search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surplus Water Project"

    • மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
    • மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் ரூ.3 ஆயிரம், பசுமாட்டுப்பால் லிட்டர் ரூ.50, எருமை பால் லிட்டர் ரூ.75 வழங்கிட வேண்டும்.கறிக்கோழிகள் வளர்ப்பிற்கு கிலோ ரூ.12 விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட வேண்டும். இந்திய அரசு விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைக்க வேண்டும்.தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ளதை போல வருடம் தோறும் ரூ.10 ஆயிரம் உழவு மானியமாக தமிழக அரசு வழங்க வேண்டும். தென்னை, பனைகளில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

    • விவசாய நிலங்கள் பயன்பெறும்.
    • 24 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளான இன்று நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார்.

    இந்த விழாவில் இந்தியாவின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டு ரூ.1060.76 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ள தாமிரபரணி ஆறு-கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள வறண்ட பகுதிகளான திசையன்விளை, எம்.எல். தேரி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.

    தொடர்ந்து ரூ.77 கோடி மதிப்பில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்கா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம், நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 24 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    மேலும் நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகை தந்தபோது அறிவிக்கப்பட்ட நெல்லை மேற்கு புறவழிச்சாலை தொகுதி-1 திட்டம் உள்ளிட்ட 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தமாக இன்று ரூ.1,679.75 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.


    பின்னர் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேருரை ஆற்றினார். முன்னதாக அவர் பல்வேறு துறைகளுக்கும் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டதோடு, பயனாளிகளுக்கு மொபட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×