search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேச வன்முறை"

    • தாக்குதல் நடைபெற்ற நிலையில், மோடியுடன் முகமது யூனுஸ் தொலைபேசியில் உரை.
    • வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என முகமது யூனுஸ் வலியுறுத்தல்.

    வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.

    இதைதொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார்.

    வங்கதேசத்தில் இந்துகள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், மோடியுடன் முகமது யூனுஸ் தொலைபேசியில் பேசியுள்ளார்.

    அப்போது, வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

    அப்போது, வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கருத்துப் பரிமாற்றம் இருந்தது. ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என முகமது யூனுஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு காக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை அவர் உறுதியளித்தார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.
    • முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறியப்பட்டார்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    அரசு வேலை வாய்ப்பில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கோர்ட்டு அனுமதி அளித்ததால் அதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதன்பின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    இந்நிலையில் வங்கதேசத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர். இதையடுத்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார்.

    இதனையடுத்து, வங்கதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீனுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறிவித்துள்ளார்.

    முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
    • சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர்.

    வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர். இதையடுத்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார்.

    அரசு வேலை வாய்ப்பில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கோர்ட்டு அனுமதி அளித்ததால் அதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

    அதன்பின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் வங்காளதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    • கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.
    • இதன் காரணமாக மீண்டும் வன்முறை ஏற்படலாம்.

    வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மற்றும் டாக்காவை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவர் என்று தெரிகிறது.

    இதன் காரணமாக மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தால், வங்காளதேசத்தில் நாடு முழுக்க இணைய சேவைகளை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய சேவைகள் முடங்கியதால் பேரணி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில், பங்கேற்ற வங்காளதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் போலீசாரும் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    போராட்டம் காரணமாக நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    • போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.
    • வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.

    வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் சிக்கி இதுவரை 98 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியால், அங்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

    இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த கலவரத்தால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதில், இதுவரை 98 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அங்கே பல ஆயிரம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

    இதையடுத்து,  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.
    • போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

    இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 778 இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, டாக்கா, சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

    எஞ்சிய சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

    நேபாளம், பூட்டான் நாடுகளை சேர்ந்த மாணவர்களும் கோரிக்கையின் பேரில் இந்தியாவுக்குள் நுழைவற்கு உதவப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×