என் மலர்
நீங்கள் தேடியது "தந்தை-மகன் உயிரிழப்பு"
- இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது.
- உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபிக்கண்ணன் (வயது 35). இவர் வீட்டிலேயே துணிகள் தைத்துக் கொடுக்கும் டெய்லர் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி யோகேஸ்வரி (32). நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் கார்த்திக் (10) அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு யோகேஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோபிக்கண்ணன் மற்றும் அவரது மகன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
மாடியில் இவர்கள் வசித்து வரும் நிலையில் கீழ் வீட்டில் யோகேஸ்வரியின் சகோதரர் வசித்து வருகிறார். கட்டிலில் கோபிக்கண்ணன் போதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது. இதனால் அவரது தலை கட்டிலின் இடுக்கில் மாட்டிக் கொண்டது.
அதிலிருந்து விடுபட முயன்ற கோபிக்கண்ணன் தவறி கீழே படுத்திருந்த தனது மகன் கார்த்திக் மீது விழுந்தார். இதில் தந்தை மகன் 2 பேரும் மூச்சுத்திணறி இறந்து விட்டனர்.
காலையில் பள்ளிக்கு செல்வதற்காக கார்த்திக் கீழே வராததால் அவரது மாமா எழுப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது தந்தை, மகன் 2 பேரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன் குணசேகர், ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அறுவை சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
- இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் உயிரிழப்பு.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலுர் பகுதியை சேர்ந்தவர் நசீர். காய்கறி வியாபாரி. இவரது மகன் தோயிப் நசீர் (வயது26). எம்.ஏ. பட்டதாரியான தோயிப், தனது தந்தைக்கு உதவியாக காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இந்தநிலையில் அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தனது மகனுக்கு கல்லீரல் தானம் வழங்க தந்தை நசீர் முன்வந்தார். இதையடுத்து தந்தை-மகன் இருவரும் அறுவை சிகிச்சைக்காக ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர்.
நசீரின் கல்லீரலில் இருந்து ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, அவரது மகன் தோயிப்புக்கு பொருத்தப்பட்டது. இந்தநிலையில் அறுவை கிச்சைக்கு பிறகு நசீரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நசீர் பரிதாபமாக இறந்துவிட்டார். தந்தையிடம் இருந்து கல்லீரல் தானம் பெற்ற தோயிப், அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் தோயிப்பும் பரிதாபமாக இறந்தார்.
மகனுக்கு கல்லீரல் தானம் கொடுத்த நசீர், அவரிடமிருந்து கல்லீரல் தானம் பெற்ற தோயிப் என தந்தை-மகன் இருவரும் பலியான சம்பவம் கொச்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.