என் மலர்
நீங்கள் தேடியது "2026 சட்டமன்ற தேர்தல்"
- கட்சியை விட தமிழக மக்களின் நலன் தான் முக்கியமானது.
- கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பேது அவர் கூறியதாவது:-
2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்திற்கு மிக முக்கியமான தேர்தல் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.
கூட்டணிக்கான காலத்திற்கு இன்னும் அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்து தற்போதைக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை.
அரசியலில் கள நிலவரத்தை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். மைக்கில் பேசுவது அரசியல் அல்ல, களத்தில் வேலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பூத் கமிட்டியிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
- கடந்த ஒன்றரை மாதங்களாக திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு அனைத்துக் கட்சிகளும் இப்போதே தயாராகத் தொடங்கியுள்ளன.
ஆளும் தி.மு.க. பூத் கமிட்டியை வலுப்படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. நடிகர் விஜய்யும் நாளை பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளை தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் நிலையில் பூத் கமிட்டியிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் கடந்த ஒன்றரை மாதங்களாக திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. வீடு வீடாக சென்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்த பிரசாரம் நடந்து வருகிறது.
இதுவரை லட்சக்கணக் கான மக்களை திண்ணை பிரசாரம் மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
நாளை (வெள்ளிக்கி ழமை) 7-வது வாரமாக திண்ணை பிரசாரம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் சுமார் ஒரு லட்சம் பேரை சந்தித்து பேச அ.தி.மு.க. இளம் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த திண்ணை பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
- வெற்றி சாதாரண வெற்றி இல்லை, சாதாரண மாகவும் கிடைத்து விடவில்லை.
- 2026 தேர்தலுக்கு களப்பணிகளை தொடங்க வேண்டும்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை), காலை, சென்னை, கலைஞர் அரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர் கூட்டம் என்பதால், நாற்பதுக்கு நாற்பது வெற்றியை ஈட்டித் தந்த, ஆற்றல்மிகு மாவட்டச் செயலாளர்களுக்கும்-தலைமைக் கழக நிர்வாகி களுக்கும் எனது பாராட்டுகளையும்-வாழ்த்துகளையும்-மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்த நன்றியை உங்கள் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டரின் இதயத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை; சாதாரண மாகவும் இது கிடைத்து விடவில்லை. 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாற்பதுக்கு 39 பெற்றோம். 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது பெற்றோம். இரண்டு தேர்த லில் முழுமையான வெற்றியை இதுவரை யாரும் பெற்றது இல்லை; நாமும் இதுக்கு முன்பு பெற்றது இல்லை.
இந்த வெற்றிக்கு உங்களது உழைப்பு, உங்களது செயல்பாடு மிக மிக அடிப்படையாக அமைந்திருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை ஆவணப்படுத்தி, 'தென் திசையின் தீர்ப்பு' என்ற நூலை உருவாக்கி வழங்கியிருக்கிறேன். அதை பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டு உள்ளார். பொதுச்செய லாளருக்கும், பொருளாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது உழைப்பையும் வெற்றியையும் பதிவு செய்யும் ஆவணங்கள் அதிகம் இல்லை. அதனால்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய எல்லா செயல்பாடுகளையும் இந்த நூலில் முழுமையாக தொகுத்து வழங்கி இருக்கிறேன்.
உங்கள் மாவட்டங்களில் இயங்கும் கழகம் சார்ந்த நூலகங்களிலும் பொது நூலகங்களிலும் இந்த புத்தகத்தை நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, நடந்த முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் வென்றிருக்கிறோம்.
சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் நம்முடைய கழக ஆட்சி என்பதில் சந்தேகமில்லை. அதற்கு தயாராகும் வகையில், நாம் களப்பணிகளை தொடங்க வேண்டும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும். விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் அதேவேளையில் நம்முடைய சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. அந்த அளவுக்கு நலத்திட்டப் பணிகளை செய்திருக்கி றோம்.
மக்களிடம் நற்பெயரை வாங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டின் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டா லும் அந்த வீட்டில் ஒருவ ராவது பயனடையும் வகை யில்தான் திட்டங்கள் தீட்டப் பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களை சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய களப்பணி மிக மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும்.

நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ந் தேதி இரவு அமெரிக்கா விற்குப் புறப்பட இருக்கி றேன். தீர்மானத்தில் சொன்னபடி, முப்பெரும் விழாவிற்கான பணிகளை செய்து முடிப்பதோடு நான் இப்போது சொல்லியிருக்கும் பணிகளையும் செய்யத் தொடங்கியிருக்க வேண்டும்.
நான் அமெரிக்காவில் இருந்தாலும் தலைமைக் கழகம் மூலமாக இதை யெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்.
நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பிலும், கழகத்தின் சார்பிலும் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தி ருக்கிறோம். நாளை மறுநாள் தலைவர் கலைஞர் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட இருக்கிறது.
அதில் நீங்கள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன். உலகத்தில் எந்த தலைவருக்கும் இப்படி சிறப்புகள் செய்யப்பட்டது இல்லை என்ற அளவிற்கு கொண்டாடி இருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக, வரும் முப்பெரும் விழாவில் கழகத்தின் பவள விழா நிறைவும் தீர்மானத்தில் சொன்னபடி மிகச்சிறப்பாக நடைபெற வேண்டும்.
கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவிலேயே முதன்முத லாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம்! அந்த வரலாற்றை எழுதியது நாம்தான்.
கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனபிறகும் ஆட்சியில் இருக்கும் இயக்கமும் நம்முடையதுதான். அப்படிப்பட்ட தருணத்தில்-கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் இந்த இயக்கத்தில், நானும் நீங்களும் பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இருக்கி றோம் என்பது நமக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய பெருமை.
75 ஆண்டுகள் கடந்து விட்ட இந்த இயக்கத்தின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது. ஆலமரமாக இந்த இயக்கம் வேரூன்றி நிற்கிறது என்றால், அதற்கு காரணம், இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு, கோடிக்க ணக்கானவர்களின் உழைப்பும் தியாகமும் உர மாக்கப்பட்டிருக்கிறது. அதன் பயனைத்தான் இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம்.
அதேமாதிரி, இந்த இயக்கத்தை அடுத்த டுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையும் நம்முடைய கைகளில் இருக்கிறது. அதற்கான உழைப்பை வழங்க உங்களை நீங்கள் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசி னார்.
- தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
- பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியை பார்வையிட நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்
2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக தொகுதி பார்வையாளர்களை நியமனம் செய்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியை பார்வையிட நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
- விஜயின் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
- இரு கட்சிகளுக்கு இடையே 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி உறுதி என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்துள்ளார்.
த.வெ.க. மாநாட்டில் கூடிய இளைஞர்கள் கூட்டம் தமிழகத்தின் அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணியை வரவேற்று அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுன், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயும் ஒரே மேடையில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி உறுதி என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தான் நீடிப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டணியை விட்டுவிட்டு வேறு கூட்டணிக்கு போக வேண்டிய எந்த தேவையும் வி.சி.க.வுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
- "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் உரையாற்றினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நூல் வெளியீட்டு விழா மேடையில் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது.
தமிழகத்தின் வெற்றிக்கு பெரியார் கொள்கைகளே காரணம். அப்பேத்கரின் கனவை தமிழகத்தில் நிறைவேற்றியவர் திருமாவளவன்.
அம்பேத்கர் பற்றி தலித் தலைவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தது போய், தற்போது தலித் அல்லாத விஜய்யும் பேசுகிறார்.
புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து வருகிறார். தமிழக அரசியலில் புதிய வரலாறு உருவாகக்கூடிய மேடையாக இது இருக்கும்.
இந்தியாவில் காங்கிரஸ் வலிமையாக இருந்தபோது முதல்முறையாக தமிழகம் வென்று காட்டியது.
மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை.
2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது.
கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதியை போல ஊழல் எதிர்ப்பை ஏன் யாரும் முன்னெடுக்கவில்லை.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஏன் நாம் கேட்க கூடாது. பங்கு கேட்பதை இனி முதுகுக்கு பின்னால் இல்லை, நெஞ்சுக்கு நேராகவே கேட்போம்.
சாதியை அடிப்படையாக கொண்ட தேர்தல் அரசியல் தான் இங்கு பெரிய பிரச்சினை.
தமிழகத்தில் பாஜகவுக்கு 2 சதவீதம் தான் ஓட்டு, இங்கு மத பெரும்பான்மைக்கு ஆதரவு கிடையாது. மத பெரும்பாபன்மை என்று பாஜகவை விமர்சிக்கும் நாம், அதை தான் ஜாதியை வைத்து இங்கு செய்கிறோம்.
மலம் கலந்த தண்ணீர் தொட்டி விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
25 சதவீதம் மட்டுமே வாக்குகளை வைத்துக்கொண்டு எப்படி பெரிய கட்சி என்று சொல்ல முடியும். கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியுமா ? இதை கேட்டால் சங்கி என்று கூறுவார்கள்.
சாதியை ஒழிப்பதற்காக தான் திருமாவளவனோடு நான் கைகோர்த்தேன்.
பெரியால் கொள்கையும், அம்பேத்கர் கொள்கையும் இணைந்து பயணித்தால் புதிய மாற்றம் ஏற்படும்.
ஏழைகள் ஒன்று சேர்ந்தால் புதிய மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல் நகரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாட்ஷா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்றதில் தவறில்லை.
- குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பத்திற்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம் நடத்தியது.
தஞ்சையில் இன்று பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது, தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
அப்போது அவர் கூறியதாவது :-
அம்பேத்கர் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா பேசியதை முழுமையாக கேட்காமல் மக்களிடம் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பேத்கர் வாழ்ந்த போதும் அவரது மறைவுக்கு பிறகும் எப்போதும் அவருக்கு உரிய மரியாதை அளித்து வருவது பா.ஜ.க தான். தற்போது அமித்ஷா குறித்து பொய் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை.
தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு நிகழ்வுகளை பார்க்கும்போது பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி விடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் 58-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்தனர்.
இந்தப் பயங்கர குண்டு வெடிப்பை நடத்திய பாட்ஷா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்றதில் தவறில்லை. ஆனால் பல ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்து கோஷமிட்டு சென்றதைப் பார்க்கும்போது தமிழகத்தில் பயங்கரவாதிகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறதோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு தேச பக்தர்களை போற்ற அரசாங்கம் தயாராக வேண்டும்.
தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு நிகழ்வுகள் தேர்தல் நேரத்தில் வாக்குகள் பெற வேண்டும் என்ற அடிப்படையில் நடந்து வருகிறது.
குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பத்திற்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம் நடத்தியது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமக்கு எதிரி தி.மு.க. தான்.
- நல்ல கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார்.
சென்னை:
வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் கள ஆய்வு கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு தலைமையில் வில்லிவாக்கம் பாபா நகரில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேசிய தாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தி.மு.க. மைனாரிட்டியாக தான் இருந்தது. அதன் பின் தி.மு.க.வுக்கு ஓட்டு போட மக்கள் தயாராக இல்லை. இப்போது கூட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவர்கள் ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.
2010ல் அற்புதமான கூட்டணியை புரட்சித் தலைவி அம்மா அமைத்தார். தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தார். புரட்சித் தலைவி அம்மா மறைவுக்கு பின் எடப்பாடியார் நான்கு வருடம் இரண்டு மாதம் அற்புதமான ஆசி கொடுத்தார்.
திமு.க.வின் நான்கு ஆண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டம் வந்திருக்கிறதா? கடுமையான வறட்சி காலத்தில் எடப்பாடியார் முதலமைச்சர் ஆனவுடன் அம்மா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தினார்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக எப்போது வருவார் என பொதுமக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவிலேயே 7-வது பெரிய கட்சி அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தைரியம் இருந்தால் தனித்து நின்று அ.தி.மு.க.வுடன் போட்டியிட தயாரா? யார் வெல்வார்கள் என்று பார்ப்போம். தைரியம் இருந்தால் இதற்கு தி.மு.க. பதில் சொல்லட்டும் பார்ப்போம்.
புரட்சித் தலைவி அம்மா சாதாரண உறுப்பினர்களை கூட தேர்தலில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ., அமைச்சர் என பல்வேறு வாய்ப்புகளை கொடுத்தார்.
சாதாரணமானவர்களுக்கு கூட நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி கொடுத்த கட்சி அ.தி.மு.க. கூட்டுறவு சங்கத்தில் 2 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினர்களாக பொறுப்பேற்பதற்கு அம்மா தான் காரணம்.
அம்மா வழியில் எடப்பாடியார் நமக்கு வழி வகுத்துள்ளார். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வருகிறது. நமக்கு எதிரி தி.மு.க. தான். அதை மனதில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக களப் பணியாற்றுங்கள்.
நம்மை வெல்ல யாரும் கிடையாது. யார் என்ன செய்தாலும் 2026-ல் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. நல்ல கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னை கோட்டைக்கு செல்வதற்கு வேலூர் கோட்டையில் இணைந்திருக்கிறோம்.
- இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
வேலூர் மாவட்டம், கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மண்டல மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகமுள்ள இயக்கம் அதிமுகதான். கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பும் கூட்டம் இது.
சென்னை கோட்டைக்கு செல்வதற்கு வேலூர் கோட்டையில் இணைந்திருக்கிறோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும். 100 இளைஞர்களை தாருங்கள் உலகத்தையே மாற்றி காட்டுகிறேன் என விவேகானந்தர் கூறினார்.
எம்ஜிஆர் காலத்திலும், புரட்சித்தலைவி காலத்திலும் சரி அதிமுக யாரையும் நம்பி இருந்ததில்லை. அதிமுக இயக்கம் மக்களையும், தொண்டர்களையும் மட்டுமே நம்பி இருக்கிறது.
பெண்கள் தன்னை அப்பா என்று அழைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிக் கொள்கிறார். எதிர்க்கட்சியாக இருந்தபோது Go back என்ற ஸ்டாலின், தற்போது வெல்கம் மோடி என்கிறார்.
அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு; கொள்கையே இல்லாத கட்சி திமுக. அதிமுகவைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்துகளின் வாக்கு வங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
- வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
தாராபுரம்:
தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2026 தேர்தலுக்குள் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து கட்சியை வலிமைப்படுத்த நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.
வக்பு வாரிய சொத்து என தாராபுரம், அலங்கியம் திருப்பரங்குன்றம் உள்பட பல பகுதிகளில் இந்துக்களின் விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே நாளில் ஒன்பது பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் இந்துகளின் வாக்கு வங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும். தேசிய ஜனநாயக முன்னணியில் அ.தி.மு.க., சீமான், பா.ஜ.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு ஒரு அணியில் நின்று தி.மு.க. அணியினரை தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.
- தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அதிரடியாக அறிவித்துள்ளார்.
தென்காசி:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.
ஆளுங்கட்சியாக இருக்கும் தி.மு.க. தமிழகத்தில் 2-வது முறையாக ஆட்சியை பிடிக்க 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு கட்ட கூட்டங்களை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை தலைமை கழகத்தினர் வழங்கி வருகின்றனர்.
அ.தி.மு.க.வும் மீண்டும் ஆட்சியை பிடித்து அரியணையில் அமர நிர்வாகிகளை கடுமையாக உழைக்க வேண்டும் என உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேலும் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய பணிகளையும் ஒருபுறம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.க, நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சீமான், சுரண்டை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் கவுசிக் பாண்டியன் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவுசிக் பாண்டியன் கடந்த 2023-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். இவர் தற்போது அக்கட்சியின் மருத்துவர் பாசறை உறுப்பினராக உள்ளார்.
இவர் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார்.
பிரதான கட்சிகள் இன்னும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில் வழக்கம்போல் சீமான் தனது பாணியில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக தனது கட்சியின் முதல் வேட்பாளரை அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நோக்கம் தேர்தல் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும்.
- வட நெம்மேலியில் உள்ள லீலாவதி ஓட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலுக்காக தயாராகி வருகிறார்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி நிர்வாகிகளை அழைத்து தேர்தலுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் விழுப்புரம், நெல்லை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
மாமல்லபுரம் செல்லும் வழியில் வட நெம்மேலியில் உள்ள லீலாவதி ஓட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் முதலில் கட்சி சம்பந்தமான பிரச்சனைகள் ஏதும் இருந்தால் எழுதிக் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆக்கப்பூர்வ கருத்துக்கள் இருந்தாலும் எழுதி சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. அதன்படி கட்சி நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை மனுவாக எழுதி கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.
இந்த மனுக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார். ஒவ்வொருவர் கொடுத்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
இதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு (2026) சட்டசபை பொதுத் தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் நாம் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம். கழக ஆட்சியில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இது போன்ற திட்டங்களை மக்கள் மத்தியில் நீங்கள் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டும். திண்னைப் பிரசாரங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். இது மட்டுமின்றி வீடு வீடாக துண்டுப் பிரசுரம் மூலமும் கழக ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.
நமது நோக்கம் தேர்தல் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும். உங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்ற வேண்டும். தலைமை என்ன கட்டளையிடுகிறேதா அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
எனவே தேர்தலுக்காக இப்போதே தயாராகி உங்கள் பணிகளை வேகப்படுத்துங்கள். நமது இலக்கு 200 தொகுதிகள். அந்த வகையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக இப்போதில் இருந்தே தீவிரமாக பணியற்றுங்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார் என்று அதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்டக் கழக துணைச் செயலாளர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.