என் மலர்
நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் தாக்குல்"
- சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அளித்த தகவல் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
- சோதனைக்கு பிறகு காலதாமதமாக இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூர் சென்றுள்ளன.
இந்தியாவில் தேடப்படும் நபர் இலங்கைக்கு விமானத்தில் தப்பியதாக இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய 6 பேர், விமானத்தில் இலங்கை தப்ப முயன்றதாக, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் எதிரொலியால், சந்ததேகத்தின் அடிப்படையில் சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் இலங்கை சேவை நிறுவனம் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அளித்த தகவல் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
சோதனைக்கு பிறகு காலதாமதமாக இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூர் சென்றுள்ளன.
மேலும், இலங்கையில் உள்ள பண்டாரநாயக்க விமான நிலையத்திலும் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
- பாகிஸ்தானை சேர்ந்த பலரின் எக்ஸ் தள பக்கங்கள், யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த போவதாக உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்து இருந்தார்.
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த பலரின் எக்ஸ் தள பக்கங்கள், யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் வலை தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் மீது அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.
- லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
காஷ்மீர் மாநிலம் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரி ழந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
பல்வேறு விசாக்களில் இந்தியா வந்த பாகிஸ்தானியர் வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது. 'சார்க்' விசாவில் வந்தவர்கள் ஏப்ரல் 26-ந் தேதிக்குள்ளும், இதர விசாக்களில் வந்தவர்கள் 27-ந்தேதிக்குள்ளும், மருத்துவ விசாவில் வந்தவர்கள் 29-ந் தேதிக்குள்ளும் வெளியேறகெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி வசித்து வந்தது தெரியவந்தது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹனீப்கான் (வயது 39). இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த உறவினரான பஷியா பானு (38) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின் பஷியா பானு புதுச்சேரியில் கணவருடன் வசித்து வந்தார்.
இதேபோல் புதுச்சேரி பிராந்தியமான மாகிக்கு பாகிஸ்தானை சேர்ந்த பஷீர் (65) என்பவர் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்கான விசாவில் வந்தார். அதன்பின் அவர் மாகியில் தங்கிவிட்டார்.
இந்த நிலையில் பஷியா பானு, பஷீர் ஆகியோர் இந்தியாவில் இருந்து வெளியேற புதுச்சேரி வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களின் விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியில் தெலுங்கானா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
- போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகரி:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியில் தெலுங்கானா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. பாகிஸ்தானியர்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் மீது மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.
இந்தநிலையில் ஐதராபாத்திற்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். முகம்மத் பயாஸ் என்ற வாலிபர் ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மனைவியை சந்திப்பதற்காக பயாஸ் இந்தியாவிற்கு எந்தவித விசாவும் இல்லாமல் நேபாளம் வழியாக ஐதராபாத் வந்துள்ளார்.
பயாசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தானுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துள்ளது.
- உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.
இஸ்லாமாபாத்:
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பாகிஸ்தானுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, எல்லைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.
இதையடுத்து பாகிஸ்தானும் பதிலடியாக இந்திய விமானங்கள் தங்களது நாட்டு வான் எல்லையை பயன்படுத்த தடை விதித்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ் டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்த பாகிஸ்தான், இத்தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா முகமது ஆசிப் கூறியதாவது:-
பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச ஆய்வாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பாகிஸ்தான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. இந்தப் போர் வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் இந்தப் போர் வெடிப்பது இந்தப் பிராந்தியத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்.
பயங்கரவாத தாக்குதலின் பின்விளைவை இந்தியா ஒரு சாக்காகப் பயன்படுத்தி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து உள்ளது. உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.
எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானைத் தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா செயலிழந்து போய் இருக்கிறது. பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தாக்குதல்களைத் திட்டமிடவோ அல்லது நடத்தவோ எந்த திறனும் அந்த அமைப்பிடம் இல்லை.
அந்த அமைப்பில் உள்ள எஞ்சியிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுக் காவலில் உள்ளனர், மேலும் சிலர் காவலில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் விடுமுறைகளை அரசு ரத்து செய்துள்ளது. மேலும் பலூச் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் இருந்து வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் எல்லையில் வீரர்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
- டி.ஆர்.எப். அமைப்பு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பதுங்கி இருப்பார்கள்.
- காஷ்மீரை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரின் பகல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது.
டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவரும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட வருமான ஹபீஸ் சயீத் மற்றும் துணை தலைவர் சைபுல்லா ஆகியோரால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் பஹல்காம் தாக்குதலில் ஹபீஸ் சயீத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
டி.ஆர்.எப். அமைப்பு பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிக்குள் பதுங்கி இருப்பார்கள். எப்போதுமே ஒரு தாக்குதலை நடத்திவிட்டு காட்டுக்குள் சென்று பதுங்கு குழியில் இருப்பார்கள். பாகிஸ்தானில் இருந்து புதிய தாக்குதலுக்கு உத்தரவுகள் வரும் வரை அடர்ந்த காட்டு மறைவிடங்களில் ஒளிந்து கொள்வார்கள். மேலும் டி.ஆர்.எப். அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை ஆகியவை உதவிகள் செய்து வருவதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பில் பெரும்பாலான வெளி நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், காஷ்மீரை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோனமார்க், பூனமார்க் மற்றும் காண்டர்பால் உள்பட காஷ்மீர் முழுவதும் பல தாக்குதல்களுக்குப் பின்னணியில் டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
- மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.
ஓசூர்:
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து தமிழகத்திலும் முக்கிய சுற்றுலாத்தலங்கள், மாநில எல்லைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள், பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பொருட்கள் ஆகியவற்றை மெட்டல் டிடெக்டர் மூலம் ரெயில்வே போலீசார் முழுமையாக சோதனையிட்டனர். மேலும் தண்டவாள பகுதிகள், பயணிகள் இருக்கைகளிலும் ரெயில்வே போலீசார் முழு அளவில் சோதனையிட்டனர்.
இதே போல், ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடி பகுதியில் வெளி மாநிலங்களிலிருந்து ஓசூர் நோக்கி வந்த கார்கள், வேன்கள் ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை சிப்காட் போலீசார் முழுமையாக சோதனை செய்த பிறகே, மேற் கொண்டு பயணிக்க அனுமதித்தனர்.
- பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
- சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார்.
நாகர்கோவில்:
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் காஷ்மீர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகர்கோவில் நகர பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் பொது இடத்தில் அமைதியை கெடுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதாக வடசேரி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தை சேர்ந்த முருகன், வடசேரி வெள்ளாளர்கீழ தெருவை சேர்ந்த சுனில் அரசு (வயது32) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் மீது கடந்த வாரம் தான் வடசேரி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டின் பெயர் பலகை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முருகன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
- தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டமாக சூழல் நிலவி வருகிறது.
- காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர்.
திருவனந்தபுரம்:
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளால் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டமாக சூழல் நிலவி வருகிறது. அங்கு சுற்றுலா சென்ற தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பீதியில் உறைந்தனர்.
அவர்கள் தங்களது மாநிலத்துக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்த படி இருக்கின்றனர். காஷ்மீரில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் காஷ்மீரில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கேரளாவை சேர்ந்த மொத்தம் 258 பேர் அங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உதவுவதற்காக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த உதவி மையத்தின் 26 குழுக்களில் 262 பேர் பதிவு செய்திருந்ததாகவும், அவர்களில் 4 பேர் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கும் நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் மற்ற 258 பேரும் காஷ்மீரில் இருந்து திரும்ப முடியாமல் அங்கேயே தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர். சித்திக், முகேஷ், மஜீத், அன்சலன் ஆகியோர் தலைமையிலான கேரள சட்டமன்ற உத்தரவாத குழு ஐம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி ஆகிய இடங்களுக்கு 9 நாள் சுற்றுப் பயணத்துக்கு புறப்பட்டனர்.
அவர்கள் முதலில் காஷ்மீருக்கு சென்றிருந்த நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டனர். அவர்களும் காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் தங்கியுள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தால் எம்.எல்.ஏ.க்கள் குழு தனது சுற்றுப்பயண திட்டத்தை மாற்ற உள்ளது.
காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த அனைவரையும் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக ஏற்பாடுகளை கேரள மாநில அரசு செய்து வருகிறது.
- தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.
சென்னை:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு சுற்றுலா சென்றுள்ள தமிழக சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மொத்தம் 140 பேர் காஷ்மீர் சென்றிருந்தது தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்தனர். ஒவ்வொருவரும் அடுத்த வாரம் பல்வேறு தேதிகளில் திரும்பி வருவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.
தற்போது அங்கு அசாதாரண சூழல் நிலவுவதால் ஒவ்வொருவரும் உடனே தமிழ்நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

அதன் பேரில் அங்கு சென்றிருந்த தமிழக சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களை பத்திரமாக ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இதையொட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள பயணிகளை ஒருங்கிணைக்க புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர் அல்தாப் ரசூ லையும் காஷ்மீருக்கு அரசு அனுப்பி வைத்தது. இவரது சொந்த ஊர் காஷ்மீர் என்பதால் இவர் அங்குள்ள சுற்றுலா பயணிகளை வேகமாக ஒருங்கிணைத்து ஆங்காங்கே உள்ள விடுதிகளில் தங்க வைத்து அதன் விவரங்களை தமிழக அரசுக்கு தெரிவித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சாப்பாடு வசதி, போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து காஷ்மீரில் இருந்து டெல்லி வழியாக ஊருக்கு செல்ல விரும்புபவர்களை அனுப்பி வைத்தார்.
அதன்படி நேற்று மதியம் தமிழக சுற்றுலா பயணிகள் 35 பேர் தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்துக்கு வந்தனர். அவர்களை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், ஆணையர் ஆசிஷ்குமார் ஆகியோர் வரவேற்று அரசு இல்லத்தில் உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தனர். இவர்கள் 35 பேரும் நேற்றிரவு 9 மணிக்கு தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் 19 பேர் காஷ்மீரில் இருந்து தமிழக அரசின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு ஐதராபாத் வழியாக விமானம் மூலம் அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி தழுவி வரவேற்றனர். இதில் 14 பேர் மதுரையை சேர்ந்த வர்கள். 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் 19 பேரையும் தமிழக அரசு அதிகாரிகள் வாகனங்களை ஏற்பாடு செய்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல் இன்றும் காலையில் காஷ்மீர் மற்றும் டெல்லியில் இருந்து 50 பேர் விமானம் மற்றும் ரெயில் மூலம் சென்னை வந்த டைந்தனர்.
காஷ்மீர் சுற்றுலா சென்ற 140 பயணிகளில் இதுவரை 100 பேர் தமிழகம் திரும்பி உள்ளதாகவும், இன்னும் 40 பேர் அடுத்தடுத்த விமானங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் இருந்து அழைத்து வரப்படும் தமிழக பயணிகள் அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த ரிட்டன் டிக்கெட்டை முன் கூட்டியே உடனே பயன் படுத்தி பயணம் செய்யும் வகையில் மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உதவியது. அதே போல் தமிழகத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் இங்குள்ள அரசு அதிகாரிகள் உதவி செய்து கொடுத்திருந்தனர்.
நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் சென்னை வந்து சேரும். அதில் உள்ள சுற்றுலா பயணிகளை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க சென்டிரலில் வாகன வசதி தயாராக செய்து வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
காஷ்மீரில் குண்டு காயம் அடைந்த மதுரையை சேர்ந்த பாலசந்துரு அனந்தநாக் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவரது மனைவி உடன் இருக்கிறார்.
இதே போல் அங்கு சிகிச்சையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த பரமேஷ்வர் (வயது 31), சந்துரு (வயது 83) ஆகியோரும், இவருடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மதுசூதனராவ் என்பவரின் உடல் விமானம் மூலம் இன்று சென்னை வந்து, பின்னர் இங்கிருந்து நெல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பயங்கரவாத கும்பல்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய டிஜிட்டல் தடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் பகல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரவாத கும்பல்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பகல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளுடன் இருந்தனர். மேலும் அவர்களில் சிலர் ராணுவம் போன்ற சீரூடைகளை அணிந்திருந்தனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய டிஜிட்டல் தடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள முசாபராபாத் மற்றும் கராச்சியில் உள்ள பாதுகாப்பான இடங்களில் இருந்து அவர்களை இயக்கியது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற லஸ்கர் இ தொய்பா (எல்.இ.டி.) முந்தைய பெரிய தாக்குதல்களுக்கு முக்கிய மையங்களாக இருந்துள்ளன.
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ. கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து தீவிரமாக கண்காணிப்பு நடக்கிறது.
இந்திய பாதுகாப்பு படை முகாம்கள் குறித்த தகவல்கள், போலீஸ் பாதுகாப்பு ரோந்து இயக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. அமைப்பு புதிய டிஜிட்டல் செயலி வசதியுடன் தகவல்களை வழங்கி உள்ளது.
பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள சர்வர்களை கொண்ட ரேடியோ தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்தி உள்ளனர்.
சமீபத்தில் அதிக திறமை கொண்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு அதிக எண்ணிக்கையில் அனுப்ப பாகிஸ்தானில் கூட்டுச்சதி நடந்துள்ளது. கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் ஐ.எஸ்.ஐ. லஸ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாதிகளின் உயர் திறமையான பயங்கரவாதிகளை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்ததாக எச்சரிக்கை வந்தன.
அதன் பிறகு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் பயங்கரவாதிகளுக்கு சில தொழிலாளர்கள் உதவுவதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் நுழைந்த பிறகு அவர்களுக்கு இங்குள்ள நிலத்தடி தொழிலாளர்கள் உணவு தங்குமிடம் மற்றும் பணத்தையும் வெவ்வேறு இடங்களுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த மாதம் பயங்கரவாதிகள் கதுவா, உதம்பூர், தோடா கிறிஸ்த்வார், ரியாசி ராஜோரி, பூஜ் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய உள் மாவட்டங்களுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
மேலும் பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கின் நடுப்பகுதிகளில் தங்கி உள்ளனர். குறிப்பாக குறைவாக உயரங்கள் கொண்ட இடங்களை அவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் உளவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் 55 முதல் 60 பேர் கொண்ட உயர் பயிற்சி பெற்ற வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்
- 2 சுற்றுலா பயணிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை அறிவித்தார்.
- சிறப்பு விமானங்கள் மூலம் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.
பெங்களூரு:
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேர் பலியானார்கள். இதையடுத்து அங்கு சுற்றுலா சென்றுள்ள கர்நாடக சுற்றுலா பயணிகள் சொந்த ஊருக்கு திரும்பியபடி உள்ளனர்.
இந்த தாக்குதலை கண்டித்த முதல்-மந்திரி சித்தராமையா பஹல்காமில் கொல்லப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை அறிவித்தார்.
மேலும் அங்கு சுற்றுலா சென்றுள்ள கர்நாடக மக்களை பத்திரமாக மீட்டு வர சிறப்பு குழு அமைத்துள்ளார். தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தலைமையிலான கர்நாடகாவை சேர்ந்த அதிகாரிகள் குழு சிறப்பு விமானங்கள் மூலம் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். இன்னும் 170 பேர் ஜம்மு-காஷ்மீரில் உள்ளனர்.
இது குறித்து அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், கர்நாடகாவை சேர்ந்த 170 பேர் தற்போது காஷ்மீரில் இருப்பதாகவும், அவர்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்புவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
சிக்கமகளூரு நகரத்தின் ராமேஷ்வர் லேஅவுட்டைச் சேர்ந்த சந்திரசேகர், அவரது தாயார் இந்திரம்மா, மனைவி லீலா, குழந்தைகள் நக்சத் மற்றும் சினேகா ஆகிய 5 பேரும் தாக்குதல் நடந்தபோது பைசரன் பள்ளத்தாக்குக்கு சென்று கொண்டிருந்தனர். தாக்குதல் நடந்ததை அறிந்ததும் அவர்கள் உடனடியாக தங்கள் ஓட்டலுக்குத் திரும்பினர். தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் வடக்கு கர்நாடகாவின் ஹரப்பனஹள்ளியை சேர்ந்த ஒரு குடும்பம், பஹல்காமில் உள்ள ஒரு கடையில் குங்குமப்பூவை வாங்கிக் கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வணிக நிறுவனத்தை தாக்கிய பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டு மழை பொழிந்தனர். இது எங்களை குலை நடுக்க வைத்தது என்றனர்.