என் மலர்
நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"
- யானை ஆத்திரம் அடைந்து ஜே.சி.பி. எந்திரத்துடன் மோதுகிறது.
- யானை மிரண்டு ஓடியபோதும் அதை துரத்துகிறார்.
யானையும்- ஜே.சி.பி. எந்திரமும் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.
மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டம் டாம்டிம் பகுதியில் ஒரு காட்டு யானை உணவு தேடி ஊர்ப்புறத்துக்கு வந்துவிட்டது. இதையடுத்து கிராம மக்கள் யானையை துரத்த ஆரம்பித்தனர். கம்பு- குச்சிகளுடன் கூச்சல் போட்டால் மட்டும் யானையை விரட்ட முடியாது என நினைத்த ஒருவர், ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் யானையை விரட்ட முயற்சிக்கிறார்.
அப்போது யானை ஆத்திரம் அடைந்து ஜே.சி.பி. எந்திரத்துடன் மோதுகிறது. தன் பலத்தால் ஜே.சி.பி.யை அந்தரத்திற்கு உயர்த்துகிறது. இருந்த போதிலும் ஜே.சி.பி. டிரைவர், எந்திரத்தின் பின்பக்க தோண்டும் பகுதியை தரையில் பதித்து ஜே.சி.பி.யை கவிழ்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டு யானையுடன் சாதுரியமாக மோதுகிறார். யானை மிரண்டு ஓடியபோதும் அதை துரத்துகிறார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கடும் விவாதத்தை தூண்டியது. 'வனவிலங்கை இப்படி துன்புறுத்துவதா?' என்று பலரும் கண்டன பதிவுகளை வெளியிட்டனர். போலீசார் விசாரணை நடத்தி ஜே.சி.பி. டிரைவரை கைது செய்து உள்ளனர்.
In India they fight Elephants with JCB Diggers pic.twitter.com/G7HxcZCJJo
— Concerned Citizen (@BGatesIsaPyscho) February 5, 2025
- காரின் பேனட் மீது நாயை அமர வைத்து அதன் முன்பு கேக் வைத்து வெட்டுகின்றனர்.
- வீடியோ முடிவில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் தங்கள் பிறந்தநாளை வித்தியாசமாகவும், விமர்சையாகவும் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அன்ஷூ சவுகான் என்ற பயனர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், இளைஞர்கள் தெருநாய்க்கு பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய காட்சிகள் உள்ளது. அதில், இளைஞர்கள் ஒரு காரில் தெருநாய் ஒன்றுக்கு மலர் மாலைகள் அணிவித்து கொண்டு வருகின்றனர். பின்னர் காரின் பேனட் மீது நாயை அமர வைத்து அதன் முன்பு கேக் வைத்து வெட்டுகின்றனர். அந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் ஆரவாரம் செய்து வந்த வாலிபர்களும் அவர்களுடன் சேர்ந்து தெருநாயின் பிறந்தநாளை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடுகின்றனர்.
மேலும் தெருநாய் மீது மலர்களையும் தூவுகின்றனர். வீடியோ முடிவில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் மற்றும் கருத்துக்களை பெற்றது. ஒரு பயனர், இது பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால் கேக்குகள் மற்றும் இனிப்புகள் நாய்களுக்கு நல்லதல்ல. தயவு செய்து கவனமாக இருங்கள் என பதிவிட்டிருந்தார்.