search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க.ஸ்டாலின்"

    • திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மேகா ஆகாஷ்க்கு திருமணம் நடைபெற்றது.
    • தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மேகா ஆகாஷ் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

    கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மெகா ஆகாஷ்க்கு திருமணம் நடைபெற்றது.

    சென்னையில் நடைபெற்ற சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் திமுகவின் பல அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அனைத்து தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்.
    • புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. கட்சியினர் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தி.மு.க. கொடி ஏற்ற வேண்டும். வருகிற 15, 16, 17 ஆகிய 3 தேதிகளில் அனைவரும் கருப்பு, சிவப்பு அணிந்த துண்டை அணிந்து செல்ல வேண்டும்.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அனைவரும் கடைசி வரை இருக்க வேண்டும். ஒரு ஓட்டு என்பது கூட முக்கியமானது. காட்பாடி தொகுதியை பொறுத்தவரை உழைத்தோம். ஆனால் அதிகமான நேரத்தில் ஓய்வு எடுத்து விட்டோம். இப்பொழுது உள்ள முறைகள் சரியில்லை. வருகிற 20-ந் தேதிக்கு பிறகு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் நான் நேரில் வந்து மக்களுடைய குறைகளை கேட்டு அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

    வாக்குச்சாவடிகளில் பழைய முகவர்கள் சரியில்லை என்றால், அவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் காட்பாடி தொகுதி பழைய முறைப்படி தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலைமை மீண்டும் ஏற்படும்.

    கடந்த முறை என்ன நடந்தது? தோற்றுவிடுவோம் என்ற நிலை இருந்தது. அதை நான் சவாலாக எடுத்துக் கொண்டேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். ஏன் அனைத்து தொகுதிகளிலும் சொல்லவில்லை என்றால் எதிர்க்கட்சி 34 தொகுதியிலாவது வரட்டுமே என்ற எண்ணம் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதியாக இருந்து வெற்றி பெற்று விடுவார்.

    இப்பொழுது புதிய வாக்காளர்களை நாம் சேர்க்க வேண்டும். அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வந்த பிறகு கட்சியில் பல மாறுதல்கள் செய்ய வேண்டும்.

    அனைத்து தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். ஒளிமயமான எதிர்காலம் வந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த ஆக.27-ந்தேதி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.

    இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு எந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் என்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், வளத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய 4 வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கேட்டர்பில்லர் நிறுவனம் டிராக்டர்கள் முதல் ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சிகள், பேக்ஹோ ஏற்றிகள், மோட்டார் கிரேடர்கள், ஆப்-ஹைவே டிரக்குகள், வீல் லோடர்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றின் எந்திரங்களை தயாரித்து வருகின்றன. எந்திரங்கள் கட்டுமானம், சாலை அமைத்தல், சுரங்கம், வனவியல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாளும் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 11-ந் தேதியன்று சிகாகோவில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

     

    இதையடுத்து ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலமாக 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்காக ஒப்பந்தம் கையெழுத்து கையெழுத்தாகி உள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சிகாகோ விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

    • முதலமைச்சர் முன்னிலையில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
    • அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு எந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் என்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், வளத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய 4 வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கேட்டர்பில்லர் நிறுவனம் டிராக்டர்கள் முதல் ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சிகள், பேக்ஹோ ஏற்றிகள், மோட்டார் கிரேடர்கள், ஆப்-ஹைவே டிரக்குகள், வீல் லோடர்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றின் எந்திரங்களை தயாரித்து வருகின்றன. எந்திரங்கள் கட்டுமானம், சாலை அமைத்தல், சுரங்கம், வனவியல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாளும் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 11-ந் தேதியன்று சிகாகோவில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலமாக 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்காக ஒப்பந்தம் கையெழுத்து கையெழுத்தாகி உள்ளது.

    • அரங்கில் தி.மு.க. சாதனைகள் குறித்து கண்காட்சிக்கும் ஏற்பாடு.
    • மு.க.ஸ்டாலின் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    பெரியார்-அண்ணா பிறந்தநாள், தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள் என ஆண்டுதோறும் தி.மு.க. முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக தி.மு.க.வின் 75-வது ஆண்டு பவள விழா என்பதால் முப்பெரும் விழா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பவள விழா ஆண்டை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட உள்ளன. 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழா அரங்கில் தி.மு.க. சாதனைகள் குறித்து கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் பெரியார் விருது-பாப்பம்மாள், அண்ணா விருது-மிசா ராம நாதன், கலைஞர் விருது-ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது-வி.பி.ராஜன், மு.க.ஸ்டாலின் விருது-தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகி யோருக்கு வழங்கப்படுகிறது.

    இவை மட்டுமின்றி ஒன்றிய, நகர, பேரூர், பகுதி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று பணமுடிப்பு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

    பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் செல்வராஜ் உள்பட பலர் பேசுகின்றனர். மாவட்டச் செயலாளர் மா.சுமணியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

    விழா ஏற்பாடுகளை நந்தனம் மைதானத்துக்கு சென்று அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டுளார்.

    • வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
    • வெள்ளையன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

    தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்

    நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    வெள்ளையன் அவர்கள் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருத்தினேன்.

    வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • 2 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் இந்த தொழிற்சாலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
    • ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்.பி. நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனம் ஜேபிஎல்.

    தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிராஸ்சிஸ்கோவில் 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதன்பின் சிகாகோ சென்றார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்.பி. நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜே.பி.எல். (JABIL) நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமையும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் இந்த தொழிற்சாலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    முன்னதாக,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலகளாவிய உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பார்ச்சூன் 1000 நிறுவனங்களில் ஒன்றாகும்.

    இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் யூக்லிட்டில் அமைந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    விஷய் பிரிஷிஷன் நிறுவனமானது செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் இஸ்ரேல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டு உள்ளது, அங்கு ரெக்டி பையர்கள், டையோட்கள், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மின்தடையங்கள், மின் தேக்கிகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்க நாட்டின், பென்சில்வேனியாவின் மால்வெர்னில் அமைந்து உள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டி யூசர்ஸ்உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இச்சந்திப்பின்போது, விஷய் பிரிஷிணன் நிறுவனத்தின் ஷிர்வர் ஸ்டீபன், சென்னையில் அமைந்துள்ள தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதன்மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், தங்கள் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

    விஸ்டியன் நிறுவனமானது போர்டு மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அமெரிக்க நாட்டின் மிச்சிகனில் உள்ள வான் ப்யூரன் டவுன் ஷிப்பைத் தலைமையிடமாகக் கொண்டு, 17 நாடுகளில் இயங்கி வருகிறது.

    இது வாகனங்களின் காக்பிட் அனுபவத்தை மேம்படுத்தும் மின்னணு தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

    இந்நிறுவனம் மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுகல், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்லோ வாக்கியா, ருமேனியா, பல்கேரியா, ஹங்கேரி, துனிசியா, இந்தியா, சீனா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உற்பத்தி மற்றும் பொறியியல் மையங்களை கொண்டுள்ளது. போர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ், பி.எம்.டபிள்யூ. போன்ற உலகின் பெரும் வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகன மின்னனுவியல் பாகங்களை தயாரித்து அளித்து வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், விஸ்டியன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    • அமெரிக்கவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற ஸ்டாலின் அந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்
    • தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலினின் புகைப்டபத்தை பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சிகாகோ சென்றார்.

    சிகாகோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபின் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை 'சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலினின் புகைப்டபத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி, அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்து எங்கள் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த அபாரமான வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது." என தெரிவித்துள்ளார். 

    • முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
    • மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூடநம்பிக்கை கருத்துக்களை பரப்பிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு பேசிய வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த வகையில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான அமீர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் இருக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

    அமீர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது,

    சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிற்போக்குத்தனமான விஷக் கருத்துகளைப் பரப்பிய மகா விஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியும் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும், அவரது வார்த்தைக்கேற்ப உரிய நடவடிக்கையை எடுத்த தமிழக காவல்துறைக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.

    சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப் பார்க்கின்ற சனாதன கருத்திற்கு எதிராக விழித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தை, இப்போது ஆன்மிகம் என்கிற போர்வையில் "முற்பிறவி பாவங்கள்" என்ற சொல்லின் மூலம், வர்க்க ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது என்பதையே அசோக் நகர் அரசினர் மகளிர் பள்ளியின் நிகழ்வு நம் எல்லோருக்கும் உணர்த்துகிறது.

    தங்கள் கண் முன்னே நடைபெற்ற பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையான பேச்சுக்களை தடுக்காமல், கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மத்தியில் தனது ஞானக்கண் கொண்டு அநீதியை தட்டிக் கேட்ட மானமிகு தமிழாசிரியர் சங்கர் அவர்களுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை வழங்கியதோடு நின்றுவிடாமல், அதே பள்ளியில் அவரைத் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களையும் தமிழக முதல்வர் அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    சமூகத்தை வழி நடத்தக்கூடிய அறிவார்ந்த நாளைய தலைமுறையை உருவாக்கும் பட்டறையாக கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்லாது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமை என்பதை மறந்து, சமீப காலமாக தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களில், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களிலும் யூட்யூப் போன்ற ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருகிறது.

    எந்த விதமான கல்வித் தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமாகும்.

    அதே போல, பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரைக் கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாகவே இருந்தாலும், வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் திரைப்பட அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியதே. திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும்.

    மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு கல்வி நிறுவனங்களில் திரைக் கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவர்களை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    • தேசிய கல்வி கொள்கையை கட்டாயமாக திணிக்க முயற்சி செய்கிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது.

    மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி தேசிய கல்வி கொள்கையை கட்டாயமாக திணிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சமத்துவத்தை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கல்வி, சமூக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதேவேளையில் குறிக்கோள்களில் வெற்றி அடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது இப்படித்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதா?

    முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) வெளியாகவுள்ளது.
    • TESLA தமிழ்நாட்டுக்கு வந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் GOAT நகர்வாக அது இருக்கும்.

    விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் ஏஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "இந்த AI புகைப்படம் உண்மையாக வேண்டும் என விரும்புகிறேன். TESLA தமிழ்நாட்டுக்கு வந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் GOAT நகர்வாக அது இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்த எக்ஸ் பதிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை வெங்கட் பிரபு டேக் செய்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புலித்தேவரின் 309-வது பிறந்த நாள்.
    • வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்.

    சென்னை:

    சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவரின் 309-வது பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-வது பிறந்தநாள்!

    மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்!

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×