என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special"

    • நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது.
    • சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது. சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்கள் அதிகாலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் நேரடியாக சாய்பாபாவுக்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக,ஆரதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில்450 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பனம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பனம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் விநாயகர் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை பஞ்சமுக விநாயகர் கோவில், நன்செய்இடையாறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்கள், பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனூர், ஆனங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலிகளில் சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    • சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
    • இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கோட்டயத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி செகந்திராபாத்-கோட்டயம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07125) வருகிற 27-ந் தேதி மாலை 6.50 மணிக்கு செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 28-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.22 மணிக்கு சேலம் வந்தடையும்.

    பின்னர் இங்கிருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் வழியாக இரவு 9 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் கோட்டயம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07126) வருகிற 28-ந் தேதி இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர் வழியாக வருகிற 30-ந் தேதி காலை 4 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது.
    • வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் இப்பணி நடைபெறுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது. அதன்படி வருகின்ற 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள 686 வாக்குச் சாவடி மையங்களிலும் இப்பணி நடைபெறுகிறது. இந்நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம்.

    இம்முகாமின்போது, 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) பெயரானது ஜனவரி-2023 மாதம் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்மற்றும் 31.12.2005 அன்றோஅல்லதுஅதற்கு முன்னரோ பிறந்தவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

    இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல்-2023, ஜூலை-2023, அக்டோபர்-2023) வெளி யிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளு மாறும் கேட்டுக் கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இந்த முகாமில் உடனடியாக செய்து கொள்ளலாம்.
    • ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஏற்பளிக்கப்பட்ட உடன் தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சி யர் அலுவலகங்களில் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இந்த முகாமில் உடனடியாக செய்து கொள்ளலாம்.

    அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாம் குறித்து, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி கூறியதாவது:வட்ட வழங்கல் துறை சார்பில் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை பயனாளர்கள் பெயர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெறுவது வழக்கம். தற்போது நடைபெற்ற முகாமில் இது சம்பந்தமாக பல மனுக்கள் வந்துள்ளன. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    சிறப்பு முகாம் குறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017-இன் கீழ் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கும், தற்போதுள்ள குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், அங்காடி மாற்றம் மற்றும் மாவட்ட மாறுதல் போன்ற பணிகளை செய்து கொள்ள பொது மக்கள் வட்ட வழங்கல் அலுவலத்திற்கு செல்லாமலே தாங்கள் வசித்து வரும் இடத்தில் இருந்து இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பணிகளை செய்து கொள்ளலாம்.

    இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து பொது சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் இணை யதளத்தில் விண்ணப்பம் செய்திடவேண்டும். அவற்றின் மீது தொடர்பு டைய வட்ட வழங்கல் அலுவலரால், ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஏற்பளிக்கப்பட்ட உடன் தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    புதிய மின்னனு குடும்ப அட்டைகள் சென்னை யில் இருந்து அச்சிட்டு வரப்பெற்ற வுடன், உரிய நியாயவிலை அங்காடிகள் மூலம் விண்ணப்ப தாரர்களுக்கு அந்த அட்டை விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மார்கழி மாதம் முழுவதும் வண்ண கோலமிட்டு அந்த பகுதியே பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகளும் சிறுவர், சிறுமியரின் பஜனைகளும் நடைபெறுவது வழக்கம்.
    • சேலத்தில் பக்தர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் அதிகாலையிலேயே அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    சேலம்:

    மார்கழி மாதம் பிறந்து விட்டால் வீடுகளில் பெண்கள் சூரியன் உதிக்கும் முன் கண் விழித்து குளிர்ந்த நீரில் நீராடி கோலத்தால் வாசலை அலங்கரித்து அன்றைய பொழுதை இனிதே வரவேற்கத்தொடங்கி விடுவர்.

    அவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் இணைந்து வண்ணமயமான கோலங்களை இட்டு மகிழ்வர். கோலங்களில் புள்ளி வைத்து போடும் கோலம், ரங்கோலி, சிக்குக்–கலம், உருவ கோலம் இன்னும் பல வகையான கோலங்கள் உள்ளன.

    மார்கழி மாதம் முழுவதும் வண்ண கோலமிட்டு அந்த பகுதியே பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகளும் சிறுவர், சிறுமியரின் பஜனைகளும் நடைபெறுவது வழக்கம். இன்று மார்கழி பிறப்பை முன்னிட்டு சேலம், நாமக்கல் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    சேலத்தில் பக்தர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் அதிகாலையிலேயே அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    திறந்த வெளியில் நடமாடுவதால் காற்றில் உள்ள ஓசோன் உடலில் படிவதால் உடல் ஆரோக்கியம் தரும் என்பதால், அதிகாலையில் எழுந்து வீதிகளில் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி சென்றனர். பெண்கள் அதிகாலையில் எழுந்து வீதியில் கோலமிட தொடங்கினர். சேலம் டவுன், பட்டைகோவில் பகுதி, அம்மாபேட்டை, கருங்கல்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மார்கழி பஜனை குழுவினர் அதிகாலை வேளையில் கடுங்குளிரையும் பொருட்ப–டுத்தாமல் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி சென்றதை காண முடிந்தது. மார்கழி மாதம் முடிய பஜனை குழுவினரின் பாடல் பணி தொடரும். மார்கழி பிறப்பையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவில்,

    சேலம் சுகவனேசுவரர் கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், சின்னத்திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலை வேளையிலேயே பக்தர்கள் வழிபாட்டுக்கு சென்றனர். சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் பெண்கள் அதிகாலையில் பாவை நோம்பு கடைபிடித்தனர். அங்கு கோவிலில் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும், பல கோவில்களிலும் விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர்.

    இதேபோல நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நரசிம்ம மூர்த்தி கோவில், ஆஞ்சநேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநா–ரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    • பரமத்தி வேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் என பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறுவது, தொழில்வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரும் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறுவது, தொழில்வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதுவரை தொழில் உரிமம் பெறாதவர்கள் உரிய ஆவணங்களாக, வாடகைதாரர் என்றால் கடை வாடகை ஒப்பந்த நகல், கட்டிட உரிமையாளர் ஒப்புதல் கடிதம், சொத்துவரி ரசீது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையும் ஜி.எஸ்.டி உரிமம் எண், வணிக நிறுவன முகவரி சான்று, ஆதார் அல்லது ரேசன் அட்டை ஆகியவற்றுடன் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரும் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.

    ஜி.எஸ்.டி உரிமம் இல்லாத வணிகர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி ரசீது அவசியம் தேவை என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரமும், தீபா ராதனையும் காட்டப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்த சாமியை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதருக்கு மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதேபோல், பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வ நாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவு ரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் விரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஈஸ்வரன், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 6,7-ந் தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பாக சேலத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் சதுரகிரிகு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    திருவண்ணாமலைக்கு அரூர், ஊத்தங்கரை வழியாகவும், திருவண்ணா–மலைக்கு கள்ளக்குறிச்சி வழியாகவும், சேலத்தி–லிருந்து சதுரகிரிக்கு மதுரை வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட–வுள்ளது. எனவே, இந்த வழித்–தடங்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களை பயணிகள் அனைவரும் பயன்படுத்தி பயண நெரிசலை தவிர்த்து இனிய பயணம் செய்திடும்படி கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
    • சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நேற்று முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், தர்மபுரி,

    கிருஷ்ணகிரி, ஓசூருக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படு கிறது. பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரிக்கும், ஓசூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணா மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கும், சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் விழுப்புரத்திற்கும், கோவை, திருப்பூரிலிருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலைக்கும் என 400 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும், பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்ப ஏதுவாக, 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து பெங்களூருக்கும், சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களிலிருந்து ஓசூருக்கும், மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து சேலத்திற்கும், சேலத்திலிருந்து கோவை மற்றும் திருப்பூருக்கும் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது. அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் நகரப்பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (12-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×