என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97927"

    • தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நிறுவனத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

    அரூர்,

    கோட்டப்பட்டி அருகே மலைவாழ் பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

    கோட்டப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சரடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி பத்திர பதிவு குறித்து கேட்டறிந்த மலைவாழ் பழங்குடியினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    எனவே, புதுக்கோட்டை சரடு கிராமத்தில் பழங்குடி யின மக்கள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஆவ ணங்கள் மூலம் செய்யப்பட்ட பத்திர பதிவினை ரத்து செய்ய வேண்டும்.

    மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்படும் கோட்டப்பட்டி காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர், மாநில செயலர் ஸ்ரீராமன், மாநில துணைச் செயலர் பழனி, மாநில பொருளர் குப்புசாமி, இளைஞரணி தலைவர் இளையராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்குடியிருப்பு கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஒத்த தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைக்க வேண்டும். புதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதுத்தெருவில் சிமெண்டு சாலை, மின்விளக்கு கம்பம் அமைக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட அனைவருக்கும் நகைகளை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது."

    • சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    புதுக்கோட்டை

    தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணை செயலாளர் சாவித்திரி தலைமை தாங்கினார். கொரோனா தடுப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்த முன்கள பணியாளர்களான சுகாதார செவிலியர்களுக்கு விடுபட்ட ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அஞ்சலை, மாவட்ட செயலாளர் பிரேமா உள்பட சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்."

    • அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் விஷ்ணுதேவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜி.டி.எஸ். ஊழியர்களின் உறுப்பினர் சரிபார்ப்பு நடத்தி ஏ.ஐ.பி.இ.யு. ஜி.டி.எஸ். சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளான 12, 24, 36 வெயிட்டேஜ் மற்றும் மருத்துவ வசதி திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்து பி.ஓ.க்களும் 4 மணி நேரம் 5 மணி நேரத்திற்கு மேல் வேலைப்பளு உள்ளதால், அதற்குரிய ஊதியத்தையும் வழங்க வேண்டும் அல்லது இலாகா பி.ஓ.வாக மாற்ற வேண்டும். டார்க்கெட் டார்ச்சர் என்று ஊழியர்களை துன்புறுத்த கூடாது. அனைத்து பி.ஓ.க்களுக்கும் தேவையான பொருட்கள் தாமதமின்றி வினியோகம் செய்ய வேண்டும். அனைத்து பி.ஓ.க்களுக்கும் தாமதமில்லாமல் இணையதள வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்."

    • பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பால் விலையை உயர்த்தக்கோரி

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இடைக்கட்டு கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்தி தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கறவை மாடுகளை கையில் பிடித்துக் கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51 ஆக விலை உயர்த்தி வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 5 ஆண்டுகளாக மகாசபை கூட்டம் நடக்காததை கண்டித்தும், 6 மாதத்திற்கு ஒருமுறை மகாசபை கூட்டம் நடத்த கோரியும், பால் உற்பத்தியாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தீவனத்தை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும். பால் அதிகளவில் கொள்முதல் செய்வதால் கூடுதலாக பால் குளிரூட்டும் நிலையம் 5000 லிட்டர் கொள்ளளவில் அமைக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு லோன் வழங்க வேண்டும். தீபாவளியையொட்டி பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
    • ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சரவணன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், நாகராஜன், கருணாகரன், ரூபன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சரவணன் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் முன்னாள் மாநில தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

    • எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்திள் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திமுக அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

    சூலூர்,

    சூலூரில் அதிமுக கட்சியினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்திள் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில உலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தோப்பு அசோகன் தலைமை தாங்கினார்.

    சூலூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் கந்தவேல் மற்றும் குமரவேல் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திமுக அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் பிரபு ராம், சூலூர் ஒன்றிய துணை செயலாளர் அங்கமுத்து, ஒன்றிய அவைத் தலைவர் அங்கண்ணன், சூலூர் நகர செயலாளர் கார்த்திகை வேலன், கலங்கல் ஊராட்சித் தலைவர் ரங்கநாதன், செம்மாண்டாம்பாளையம் செல்வராஜ், மீனவர் அணி செயலாளர் ஆறுமுகம், கலங்கல் முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜ், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு வினோத், ஒட்டர்பாளையம் கூட்டுறவு சங்கத் தலைவர் தண்டபாணி, பட்டணம் கம்பர்தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடந்த சிஐடியு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சிவானந்தம், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒரகடம் யமஹா தொழிற்சாலையில் பெரும்பான்மை தொழிலாளர்களின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த யமகா இன்டியா சிஐடியூ தொழிலாளர்கள் சங்கத்தை நிர்வாகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியால் தொழிலாளர் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, நிர்வாகத்திற்கு சாதகமான நபர்களுடன் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தி, அதனை ஏற்க மறுத்து போராடும் தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டாமல் இருக்கும் யமஹா தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஈடுபடுவதை கண்டித்தும்,

    தொழிலாளர்களின் ஆதரவு உள்ள சங்கம் எது என்பதை தீர்மானிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பொறுப்பாளர்கள் இன்பராஜ், கிருஷ்ணசாமி, கிருஷ்ணகுமார், கனகராஜ், செல்லமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நீலம்பூர் செல்வராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இளைஞர் இளம் பெண்கள் பாசறை காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மடத்துக்குளம்:

    எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம் மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் அறிவுறுத்தலின்படிமடத்துக்குளம் பேரூராட்சி செயலாளர் நீலம்பூர் செல்வராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய செயலாளர்கள் ஆர். பி .ஜெகநாதன், போகநாதன்,காளீஸ்வரன், சிவலிங்கம் ,பேரூர் செயலாளர்கள் அன்னதான பிரபு, சரவணன், ராமலிங்கம் ,இளைஞர் இளம் பெண்கள் பாசறை காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
    • நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    தமிழக சட்டசபையின் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை சட்டமன்றத்தில் சபாநாயகர் அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை கண்டித்துதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆணைக்கிணங்க உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், மாவட்ட இணைச்செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் சுரேஷ் பொன் முத்துலிங்கம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் ஆறுமுகம், நகர துணைச்செயலாளர் ஆறுமுகம் ,நகர நிர்வாகிகள் சரண்யா தேவி ,அண்ணா தொழில் சங்கம் தாமோதரசாமி ,ஐ.டி. விங் தலைவர் சுப்ரமணியன் ,பெரியகோட்டை துணை தலைவர் விஸ்வநாதன், வார்டு செயலாளர்கள் வனிதா மணி, மகாலட்சுமி ,இளங்கோவன், காளிதாஸ், சுப்பிரமணி, ரஞ்சித் குமார், செல் சேகர், மணிவண்ணன் ,ருத்ரேஸ்வரன் ,ஜெயான், எல்ஐசி. சின்னச்சாமி, ரவிசங்கர்,

    அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் ,அண்ணா தொழிற்சங்க தினசரி மார்க்கெட் நிர்வாகிகள் ,சந்தை வேலாயுதம், சரவணன்,நகர்மன்ற உறுப்பினர்கள் சகுந்தலா, மதிவாணன், சௌந்தரராஜன், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய ஐடி. விங் ஜாகிர் உசேன், வினோத்குமார், ஆட்டோ ரமேஷ், கோபால் ,கன்னிமுத்து, வேலுச்சாமி, ஆசாத் உசேன், முகமது, பழனிச்சாமி மற்றும் சிடிசி. சதீஷ்குமார் ,ரத்தினசாமி ,அசோக்குமார், காடேஸ்வரன், கதிர்வேல், சுரேஷ் மற்றும் நிர்வாகிகள், சார்பு பணி நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • கோரிக்கைகளை வலியுறுத்தி

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய தலைவர் ஈஸ்வரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொது செயலாளர் முகமது அலிஜின்னா முன்னிலை வகித்து கண்டனவுரையாற்றினார். அப்போது ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள் மற்றும் தூய்மைப்பணியா ளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்க வேண்டும்,

    வேலையில் சேர்ந்து 3 ஆண்டுகள் முடிந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து ஊராட்சி மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.

    ஆர்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத்துணை தலைவர் சுப்பிரமணியன், சிபிஎம் தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திரளான நிர்வாகிகள் பங்கேற்பு
    • கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது‌.

    நாகர்கோவில்:

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அந்தஸ்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்படாததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடந்தது .

    இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலை வரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. அமைப்பு செயலாளர் பச்சைமால் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர் ஜெசிம், பொன்சுந்தர்நாத், ராஜ்குமார், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன்.

    மாநகராட்சி கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன், முன்னாள் கவுன் சிலர் சகாயராஜ், பகுதி செயலாளர்கள் முருகே ஸ்வரன், ஜெயகோபால், ஜெவின் விசு மற்றும் ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் நிர்வாகிகள் ராஜாராம், இரணியல் லட்சுமணன், வடிவை மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒரு சிலர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது‌.

    ×