என் மலர்
நீங்கள் தேடியது "சட்ட விரோத குடியேற்றம்"
- மெக்சிகோ வழியாக இடம்பெயர்வதை தடுக்க ஒப்புக்கொண்டார்.
- தெற்கு எல்லையை மூடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்த லில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இரு நாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் மற்றும் அனைத்து சட்ட விரோத குடியேற்றம் நடக்கிறது என்றும் அதை அந்த நாடுகளின் அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை இந்த வரிவிதிப்பு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார். இதற்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் மெக்சிகோ அதிபருடன் பேசினேன். அவர் மெக்சிகோ வழியாக இடம்பெயர்வதை தடுக்க ஒப்புக்கொண்டார்.
இது மிகவும் பயனுள்ள உரையாடலாக இருந்தது. எங்கள் தெற்கு எல்லையை மூடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டிரம்புடன் பேசியதை மெக்சிகோ அதிபர் கிளா டியா ஷீன்பாம் உறுதிப் படுத்தினார். அவர் கூறும் போது, இது ஒரு சிறந்த உரையாடல். இடம்பெயர்வு பிரச்சினைகளில் மெக்சி கோவின் நிலை பற்றி நாங்கள் விவாதித்தோம்.
சட்டவிரோதமாக நுழைப்பவர்கள் எங்கள் எல்லையை அடையவில்லை என்று நான் அவரிடம் கூறினேன். ஏனென்றால் அவர்களை மெக்சிகோ உன்னிப்பாக கவனித்து வருகிறது.
எங்கள் இறையாண்மையின் கட்டமைப்பிற்குள், பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும், போதை பொருள் நுகர்வை தடுக்க நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் பற்றியும் பேசினோம் என்றார்.
- 2500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
- புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த ஏற்பாடு.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு கூடுதலாக 1000 ராணுவ வீரர்களும், 500 கடற்படையினரையும் அனுப்ப தொடங்கியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே பணியில் உள்ள 2500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விமானங்களுக்கு உதவ ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அனுப்பப்படுகின்றன.
- சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.
- 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன்:
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் 104 இந்தியர்கள் ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவை போல இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில் இங்கி லாந்தில் உள்ள இந்திய ஓட்டல்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியர்கள் நடத்தும் உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்க ளில் சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள இந்தி யர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
ஹம்பர்சைட் பகுதியில் உள்ள இந்திய உணவகத்தில் நடந்த சோதனையில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக உள் துறை செயலாளர் யுவெட்டே கூப்பர் கூறும் போது, கடந்த ஜனவரி மாதம் 828 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 609 பேர் கைது செய்யப்பட்டனர். உணவகங்கள், கபேக்கள், புகையிலை தொழிற்சாலை உள்ள இடங்களில்தான் சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல், இந்தாண்டு ஜனவரி இறுதி வரை சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான சோதனைகள் அதிகரித்துள்ளது என்றார்.
இந்த நிலையில் சுமார் 19 ஆயிரம் வெளிநாட்டு குற்றவாளிகள் மற்றும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படும் வீடியோவை இங்கிலாந்து அரசு முதன் முறையாக வெளியிட்டுள்ளது.