என் மலர்
நீங்கள் தேடியது "வங்காளதேசம் வன்முறை"
- மாணவர்கள் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இருதரப்புக்கு இடையே நடந்த மோதல் வன்முறையில் முடிந்தது.
புதுடெல்லி:
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்புக்கு இடையே நடந்த மோதல் வன்முறையில் முடிந்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்காளதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பியுள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
- வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய போராட்டம் வன்முறையாக வெடித்தது.
- இந்தப் போராட்டத்தில் 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
டாக்கா:
வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் வலதுசாரி பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன. மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் 150-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
இந்நிலையில், இந்த வன்முறைக்கு காரணமான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பான இஸ்லாமிக் சதாரா ஷிபிர் என்ற அமைப்பை வங்காளதேச அரசு இன்று தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜமாத் இ இஸ்லாமி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவாமி லீக் தலைமையிலான ஆளும் கூட்டணியின் முடிவு சட்டவிரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என தெரிவித்துள்ளது.
- டாக்காவில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் உள்ளார்.
- லண்டனில் தற்காலிகமாக குடியேற அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.
லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார்.
ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது.
இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மெர் பிரதமராக உள்ளார். இவரது தலைமையிலான இங்கிலாந்து "அடைக்கலம் கேட்கும் தனிநபர்கள் அவர்கள் சென்றடையும் முதல் பாதுகாப்பான நாட்டில் அதை செய்ய வேண்டும். தேவைப்படும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி இங்கிலாந்து பெருமைக்குரிய சாதனைப் படைத்துள்ளது. எனினும் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் கேட்கும் அல்லது இடைக்கால தஞ்சம் அடைவதற்கான வசதி இல்லை" எனத் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் முறையாக அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- வங்காளதேச போராட்டத்தில் வெளிநாடு சக்திகளின் தலையீடு இருப்பதாக தகவல்.
- குறிப்பாக பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக தகவல் வெளியானது குறித்து ராகுல் காந்தி கேள்வி.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்துள்ளார். ராணுவம் இடைக்கால அரசு அமைக்க இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
வங்காளதேச தேசத்தில் அசாதாரண நிலை நிலவி வரும் நிலையில் இந்திய அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தில், போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த சில வாரங்களாக டாக்காவில் நடந்த செயல்களில் வெளிநாட்டு சக்திகளின், குறிப்பாக பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக செய்திகள் வந்ததாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய அரசு "இந்த கோணத்தில் விசாரித்து வருகிறோம். வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வங்காளதேசத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் பாகிஸ்தான் டிப்ளோமேட்டிக் அதிகாரி ஒருவர் தனது சமூக ஊடக டிஸ்பிளே படத்தை தொடர்ந்து மாற்றி வந்ததாக செய்திகள் வெளியானது. இது ஏதாவது பெரிய விஷயத்தை சுட்டிக் காட்டுகிறதா? என்று ஆய்வு செய்து வருகிறோம்" என பதில் அளித்தது.
மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஜே.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசின் கே.சி. வேணு கோபால், தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு, தேசியவாத காங்கிரசை சேர்ந்த (சரத்பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
- வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டார்.
- ஜூலை 1 முதல் ஆகஸ்டு 5 வரை கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
டாக்கா:
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், வங்காளதேச பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது.
மேலும், ஜூலை 1 முதல் ஆகஸ்டு 5 வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அதிபர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
- வங்காளதேச வன்முறைக்கு பின்னால் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக தகவல்.
- ஷேக் ஹசீனாவுக்கு இங்கிலாந்து அரசு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக முடிவு ஏதும் எடுக்கவில்லை.
வங்காளதேசம் நாட்டில் வேலைவாய்ப்பில் தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்த பிறகு, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதனால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். வன்முறையில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சீனாவின் பாதுகாப்புத்துறை ஆகியவை வங்காளதேசத்தில் மாணவர் அமைப்புகளை தூண்டிவிட்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளது. பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் வங்காளதேசத்தின் தேசியவாத கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இங்கிலாந்திடம் ஷேக் ஹசீனா அடைக்கலம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம் நிலவி வரும் வன்முறை தொடர்பாக ஐ.நா. தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் "இதுவரை இல்லாத வன்முறை மற்றும் உயிரழப்புகள் வங்காளதேசத்தில் இரண்டு வாரங்களில் நடைபெற்றுள்ளன. ராணுவத் தளபதியால் ஒரு இடைக்கால அரசு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தை நோக்கிய நடவடிக்கையை பார்க்க நாங்கள் விரும்புகிறோம்.
வன்முறைறை முடிவுக்கு கொண்டு வர, மீண்டும் அமைதி திரும்ப, மேலும் உயிரிழப்பை தவிர்க்க அனைத்து தரப்பிலும் இருந்து ஒன்றிணைந்து பணியாற்றுவது அவசியம்.
இங்கிலாந்து- வங்காளதேசம் மக்களிடையே ஆழமான தொடர்பு உள்ளது. காமன்வெல்த் மதிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா லண்டனிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் லண்டம் இது தொடர்பாக அதிகார்ப்பூர்வ பதில் ஏதும் அளிக்கவில்லை.
ஷேக் ஹசீனாவின் தங்கை மகள் (niece) துலிப் சித்திக் (இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ள ஷேக் ரெஹானாவின் மகள்) ஹம்ப்ஸ்டீட் என்ற வடக்கு லண்டனில் இருந்து பகுதியில் இருந்து தொழிலாளர் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கருவூல துறையின் ஜூனியர் மந்திரியாக உள்ளார். இதனால் ஷேக் ஹசீனா கடைசியாக லண்டன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போராட்டக்காரர்கள் அரசு சொத்துகளை தீவைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.
- அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரின் சர்வதேச ஹோட்டலை தீ வைத்து எரித்த வீடியோ வெளியாகியுள்ளது.
வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திடீரென ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தை ஷேக் ஹசீனா பக்கம் திருப்பினர்.
போராட்டம் வன்முறை ஆக வெடித்து கட்டுக்கடங்காத வகையில் சென்ற நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியுள்ளார்.
இடைக்கால அரசு அமைப்பதாக வங்காளதேசம் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடி வருகின்றனர். பல இடங்களில் அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு தீவைத்துள்ளனர்.
அந்த வகையில் ஜோஷோர் மாவட்டத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவருக்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீவைத்து கொளுத்தினர். இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்குள் இருந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. சபீர் சர்வதேச ஹோட்டல் அவாமி லீக் கட்சியின் பொது செயலாளர் ஷஹின் சக்லாதாருக்கு சொந்தமானதாகும்.
போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்களை சூறையாடுவதுடன், தீ வைத்து சேதப்படுத்தியும் வருகிறார்கள்.
- ஜூலை 16-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 328 பேர் உயிரிழந்துள்ளனர்.
- செவ்வாய்க்கிழமை மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் மிகப்பெரிய வகையில் வன்முறையாக வெடித்தது. இந்த போராட்டம் ஜூலை மத்தியில் தொடங்கிய பின்னர் அமைதி நிலை திரும்பியது.
பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன் ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இதனால் ஷேக் ஹசீனா தனது பதிவியை ராஜினாமா செய்தார். ராணுவம் இடைக்கால அரசை அமைப்பதாக தெரிவித்தது.
ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார். அதன்பின்பும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துக்கள் தீ வைத்து நாசமாக்கப்பட்டன. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஹோட்டலுக்கு தீ வைத்ததில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தபின், வங்காளதேசத்தில் நேற்று மாலை வரை குறைந்தது 232 பேர் உயிரழந்தனர். வங்காளதேசத்தில் நடைபெற்ற போராட்டம் காரணமாக மொத்த உயிரிழப்பு 560-ஐ தாண்டியுள்ளது.

ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் 328 பேர் உயிரிழந்திருந்தனர். ஜூலை 16-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 328 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக 23 நாள் போராட்ட வன்முறையில் 560 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை (நேற்று) மட்டும் 21-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காசிப்பூரில் உளள் காஷிம்புர் உயர்பாதுகாப்பு சிறையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தடுத்து நிறுத்த ஜெயில் வார்டன்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
- பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- அவாமி லீக் கட்சிக்காக நிச்சயம் வங்காளதேசம் திரும்புவார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ள அவர், இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் இங்கிலாந்து இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்காமல் உள்ளது. இதற்கிடையே இந்தியாவும் அவருக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்குமா? என்பதில் கேள்வி எழுந்தது.
இதனால் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு எது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தனது தாயார் வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்பிய பின், சொந்த நாடு திரும்புவார் என ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் தெரிவித்துள்ளார்.
சஜீப் வசேத் பிடிஐ-க்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
எனது தாயார் ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார். அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் திரும்புவாரா? அரசியல் செயல்பாட்டுடன் திரும்புவாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் குடும்ப உறுப்பினர்கள் நாட்டு மக்களை கைவிட்டுவிட மாட்டார்கள். அதேபோல் பாதிக்கப்பட்டுள்ள அவாமி லீக் கட்சியையும் கைவிடமாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
தனது தாயைப் பாதுகாத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச கருத்தை உருவாக்கவும் அழுத்தம் கொடுக்கவும் இந்தியா உதவ வேண்டும் என இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பமாட்டார் என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால், நாடு முழுவதும் அவாமி லீக் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இப்போது நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய்யப் போகிறோம். நாங்கள் அவர்களை அப்படியே விட்டுவிடப்போவதில்லை.
அவாமி லீக் வங்கதேசத்தின் மிகவும் பழமையான கட்சி. ஆகவே, அக்கட்சி தொண்டர்களிடம் இருந்து அப்படியே விலகிச் செல்ல முடியாது. வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்பும்போது ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார்.
சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலையீடு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். தாக்குதல்கள் மற்றும் எதிர்ப்புக்கள் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டவை, துல்லியமாக திட்டமிடப்பட்டவை மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிலைமையைத் தூண்டிவிட வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன செய்தாலும், அவர்கள் நிலைமையை மோசமாக்க முயன்றனர்.
இவ்வாறு சஜீப் வசாத் தெரிவித்துள்ளார்.
- ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டுள்ள நிலையில், ஜெய் சங்கரிடம் இங்கிலாந்து மந்திரி பேசியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது எகஸ் பக்கத்தில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி தன்னிடம் பேசியதாகவும், அப்போது வங்காளதேசத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து பேசியதாகவும், வங்காளதேசம் மற்றும் மேற்கு ஆசியாவின் சூழ்நிலை குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் நிரந்தரமாக அடைக்கலம் கொடுக்கப்போகும் நாடு எது? என்பதில் சிக்கல் நிலவி வரும் நிலையில் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேசியது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
ஆனால், ஷேக் ஹசீனாவின் அடைக்கலம் குறித்து பேசியதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
வங்காளதேசத்தில் அசாதாரண நிலை நிலவியதால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவசரமாக இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இங்கிலாந்தில் குடியேற அரசியல் அடைக்கலம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இங்கிலாந்து குடியேற்ற சட்டப்படி தனிநபர் இங்கிலாந்து சென்று அங்கு அடைக்கலம் கோர முடியாது. இதனால் இங்கிலாந்து இந்த விசயத்தில் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.
இதற்கிடையே இந்தியா நிரந்தரமாக அடைக்கலம் வழங்க தயாராக இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகள் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கிடையே இங்கிலாந்தில் அடைக்கலம் திட்டத்தை ஷேக் ஹசீனாவின் மகன் மறுத்துள்ளார்.
ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் தொடங்கிய நிலையில், பின்னர் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஷேக் ஹசீனாவுடன் இந்தியா வந்தவர்கள் வேறு இடத்திற்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷேக் ஹசீனாவின் அடுத்த நகர்வு என்ன? என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை, இந்தியாவுக்கு அதுகுறித்த எந்த அப்டேட்டும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
- வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தபின் போராட்டக்காரர்கள் சொத்துகளை சேதப்படுத்தி வருகின்றனர்.
- இந்து கோவில்கள், வீடுகள், வணிக தொடர்பான இடங்கள் தாக்கப்பட்டு வருகின்றன.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த மாதம் 2-வது வாரம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்னர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்க போராட்டம் தணிந்தது. அதன்பின் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக தொடங்கியது. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக வெடித்து கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை ராஜினமா செய்தார். அதன்பின் போராட்டக்காரர்கள் அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துகளை நாசப்படுத்த தொடங்கினர். அங்கு வாழும் இந்துக்களை தாக்க தொடங்கினர். இதனால் வன்முறை நின்றபாடில்லை. வங்கதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு, வன்முறைக்கு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உதவ வேண்டும் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.
ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஆகஸ்ட் 5-ந்தேதி கவிழ்ந்தது. அதில் இருந்து வங்காளதேசத்தின் 52 மாவட்டங்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் மைனாரிட்டி இந்துக்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க அண்டை நாடான இந்தியாவுக்கு தப்பியோட முயற்சி செய்கிறார்கள்.
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முஹம்மது யூனுஸ் பதவியேற்றுள்ள நிலையில், வன்முறை மற்றும் உள்நாட்டு அமைதியின்மை முடிவுக்கு வருவதை உறுதிசெய்ய, இந்தப் புதிய அரசாங்கத்திற்கு நெருக்கமாக பணியாற்றும் கடமை அமெரிக்காவுக்கு உள்ளது.
துன்புறுத்தப்பட்ட வங்கதேச இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு அகதிகள் என்ற தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை வழங்குமாறு பிடன் நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என மிட்சிகன் பாராளுமன்ற உறுப்பினரான தானேதர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏராளமான இந்து கோவில்கள், வீடுகள், வணிகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவாமி லீக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரண்டு இந்து தலைவர்கள் கொல்லப்பட்டுள்னர்.
- வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
- தன்னை ஆட்சியில் இருந்து நீக்கியதில் அமெரிக்காவுக்கு தொடர்பு உள்ளது என்றார்.
புதுடெல்லி:
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினர். அதை அனுமதிக்காமல் நானே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தேன்.
செயின்ட் மார்டின் தீவை விட்டுக்கொடுத்து வங்காள விரிகுடாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அனுமதித்திருந்தால் நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும்.
எனது மண்ணின் மக்களிடம், தயவுசெய்து தீவிரவாதிகளின் கைப்பாவை ஆகிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளன என்ற செய்திகளைப் பார்க்கும்போது என் இதயம் கண்ணீர் வடிக்கிறது.
எனது தந்தையும் என் குடும்பத்தினரும் பாடுபட்ட உருவாக்கிய தேசத்தின் எதிர்காலத்திற்காக நான் என்றென்றும் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.