமாக ஆஸ்திரியா போட்டியில் தனது முதல் கோலை பதிவு செய்தது.

    துருக்கி 2-1 என்ற நிலையில், போட்டி தொடர்ந்த நிலையில், ஆஸ்திரியா வீரர்கள் மற்றொரு கோல் அடிக்க அதிக தீவிரமாக முயற்சித்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த அணி ஒரு கோல் அடிக்கவும் செய்தது, எனினும், துருக்கி அணியின் கோல் கீப்பர் மெர்ட் குனோக் சாமர்த்தியமாக கோலை தடுத்ததால், ஆஸ்திரியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    போட்டி முடிவில் துருக்கி 2-1 அடிப்படையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அத்தியது. அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற இரு போட்டிகளில் விளையாடிய நான்கு அணிகளில் நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தின. 

    • ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

     


    போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. போர்ச்சுகல் அணி வெற்றிக்கு ரொனால்டோ முதல் கோல் அடித்து அசத்தினார். மறுபுறம் போர்ச்சுகல் அணி கோல் கீப்பர் டியோகோ கோஸ்டா மூன்று பெனால்டி ஷூட்-அவுட்களை தடுத்து தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பை தொடர்களில் ஏழாவது முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை எந்த அணியும் இத்தனை முறை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.
    • பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.

    எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் இரண்டாவது பாதியில் எந்த அணி கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் போராட்டத்தில் தீவிரம் காட்டினர்.

    போட்டி முடிய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், பெல்ஜியம் வீரர்களின் ஓன் கோல் காரணமாக பிரான்ஸ் அணி போட்டியில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், போட்டி முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி போர்ச்சுகல் அணியை எதிர்கொள்கிறது. 

    • யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது.
    • நேற்று ஜெர்மனி அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின.

    யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது. நேற்று ஜெர்மனி அணி மற்றும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இரண்டு அணிகளும் தரவரிசை பட்டியலில் கடைசியில் இருந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்தது.

    தரவரிசை பட்டியலில் ஜெர்மனி அணி 6 புள்ளிகளிலும், சுவிட்சர்லாந்து அணி 4 புள்ளிகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கத்து. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தி விளையாடினர். ஆட்ட முடிவில் இரு அணியும் தலா 1 கோல் எடுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் தரவரிசை பட்டியலில் ஜெர்மனி சுவிட்சர்லாந்து அணியைவிட முன்னிலையில் இருக்கிறது.

    • துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.
    • பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று போட்டிகளில் பெல்ஜியம் மற்றும் ரோமானியா அணிகள் மோதின. இந்த தொடரின் முதல் போட்டியில் ஸ்லோவேகியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த பெல்ஜியம் அணி இந்த போட்டியில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.

    இந்த போட்டியில் பெல்ஜியம் வீரர் 73 நொடியில் அடித்த கோல் அந்த அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெல்ஜியம் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    மறுமுனையில், பெல்ஜியம் அடித்த கோலுக்கு பதில் கோல் அடிக்க ரோமானிய வீரர்கள் முனைப்பு காட்டினர். எனினும், இவர்களின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் அணி அதிரடியாக ஆடியது.

    போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சூழலில் பெல்ஜியம் அணியின் டெ ப்ரூன் மற்றொரு கோல் அடித்தார். இதன் மூலம் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலையை தொடர்ந்தது. போட்டி முடிவில் ரோமானியா அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதன் காரணமாக பெல்ஜியம் அணி 2-0 என வெற்றி பெற்றது.

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • கடைசி நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி செர்பியா கோல் அடித்தது.

    யூரோ 2024 கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு நடைபெற்ற போட்டியில் குரூப் "சி"-யில் இடம் பிடித்துள்ள ஸ்லோவேனியா- செர்பியா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களாகும் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை.

    இறுதியாக ஸ்லோவேனியா 69-வது நிமிடத்தில் கோல் அடித்தது. கோல் கம்பத்திற்கு இடது புறத்தில் இருந்து பாஸ் செய்த பந்தை ஜான் கார்னிக்னிக் கோலாக்கினார். இதனால் ஸ்லோவேனியா 1-0 என முன்னிலை பெற்றது.

    அதன்பின் 90 நிமிடம் வரை செர்பியா அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் நிறுத்தம் மற்றும் இன்ஜூரிக்கான நேரமாக கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

    95-வது நிமிடத்தில் செர்பியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை லூகா ஜோவிக் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.

    ஸ்லோவேனியா அணிக்கு 4 கார்னர் வாய்ப்பும், செர்பியா அணிக்கு 9 கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. இரு அணிகளும் கோல் கம்பத்தை நோக்கி தலா 4 முறை டார்கெட் செய்தனர். செர்பியா வீரர்கள் 586 பாஸ் செய்த நிலையில், ஸ்லோவேனியா வீரர்கள் 347 பாஸ் செய்தனர்.

    • ஹங்கேரி அணிக்கு எதிராக 3-1 என சுவிட்சர்லாந்து அபார வெற்றி.
    • ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டயில் ஸ்காட்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. முன்னதாக ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற அபார வெற்றியை பெற்ற சுவிட்சர்லாந்து, இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் ஆடியது.

    மறுபுறம் ஸ்காட்லாந்து அணியும் வெற்றி முனைப்பில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த வகையில் ஸ்காட் மெக்டொமினே அடித்த கோல் காரணமாக ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.

    இதைத் தொடர்ந்து பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டிய சுவிட்சர்லாந்து அணிக்கு ஷகிரி 20 யார்ட்களில் இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதனால் போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில இருந்தன.

    இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் இன்னொரு கோல் அடித்து முன்னிலை பெற முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடிவில் 1-1 என்ற வகையில் போட்டி சமனில் முடிந்தது. 

    ×