search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதயநிதி ஸ்டாலின்"

    • திமுக பவள விழா கூட்டம் குறித்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
    • அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வந்த ஆலோசனை முடிவடைந்தது.

    இந்நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுக பவள விழா கூட்டம் குறித்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    * திமுக தொண்டர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.

    * அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்.

    * தமிழகத்தில் பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது என்று பெரியார் நினைவிடத்தில் விஜய் அஞ்சலி செலுத்தியது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

    • அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என இறுதிவரை போராடியவர் பெரியார்.
    • மகளிருக்கு சொத்தில் சம உரிமை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    சென்னை:

    தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்த சொற்பொழிவில் பேச்சாளர்களாக திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், திராவிடர் கழகத்தின் துணை பொது செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, கெனித்ராஜ் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழாப்பேருரை ஆற்றினார்.

    விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், ஏன் தந்தை பெரியார் நினைவு கருத்தரங்கத்தை நடத்துகிறார்கள் என உங்களுக்கு கேள்வி இருக்கலாம். வாழ்வில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, துவண்டு போகாத மன உறுதி, பகுத்தறிய வேண்டிய ஆராய்ச்சி மனப்பான்மை மிக மிக அவசியம்.

    தந்தை பெரியாரிடம் இவை அனைத்துமே அடிப்படை குணங்களாக இருந்தன. பெரியார் மரணத்தின்போது பெரியார் தன் சுற்றுப்பயணத்தை தான் முடித்துக்கொண்டிருக்கிறார் நாம் தொடர்வோம் என்று கலைஞர் எழுதினார்.

    பெரியார் உடலால் மறைந்தாலும் அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் அழியாது. 95 வரை வாழ்ந்த பெரியார் இறுதி வரைக்கும் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக உழைத்தவர்.

    பகுத்தறிவு சமூகநீதி சுயமரியாதை கொள்கைகளை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தார்கள். அவருடைய கருத்துக்கள் என்றைக்கும் இளமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

    இங்கு ஏராளமான மாணவர்கள் அமர்ந்துள்ளீர்கள். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட சிலர் தான் படிக்க வேண்டும். மற்றவர்கள் குலத்தொழிலை செய்ய வேண்டும் அவர்களெல்லாம் படித்தாலே தீட்டு என்று சொன்னார்கள்.

    குறிப்பாக மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் பொது இடத்தில் சிரித்தால் கூட தப்பு என்றும் கூறினார்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறியுள்ளது. எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள்.

    யார் இந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது என எண்ணிப் பார்த்தால் அது தந்தை பெரியாராக தான் இருக்கும்.

    பெரியார் பேசிய அத்தனை வடிவங்களுக்கும் செயல் வடிவம் கொடுத்தது பேரறிஞர் அண்ணா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு தான் இன்றைக்கும் அந்த பணியை நம்முடைய முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.

    எல்லோருக்கும் சம வாய்ப்பு வேண்டும். உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் உரிமைகள் வேண்டும் என்ற பெரியாரின் பிறந்த நாளை நம் முதலமைச்சர் சமூக நீதி நாளாக அறிவித்தார்.

    சுயமரியாதை திருமணம் செல்லும் என அண்ணா சட்டம் கொண்டு வந்தார். மகளிர் குடும்ப சொத்தில் சம உரிமை உண்டு என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். காவல்துறை ராணுவத்தில் பெண்கள் வரவேண்டும் என பெரியார் சொன்னார்.

    இந்தியாவிலேயே முதல்முறையாக 50 வருடத்திற்கு முன்னாடியே தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணியாற்றலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர் தான். இன்றைக்கு பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும். என்ற எண்ணத்தோடு புதுமைப்பெண் திட்டத்தை நம் முதலமைச்சர் தந்துள்ளார்.

    உங்களில் பல பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வருகிறது. வறுமை காரணமாக கல்வியை விட்டு விடக்கூடாது என தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். சுயமரியாதையோடு வாழ வேண்டும். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்று பெரியார் போராடினார்.

    அதற்கு செயல் வடிவம் கொடுக்கிற விதமாக இந்தியாவிலேயே முதல் முறையாக தான் மகளிர் சுய உதவி குழுக்களை கலைஞர் தொடங்கினார். மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்திட நம்முடைய முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்தார். எல்லோரும் நல்ல வேலைக்கு போக வேண்டும் என்ற பெரியாரின் கனவை நினைவாக்க நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதி மாதிரியான உயர் பதவிகளுக்கு ஏழை எளிய கிராம பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வரவேண்டும் என வாழ்நாள் முழுக்க போராடியவர் தந்தை பெரியார்.

    அதனை செயல்படுத்தும் விதமாக நம்முடைய முதலமைச்சர் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகிற மாணவர்கள் இளைஞர்களுக்கு மாதம் ரூ.7,500 நிதி உதவி வழங்குகிறார். அது மட்டுமல்லாமல் முதல் நிலை தேர்வில் வென்றால் 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள்.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற நிலையை ஏற்படுத்த பெரியார் இறுதிவரை போராடினார். அது முடியாமல் போனபோது பெரியாரின் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஏன் பெண்களும் அர்ச்சகராக பணியாற்றலாம் என்கிற நிலையை நம் முதலமைச்சர் ஏற்படுத்தினார்.

    பெரியார் இல்லாமல் நாம் யாரும் இல்லை என்று அறிஞர் அண்ணா சொன்னார். என்னை எத்தனையோ பெயர்களை சொல்லி புகழ்ந்தாலும் பெரியார் வழியை பின்பற்றும் மானமிகு சுயமரியாதைக்காரன் என்று சொல்லும்போது பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார் கலைஞர்.

    பெரியார் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவருடைய கருத்துக்களும் சிந்தனைகளும் இன்றைக்கு சமகாலத்தில் ஒத்துப்போகும் அளவிற்கு உள்ளது. அது என்றைக்கும் இருக்கும் ஆகவே தான் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
    • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

    இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

     

    அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • திமுக பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
    • உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா என முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

    செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது..

    தி.மு.க பவளவிழா மற்றும் முப்பெரும் விழாவில், முன்னாள் எம்.பி. தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பின்னர் விருது வென்றவர்கள் சார்பில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தி.மு.க வின் வெள்ளி விழா, பொன்விழா ஆண்டை கலைஞர் கொண்டாடினார். பவள விழா ஆண்டை முதலமைச்சராகிய நீங்கள் கொண்டாடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள எல்லா அரசாங்கமும் திராவிட மாடல் அரசை பின்பற்றுகின்றன. உங்கள் பெயரால் எனக்கு விருது வழங்கியது என் வாழ்நாளில் நான் செய்த பாக்கியம்.

    "உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா..? உங்களை (மு.க.ஸ்டாலின்) பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக்கொண்டதைப்போல நாங்களும் அவரை ஏற்றுக்கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என்று தெரிவித்தார்.

    • திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மேகா ஆகாஷ்க்கு திருமணம் நடைபெற்றது.
    • தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மேகா ஆகாஷ் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

    கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மெகா ஆகாஷ்க்கு திருமணம் நடைபெற்றது.

    சென்னையில் நடைபெற்ற சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் திமுகவின் பல அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அரசு எந்திரத்தையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கீழ் கொண்டு வருவது என்பது ஒரு தவறான முன் உதாரணமாகும்.
    • உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து அதை வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நடத்துகிற நாடகம்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் கூறியதாவது:-

    தமிழக இளைஞர் நலம் விளையாட்டு மேம்பாட்டு சிறப்பு திட்ட செயலாக்குத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மதுரையில் கடந்த 9-ந்தேதிஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலேயே அமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அரசு செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டிருந்தது .

    குறிப்பாக இதுபோன்ற ஆய்வு கூட்டத்திலே மனுக்களின் சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே அலுவலர் அவர்களின் செயல்பாடுகளை நிர்ணயிப்பது என்பது ஏற்புடையதாகாது.

    இன்றைக்கு விளையாட்டு துறை அமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வளர்ச்சி திட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் என்ற பெயரிலே அவர்களுடைய மரபுகளை மீறி அனைத்து துறைகளுடைய அலுவலகங்களிலும் அவர் ஆய்வு செய்வதாக அரசு ஊழியர் சங்கத்தினர் முகம் சுளிக்கின்றனர். பொதுவாக அனைத்து துறைகளுடைய அலுவலர்கள் ஆய்வு செய்கின்ற அந்த அதிகாரம் என்பது நாம் அறிந்த வகையிலே முதலமைச்சர் மட்டும்தான் அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரம் பெற்றவராக உள்ளார் என்பதை நாம் அறிகின்றோம்.

    உதயநிதி ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் எல்லாம் அமைச்சரவையில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் அவரை முன்னிலைப்படுத்தி ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கீழ் கொண்டு வருவது என்பது ஒரு தவறான முன் உதாரணமாகும்.

    முதலமைச்சருக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் விளையாட்டு துறை அமைச்சரின் கீழே கொண்டு வருவது என்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை யாரும் கண்டிராத கேட்கிறாத பார்த்திராத ஒரு தவறான முன் உதாரணமாக அமைந்திருக்கிறது.

    அதோடு தன் ஆய்வுகளில் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரிலே அவசரக்கதியிலேயே முழுமையான விசாரணை செய்யாமல் போதிய விளக்கத்தை பெறாமல் நடவடிக்கை எடுப்பது என்பது முழுக்க முழுக்க ஒரு அரை வேக்காட்டுத்தனமான நடவடிக்கையாக தான் அரசு ஊழியர்கள் பார்க்கிறார்கள்.

    ஆகவே இன்றைக்கு முதலமைச்சராக அமெரிக்காவில் இருக்கின்ற போது அறிவிக்கப்படாத முதலமைச்சராக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் அரசின் முழு நிர்வாகத்தையும் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து அதை வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் நடத்துகிற நாடகம்.

    எது எப்படி ஆயினும் கலெக்டர் தலைமையில் நடைபெறுகின்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பாக மதுரையிலே வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதை முதலமைச்சர் கவனத்தில் எடுத்து இது போன்ற மரபு மீறி நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களை தடுத்து நிறுத்தி ஒரு தவறான முன்உதாரணம் அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தி விட கூடாது என்பதை உரிய விளக்கத்தோடு இதற்கு ஒரு தீர்வு காண அமெரிக்காவில் இருக்கின்ற முதலமைச்சர் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×