என் மலர்
நீங்கள் தேடியது "slug 96176"
எம்.ஜி.ஆர்.மகன் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ராஜவம்சம்’. இப்படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். கதிர்வேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் 49 நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் விழாவின் சசிகுமார் பேசும்போது, ‘இந்த கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தைக் கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த் அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி.டி.ராஜா சார். ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தைத் தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்குச் சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும் என்று அவர் சொன்னார்’ என்றார்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இயக்குனர் சிவா 'அண்ணாத்த' கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின. ’அண்ணாத்த’ படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என சிவா அப்பவே சொன்னார். அதே மாதிரி சொல்லி அடித்திருக்கிறார்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பாண்டியராஜ், சத்யன், லிவிங்ஸ்டன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.
தமிழ், தெலுங்கில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம்வந்த சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.

ரஜினி, சவுந்தர்யா
இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ள இயக்குனர் சிவா, இப்படத்தை முடித்த பின்னர், மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அண்ணாத்த’ திரைப்படம் இரண்டு நாளில் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்தது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
'தர்பார்' படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

அண்ணன் தங்கை பாசத்தை கொண்ட ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், அண்ணாத்த படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாயும், மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தை திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட உயர்நீதி மன்றம் தடை விதித்தது. தற்போது தடையை மீறி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரஜினியின் அரசியல் நிலைப்பாடு மே 23-ந் தேதிக்கு பிறகு தெளிவாக தெரிய வரும் என்று ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா கூறினார். #SathyanarayanaRao #Rajinikanth
திருப்பூர்:
திருப்பூரில் ரஜினி மன்ற நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணா திருப்பூர் வந்தார்.
முன்னதாக அவர் திருப்பூர் சின்னான்டி பாளையத்தில் உள்ள புகழ் பெற்ற சித்திர குப்தர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

அவர் சொன்னபடியே சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் போட்டியிடுவார். அதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது.
மோடியின் நல்ல திட்டங்களை ரஜினிகாந்த் ஆதரித்தாரே தவிர அவருக்கு வாக்களிக்க கூறவில்லை. ரஜினிகாந்த் - கமல் நட்பு எப்போதும் நிலைக்கும்.
கமல்ஹாசன் அரசியலுக்கு முன் கூட்டியே வந்து விட்டார். ரஜினிகாந்த் விரைவில் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார். #SathyanarayanaRao #Rajinikanth
திருப்பூரில் ரஜினி மன்ற நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணா திருப்பூர் வந்தார்.
முன்னதாக அவர் திருப்பூர் சின்னான்டி பாளையத்தில் உள்ள புகழ் பெற்ற சித்திர குப்தர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
மே மாதம் 23-ந் தேதிக்கு பிறகு ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரிய வரும்.

அவர் சொன்னபடியே சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் போட்டியிடுவார். அதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது.
மோடியின் நல்ல திட்டங்களை ரஜினிகாந்த் ஆதரித்தாரே தவிர அவருக்கு வாக்களிக்க கூறவில்லை. ரஜினிகாந்த் - கமல் நட்பு எப்போதும் நிலைக்கும்.
கமல்ஹாசன் அரசியலுக்கு முன் கூட்டியே வந்து விட்டார். ரஜினிகாந்த் விரைவில் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார். #SathyanarayanaRao #Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். #Thalaivar167 #ARM
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது ரஜினி நடிக்கும் 167-வது படமாகும். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் ‘கத்தி’ படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு விரையில் வெளியிடும். ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Thalaivar167 #ARM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் 167 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக இருக்கிறது. #Thalaivar167 #ARM
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
1⃣... 6⃣.....7⃣ #Thalaivar167 - #ARM
— Lyca Productions (@LycaProductions) April 8, 2019
First Look Out at 8.30 AM tomorrow 🥳🥁🔥🎉💥
Countdown Begins !!!!
இந்நிலையில், நாளை காலை 8.30 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. #Thalaivar167 #ARM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Rajini
ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் இந்தியில் இருந்தே கொண்டு வரப்படுகின்றனர். காலா படத்தில் நானா படேகர், 2.0 படத்தில் அக்ஷய் குமார், பேட்ட படத்தில் நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்துக்கு யார் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருந்தது.
ஏப்ரல் 10ந்தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. கதாநாயகிகளாக நயன்தாராவும், கீர்த்தி சுரேசும் நடிக்க வாய்ப்புள்ளது. மேலும், ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் புதிதாக அணியில் இணைந்துள்ளார். இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக நடிக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

‘மெர்சல்’ மற்றும் ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம்கவர்ந்த வில்லனாக எஸ்.ஜே.சூர்யா வலம் வந்தார். தற்போது அவர் கள்வனின் காதலி இயக்குநர் தமிழ்வாணனின் இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பும் மும்பையில்தான் நடைபெற்று வருகிறது. இது அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவரும் முதல் நேரடி தமிழ்த் திரைப்படமாகும். இந்தப் படத்தின் போஸ்டரையும் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார்.
சர்கார் படத்தை அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #ARMurugadoss
தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வரும் முருகதாஸ் கடந்த ஆண்டு விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கினார். வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ரஜினிகாந்தைக் கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கதாநாயகனாக கொண்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கில் சிரஞ்சீவியைக் கதாநாயகனாக வைத்து ஸ்டாலின் படத்தை இயக்கினார். அங்கு நல்ல வரவேற்பு பெற்ற அந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு மகேஷ் பாபுவைக் கதாநாயகனாக வைத்து ஸ்பைடர் படத்தைத் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருந்தார்.
தேர்தலில் போட்டியிடுவேன், ரஜினி ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். #MNM
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- மக்கள் நீதி மய்யம் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா அல்லது தனித்து போட்டியா?
பதில்:- நல்லவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று நான் கூறியதில் இருந்தே முக்கால்வாசி பேர் நீக்கப்பட்டு விட்டார்கள். எங்கள் கூட்டணியில் அவர்களுக்கு இடமில்லை என்றுதான் அர்த்தம். நாங்கள் முதலில் சொன்னதில் இருந்து மாறுபடவே இல்லை. எங்கள் கூட்டணி மிக பலமான கூட்டணி. மக்களுடனான கூட்டணி, மக்கள் ஆட்சி வரப்போகும் நேரத்தில் மக்களின் கூட்டணியில் இருப்பதுதான் நியாயம்.
கே:- அதிமுக, திமுக ஆகியவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார்கள். உங்களது தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்?
ப:- நல்ல தேர்தல் அறிக்கையை கொடுப்போம். அதை நாங்கள் படித்துப் பார்க்கும்போது மனசாட்சியை தொட்டு இதை வெளியே படிக்கலாமா? இதில் எத்தனை பொய் இருக்கிறது? எத்தனை சாத்தியம்? இது நிகழ்த்திக் காட்டக்கூடிய வாக்குறுதிகள்தானா? என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் புத்தகமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. உங்களிடம் விரைவில் பகிர்ந்து கொள்வோம்.
கே:- நேர்க்காணல் எப்போது?
ப:- வருகிற 11,12,13,14,15 ஆகிய தேதிகளில் நேர்க்காணல் நடைபெறும். 1137 மனு வந்திருக்கிறது. அதில் இருந்து நல்லதை தேர்வு செய்வோம். ஒளிவீச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அதற்கான ஏற்பாடுகள் இந்த 5 நாளில் நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்களை வைத்து, யார் யார் எங்கெங்கே என்று உங்களுக்கு பெருமையுடன் மார்தட்டி சொல்வோம்.
கே:- ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்யப்பட வில்லையே?
ப:- சட்டத்தில் நாம் குறுக்கிட இயலாது. ஆனால் கருணை என்பது வேறு. அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கருணையை காட்ட வேண்டியவர்கள் காட்ட வேண்டும். சட்டம் தன் இயக்கப்படி இயங்க வேண்டும். கருணை என்பது நம் எல்லோருக்கும் உள்ளது.
நாம் இப்போது 7 பேரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் 7½ கோடி பேரின் விடுதலை பற்றியும் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.
கே:- தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம் பெறுமா?
ப:- அதைப்பற்றி நான் நிறைய பேசி இருக்கிறேன். பூரண மதுவிலக்கு சாத்தியமா? என்பதற்கு உலக சரித்திரமே சான்றாக நிற்கிறது. ஒரே நாளில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் இப்போது கோட்டையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் முழுமையாக அந்த வியாபாரத்துக்கு போய் விடுவார்கள். அது பெரிய இடைஞ்சலை விளைவிக்கும்.
படிப்படியாக என்பதுதான் நடக்கக்கூடிய விஷயம். அரசு ஆணை மட்டும் போதாது. அதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இது கெட்ட பழக்கம் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு எந்த அரசாக இருந்தாலும் வேலை எளிதாகிவிடும்.
கே:- உங்களின் நெருங்கிய நண்பர் ரஜினி நாடாளுமன்ற தேர்தலிலும், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறி இருக்கிறார். நண்பர் என்ற முறையில் அவரிடம் ஆதரவு கேட்பீர்களா?
ப:- ஆதரவு கேட்பதைவிட கொடுப்பதுதான் பெரியது. கேட்பது என்பது ஒருவிதமான சங்கோஜத்தை ஏற்படுத்தும். கேட்காமல் கொடுப்பது பெரிய விஷயம். கேட்காமல் பெறுவதும் பெரிய விஷயம்.
கே:- ரஜினி ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறீர்களா?
ப:- நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.
கே:- 21 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா?
ப:- கண்டிப்பாக அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கிறோம்.
கே:- நீங்கள் போட்டியிடுவீர்களா?
ப:- கண்டிப்பாக! எங்கே என்பதை நான் சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். கட்சி செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்பட்டால் எப்படி தீர்ப்பது என்பது தொடர்பாக அவர் ஆலோசித்தார். வக்கீல்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
எங்கள் குடும்பத்தில் நிறைய வக்கீல்கள் உள்ளனர். நான் வக்கீலாக வேண்டும் என்று எனது குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். அது நடக்கவில்லை. ஆனால் இன்று அந்த குறையை போக்கும் விதத்தில் எனது கட்சியை சேர்ந்த வக்கீல்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இங்கு இருக்கிறீர்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 6 பேர் கொண்ட வக்கீல்கள் குழு அமைக்கப்படும். எங்காவது ஓரிரு இடங்களில் பிரச்சனை நடந்தால் ஒரே நேரத்தில் அவற்றை தீர்ப்பதற்காக 6 பேர் குழுவுக்கும் ஒரு துணைக்குழு அமைக்கப்படும்.
அவர்கள் அந்தந்த தொகுதிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக சென்று தீர்க்க வேண்டும். நீங்கள் அனைவரும் எப்படி செயல்பட வேண்டும் என்று நமது கட்சி அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- மக்கள் நீதி மய்யம் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா அல்லது தனித்து போட்டியா?
பதில்:- நல்லவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று நான் கூறியதில் இருந்தே முக்கால்வாசி பேர் நீக்கப்பட்டு விட்டார்கள். எங்கள் கூட்டணியில் அவர்களுக்கு இடமில்லை என்றுதான் அர்த்தம். நாங்கள் முதலில் சொன்னதில் இருந்து மாறுபடவே இல்லை. எங்கள் கூட்டணி மிக பலமான கூட்டணி. மக்களுடனான கூட்டணி, மக்கள் ஆட்சி வரப்போகும் நேரத்தில் மக்களின் கூட்டணியில் இருப்பதுதான் நியாயம்.
கே:- அதிமுக, திமுக ஆகியவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார்கள். உங்களது தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்?
ப:- நல்ல தேர்தல் அறிக்கையை கொடுப்போம். அதை நாங்கள் படித்துப் பார்க்கும்போது மனசாட்சியை தொட்டு இதை வெளியே படிக்கலாமா? இதில் எத்தனை பொய் இருக்கிறது? எத்தனை சாத்தியம்? இது நிகழ்த்திக் காட்டக்கூடிய வாக்குறுதிகள்தானா? என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் புத்தகமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. உங்களிடம் விரைவில் பகிர்ந்து கொள்வோம்.
கே:- நேர்க்காணல் எப்போது?
ப:- வருகிற 11,12,13,14,15 ஆகிய தேதிகளில் நேர்க்காணல் நடைபெறும். 1137 மனு வந்திருக்கிறது. அதில் இருந்து நல்லதை தேர்வு செய்வோம். ஒளிவீச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அதற்கான ஏற்பாடுகள் இந்த 5 நாளில் நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்களை வைத்து, யார் யார் எங்கெங்கே என்று உங்களுக்கு பெருமையுடன் மார்தட்டி சொல்வோம்.
கே:- ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்யப்பட வில்லையே?
ப:- சட்டத்தில் நாம் குறுக்கிட இயலாது. ஆனால் கருணை என்பது வேறு. அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கருணையை காட்ட வேண்டியவர்கள் காட்ட வேண்டும். சட்டம் தன் இயக்கப்படி இயங்க வேண்டும். கருணை என்பது நம் எல்லோருக்கும் உள்ளது.
நாம் இப்போது 7 பேரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் 7½ கோடி பேரின் விடுதலை பற்றியும் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.
கே:- தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம் பெறுமா?
ப:- அதைப்பற்றி நான் நிறைய பேசி இருக்கிறேன். பூரண மதுவிலக்கு சாத்தியமா? என்பதற்கு உலக சரித்திரமே சான்றாக நிற்கிறது. ஒரே நாளில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் இப்போது கோட்டையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் முழுமையாக அந்த வியாபாரத்துக்கு போய் விடுவார்கள். அது பெரிய இடைஞ்சலை விளைவிக்கும்.
படிப்படியாக என்பதுதான் நடக்கக்கூடிய விஷயம். அரசு ஆணை மட்டும் போதாது. அதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இது கெட்ட பழக்கம் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு எந்த அரசாக இருந்தாலும் வேலை எளிதாகிவிடும்.
கே:- உங்களின் நெருங்கிய நண்பர் ரஜினி நாடாளுமன்ற தேர்தலிலும், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறி இருக்கிறார். நண்பர் என்ற முறையில் அவரிடம் ஆதரவு கேட்பீர்களா?
ப:- ஆதரவு கேட்பதைவிட கொடுப்பதுதான் பெரியது. கேட்பது என்பது ஒருவிதமான சங்கோஜத்தை ஏற்படுத்தும். கேட்காமல் கொடுப்பது பெரிய விஷயம். கேட்காமல் பெறுவதும் பெரிய விஷயம்.
கே:- ரஜினி ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறீர்களா?
ப:- நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.
கே:- 21 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா?
ப:- கண்டிப்பாக அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கிறோம்.
கே:- நீங்கள் போட்டியிடுவீர்களா?
ப:- கண்டிப்பாக! எங்கே என்பதை நான் சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். கட்சி செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்பட்டால் எப்படி தீர்ப்பது என்பது தொடர்பாக அவர் ஆலோசித்தார். வக்கீல்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
எங்கள் குடும்பத்தில் நிறைய வக்கீல்கள் உள்ளனர். நான் வக்கீலாக வேண்டும் என்று எனது குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். அது நடக்கவில்லை. ஆனால் இன்று அந்த குறையை போக்கும் விதத்தில் எனது கட்சியை சேர்ந்த வக்கீல்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இங்கு இருக்கிறீர்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 6 பேர் கொண்ட வக்கீல்கள் குழு அமைக்கப்படும். எங்காவது ஓரிரு இடங்களில் பிரச்சனை நடந்தால் ஒரே நேரத்தில் அவற்றை தீர்ப்பதற்காக 6 பேர் குழுவுக்கும் ஒரு துணைக்குழு அமைக்கப்படும்.
அவர்கள் அந்தந்த தொகுதிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக சென்று தீர்க்க வேண்டும். நீங்கள் அனைவரும் எப்படி செயல்பட வேண்டும் என்று நமது கட்சி அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆஸ்திரேலிய போலீஸ், ரஜினி படத்தை பயன்படுத்தி அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். #Rajini #Rajinikanth
மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரின் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு வினோத வழக்கை பதிவு செய்துள்ளது.
டெர்பி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை சோதனை செய்துள்ளனர். அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த அளவு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் நபர் அல்லது கோமா நிலையில் இருக்கும் நபர் வாகனத்தை ஓட்டி வருவதற்கு சமம் என்று போலீசார் கூறியுள்ளனர். அதனை ஆச்சரியமாக குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள காட்சியை இதற்கு படமாக பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் தற்போது அந்த பதிவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை மக்களுக்கிடையே ஏற்படுத்துவதற்கு சமூக வலைதளங்களின் மீம்ஸ்தான் இன்றைய முக்கிய பிரசாரமாக விளங்குகிறது. அந்த வகையில் போலீசார் தொடங்கி பலரும் மக்களுக்கு நல்ல கருத்துகளை கொண்டு செல்லவும், விதி முறை மீறல்களால் ஏற்படும் பாதிப்புகளை தெரியப்படுத்தவும் திரைப்பட மீம்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.