என் மலர்
நீங்கள் தேடியது "ஹர்திக் பாண்ட்யா"
- இன்றைய முதல் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதோடு, தற்போது புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஐ.பி.எல். தொடரில் இரு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதனிடையே போட்டியை ஒட்டி இரு அணிகள் வீரர்களும் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, களத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எம்.எஸ். தோனியை கட்டியணைத்து அன்பை பொழிந்தார். மேலும், அவரின் கைகளை தொட்டுப் பார்த்து உரையாடிக் கொண்டிருந்தார்.
மைதானத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் எம்.எஸ். தோனி கட்டியணைத்துக் கொண்டு, உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இன்றிரவு நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சீசனில் மெதுவான பந்து வீச்சால் அவருக்கு ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையால் அவர் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை சூர்யகுமார் யாதவ் வழி நடத்துகிறார்.
- 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது.
- ஆல்ரவுண்டர்கள் அவர்களது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் கூடுதலாக உழைக்க வேண்டும்.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது. 2027 வரை இந்த விதி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
பந்துவீச்சு அல்லது பேட்டிங்குக்கு யாராவது ஒரு வீரரை ஆட்டத்தின் ஒரு பகுதியில் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்த விதி கூறுகிறது.
இந்த விதிமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இது தொடர்பாக கூறியதாவது:-
இம்பேக்ட் பிளேயர் விதி முறையால் ஆல்ரவுண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டராக இல்லையெனில் உங்களது இடத்தைப் பிடிப்பது கடினமாக இருக்கிறது. காலப்போக்கில் இது எல்லாம் மாறுமா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால், நிச்சயமாக ஆல்ரவுண்டர்கள் அவர்களது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் கூடுதலாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.
- ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான்.
- அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் செயல்பட உள்ளார்.
இந்நிலையில் ரோகித் சர்மா, சூர்யகுமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இந்திய அணியையே வழி நடத்தும் 3 பார்மட் கேப்டன்கள் (ஒருநாள், டி20, டெஸ்ட்) மும்பை அணியில் இருப்பதால் தமக்கு கவலையில்லை என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சூர்யகுமார் இந்திய டி20 அணியையும் வழி நடத்துகிறார். எனவே நான் இல்லாத போது டி20 கிரிக்கெட்டில் மும்பை அணியை வழி நடத்துவதற்கு அவரே சரியானவர். அது சுவாரசியமானதாக இருக்கும். கடந்த வருடம் ஒரு போட்டியில் தடைப் பெற்றது எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம்.
2 - 2.5 நிமிடங்கள் தாமதமாக நாங்கள் பௌலிங் செய்தோம். அப்போது இந்த விதிமுறைகள் பற்றி எங்களுக்குப் பெரிதாக தெரியாது. அது துரதிஷ்டவசமானது என்றாலும் விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இம்முறை ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான். அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.
எனக் கூறினார்.
- சான்ட்னெர், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என 4 சர்வதேச கேப்டன்கள் இடம் பிடித்துள்ளனர்.
- பும்ரா தொடக்க போட்டிகளில் விளையாடாதது அந்த அணிக்கு கடும் சவாலானதாக இருக்கும்.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் சர்வதேச போட்டியில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அணி வீரர்கள் விவரம்:-
பேட்ஸ்மேன்கள்
ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ரியான் ரிக்கெல்டன், ஸ்ரீஜித் கிருஷ்ணன், பெவன்-ஜான் ஜேக்கப்ஸ், திலக் வர்மா.

ஆல்-ரவுண்டர்கள்
ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், வில் ஜேக்ஸ், மிட்சல் சான்ட்னெர், ராஜ் அங்காட் பவா, விக்னேஷ் புதுர், கார்பின் போஸ்ச்.
பந்து வீச்சாளர்கள்
டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், ரீசே டாப்ளே, அர்ஜுன் தெண்டுல்கர், பும்ரா, வெங்கட சத்யநாராயன பென்மெட்சா, கரண் சர்மா, அஷ்வினி குமார், முஜீப் உர் ரஹ்மான்.

தொடக்க பேட்ஸ்மேன்கள்
ரோகித் சர்மா, ரியன் ரிக்கெல்டன் ஆகிய இரண்டு முக்கிய தொடக்க பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. ரோகித் சர்மா உடன் இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரியான் ரிக்கெல்டன் களம் இறங்குவது சாதகமாக இருக்கும் என அணி நிர்வாகம் கருதும்.
சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்ஆப்பிரிக்கா அணிக்காக ரிக்கெல்டன் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். ரோகித் சர்மா இறுதிப் போட்டியில் அரைசதம் விளாசினார். வலது இடது காம்பினேசனை கருத்தில் கொண்டு இருவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
தொடக்க வீரராக களம் இறங்கி ரன் குவிக்காததால், கடந்த காலங்களில் ரோகித் சர்மா பின்வரிசையில் களம் இறங்கியுள்ளார். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் திலக் வர்மா தொடக்க வீரராக களம் இறங்கப்பட்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இல்லையெனில் புதிய வீரர்களில் ஒருவரை முயற்சி செய்து பார்க்கலாம்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்
திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வில் ஜேக்ஸ் போன்றோர் உள்ளனர். திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஃபார்மில் உள்ளனர். சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக கடந்த சில போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடியது இல்லை. இந்த ஐபிஎல் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கும். திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள்.
வேகப்பந்து வீச்சாளர்கள்
பும்ரா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், ரீசே டாப்ளே, அஷ்வினி குமார், வெங்கட சத்யநாராயண பென்மெட்சா, அர்ஜூன் தெண்டுல்கர், கார்பின் போஸ்ச் (ஆல்ரவுண்டர்) என நீண்ட வேகப்பந்து வீச்சாளர் பட்டியலை கொண்டுள்ளது. பும்ரா தொடக்க போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அந்த அணிக்கு சற்று சவாலானதாக இருக்கும்.
புதுப்பந்தில் டிரென்ட் போல்ட், தீபக் சாஹர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். புதுப் பந்தை சிறந்த முறையில் ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர்கள் என்பதால் பவர் பிளேயில் ரன் கொடுப்பதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களுடன் ஹர்திக் பாண்ட்யாவும் உள்ளார்.
ஒருவேளை தீபக் சாஹர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அஷ்வினி குமார், அல்லது வெங்கட சத்ய நாராயண பென்அட்சாவை பயன்படுத்தலாம்.

சுழற்பந்து வீச்சாளர்கள்
கரண் சர்மா, மிட்செல் சான்ட்னெர், முஜீப் உர் ரஹ்மான் என மூன்று பேர் உள்ளனர். மிட்செல் சான்ட்னெர், முஜீப் உர் ரஹ்மான் சர்வதேச போட்டிகளில் அசத்தி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களுடன் இவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் கொடுப்பார்கள்.
வெளிநாட்டு வீரர்கள்
ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்), பெவன்-ஜான் ஜேக்கப்ஸ் (பேட்ஸ்மேன்), வில் ஜேக்ஸ் (ஆல்ரவுண்டர்), மிட்செல் சான்ட்னெர், கார்பின் போஸ்ச், டிரென்ட் போல்ட், ரீசே டாப்ளே, முஜீப் உர் ரஹ்மான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
இவர்களில் 4 பேரை மட்டுமே ஆடும் லெவன் அணியில் சேர்க்க முடியும். 3 பேரை சேர்த்தால் இம்பேக்ட் வீரராக மற்றொருவர் களம் இறங்கலாம். இவர்களை ஹர்திக் பாண்ட்யா எப்படி கையாள்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
ரிக்கெல்டன், முஜீப் உர் ரஹ்மான், டிரென்ட் போல்ட், சான்ட்னெர் ஆகியோரை தேர்வு செய்தால் வில் ஜேக்ஸ் விளையாட முடியாது. முஜீப் உர் ஹர்மான், சான்ட்செர் ஆகியோரில் ஒருவர் மட்டும் ஆடும் லெவனில் இறக்கப்பட்டால், இம்பேக்ட் வீரரான வில் ஜேக்ஸ்-ஐ பயன்படுத்த முடியும். இவர் பகுதி நேரமாக சுழற்பந்தும் வீசக் கூடியவர்.
ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர்தான் சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்ய முடியும். எப்படி இருந்தாலும் ஏராளமான சர்வதேச கேப்டன் என நட்சத்திர பட்டாளங்களை கொண்டு அணியாக வளம் வரும் என்பதில் சந்தேகமில்லை.
- எனது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஸ்கிரிப்ட் என்னால் எழுத முடியாது என்று நான் நினைக்கவில்லை.
- உலகக் கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்ததால் நிறைய அன்பு கிடைக்கிறது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடரில் மும்பை அணிக்காக கோப்பையை வெல்ல புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தயாராகி வருகிறார்.
5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்ட்யாவை குஜராத் அணியிலிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி தங்களது புதிய கேப்டனாக அறிவித்தது.
அதற்கு மும்பை ரசிகர்களே வான்கடே மைதானம் மட்டுமின்றி செல்லும் இடங்களில் எல்லாம் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.
இந்நிலையில் மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது ஓடி ஒளியவில்லை என்றும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் கோப்பை வென்றதால் தற்போது அனைத்தும் 360 டிகிரியில் மாறியுள்ளதாகவும் பாண்டியா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
எனக்கு நடந்த விஷயம் போர்க்களத்தை விட்டு வெளியேறாதது பற்றியதாகும். அதில் நான் எப்படி உயிர் வாழ்ந்தேன் என்பதை பற்றி இருக்குமே தவிர வெற்றி பெறுவதைப் பற்றி இருக்காது. அந்த வருடம் நான் எனது நிலையை பிடித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அந்த கடினமான காலத்திலும் கிரிக்கெட் மட்டுமே என்னுடைய நண்பனாக இருந்தது. என்னை அனைத்து சிக்கல்களில் இருந்தும் கிரிக்கெட் மட்டுமே வெளியேற்றியது.
எனது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஸ்கிரிப்ட் என்னால் எழுத முடியாது என்று நான் நினைக்கவில்லை. கடந்த 6 மாதங்களில் உலகக் கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்ததால் நிறைய அன்பு கிடைக்கிறது. அது எனக்கு 360 டிகிரியில் நடந்த மாற்றம் போல் இருக்கிறது.
என்னால் நிலைத்து நின்று கடினமாக உழைத்து போராடினால் கிரிக்கெட்டில் மீண்டும் வர முடியும் என்பது தெரியும். ஆனால் எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாத போது என்னுடைய வாழ்க்கையை கடவுள் வெறும் இரண்டரை மாதங்களில் ஸ்கிரிப்ட் எழுதி மாற்றினார்.
என்று பாண்ட்யா கூறினார்.
- சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்
- பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.
இந்த வெற்றியை இந்திய வீரர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா அவரது ஸ்டைலில் கொண்டாடினார். பிட்ச் மத்தியில் கோப்பையை வைத்து பாண்ட்யா இரு கைகளையும் கோப்பையை நோக்கி காட்டுவது போல ஸ்டைலாக போஸ் கொடுப்பார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற போதும் அவரது தனித்துவமான ஸ்டைலில் போஸ் கொடுத்தார். அதே மாதிரி இந்த முறையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். இந்தப் பதிவு தற்போது 16 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
- இந்திய அணியை மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்ட அணி என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார்.
- ஒன்றரை வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடி வருவதால், சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை வெளிப்படுத்த அவர்களுக்கு போதுமான நேரம் கிடைத்துள்ளது.
வெல்லிங்டன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர்களுடைய கருத்தை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும். சர்வதேச அளவில் விளையாடும் போது நாங்கள் யாருக்கும் எங்களை நிரூபிக்க அவசியமில்லை என நினைக்கிறேன். இது ஒரு விளையாட்டு, இதில் நீங்கள் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வீர்கள். அதற்கான முடிவுகள் நடக்கும் போது நிச்சயம் நடக்கும். நாங்கள் இன்னும் டி20 கிரிக்கெட்டில் சில விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அதனை வருங்காலங்களில் சரி செய்து சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்வி எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் தொழில் முறை கிரிக்கெட் வீரராக இருக்கும் நீங்கள் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு அதில் இருந்து மீண்டு வந்து எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பது குறித்து தான் யோசிக்க வேண்டும் . முன்னேறிச் செல்வது மட்டும்தான் ஒரே வழி.தவறுகளை திருத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அடுத்த டி20 உலக கோப்பைக்கான பயணம் நியூசிலாந்து தொடருடன் தொடங்குகிறது. இது ஒரு புதிய தொடக்கம். எங்களுக்கு இன்னும் நிறைய காலங்கள் இருக்கிறது.
அதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அமர்ந்து பிறகு யோசிப்போம். இப்போது எங்களுடைய வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்ப.ம் எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செய்யப்படவுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது
- டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், லஷ்மண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் போக்கு இந்திய அணியிடம் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
நாளை டி20 கிரிக்கெட் தொடங்குகிறது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் பலர் களம் காண்க இருக்கிறார்கள்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்விக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான். அதுவும் குறிப்பாக பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் போக்கு இந்திய அணியிடம் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.
இதனால் நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணி தனது அணுகுமுறையை மாற்றலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் பயிற்சியாளரான லஷ்மண் பயமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என இளம் வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.
இது குறித்து லஷ்மண் கூறுகையில் டி20 கிரிக்கெட்டில் நாம் சுதந்திரமாக, பயமின்றி விளையாடுவது அவசியம். இந்த எண்ணத்துடன் களத்தில் சென்று விளையாடக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த தகவல் கேப்டன் மற்றும் நிர்வாகம் மூலம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவேளையில், சீதோஷண நிலை, அப்போதைய போட்டியின் சூழ்நிலை ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு யுக்திகளை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றால், டாப் ஆர்டர் வீரர்களில் சுதந்திரமாக நெருக்கடி இன்று தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இதுதான் டி20 விளையாட்டிற்கு தேவை. ஏராளமான அணிகள் இந்த முறையை கொண்டு வர முயற்சிக்கும் வகையில் அப்படிபட்ட வீரர்களை அடையாளம் காணும் தேர்வு நடவடிக்கையை மேற்கொள்ளும்.
ஹர்திக் பாண்ட்யா அற்புதமான கேப்டன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அயர்லாந்தில் இருந்து அவரிடம் குறிப்பிட்ட நேரத்தை செலவழித்துள்ளேன். அவரது இருப்பும் பணி நெறியும் முன்னுதாரணமானது. அவர் ஒரு வீரர்களின் கேப்டன் மற்றும் அணுகக்கூடியவர். வீரர்கள் அவரை நம்புகிறார்கள். அவர் முன்மாதிரியாக வழி நடத்துகிறார் என்றார்.
- வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது.
- பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன்.
டி20 உலகக்கோப்பை தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்தியா வெற்றி கண்ட போதும், ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றங்கள் உள்ளன. இதற்கு காரணம் சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் தான்.
எந்த ஆர்டரில் வேண்டுமானாலும் களமிறங்கி அதிரடி காட்டக்கூடிய சஞ்சுசாம்சனுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதே இல்லை. இதே போல இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்புகளே தரப்படவில்லை. சாம்சனுக்கு மாற்றாக விளையாடிய ரிஷப் பண்ட் சொதப்பிய போதும், வாய்ப்பு தரப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது. இது என்னுடைய அணி. பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் வரும் போது, அவர்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.
இது ஒரு சிறிய தொடராகும். ஒருவேளை இது நிறைய போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் நிச்சயம் அனைவரையும் பயன்படுத்தி பார்த்திருப்போம். 6 பவுலிங் ஆப்ஷன்களுடன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்கு தீபக் ஹூடா சரியாக இருந்தார். ஒரு பேட்டர், நன்கு பந்துவீசவும் தெரிந்திருந்தால் எதிரணிகளுக்கு அதிர்ச்சி தர முடியும் என ஹர்திக் பாண்ட்யா விளக்கம் தந்துள்ளார்.
- குர்ணால் பாண்டியா, இஷான் கிஷன் போன்றோரும் நேற்றிரவு பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
- பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் டோனியும் பாட்டு பாடுவது, அவரும் இணைந்து நடனமாடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற பார்ட்டியில் டோனி பங்கேற்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பார்ட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, டோனி மனைவி சாக்க்ஷி ஆகியோரும் பங்கேற்றுள்ளது அந்த வீடியோவில் தெரிந்தது. மேலும், பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் டோனியும் பாட்டு பாடுவது, இணைந்து நடனமாடுவதும் அந்த வைரல் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதை அவரது மனைவி சாக்க்ஷி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டிருந்த வீடியோ மூலம் தெரிய முடிகிறது.
நியூசிலாந்தில் டி20 தொடரை கைப்பற்றிய கையுடன் ஹர்திக் பாண்டியா, டோனி உடன் துபாயில் இணைந்துள்ளார். ஹர்திக் பாண்டியா மட்டுமில்லாமல், அவரின் சகோதரர் குர்ணால் பாண்டியா, இஷான் கிஷன் போன்றோரும் நேற்றிரவு பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
பாண்டியா பிரதர்ஸ் உடன் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட டோனி : வைரல் வீடியோ! #dhoni #HardikPandya #maalaimalar pic.twitter.com/bc3z5DL3Z6
— Maalai Malar தமிழ் (@maalaimalar) November 27, 2022
வரும் 2023 ஐபிஎல் தொடருக்கு பின் டோனி, அத்தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. எனவே, அவரது தலைமையில் 5ஆவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியனாகி, அவரை சிறப்பான முறையில் வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
- கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன்.
- என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான்.
கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 தொடரின்போது விராட் கோலி கேப்டனாக இருந்தார்.அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி படுமோசமாக சொதப்பி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல், லீக் சுற்றுடன் நாடு திரும்பியது. இதனால், விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துவந்த நிலையில், அவரே கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதனையெடுத்து மூன்று விதமான அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகினார்.
இதனைத் தொடர்ந்து ரோகித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு கோப்பைகளை பெற்றுக்கொடுத்து அசத்தியதுபோல், இந்திய அணிக்கும் பல கோப்பைகளை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியை ஏற்றப் பிறகு இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் பைனலுக்கு கூட முன்னேறவில்லை. அடுத்து டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் அரையிறுதியுடன் இந்திய அணி திரும்பியது. இந்த தொடர் தோல்விகள் காரணமாக ரோகித் மீதும் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ஒருநாள் அணிக்கு மட்டும் ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டெஸ்ட், டி20 அணிகளுக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டி20 அணிக்கு பிசிசிஐ யாரை கேப்டனாக நியமிக்கும் என்ற கேள்விக்கு தற்போது கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன். இருப்பினும், ஒருசில தொடர்களில், ஐபிஎலில் அவர் சிறப்பாக கேப்டன்சி செய்ததை வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க கூடாது. ஐபிஎலில் கோப்பை வென்று கொடுத்தார் என்று கூறிதான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை கொடுத்தோம். இப்போது புது கேப்டனை தேடுகிறோம்.
என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான். இவரைத்தான் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். இவர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே தொடர், ரஞ்சிக் கோப்பை தொடர்களில் ஆக்ரோஷமாக கேப்டன்ஸி செய்ததை நான் பார்த்திருக்கிறேன். வெற்றிகரமான கேப்டனாகவும் இவர் இருக்கிறார். இவர் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட பொருத்தமான வீரர்.
இவ்வாறு கம்பீர் கூறினார்.
2019-ம் ஆண்டில் பிரித்வி ஷா 6 மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- முதல் 20 ஓவர் போட்டி வருகிற ஜனவரி 3-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
- வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின்போது கேப்டன் ரோகித் சர்மா காயம் அடைந்தார்.
மும்பை:
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற ஜனவரி 3-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின்போது இடது கை விரலில் காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து குணமடைய சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.
இதனால் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்தியாவின் 20 ஓவர் கேப்டன்ஷிப் பற்றி விவாதிக்கப்படவில்லை. தேர்வுக்குழு மட்டுமே கேப்டன் பதவி பற்றி முடிவு எடுக்க முடியும் என்றார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா காயத்தில் இருந்து குணமடையாவிட்டால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.
கடந்த ஐ.பி.எல். போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.