என் மலர்
நீங்கள் தேடியது "snack"
- பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சத்தான உணவு பொருள்கள் வழங்கப்பட்டது
- இந்த உணவு பொருள்கள் அதிக புரதச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அதிக நேரம் மாணவர்கள் படிக்க முடியும்.
அரியலூர்:
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர உணவு வழங்கும் பணியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா வழங்கி தொடக்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இந்த மாலை நேர சிறுதானிய சிற்றுண்டியான சுண்டல், பட்டாணி, பச்சை பயிறு, தட்டைப் பயிறு, எள்ளுருண்டை, குதிரைவாலி, சாமை ஆகிய சத்தான உணவு பொருள்களை உட்கொண்டு தங்களை தேர்வுக்கு தயார்படுத்திகொள்ள வேண்டும் .இது அதிக புரதச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அதிக நேரம் மாணவர்கள் படிக்க முடியும். எனவே தொடர்ந்து படித்து அதிக மதிப்பெண்களை பெற மாணவ, மாணவிகள் தயாராக வேண்டும் என்றார்.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணை தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னதுரை, துணை தலைவர் மணிகண்டன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா, வார்டு உறுப்பினர் அருள்சாமி, கல்வி ஆர்வலர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரமேஷ், தனலட்சுமி, பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி, கோகிலா, கபிலஷா, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். பொதுத் தேர்வு முடியும் வரை இந்த உணவுகள் வழங்கப்படுகிறது.
- 895 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
- காய்கறி, சாம்பார், ரவா, கிச்செடி உள்ளிட்ட உணவுகள் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று தமிழ்நாட்டில் இந்த திட்டம் தொடங் கப்பட்டது.
தஞ்சை மாநகராட் சியில் உள்ள 8 தொடக்கப் பள்ளிகளில் 375 மாணவர் களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத ்தப்பட்டு வருகிறது.
இன்று முதல் இரண்டாம் கட்டமாக தஞ்சை மாநகராட் சியில் உள்ள 7 மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் 895 மாணவர் களுக்கு காலை உணவு திட்டம் தொடங் கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் சரவணக் குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அவர்கள் மாணவர்க ளுக்கு காலை உணவு பரிமாறினர்.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ரவா உப்புமா, ரவா காய்கறிக்கு கிச்செடி , வெண்பொங்கல் ,அரிசி உப்புமா, அரிசி உப்புமா காய்கறி , சாம்பார், ரவா காய்கறிக்கு கிச்செடி உள்ளிட்ட உணவுகள் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இன்று வெண் பொங்கல் காய்கறி சாம்பார் மற்றும் கேசரி மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ஜெகதீசன், கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் ரமேஷ், கார்த்திகேயன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உண்ணாவிரத போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 300 ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
- காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் ஈவேரா பேசினார்.
கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி, மேநாள் மாவட்டப் பொருளாளர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 300 ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை அமல் படுத்துவதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது அதில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்து, இதற்கான பிரத்தியேக ஊழியர்கள் நியமனம் செய்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மேற்கொள்ள வேண்டும்.
கூடுதல் தேவைப்படுகின்ற பணியிடங்களிலும் மாறுதல் பெற அனுமதிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு குறித்த மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நடைபெறாமல் மற்ற பணி மாறுதல், பதிவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.
எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது. முன்னதாக வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார். இறுதியில் மாவட்ட துணைச் செயலா ளர் சத்யநாராயணன் நன்றி கூறினார்.
- 4 வழி சான்றுகளை காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காலை சிற்றுண்டி திட்டத்தை உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயபாரதி,தேன்மொழி, இன்பரசி, ரவிச்சந்திரன், சசி கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விஜயகுமார் வரவேற்றார்.
மாநில செயலாளர் வீரமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் உதவி பெறும் பள்ளிகளுக்கான நான்கு வழி சான்றுகளை காலதாமதம் இன்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது போல் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து நல திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும், பணியிடை பயிற்சிகளில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக செயல்படுத்துவதை தவிர்த்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி உள்ளவர்களை ஈடுபடுத்த வேண்டும்,
எமிஸ் வலைதளத்தை பயன்படுத்தி ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை கல்வித்துறை கண்காணிக்க வேண்டும், அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை ஆசிரியர்களை கொண்டு பள்ளிக்கு எடுத்துச் செல்லும் நடைமுறையை கைவிட்டு அலுவலகப் பொறுப்பில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் எஸ்.எம்.சி ஒப்புதல் இல்லாமல் பள்ளிக்குத் தேவையான துப்புரவு சார்ந்த பொருட்களை தனிப்பட்ட நபர்கள் மூலம் வழங்குவதை தவிர்த்துவிட வேண்டும், ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் எமிஸ் சார்ந்த ஆன்லைன் பதிவுகளை செய்ய ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதை அரசு கைவிடவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜம் நன்றி கூறினார்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு
- செய்வதற்கு மிகவும் எளிதானது.
தேவையான பொருட்கள்:
புலுங்கல் அரிசி -ஒரு கப்
நெய் - இரண்டு ஸ்பூன்
வெல்லம் -ஒரு கப்
தேங்காய் துருவல்- ஒரு கப்
ஏலக்காய் தூள் -ஒரு சிட்டிகை
முந்திரி
செய்முறை:-
அரிசியை தண்ணீர் விட்டு கழுவி எடுத்து அதனை ஒரு கடாயில் போட்டு நன்றாக நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின்னர் சூடு தணிந்ததும் அதனை மிக்சியில் பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து வெல்லம் மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.
பொடித்த அரிசியுடன், தேங்காய், ஏலக்காய், வெல்லப்பாகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடிக்க வேண்டும். உருண்டை பிடித்த அரிசி உருண்டையின் மீது முந்திரிகளை அலங்கரித்து பரிமாறலாம். அரிசி உருண்டை தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. செய்வதற்கும் மிகவும் எளிதானது.
- எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யும் நெய் பிஸ்கட்.
- ஓவன் இல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:-
நெய் - ஒரு கப்
கோதுமை மாவு-ஒரு கப்
நாட்டு சர்க்கரை - ஒரு கப்
உப்பு -ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 4 நம்பர்
செய்முறை:-
ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் நாட்டு சர்க்கரை, 4 ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் நெய் சேர்த்து அதனை நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனுடன் பொடித்த நாட்டு சர்க்கரை கலவையை அதனுடன் சேர்க்க வேண்டும். அதனையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.நிறைய நேரம் கிளர வேண்டாம்.
அடித்து வைத்த கலவையுடன் ஒரு கப் கோதுமை மாவை கட்டி இல்லாமல் சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவு கலவையை நன்றாக பிசைந்து உருண்டைகளாக்கி அதனை ஒரு தட்டில் வைத்து, அதனை பிஸ்கட் வடிவத்திற்கு உருட்டி தட்டையாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி அதனை 5 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் நாம் தயார் செய்து வைத்த பிஸ்கட்களை ஒரு தட்டில் வைத்து அதனுள் வைத்து 10-ல் இருந்து 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்துக்கொள்ளவும். நெய் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பரிமாறலாம்.
இந்த நெய் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீட்டுக்கும் வந்ததும் கொடுக்கலாம். செய்து பாருங்கள். https://www.maalaimalar.com/health
- குழந்தைகள் ஸ்கூலுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்ல ஏற்றது.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு -கால் கப்
கோதுமை மாவு - கால் கப்
நாட்டு சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்- ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
கோகோ பவுடர்- 2 ஸ்பூன்
பேக்கிங் பவுடன் -1 ஸ்பூன்
நெய்- 100 கிராம்
முந்திரி - 10 நம்பர்
காய்ச்சாத பால் - 100 மி.லி
செய்முறை:-
ஒரு வாய் அகன்ற பாத்திரத்திரத்தில் கோதுமை மாவு கால் கப், ராகி மாவு கால் கப், நாட்டு சர்க்கரை, கோகோ பவுடர் 2 ஸ்பூன், பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன், ஏலக்காய் ஒரு டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு டம்ளர் பாலில், 100 கிராம் நெய் சேர்த்து கலந்து இரண்டையும் கலந்து வைத்துள்ள மாவுக்கலவையில் சேர்க்கவும். இதனை நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறுது பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 5 நிமிடங்கள் மூடி போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
அதன்பிறகு மாவுக்கலவையை எடுத்து அதனை உருண்டைகளாக உருட்டி பிஸ்கட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிஸ்கட் அச்சு இருந்தால் அதிலும் வடிவமாக தட்டிக்கொள்ளலாம். அதன் நடுவே முந்திரிகளை உடைத்து அலங்கரித்துக்கொள்ளலாம்.
பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு மூடி இதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.
அதன்பிறகு தயாராக வைத்துள்ள பிஸ்கட்டுகளை ஸ்டாண்ட் மீது வைத்து பாத்திரத்தை மூடி ஒரு 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி பிஸ்கட் தயார். ஓவனில் பேக் செய்வதாக இருந்தால் 180 டிகிரியில் பேக் செய்து கொள்ளுங்கள். சூடு ஆறியதும் எடுத்து பரிமாறலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்பதற்கு ஒரு சிறந்த ஸ்நாக்காக இந்த ராகி பிஸ்கட் இருக்கும். சுகர் நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம். செய்து பாருங்கள்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
- அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா- ஒரு கப்
முட்டை- 1
உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
பால்- அரை கப்
தேங்காய் பால்- ஒரு கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
நெய்- தேவையான அளவு
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மாவுக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாவுக்கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்து தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். கேரளா ஸ்டைலில் சுவையான சுருளப்பம் தயார். இதனுடன் சூடான லெமன் டீ, அல்லது புதினா டீ நல்ல காமினேஷனாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது. எளிய முறையில் தயார் செய்துகொள்ளலாம். அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம். நேரமும் மிச்சமாகும்.
- சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம்.
- ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமாக செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு- ஒரு கப்
ராகி மாவு- அரை கப்
உப்பு- ஒரு சிட்டிகை
தேங்காங் துருவல்- ஒரு கப்
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
வேர்கடலை பொடித்தது- கால் கப்
பொடித்த வெல்லம்- அரை கப்
வாழை இலை-1
செய்முறை:-
முதலில் கொலுக்கடை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து அதில் சுடுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பூரணம் செய்வதற்கு ஒரு சிறிய பவுளில் துருவிய தேங்காய், வறுத்து பொடித்த வேர்கடலை பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி பூரணம் ரெடி செய்துகொள்ள வேண்டும்.
இந்த மாவு கலவையை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி ஒரு வாழை இலையில் நெய் அல்லது எண்ணெய் தடவி வட்டமான வடிவில் தட்டி அதன் நடுவே ஏற்கனவே நாம் செய்து வைத்துள்ள பூரண கலவையை வைத்து வாழை இலையுடன் அதனை மடித்து எடுத்துக்கொள்ளவும்.
ரெடியாக உள்ள மடித்து வைத்துள்ள வாழை இலை அடையை ஒரு இட்லி பாத்திரத்தில் நீர் உற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். சுவையான இலை அடை தயார்.
ஆவியில் வேக வைத்து எடுத்த உணவு என்பதால் அனைவரும் இதனை உண்ணலாம். சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம். பள்ளி சென்றுவிட்டு வரும் குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமான ஸ்நாக்கு களை செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவர். நீங்களும் செய்து பார்த்து பதில் சொல்லுங்க.
- பள்ளிகளுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்வதற்கு ஏற்றது.
- அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.
டீ டைம் என்று சொன்னதும் அனைவரின் நினைவுக்கு வருவது ஒரு கிளாஸ் டீயும், இரண்டு பிஸ்கட்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த டீ பிஸ்கட்டுக்கு அடிமையாக இருக்கிறார்கள். இன்று நாம் வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். கடைகளில் வாங்கும் பிஸ்கட்டில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்கள் எதையும் சேர்க்காமல் நாம் நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அருமையான பிஸ்கட்டை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கண்டன்ஸ்டு மில்க்- 1 பாட்டில்
சோளமாவு (கான்பிளவர்)- ஒரு கப்
வெண்ணெய்- 25 கிராம்
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள கான்பிளவர் மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பவுளில் கண்டன்ஸ்டு மில்கை ஊற்றி அதில் சிறிது சிறிதாக கான்பிளவர் மாவை சேர்த்து கிளர வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு கலவை வந்தவுடன் அதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக கிளற வேண்டும். வெண்ணெய் சேர்த்தவுடன் மாவுக்கலவையை நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் பிஸ்கட்டுகளாக திரட்டி ஒரு வெண்ணெய் தடவிய தட்டில் வரிசையாக அடுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அடி கனமான இரும்புக் கடாயின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதை அடுப்பில் 10 நிமிடம் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். பின்னர் அதில் தயாராக பிஸ்கட்டுகளை அடுக்கி வைத்துள்ள தட்டை உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து திறந்து பார்க்க வேண்டும். கிரிஸ்பியான பட்டர் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பிஸ்கட்டுகளை எடுத்து காற்று புகாத டப்பாவில் வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.
குழந்தைகள் பள்ளிகளுக்கு ஸ்நாக்காக கொண்டு செல்வதற்கும், ஈவ்னிங் ஸ்நாக்காக சாப்பிடுவதற்கும் மிகவும் உகந்தது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.
- வித்தியாசமான சுவையை கொடுக்கும்.
- குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடிக்கும்.
பாயாசம் என்றாலே நமக்கு பால் பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் நினைவுக்கு வரும். ஆனால், இம்முறை வித்தியாசமான பாயாசங்களை முயற்சி செய்து பார்க்கலாம். இது உண்மையில் வித்தியாசமான சுவையை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், விருந்துகளில் சிறப்பு சேர்க்கும்.
தேவையான பொருட்கள்:
பிரட் - 4 துண்டுகள்
சர்க்கரை- 2 கப்
சேமியா- அரை கப்
பால்- ஒரு லிட்டர்'
நெய்- தேவையான அளவு
முந்திரி, பாதாம்- அலங்கரிக்க
கான்பிளவர்- 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகளை பிய்த்து போட்டு பிரட் துண்டுகள் மூழ்கும் அளவிற்கு பால் ஊற்றி பிரட் துண்டுகள் நன்றாக ஊறியதும் அதனை நன்றாக கலந்து அதில் கான்பிளவர் மாவை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும். அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
அந்த உருண்டைகளை ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, பாதாமை வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உருட்டி வைத்து உருண்டைகளை அதில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே கடாயில் மீண்டும் சிறிதளவும் நெய் சேர்த்து அதில் சேமியாவை நிறம் மாறும் வரை வறுத்து அதில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதி வந்ததும் அதில் சர்க்கரை ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி மற்றும் வறுத்த பிரட் உருண்டைகளை சேர்க்க வேண்டும். பால் கொதித்து உருண்டைகள் பாலில் நன்றாக ஊறி வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். அருமையான பிரட் உருண்டை பால் பாயாசம் தயார். இதனை சூடாகவும் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.
- கேரட் கப் கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- ஈவ்னிங் ஸ்நாக்காக டீயுடன் சேர்ந்து பரிமாற மிகவும் ஏற்றது.
கடைகளில் கிடைக்கும் கேக் வகைகளை பதப்பத்தி பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்பனை செய்கின்றனர். அதையும் நாம் குழந்தைகள் விருப்பத்திற்காக வாங்கி கொடுக்கிறோம். இவ்வாறு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் இல்லாத பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்கப்படும் பொருட்களை வாங்குவதை விடுத்து வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எளிதாக செய்யக்கூடிய கேரட் கப் கேக் எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேரட்- 1/4 கிலோ
பால்- 250
மைதா- 250 கிராம்
நாட்டு சர்க்கரை- 500 கிராம்
பட்டை தூள்- கால் டீஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
பட்டர்- 100 கிராம்
கெட்டி தயிர்
வெண்ணிலா எசன்ஸ்- கால் டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்- அரை ஸ்பூன்
பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்
டிரை கிரேப்ஸ்- அலங்கரிக்க
செய்முறை:
ஒரு பவுளில் பட்டர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நன்றாக கரைந்து வந்ததும் அதில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, வெண்ணிலா எசன்ஸ், கெட்டி தயிர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து எடுக்கவும். கட்டியாக இருந்தால் அதில் சிறிது சிறிதாக பால் சேர்த்து கலக்கவும்.
பின்னர் இந்த கலவையில் துருவிய கேரட், டிரை கிரேப்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கேக் கலவையை ஒரு அடிகனமான பாத்திரத்தின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடத்திற்கு அதனை ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். ஃப்ரீஹீட் ஆன பிறகு கேக் கலவையை பேப்பர் கப் வடிவங்களில் ஊற்றி அதனை ஒரு பிளேட்டில் வைத்து 25 நிமிடத்திற்கு ஆவி வெளியே போகாத அளவுக்கு மூடி வைத்து சமைக்க வேண்டும்.
நன்றாக வந்துள்ளதா என்பதை ஒரு பல்குத்தும் குச்சி வைத்து கேக் கலவையில் குத்திப்பார்த்து சோதித்து பார்க்கவும். கேக் ஒட்டாமல் வர வேண்டும். அவ்வாறு ஒட்டாமல் வந்தால் கேக் தயார். கேரட் கப் கேக் மீது துருவிய பிஸ்தா சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான கேரட் கப் கேக் தயார்.