search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் சாசனம்"

    • என்.சி.இ.ஆர்.டி.யின் 3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.
    • அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா?

    சென்னை:

    மதுரை சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்,

    வெறும் பக்கம் அல்ல...

    இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதம்...

    என்.சி.இ.ஆர்.டி.யின்

    3 ஆம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசன முகவுரை நீக்கம்.

    அரசியல் சாசனத்தை வணங்கி பதவியேற்ற பிரதமர் என்.சி.இ.ஆர்.டி.யின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று தெரிவித்துள்ளார்.

    • ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
    • மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது என்றார் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்.

    ஐதராபாத்:

    பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.எல்.சி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினர்.

    இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாரதி ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறோம்.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். சமீபத்திய கட்சித் தாவல்களின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களான அனைவரையும் சந்திப்போம்.

    ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதுபோல் ஆஸ்கார் லெவலில் செயல்படுகிறார்.

    பா.ஜ.க மற்றும் காங்கிரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் கட்சி மாறுதலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களை அல்ல என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
    • அரசியல மைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறியவர்கள்.

    புதுடெல்லி:

    18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டி விமர்சித்தார். மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களை அல்ல என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்தார். "50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்து விட்டீர்கள்.

    நாங்கள் மக்களுக்காக பாராளுமன்றத்திலும், தெருக்களிலும் அனைவருக்கும் முன்பாக குரல் எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்"என்றார்.

    இந்த நிலையில் அரசியலமைப்பு சட்டத்தை அடியோடு தகர்த்து நாட்டை சிறைக்குள் அடைத்த நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்து இன்றுடன் 50 ஆண்டுகளாகும் நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் இது தொடர்பாக கூறியதாவது:-

    அவசர நிலையை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்றாகும். அவசர நிலையில் இருட்டு நாட்கள் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் எப்படி எதிர்த்தது என்பதை நினைவூட்டுகிறது.

    ஆட்சியை பிடிக்க அன்றைய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு ஜனநாயக கொள்கையையும் புறக்கணித்து தேசத்தை சிறைக்குள் அடைத்தது. காங்கிரசுக்கு உடன்படாத அனைவரும் சித்ரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். நலிந்த பிரிவினரை குறி வைத்து சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

    எமர்ஜென்சியை கொண்டு வந்தவர்கள் நமது அரசியலமைப்பு மீது அன்பை வெளிப்படுத்த எந்தவித உரிமையும் இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் 356-வது சட்டப் பிரிவை திணித்தவர்கள். பத்திரிகை சுதந்திரத்தை அழிக்கும் மசோதாக்களை கொண்டு வந்தவர்கள்.

    கூட்டாட்சி முறையை அழித்தவர்கள். அரசியல மைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறியவர்கள். அவர்களின் செயல்களை இந்திய மக்கள் பார்த்ததால்தான் மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார்.

    ×