search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.என்.பி.எல்."

    • மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
    • ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நெல்லை:

    8-வது டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் ஓரளவு விளையாடி 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    19-வது ஓவரில் கோவை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷாருக் கான் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 26 பந்தில் 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.

    மதுரை அணி சார்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி கோவையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் மதுரை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கோவை அணி சார்பில் கவுதம் தாமரை கண்ணன் 4 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி 1 விக்கெட்டும் வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இப்போட்டியின் மூலம் குவாலிபியர் போட்டிகளுக்கு முதல் அணியாக கோவை தகுதி பெற்றது.

    • 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
    • திண்டுக்கல் அணியும் 2-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது.

    கோவை:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. நேற்று முன்தினத்துடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது. 9 ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்றது.

    டி.என்.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. வருகிற 18-ந் தேதி வரை 8 போட்டிகள் அங்கு நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 ஆட்டத்தில் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி முதல் ஆட்டத்தில் கோவை கிங்சிடம் 13 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. 3-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 15 ரன்னில் வீழ்த்தியது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்சை நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு எதிர் கொள்கிறது.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்சை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கில் ஜெகதீசன் (117 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (107 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் டேரில் பெராரியோ, அபிஷேக் தன்வர் (தலா 5 விக்கெட்), பெரியசாமி (4 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியும் 2-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. 4-வது இடத்தில் உள்ள அந்த அணி முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாவை 16 ரன்னில் வென்றது. 2-வது போட்டியில் சேலம் ஸ்பார்டன்சிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    முன்னதாக நாளை மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம்-திருச்சி அணிகள் மோதுகின்றன.

    இன்றைய ஆட்டங்களில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் (மாலை 3.15) , கோவை-நெல்லை (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.

    • சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
    • 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தான் மோதி உள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோற்றது. கோவை கிங்சிடம் 13 ரன்கள் வித்தியாசத்திலும், நெல்லை அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றியை பறி கொடுத்தது.

    முன்னாள் சாம்பியனான அந்த அணி வெற்றி கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன்பால், சந்தோஷ்குமார், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், சதீஷ், பெராரியோ ஆகியோரும் பந்து வீச்சில் பெரியசாமி, ரஹில்ஷா, அஸ்வின் கிறஸ்ட் ஆகியோரும் உள்ளனர்.

    விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் தோற்றது. அந்த அணியும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.

    அந்த அணியில் துஷார் ரஹேஜா, சாத்வீக், அனிரூத், முகமது அலி, கணேஷ் அஜித்ராம், புவனேஷ்வரன், டி.நடராஜன், மதிவாணன், கருப்பசாமி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    • சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது பிறந்தநாளில் அரை சதம் விளாசி அசத்தினர்.
    • சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஸ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக சிவம் சிங் - அஸ்வின் களமிறங்கினர். சிவம் சிங் 2 ரன்னிலும் அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து பாபா இந்திரஜித் - விமல் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் விமல் குமார் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது பிறந்தநாளில் அரை சதம் விளாசி அசத்தினர். அவர் 51 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

    இதனால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர். சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஸ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
    • சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.

    சேலம் ஸ்பார்டன்ஸ் (பிளேயிங் லெவன்):

    எஸ் அபிஷிக், ஆர் கவின், முஹம்மது அட்னான் கான், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், கே விஷால் வைத்யா, ஷிஜித் சந்திரன்(சி), சன்னி சந்து, ராஜேந்திரன் விவேக், எஸ் ஹரிஷ் குமார், எம் பொய்யாமொழி, என் செல்வ குமரன்

    திண்டுக்கல் டிராகன்ஸ் (பிளேயிங் லெவன்):

    சிவம் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின்(கேட்ச்), விமல் குமார், பாபா இந்திரஜித்(வ), பூபதி குமார், சி சரத்குமார், எஸ்.தினேஷ் ராஜ், ஜி.கிஷூர், வருண் சக்ரவர்த்தி, பி.விக்னேஷ், வி.பி.திரன்

    • திண்டுக்கல் டிராகன்ஸ் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • சேலம் அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியில் ஷிவம் சிங், பாபா இந்திரஜித், பூபதிகுமார், விமல்குமார் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், வி.பி.தீரன், விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.

    சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த அணியில் கவின், அபிஷேக், விஷால் வைத்யா, ஹரீஷ்குமார், சன்னி சந்து, பொய்யாமொழி, விவேக் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    • ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.
    • 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல், சென்னை ஆகிய 5 இடங்களில் போட்டி நடக்கிறது. குவாலிபையர் -1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும், குவாலி பையர்-2 மற்றும் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்திலும் நடக்கிறது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    போட்டிகள் தினசரி இரவு 7.15 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் 2 ஆட்டங்கள் இருந்தால் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும். 7 நாட்கள் மட்டுமே 2 போட்டிகள் நடக்கிறது.

    டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.30 லட்சம் கிடைக்கும். 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பரிசு தொகை கிடைக்கும்.

    டி.என்.பி.எல். போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    ×