search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • ஓ.பி.எஸ்.சை சந்திப்பதற்கு சசிகலா இதுவரை நேரம் ஒதுக்காமலேயே உள்ளார்.
    • அ.தி.மு.க. விவகாரத்தை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை நடத்தினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீடித்து வந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி பொதுச் செயலாளராக கட்சியினரால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவையும் எடப்பாடி பழனிசாமியையே அங்கீகரித்துள்ளன.

    இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமாகி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் அவரை முழுமனதோடு வரவேற்று அ.தி.மு.க.வின் 3-ம் தலைமுறையே என்று வர்ணித்து பின்னால் அணிவகுத்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தீர்ப்பு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் பின்னடைவாகவே மாறி இருக்கிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்ன? என்பது அரசியல் களத்தில் மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனோடு கைகோர்த்துள்ள ஓ.பி.எஸ். சசிகலாவையும் சந்திக்கப் போவதாக தெரிவித்தார்.

    ஆனால் அவரது இந்த அறிவிப்பை சசிகலா தரப்பினரோ ரசிக்கவில்லை. இதன் காரணமாகவே ஓ.பி.எஸ்.சை சந்திப்பதற்கு சசிகலா இதுவரை நேரம் ஒதுக்காமலேயே உள்ளார்.

    இப்படி சசிகலாவிடமிருந்து 'கிரீன் சிக்னல்' கிடைக்காத நிலையில் எந்த வழியாக பயணிப்பது? என்பது தெரியாமல் ஓ.பி.எஸ். தவியாய் தவித்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    அ.தி.மு.க. விவகாரத்தை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை நடத்தினார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு மேல் வழக்கு போட்டார். ஓ.பி.எஸ். ஆதரவாளரான சண்முகத்தில் தொடங்கி வைரமுத்து, ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் என 6 பேர் வரை வழக்கு போட்டனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் பல்வேறு கால கட்டங்களில் 10 முறைக்கு மேல் கீழ்கோர்ட்டு முதல் மேல் கோர்ட்டு வரை விசாரணை நடைபெற்று உள்ளது. ஆனால் இதில் ஒரே ஒரு முறை மட்டும்தான் ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. மற்றபடி 9 முறை நடைபெற்ற வழக்கு விசாரணைகள் அனைத்திலுமே எடப்பாடியே வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஓ.பி.எஸ்.சின் சட்டப்போராட்டங்களை தவிடு பொடியாக்கியுள்ளார்.

    இதனால் ஓ.பி.எஸ்.சுக்கு அ.தி.மு.க. விவகாரத்தில் தோல்வி மேல் தோல்வியே கிடைத்து வந்துள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடிக்கு எதிரான கடைசி வாய்ப்பாக ஓ.பி.எஸ்.சுக்கு இருப்பது ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு மட்டுமேயாகும்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்துள்ள இந்த வழக்கிலும் ஓ.பி.எஸ்.சை வீழ்த்தி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. வக்கீல்களுடன் அவர் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தொடங்கி, ராயப்பேட்டையில் தலைமைக்கழகம் தாக்கப்பட்ட விவகாரம் வரை அனைத்து வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்று சாதித்து காட்டி இருக்கிறார்.

    அதே பாணியில் ஓ.பி.எஸ். தொடர்ந்துள்ள இந்த கடைசி வழக்கிலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதில் எந்த மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். உடனான இறுதி மோதல் முடிவுக்கு வந்த பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். மாவட்ட செயலாளர்களில் தொடங்கி அனைத்து பொறுப்புகளிலும் அதிரடி மாற்றங்களை செய்ய அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள்.
    • தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

    கோவை:

    கோவை சின்னியம்பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கூட அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும்.

    எனவே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் மவுனம் காத்து இருக்காமல் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த அறிவிப்பானது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. எனவே அரசு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டும்.

    தமிழகத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல வழிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி கிடக்கிறது. அதனை சீர் செய்ய வேண்டும். கொங்கு மண்டல பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த வாழை பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    மேலும் தென்னை விவசாயிகள் நீண்ட நாட்களாக கேட்டு வரும் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

    பொதுமக்கள் நடமாடும் இடங்களில் விளம்பர பேனர்களை வைப்பதை அனைத்து கட்சிகளும் தவிர்க்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

    அவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அடுத்த மாதம் 15-ந் தேதி மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சையில் மிக பிரமமாண்டமாக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துகட்சி தலைவர்களும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள், வைத்தியலிங்கம் இல்ல திருமணவிழாவில், டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் சந்தித்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க, த.மா.கா மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே அணியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணமக்கள் அனைத்து வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும். மனிதர்களின் வாழ்விலே திருமணம் தான் மகிழ்ச்சியான தருணம்.
    • துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலர செய்வோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது :-

    மணமக்கள் அனைத்து வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும். மனிதர்களின் வாழ்விலே திருமணம் தான் மகிழ்ச்சியான தருணம்.

    இந்த திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி என்றால், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து திருமணத்தை நடத்தி வைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இன்றைய தினம் அனைவரும் ஒன்றாய் ஒரே கூரையின் கீழ் இணைந்துள்ளோம்.

    6 ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் துரோகத்தால், சுயநலத்தால் அ.ம.மு.க. என்ற கட்சி இயக்கத்தை தொடங்க வேண்டியதாகி இருந்தது. ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவே அ.ம.மு.க.வை தொடங்கினேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னீர்செல்வத்துடன் பேசி ஒன்றாக செயல்படுவோம் என கூறினோம். அரசியலையும் தாண்டி எனக்கு அவருடன் நட்பு தொடர்ந்து வருகிறது.

    மீண்டும் மலர செய்வோம்..

    அதன்படி தற்போது அனைவரும் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். அ.தி.மு.க, அ.ம.மு.க இணைந்து கைகோர்த்து ஒன்றாக செயல்பட தொடங்கிவிட்டது.

    துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலர செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர்,.
    • ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடினால் நம்மை வெல்ல இந்தியாவிலே யாரும் கிடையாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இல்ல திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார்.

    பின்னர் அவர் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது :-

    வைத்திலிங்கம், தவமணி இல்ல திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று 7-ம் தேதி. எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான தேதியாகும். மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்.

    அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர்,. அவரது மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கட்டுகோப்புடனும், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும் வழி நடத்தி தமிழகத்தில் பொற்கால ஆட்சியை எம்.ஜி.ஆர் வழியில் நிலை நிறுத்தியவர் ஜெயலலிதா.

    பல்வேறு சோதனைகள், சதி வலைகளை உடைத்து மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்.

    அ.தி.மு.க.வின் தூய தொண்டர்களின் எண்ணமே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். தொண்டர்கள் தான் இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலர செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடினால் நம்மை வெல்ல இந்தியாவிலே யாரும் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க.வில் மீண்டும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார்.
    • வரும் காலங்களில் சசிகலாவின் இந்த எண்ணம் ஈடேறுமா என்பது பெரிய கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் நீடித்து வந்த தலைமை பதவிக்கான அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவர் ஏகமனதாக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு மேல் வழக்கு போட்டு கதவை தட்டிய ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. தலைமை விவகாரத்தில் சாதகமான அம்சங்கள் எதுவுமே நடைபெறவில்லை.

    தேர்தல் ஆணையத்தில் தொடங்கி கோர்ட்டு நடவடிக்கைகள் வரை அனைத்துமே எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்து உள்ளன. இப்படி அ.தி.மு.க.வில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

    தேவைப்பட்டால் சசிகலாவையும் சந்திப்பேன் என்றும், அ.தி.மு.க.வை மீட்பதே எங்கள் லட்சியம் என்றும் கூறிக்கொண்டு ஓ.பி.எஸ். காய் நகர்த்தினார். அது எந்தவித தாக்கத்தையும் அ.தி.மு.க.வில் இதுவரை ஏற்படுத்தவில்லை.

    இதனை சசிகலாவும் நன்றாக புரிந்து வைத்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உடனடியாக ஓ.பி.எஸ்.சை சந்திக்க விரும்பாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கைப்பற்றியதை சசிகலா நன்கு உணர்ந்துள்ளார்.

    ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் சசிகலாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்துள்ளார்.

    இதன் காரணமாகவே அவரை சசிகலா முதல்-அமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தினார். தற்போது எடப்பாடி பழனிசாமி ஒரு சிலரை தவிர பிரிந்து சென்ற அனைவரும் அ.தி.மு.க.வில் வந்து சேரலாம் என்று கூறி வருகிறார்.

    இதுபற்றி அ.தி.மு.க. வினர் கூறும்போது, சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரையும் மறைமுகமாக குறிப்பிட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி கூறுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

    ஆனால் சசிகலாவோ இதைப் பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து தூது விட்டுக் கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க.வில் மீண்டும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார். இதன் காரணமாகவே அவர் எடப்பாடி பழனிசாமிக்கு தூதுவிட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் துணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மூலமாக பேச்சு நடத்தி எப்படியும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட வேண்டும் என்று சசிகலா கணக்கு போட்டுள்ளார்.

    ஆனால் எடப்பாடியின் எண்ணமோ வேறு மாதிரியாக உள்ளது. சசிகலா குடும்பத்தினரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால் அவர்கள் சொல்கிறபடி தான் நாம் நடக்க வேண்டி இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

    அ.தி.மு.க.வில் உள்ள பெரும்பாலானோரின் எண்ணமும் இதுவாகவே உள்ளது. எனவே வரும் காலங்களில் சசிகலாவின் எண்ணம் ஈடேறுமா? என்பது பெரிய கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.

    இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறும் போது, தற்போதைய சூழலில் சசிகலாவை வைத்து அ.தி.மு.க.வுக்கு எந்தவித செல்வாக்கும் வந்துவிடப் போவதில்லை.

    எனவே எடப்பாடி பழனிசாமி தற்போது சசிகலாவின் இந்த தூது நடவடிக்கைகளை எல்லாம் பொருட்படுத்தமாட்டார். சசிகலா உள்ளிட்ட அவரது ஆட்கள் யாரை உள்ளே விட்டாலும் நமக்கு ஆபத்து என்பதை அவர் நிச்சயம் உணர்ந்துள்ளார். எனவே அது போன்று நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமியால் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    • உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.
    • கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 'மே' மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச்சாராயத்தை அருந்தி சுமார் 22 பேருக்குமேல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய தி.மு.க. நிர்வாகி மரூர் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.

    அதைத் தொடர்ந்து, மது விற்பனை மற்றும் சட்டவிரோதமாக பார்களை நடத்துதல் சம்பந்தமாக காவல் துறை கைது செய்தவர்களில், ஒரு அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சி தி.மு.க. நிர்வாகிகளான, செஞ்சி பேரூராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் லட்சுமி என்பவரின் கணவர் வெங்கடேசன், 16-வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியின் கணவர் அண்ணாதுரை, நரசிங்க ராயன்பேட்டை கிளையின் தி.மு.க. செயலாளர் சிவக்குமார், சக்கராபுரம் பகுதி தி.மு.க. நிர்வாகி தண்டபாணி ஆகிய 4 தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    2 வருடங்களாக இவர்கள் கைது செய்யப்படாததை மாவட்ட மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்தது.
    • இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை கவனித்து வந்தார்.

    சென்னை:

    மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி சார்ந்த தேவைகளை பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவியில் இருப்பவரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர் அரசிடம் தெரிவிப்பார். பின்னர் அது நிவர்த்தி செய்யப்பட்டு வந்தது.

    100 ஆண்டுகளுக்கு மேலான வரலாறை கொண்டது இந்த இயக்குனர் பதவி. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவி உருவாக்கப்பட்டது, இயக்குனர் பதவியை அகற்றுவதற்காக தான் என்று அப்போது பேசப்பட்டது.

    அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்தது. அதற்கு பதிலாக பள்ளிக்கல்வி ஆணையர் பொறுப்பில் இருப்பவர், அனைத்து பணிகளையும் கவனிப்பார் என்று கூறப்பட்டது.

    இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை கவனித்து வந்தார். இந்த பதவியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி நந்தகுமார் இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் (மே) பள்ளிக்கல்வி ஆணையராக இருந்த நந்தகுமாரை, மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த அறிவிப்பில் பள்ளிக்கல்வி ஆணையராக யாரையும் நியமிக்காமல் விட்டுவிட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பதவி கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக பேசப்பட்டது.

    இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், சென்னை தலைமை செயலகத்தில் சமீபத்தில் நிருபர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி தொடர்பாக கேள்வி எழுப்பும்போது, 'இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நாங்கள் கொடுக்கும் பட்டியலில் அவர் யார் ஒருவரை தேர்வு செய்கிறாரோ? அவர்களை அறிவிப்போம்' என்றார்.

    அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனராக அறிவொளியை தேர்வு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அறிவொளி இதற்கு முன்பு தொடக்க கல்வி இயக்குனராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 100 ஆண்டுகள் வரலாறு கொண்ட பள்ளிக் கல்வி இயக்குனர் பதவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைமுறைக்கு வந்து உள்ளது.

    அத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கூடுதல் இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

    அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் மு.பழனிச்சாமி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராகவும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் பெ.குப்புசாமி, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    • ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை இந்த அரசு திறக்க உள்ளது.
    • போர்க்கால அடிப்படையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பள்ளிக் கல்வித்துறையின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆசிரியர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்குவதற்கும், மாணவ கட்டுப்படுத்துவதற்கும் போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில் வருகின்ற 12-ந்தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதுபோல முதன் முறையாக சுமார் 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை இந்த அரசு திறக்க உள்ளது. எனவே, ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்த பிறகும் மற்றவர்கள் மீது சுமத்தாமல், தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்றவர்கள் லட்சக்கணக்கில் இருக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிட, போர்க்கால அடிப்படையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு இடையே அவ்வப்போது பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்கும்.
    • கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவிலும் ஒரு சுவாரஸ்யம் அரங்கேறியது.

    அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு இடையே அவ்வப்போது பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்கும்.

    அப்படித்தான் கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவிலும் ஒரு சுவாரஸ்யம் அரங்கேறியது.

    முன் வரிசையில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளே வந்தார். அவரை பார்த்ததும் அத்தனை அமைச்சர்களும் ஒன்று போல் எழுந்து வணக்கம் தெரிவித்தார்கள். அவரும் பதிலுக்கு நன்றி தெரிவித்து ஒவ்வொருவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசினார். கடைசியாக தங்கம் தென்னரசு பக்கம் சென்றதும் ஓ.பி.எஸ்.சிடம் வாங்கண்ணே எங்க பக்கம் உட்காருங்கண்ணே என்றபடி அமைச்சர்களுக்கு மத்தியில் இருந்த இருக்கையில் அமரும்படி கையை பிடித்து அமர சொன்னார்கள்.

    ஆனால் அதில் அமராமல் தங்கம் தென்னரசு அருகில் சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியில் பிரச்சினை ஏற்பட்டால் தானே ஆளுங் கட்சிக்கு நல்லது. அதன்படி எங்களுக்கு நீங்கதாண்ணே கைகொடுத்தீங்க... என்ற என்றியோ....? என்று பார்வையாளர்கள் பேசிக் கொண்டார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போனோமா... வந்தோமோ... என்று இருக்காமல் வாங்கி கட்டிக்கொண்டார் பெஞ்சமின்.
    • எடப்பாடி பழனிசாமியே வணக்கம் போட்டதற்கு சமமானது என்று நிர்வாகிகள் எடப்பாடி காதில் போட வாங்கி கட்டி இருக்கிறார் பெஞ்சமின்.

    ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள இயலாததால் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின் ஆகியோரை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்திருந்தார். போனோமா... வந்தோமோ... என்று இருக்காமல் வாங்கி கட்டிக்கொண்டார் பெஞ்சமின்.

    அந்த நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்த போது ரொம்ப பவ்யமாக எழுந்து நின்று வணக்கம் போட்டார் பெஞ்சமின். அருகில் இருந்த சீனியரான பா.வளர்மதி அவரது சட்டையை பிடித்து இழுத்து உட்கார சொல்லியும் கேட்காமல் எழுந்து நின்று வணங்கி தனது மரியாதையை காட்டினார்.

    ஆனால் இது எடப்பாடி பழனிசாமியே வணக்கம் போட்டதற்கு சமமானது என்று நிர்வாகிகள் எடப்பாடி காதில் போட வாங்கி கட்டி இருக்கிறார் பெஞ்சமின்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு மேற்கொண்ட கொமாட்சு நிறுவனம் 2005-லேயே அம்மாவால் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
    • 2030-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்துவோம் என்று கூறியது வெறும் வாய்ச்சவடால்தானே.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த நிலையில், இந்த சுற்றுலாவின் மூலம் ரூ.3,233 கோடி முதலீட்டினை ஈர்த்ததாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்து புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

    பத்திரிகைகளில் 9 நாள் சிங்கப்பூர்-ஜப்பான் பயணத்தில், முதலில் ரூ.1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வந்தது; பின்னர் ரூ.3,233 கோடி என்று வந்தது.

    மேலும் இதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் ரூ.1,891 கோடிக்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் கூறியுள்ளார். அப்போது, உண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று திரட்டிய முதலீடு ரூ.1,342 கோடிதான். இதில் எது உண்மை? எதை நம்புவது? தி.மு.க. அரசின் முதலமைச்சருடைய பேட்டியைப் பார்க்கும்போது, 'கேப்பையில் நெய் வடிகிறதென்றால், கேட்பாருக்கு புத்தி எங்கே போயிற்று' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு மேற்கொண்ட கொமாட்சு நிறுவனம் 2005-லேயே அம்மாவால் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஓம்ரான் நிறுவனம் ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வருகிறது. அவர்களின் இந்திய சி.இ.ஓ.-க்களை அழைத்து, அவர்களிடமே இந்த முதலீடுகளை சுலபமாகப் பெற்றிருக்கலாம். அதைச் செய்யாமல் முதலமைச்சர் சிங்கப்பூர்-ஜப்பான் வரை சென்றதைத்தான் தோல்வி என்கிறோம்.

    கார் தயாரிப்பிற்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை இந்திய-வெளிநாட்டு (பாக்ஸ்கான்) கூட்டு நிறுவனம் சுமார் 1.54 லட்சம் கோடி முதலீட்டில் தமிழகத்தில் துவக்க இருந்த நிலையில், அந்நிறுவனம் கோரிய நிலம் மற்றும் மானியம் வழங்க, தி.மு.க. அரசு மறுத்ததன் காரணமாக, 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இத்தொழிற்சாலை தற்போது குஜராத்திற்கு சென்றுவிட்டது.

    இவ்வாறு தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை இழந்தால், 2030-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்துவோம் என்று கூறியது வெறும் வாய்ச்சவடால்தானே.

    அதேபோல், பாக்ஸ்கான் நிறுவனம் சுமார் 4 ஆயிரம் கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொடங்கப்பட இருந்த ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலை தி.மு.க. ஆட்சியின் பாராமுகத்தினால் கர்நாடகாவிற்கு சென்று விட்டது.

    அதுமட்டுமல்ல, நமது மாநிலத்தில் பெரு முதலீடுகளை செய்திருக்கின்ற பாக்ஸ்கான் நிறுவனத்தின் சி.இ.ஒ. வந்தபோது கூட அரசின் முதலமைச்சர், அவர்களை சந்திக்காததன் விளைவாக, கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் முதலீடுகள் கர்நாடகாவிற்கும், தெலுங்கானாவிற்கும் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

    இப்படியாக, வெளி மாநிலங்களுக்குச் சென்ற முதலீடுகளையும், நிறுவனங்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

    தமிழகத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்த நிறுவனங்களை, வேறு மாநிலங்களுக்கு அனுப்பி தாரை வார்த்துவிட்டு, துபாய் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று 6 ஆயிரம் கோடி மற்றும் 3 ஆயிரம் கோடி என்று சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்ததற்கு, தன் முதுகை தானே தட்டிக்கொள்ளும் திராவிட மாடல் முதலமைச்சரின் வாய்ச்சவடால் திறமையை தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

    தமிழகத்தை தலை நிமிரச் செய்வோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த இந்த அரசு, தாங்கள் அடிக்கும் பகல் கொள்ளையையும், தவறுகளையும் மறைக்க இதுபோல் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குப் பயணம் என்று தமிழ் நாட்டு மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை இத்துடன் நிறுத்திவிட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்கெனவே போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களையும், இங்கே ஏற்கெனவே தொழில் செய்துவரும் நிறுவனங்களையும், மற்ற மாநிலங்களுக்குச் செல்லவிடாமல் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி, தொடர்ந்து அவர்கள் தமிழகத்திலேயே தொழில் தொடங்க வைக்குமாறு, திராவிட மாடல் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசின் முதலமைச்சரையும், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தொழில் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பல்வேறு தரங்களாக பிரிக்கப்பட்டு ஆவின் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த கோரிக்கை தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் பால் உற்பத்தியாளர்கள் பலர் ஆவினுக்கு வழங்கி வந்த பாலை கூடுதல் விலைக்கு தனியார் பால் பண்ணைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் ஆவினுக்கு பால் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னை சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணைகளில் பால் வினியோகத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது:-

    தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 14½ லட்சம் லிட்டர் பால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மீதமுள்ள 14½ லட்சம் லிட்டர் பால் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் மூலம் 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் பால் கொள்முதல் 43 லட்சம் லிட்டராக இருந்தது.

    பால் கொள்முதல் விலை குறைவு, தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் பெறுவது, ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கு பணம் வினியோகம் செய்வதில் தாமதம், பாலில் உள்ள கொழுப்பு சத்தை முறையாக ஆய்வு செய்யாமல் குறைவான தொகையை வழங்குவது போன்ற பல்வேறு காரணங்களால்தான் ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து வருகிறது.

    தற்போதைய ஒரு நாள் பால் தேவை 29 லட்சம் லிட்டர் ஆகும். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தால்தான் 29 லட்சம் லிட்டர் பால் தாமதம் இல்லாமல் வினியோகிக்க முடியும்.

    ஆவினில் தற்போதுள்ள கட்டமைப்பின்படி ஒரு நாளில் கொள்முதல் செய்யும் 29 லட்சம் லிட்டர் பாலை அன்றைய தினமே பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து வினியோகிக்கும்போது தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும்போது ஒரு நாள் தேவையான 29 லட்சம் லிட்டர் பால் தவிர்த்து மீதமுள்ள பாலை பதப்படுத்தி மறுநாள் வினியோகத்திற்கு தயார் நிலையில் வைத்திருக்க முடியும். இவ்வாறு செய்தால் மட்டுமே பால் வினியோகத்தில் தாமதத்தை தவிர்க்க முடியும்.

    தற்போது காலை 7.30 மணிக்குதான் ஆவினில் இருந்து பால் வினியோகிக்கப்படுகிறது. சில நேரங்களில் 9.30 மணி வரை ஆகி விடுகிறது. இதன்பின்பு பால் முகவர்கள் இந்த பாலை பெற்று சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வினியோகிக்கும் போது மிகவும் தாமதமாகி விடுகிறது.

    பால் தாமதமாக வினியோகிக்கும்போது, பால் பாக்கெட்டுகளை கொண்டு வரும் டப்பாக்களை திரும்ப ஒப்படைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதுதவிர ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வராத காரணத்தினாலும் பால் பாக்கெட்டுகளை வாகனத்தில் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

    என்னென்ன காரணங்களுக்காக பால் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது? என்பதை ஆவின் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'ஆவின் பால் தட்டுப்பாடு என எதுவும் இல்லை. சில இடங்களில் ஆவின் பால் குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் செய்யப்படவில்லை என புகார்கள் வந்தன. அதுகுறித்து விசாரணை நடத்தி ஆவின் பால் தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது' என்றனர்.

    ×