என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை"

    • கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
    • 10 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. வானிலை மையம் ஏற்கனவே நேற்றும், இன்றும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது.

    கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் படகுகளை நிறுத்தி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நெல்லை மாவட்டத்திலும் கள்ளக்கடல் எச்சரிக்கையால் நேற்று மீனவ கிராமங்களான கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல், உவரி உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இன்றும் 2-வது நாளாக அவர்கள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். 

    • அனைத்து படகுகளும் வருகிற 23-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்.
    • பலத்த இடி மின்னல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    நாகப்பட்டினம்:

    வங்கடலில் வருகிற 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு ள்ளது.

    இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க ஆழ்கடல் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நேற்று முதல் விசைப்படகு மீனவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் டோக்கன்கள் நிறுத்தப்பட்டு ள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஆழ்கடல் சென்ற அனைத்து படகுகளும் வருகிற 23-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். கனமழையின் காரணமாக கடல் அலையின் சீற்றம் அதிமாக இருக்கும்.

    பலத்த இடி மின்னல் ஏற்படவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நாகூர் பட்டினச்சேரி துவங்கி கீச்சாங்குப்பம், அக்கரை ப்பேட்டை, செருதூர், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் வேதாரண்யம் கோடியக்கரை உள்ளிட்ட சுமார் 27 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் 3500 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த மீனவ கிராமத்தின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் விற்பனை செய்யும் மீன்பிடித்தளம் மற்றும் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறை முகம் ஆகிய வெறிச்சோடி காணப்படுகிறது.

    • நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டு இதுவரை போதிய மழை இல்லாத நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனிடையே இலங்கை அருகே கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், மறு உத்தரவு வரும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இந்த தகவல் நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் உள்ள ஆலய ஒலிபெருக்கிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

    அதேநேரம் இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், தோமையர்புரம் பகுதியில் கட்டுமரத்தில் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் புறப்பட்டு சென்று விட்டனர். நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்பதால் தூத்துக்குடி வ.உ.சி. துறை முகம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மேலும் வங்க கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் காற்று 75 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இதனால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை 300 விசைப் படகுகள் மீன்பிடி துறை முகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    இதே போல கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், மணப்பாடு, ஆலந்தலை, கொம்புத்துறை, புன்னக்காயல் பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 600 விசைப்படகுகள் மற்றும் 4 ஆயிரத்து 400 நாட்டு படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 1500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி:

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தினால் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 600 விசைப்படகுகள் மற்றும் 4 ஆயிரத்து 400 நாட்டு படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, கூடுதாழை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் நாட்டு படகு மீனவர்கள் இன்று 4-வது நாளாக நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 1500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ×