என் மலர்
நீங்கள் தேடியது "டிங் லிரென்"
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இந்தப் போட்டியில் குகேஷ், சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதினர்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் டிங் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என முன்னிலை பெற்றார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய 2-வது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் ஆடினார். இதில் குகேஷ்- டிங் லிரென் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
முதல் போட்டியில் தோல்வி அடைந்த குகேஷ், இதன்மூலம் மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார் குகேஷ்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் டிங் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என முன்னிலை பெற்றார். நேற்று நடந்த 2வது சுற்று டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். இதில் டிங் லிரெனை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தார் குகேஷ்.
இதுவரை முடிந்துள்ள 3 போட்டிகளில் இருவரும் தலா 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 4-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனுடன் நடந்த ஆட்டம் டிராவானது.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 1.5 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் ஆடினார். இதில் டிங் லிரெனுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.
இதுவரை முடிந்துள்ள 4 போட்டிகளில் இருவரும் தலா 2 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
- 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.
- 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 1.5 புள்ளிகள் பெற்றனர். நேற்று முன் தினம் நடந்த 4-வது சுற்று டிராவில் முடிந்தது.

4 போட்டிகளில் இருவரும் தலா 2 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில் நேற்று 5 வது சுற்று நடைபெற்றுள்ளது. இதில் டிங் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.
22 நகர்த்தல் வரை ஆட்டம் சமநிலையில் இருந்தது. 23வது நகர்த்தலில் குகேஷ் சற்று சறுக்கினார். ஆனால் அடுத்தடுத்த நகர்த்தலில் அவர் மீண்டு வந்த நிலையில் 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.

எனவே ஐந்து சுற்றுகள் முடிவில், குகேஷ் மற்றும் டிங் லிரென் ஆகிய இருவரும் 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர்.
- டிங் லீரன் வெள்ளை நிற காயுடனும், குகேஷ் கருப்பு நிற காயுடனும் விளையாடினர்.
சிங்கப்பூர்:
இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது, 5-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
இந்த நிலையில் 6-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் டிங் லீரன் வெள்ளை நிற காயுடனும், குகேஷ் கருப்பு நிற காயுடனும் விளையாடினர். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நடப்பு சாம்பியன் ஆன சீன வீரர் டிங் லீரன் கடுமையாக போராடினார். ஆனால் குகேஷ் தற்காப்பு ஆட்டத்தை பயன்படுத்தி டிங் லீரனுக்கு பதிலடி கொடுத்தார். இறுதியில் இந்த ஆட்டம் 46வது நகர்த்தலில் டிரா ஆனது.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனுடன் நடந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 6 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா என 3 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 7-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டி சுமார் 5 மணி நேரத்தை கடந்தது.
முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இதுவரை முடிந்துள்ள 7 போட்டிகளில் இருவரும் தலா 3.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் குகேஷுடனான ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரென் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 7 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என 3.5 புள்ளிகள் பெற்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 8-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி மீண்டும் டிராவில் முடிந்தது.
முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7, 8-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இதுவரை முடிந்துள்ள 8 போட்டிகளில் இருவரும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார்.
- 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ்- டிங் லிரென் இடையிலான 9-வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது/ World Chess Championship as the ninth game between Indian challenger D Gukesh and defending champion Ding Liren of China ended in yet another draw to still level on points here on Thursdayஉலக செஸ் சாம்பியன்ஷிப் இந்தியாவின் ஜி. குகேஷ்- சீனாவின் டிங் லிரென் இடையே சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. 8 சுற்றுகள் முடிவில் இரண்டு பேரும் 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 8 சுற்று போட்டிகளில் இருவரும் தலா ஒரு சுற்றில் வெற்றி பெற்றிருந்தனர். மற்று 4 சுற்றுகளும் டிராவில் முடிந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற 9-வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது. இதனால் இருவரும் தலா 4.5 புள்ளிகள் பெற்றுள்ளனர்.
நாளை ஓய்வு நாளாகும். நாளைமறுதினம் 9-வது சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். மொத்தம் 14 சுற்றுகள் வரை போட்டி நடைபெறும். 14 சுற்றுகள் முடிவில் இருவரும் சமமான புள்ளிகள் பெற்றிருந்தால், அதன்பின் வெற்றியை தீர்மானிக்க faster time control கடைபிடிகக்ப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் சாம்பியன் பட்டம் வெல்வார்கள்.
முதல் சுற்றில் டின் லிரென் வெற்றி பெற்றிருந்தார். குகேஷ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். 2-வது, 4வது, 5-வது, 6-வது, 7-வது மற்றும் 8-வது சுற்றுகள் ஏற்கனவே டிராவில் முடிந்திருந்தன.
54-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு இருவரும் போட்டியை முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர். இதனால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
- 10 சுற்று ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர்.
- இன்னும் 4 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.
சிங்கப்பூர்:
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 9 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று 10-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. இந்நிலையில், 10 சுற்று ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளனர். முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
லிரென் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மேற்கொண்டு 2.5 புள்ளிகள் தேவையாக உள்ளது. அதேவேளையில் முதன்முறையாக பட்டம் வெல்வதற்கு குகேஷுக்கும் மேற்கொண்டு 2.5 புள்ளிகள் தேவைப்படுகிறது. இன்னும் 4 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.
- 11 சுற்று ஆட்டங்களின் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.
- இன்னும் 3 சுற்று ஆட்டங்களே மீதம் உள்ளன.
சிங்கப்பூர்:
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 10 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று 11-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.
இன்னும் 3 சுற்றுகள் மீதமுள்ள நிலையில் முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
- பரபரப்பான 12-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் தோல்வியடைந்தார்.
11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார். At the end of 11 rounds, Gukesh was leading by a score of 6 - 5.இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்து முடிந்த 11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 - 5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில் 12-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கடந்த சுற்றில் வெற்றிபெற்று குகேஷ் முன்னிலை வகிக்க, இந்த சுற்றில் டிங் வெற்றியால் கூடுதல் ஒரு புள்ளி பெற்றதன் மூலம் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
தற்போது 2 சுற்று ஆட்டங்களே எஞ்சியிருப்பதால் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
- தலா இரண்டு வெற்றி, 9 டிராவிற்குப் பிறகு கடைசி சுற்றான 14-ல் நேற்று மோதல்.
- 58-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. தமிழக வீரரான டி. குகேஷ் சீனாவின் டின் லிரேனை எதிர்கொண்டார். 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்தனர். 9 சுற்றுகள் டிராவில் முடிவடைந்திருந்தது.
இந்த நிலையில்தான் 14-வது சுற்று நேற்று நடைபெற்றது. இந்த சுற்றில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதால் இருவரும் வெற்றிக்காக போராடினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் 58-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு குகேஷ் வெற்றி பெற்றார்.
சுமார் 3 மணி நேர ஆட்டத்திற்குப் பிறகு லிரென் போட்டியை டிரா செய்ய முயற்சித்தார். ஆனால் டிரா செய்ய முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதனால் 18 வயதான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், சீன வீரர் டிங் லிரென் வேண்டுமேன்றே தோற்றதாக சந்கேம் ஏற்படுவதாக ரஷிய செஸ் பெடரேசன் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக ரஷிய செஸ் பெடரேசன் தலைவர் அன்ட்ரெய் பிளாடோவ் தெரிவிக்கையில் "கடைசி ஆட்டத்தின் முடிவு தொழில் வல்லுநர்கள் மற்றும் செஸ் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. முக்கியமான சுற்றில் சீன வீரர் டிங் லிரெனின் செயல் மிகவும் சந்தேகத்திற்குரியவை. இது தொடர்பாக சர்வதேச செஸ் பெடரேசன் தனி விசாரணை நடத்த வேண்டும்.
டிங் லிரென் இருந்த நிலையை இழப்பது (சாம்பியன் பட்டத்தை) முதல் தர வீரருக்குக் கூட கடினம். இன்றைய ஆட்டத்தில் சீன சதுரங்க வீரரின் தோல்வி நிறைய கேள்விகளை எழுப்புகிறது. மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.