search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மருத்துவர் கொலை"

    • பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர்.
    • அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    செப்டம்பர் 10 ஆம் தேதி மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது "பாதுகாப்பை கருதி பெண் மருத்துவர்கள் இரவுப் பணியை தவிர்க்குமாறு அறிவித்த மேற்கு வங்க அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    "பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது. பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர். அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது உங்களது கடமை.

    இரவுப் பணியை செய்வதை தவிர்க்குமாறு பெண் மருத்துவர்களுக்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட முடியாது" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். 

    • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்த கூடாது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    செப்டம்பர் 10 ஆம் தேதி மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை விக்கிபீடியா இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்த கூடாது இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக, சமூக வலைத்தளங்களில் பரவிய பெண் மருத்துவரின் பெயர், புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவர்கள் மற்றும் முதல்வர் இடையிலான பேச்சுவார்த்தை மாலை 5 மணிக்கு துவங்க இருந்தது.
    • ஐந்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.

    கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும், ஐந்து அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    உச்சநீதிமன்ற கெடு, மாநில அரசின் எச்சரிக்கை என எதற்கும் அடிபணியாத மருத்துவர்கள் தங்களது ஐந்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தும் மருத்துவர்களை பேச்சுவார்த்தை அழைத்தார். எனினும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மருத்துவர்களும் அதற்கு தயாரான சூழலில், கடைசி நிமிடங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

    இந்த நிலையில், மாநில அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு ஐந்தாவது மற்றும் கடைசி முறை அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் மருத்துவர்கள் இன்று மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இல்லத்திற்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.

    பேச்சுவார்த்தையில் 30 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு மம்தா பானர்ஜி இல்லத்திற்கு இன்று மாலை 6.20 மணி அளவில் வந்தனர். மருத்துவர்கள் மற்றும் மேற்கு வங்க முதல்வர் இடையிலான பேச்சுவார்த்தை மாலை 5 மணிக்கு துவங்க இருந்த நிலையில், இரவு 7 மணிக்கு தான் பேச்சுவார்த்தை துவங்கியது.

    இந்த பேச்சுவார்த்தையில் நடைபெறும் வாதங்களை பதிவு செய்ய மருத்துவர்கள் குழு சார்பில் சுருக்கெழுத்தாளர்களும் உடன் சென்றுள்ளனர். சுருக்கெழுத்தாளர்கள் பதிவு செய்யும் ஆவணத்தை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அனைவரும் கையெழுத்திட உள்ளனர். இதுதவிர அரசு சார்பில் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை மருத்துவர்கள் குழு களத்தில் போராடும் மருத்துவர்களிடையே ஆலோசனை செய்த பிறகே தெரிவிக்கும் என்று முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐந்து அம்ச கோரிக்கையில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் குழு திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

    முன்னதாக ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்த அம்பாவிதமும் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.


    • ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    • நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

    கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும், ஐந்து அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுகாதார சேவைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக விலைமதிப்பற்ற 29 உயிர்களை நாம் இழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், உயிரிழந்த ஒவ்வொருத்தரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, மிக கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்த விவகாரத்தில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்த நிலையில், அதையும் ஏற்க மறுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவர்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தி இருந்தார்.

    இந்த பேச்சுவார்த்கையில் கலந்து கொள்ள சம்மதித்த மருத்துவர்கள், முதல்வர் உடனான பேச்சுவார்த்தையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும், இதற்கு அம்மாநில அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.

    இதைத் தொடர்ந்து ஆளும் அரசு இந்த விவகாரத்தில் மிகவும் விடாப்பிடியாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். இதோடு முதல்வர் மம்தா பானர்ஜியின் ராஜினாமாவை தாங்கள் ஒருபோதும் கோரவில்லை என்றும் தெரிவித்தனர்.

    பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்துவிட்டனர். இன்றைய பேச்சுவார்த்தையில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருந்த நிலையில், அவர் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தார். எனினும், மருத்துவர்கள் மற்றும் முதல்வர் இடையிலான சந்திப்பு நடைபெறவே இல்லை.

    "நாங்கள் முதல்வரை ராஜினாமா செய்ய கோரிக்கை வைக்கவில்லை, அதற்கான அழுத்தம் கொடுக்கவும் நாங்கள் இங்கு வரவில்லை. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டி, எங்களது கோரிக்கைகளுடன் இங்கு வந்திருக்கிறோம்."

    "எங்களுக்கு இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும். பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு தில் கிடைக்கும் என்று இப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறோம்," என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

    • போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்தது.
    • போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவது என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் இன்னும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்தது. இந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவது என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும், "எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணி நிறுத்தம் தொடரும். பெண் டாக்டருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்," என்று வலியுறுத்தினர்.

    இது குறித்து போராட்டக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறும்போது, "கொல்கத்தா காவல் ஆணையாளர், சுகாதார செயலாளர், சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோரை இன்று மாலை 5 மணிக்குள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அரசிடம் கேட்டு கொண்டோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் பூர்த்தியாகவில்லை."

    "இதோடு நாங்கள் பணிநீக்கம் செய்யக் கோரிய மாநில சுகாதாரத் துறை செயலாளரிடம் இருந்து எங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த மின்னஞ்சலில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இது எங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அதிகபட்சம் பத்து பேர் மட்டுமே வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஏற்க தக்கதல்ல. இதனால், எங்களுடைய பணி நிறுத்தம் தொடரும்," என்று தெரிவித்தார்.

    • சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது.
    • மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடா்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

    இந்த விசாரணையின்போது மேற்கு வங்காள அரசை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியது. முதல் தகவல் அறிக்கையை தாமதமாக பதிவு செய்தது, வன் முறை தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தது. டாக்டர்கள் பாதுகாப்பு தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.

    கடந்த விசாரணையின்போது பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறித்து மேற்கு வங்காள போலீசை சாடியது.

    இந்த நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் தொடங்கியது.

    சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதுவரை என்ன விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணை விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை தனது அறிக்கையில் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.

    இதேபோல மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'டாக்டர்கள் போராட்டத்தில் 23 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த 2 அறிக்கையை வைத்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தொடங்கியது. பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து எப்போது பதிவு செய்யப்பட்டது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பிற்பகல் 2.55 மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்று, இறப்பு சான்றிதழ் 1.45 மணிக்கு வழங்கப்பட்டது என்றும் மேற்கு வங்காள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபில் தெரிவித்தார். வீடியோ பதிவுகள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.

    சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது 'பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான தடயவியல் மாதிரிகள் மேற்கு வங்காளத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடயவியல் மாதிரிகளை அனுப்ப விசாரணை நிறுவனமான சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது என்றார்.

    இதை தொடர்ந்து வரு கிற 17-ந்தேதி விசாரணையின் புதிய நிலை அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
    • போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடி மறைக்க முயன்றனர்.

    மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த மாதம் 9-ந்தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதைத்தொடர்ந்து வெளியான தகவல்களில் பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

    பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும், பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராடினர். தற்போது இரவை மீட்டெடுப்போம் என போரட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண் மருத்துவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், "போலீசார் முழுமையான விசாரணையின்றி வழக்கை முடிக்க முயற்சித்தனர். போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடி மறைக்க முயன்றனர். எங்களை உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும்போது காவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. மகள் கொலைக்கு பிறகு போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களிடம் பணத்தை கொடுக்க முயன்றார். நாங்கள் உடனடியாக அதை மறுத்தோம்" எனத் தெரிவித்தனர்.

    பெண் டாக்டர் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், கொல்கத்தா காவல்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.

    • போராட்டக்காரர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து போராடினர்.
    • பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதைத் தொடர்ந்து வெளியான தகவல்களில் பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.



    பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும், பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து போராடினர்.


     

    மேலும், நீதி வேண்டும் என்ற வாசகத்தை மெழுகுவர்த்திகளால் அடுக்கி வைத்து, கோஷங்களை எழுப்பினர். இதே போன்று கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ்-ம் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார். 

    ×