search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியானா சட்டசபை தேர்தல்"

    • அரியானா சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
    • அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

    சண்டிகர்:

    அரியானா சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல், காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. எனவே அரியானாவில் 4 முனை போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அரியானாவின் நுஹ் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை நடத்தினோம். நாங்கள் ஒற்றுமை மற்றும் அன்பு பற்றி பேசி வருகிறோம்.

    ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் வெறுப்பை பரப்பி நாட்டை உடைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அரசியல் அமைப்பை அழிக்க நினைக்கிறார்கள்.

    காங்கிரஸ் ஒரு கொள்கை ரீதியான போரை எதிர்கொண்டு வருகிறது. இந்த போரில், ஒருபுறம் அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்ற கொள்கையும், மறுபுறம் அரசியலமைப்பு சார்ந்த கொள்கையும் இருக்கின்றன.

    அன்புக்கும், வெறுப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. நாம் வெறுப்பை அழித்தொழிக்க வேண்டும்.

    நான் அமெரிக்காவில் அரியானாவைச் சேர்ந்த சில மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் அரியானாவில் அவர்களுக்கு வேலை கிடைக்காததால் அமெரிக்காவுக்கு வந்ததாக கூறினார்கள்.

    அரியானாவில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. அரசு அரியானாவை சீரழித்து விட்டது.

    பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

    • அரியானா மாநிலத்தில் வருகிற 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

    அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 462 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.

    கடந்த 2 வாரங்களாக 90 தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

    நாளை வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது.
    • 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

    அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 462 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.

    அரியானாவில் கடந்த 2 தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 47 இடங்களை கைப்பற்றி இருந்தது. 2019-ம்ஆண்டு தேர்தலில் 40 இடங்களில் வெற்றிபெற்றது.

    இந்த நிலையில் 3-வது முறையாகவும், அரியானாவில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. பா.ஜ.க.வுக்கு சவால் விடும் வகையில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து களம் இறங்கி உள்ளன.

    கடந்த 2 வாரங்களாக 90 தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.


    தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெற்றது. இன்று காலை அரியானா சென்ற ராகுல்காந்தி 2 இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    நாளை (வியாழக்கிழமை) வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடப்பதால் அதன் மீது மக்களிடம் எதிர்ப்பு அலை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் சம அளவில் வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜனதாவுக்கு 44 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 46 இடங்களும் கிடைக்கும் என்று கூறப் பட்டுள்ளது.

    பல தொகுதிகளில் ஜனநாயக ஜனதா கட்சி வாக்குகளை பிரிக்கிறது. கடந்த தடவை இந்த கட்சி பா.ஜ.க. அணியில் இடம் பெற்று இருந்தது. 10 இடங்களில் வெற்றி பெற்று இருந்த இந்த கட்சி பிரிக்கும் வாக்குகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    அதுபோல பல தொகுதிகளில் சுயேட்சைகளின் ஆதிக்கமும் உள்ளது. அவர்கள் பிரிக்கும் வாக்குகள் 10 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது.

    மேலும் அரியானாவில் கணிசமான அளவுக்கு உள்ள தலித் இன மக்களின் வாக்குகளும் முக்கியமான தாக கருதப்படுகிறது. அரியானா மக்கள் தொகையில் 25 சதவீதம் அளவிற்கு தலித் இன மக்கள் உள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அரியானா தலித்துகளில் 68 சதவீதம் பேர் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து இருந்தனர்.

    இதனால் இந்த தடவையும் அரியானா தலித்துகள் தங்களை ஆதரிப்பார்கள் என்று காங்கிரஸ் கூட்டணி தலை வர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 5-ந் தேதி ஓட்டுப் பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

    8-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    • அம்பானி திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். அது யாருடைய பணம்?
    • இந்தியாவில் இன்று அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு எல்லாம் உண்டு என்றார்.

    சண்டிகர்:

    அரியானா சட்டசபைத் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சோனிபட் பகுதியில் கோஹனா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    மகாபாரதத்தில் அபிமன்யு குருக்ஷேத்திரத்தில் மாட்டிக்கொண்டதைப் போல, கடைக்காரர்களை ஒரு சக்கர வியூகத்தில் சிக்க வைத்துவிட்டார் நரேந்திர மோடி.

    அவர்கள் எப்படி மாட்டிக்கொண்டார்கள்? பணமதிப்பிழப்பு நீக்கம், ஜிஎஸ்டி, 2-3 கோடீஸ்வரர்களுக்கு வங்கிகளின் பணம் அனைத்தும் வழங்கப்பட்டது. வங்கிகளில் கடன் வாங்கச் சொன்னால் வங்கிகள் கடன் தராது என சொல்வார்கள்.

    இந்தியாவில் இன்று அதானி மற்றும் அம்பானி மட்டுமே கடன் பெற முடியும். அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு எல்லாம் உண்டு.

    அக்னிவீர் யோஜனா என்றால் என்ன? இந்தத் திட்டத்திற்கு ஒரே ஒரு நோக்கம்தான் - ராணுவ வீரர்களுக்குப் போகும் பென்ஷன், கேன்டீன், இழப்பீடு என பணத்தைப் பறிக்க.

    இந்தத் திட்டத்தின் உண்மையான பெயர் அதானி யோஜனா என இருக்கவேண்டும்.

    பயிற்சி, ஓய்வூதியம், ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் என பணத்தை அதானியின் பாக்கெட்டில் போடவேண்டும் என்றும், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டைத் திருப்புவதே இதன் நோக்கம்.

    அம்பானியின் திருமணத்தைப் பார்த்தீர்களா? அம்பானி திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். இது யாருடைய பணம்? இது உங்கள் பணம்.

    நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வங்கிக் கடன் வாங்குகிறீர்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யலாம்.

    ஆனால் ஒரு விவசாயி கடனில் மூழ்கி மட்டுமே திருமணத்தை நடத்த முடியும் என்ற கட்டமைப்பை நரேந்திர மோடி உருவாக்கி உள்ளார். இது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் இல்லை என்றால் இது என்ன என கேள்வி எழுப்பினார்.

    • அரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
    • அரியானாவில் 89 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

    சண்டிகர்:

    90 தொகுதிகளை கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளது. பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இரு கட்சிகள் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதே போல் ஜே.பி.பி. இந்திய தேசிய லோக்தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் போட்டியில் உள்ளன.

    அரியானாவில் ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அவர் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.

    டெல்லியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு ராகுல்காந்தி ஹெலிகாப்டர் மூலம் அரியானா புறப்பட்டார். கர்னாலில் உள்ள அசந்த் நகருக்கு அவர் சென்றடைகிறார். பிற்பகலில் அசந்த் சட்டசபையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹிசார் பகுதியில உள்ள பர்வாலாவுக்கு செல்கிறார் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். மாலை அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லிக்கு திரும்புகிறார். அரியானாவில் 89 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எஞ்சிய 1 இடத்தில் உள்ள கூட்டணியில் மார்ச்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு களத்தில் நிற்கிறது.

    ×