என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suspension"

    சந்திரகிரியில் 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போடுவதற்கு துணையாக இருந்த 10 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.

    திருமலை:

    ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    சித்தூர் மாவட்டம், சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் 5 வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இது போல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் 2 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினரும் புகார் அளித்தனர்.

    இதையடுத்து, சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாகாலா மண்டலம், புலிவருத்திப்பல்லி, ராமச்சந்திராபுரம் மண்டலம் என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம், கேலேபல்லி, குப்பம்பாதுரு ஆகிய 7 மையங்களில் கடந்த 19-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்தநிலையில் முதல் கட்டமாக புலிவருத்தி பல்லி, என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம் ஆகிய 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட துணையாக இருந்ததாக அதிகாரிகள் முரளி கிருஷ்ணா, குணசேகர்ரெட்டி, செஞ்சய்யா, மகபூப்பாஷா, ஜானகிராம்ரெட்டி, மது, முரளிதர்ரெட்டி, ஸ்ரீதேவி, கங்காதரய்யா, வெங்கட்ரமணா மாதங்கி ஆகிய 10 பேரை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.

    சிரியாவில் வெடித்த உள்நாட்டு போரால் நிறுத்தி வைக்கப்பட்ட விமானப் போக்குவரத்தை 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை தொடங்க ஈராக் அரசு தீர்மானித்துள்ளது.
    பாக்தாத்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலமையிலான ஆட்சிக்கு எதிராக அங்குள்ள போராளி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் சிரியாவுக்கு செல்லும் விமானங்களை ஈராக் அரசு நிறுத்தி விட்டது.

    இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஈராக் தலைநகர் பாக்தாத் இடையிலான வான்வழி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) முதல் பாக்தாத்தில் இருந்து டமாஸ்கஸ் நகருக்கு விமானங்களை இயக்க ஈராக் அரசு தீர்மானித்துள்ளது. 

    இதுதொடர்பாக ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் லயாத் அல்-ருபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்கட்டமாக வாரமொரு விமானம் இயக்கப்படும். படிப்படியாக விமானச்சேவைகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
    திருமங்கலத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே ரெயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்பட 3 அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5.15 மணிக்கு செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையத்துக்கு மாலை 5.45 மணிக்கு சென்றடைந்தது. அதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதமாக வந்ததால், மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.

    அதேபோல, கொல்லத்தில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இருந்துவந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் பழுது காரணமாக சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், விதிமுறைகளை பின்பற்றி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகருக்கு புறப்பட்டு சென்றது. கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மதுரை புறப்பட்டு சென்றது.

    இதற்கிடையே, செங்கோட்டையில் இருந்து மதுரை வரும் பாசஞ்சர் ரெயில் கள்ளிக்குடி ரெயில்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. 2 பாசஞ்சர் ரெயில்களும் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டதால் பயணிகள் எரிச்சலடைந்து ரெயில்நிலைய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத்தொடர்ந்து குறைந்த வேகத்தில் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. கள்ளிக்குடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மதுரை பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு திருமங்கலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேசமயத்தில், திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்ல வேண்டிய பாசஞ்சர் ரெயிலும் புறப்பட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த ரெயில் திருமங்கலம் ரெயில்நிலையம் அருகில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்தபோது, கள்ளிக்குடியில் இருந்து பாசஞ்சர் ரெயில் வந்துகொண்டிருப்பதாக ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கிடைத்தது. ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரெயில்களும் எதிரெதிரே வந்துகொண்டிருந்தது. இதனால் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் ரெயிலை ரெயில்வே கேட் அருகே நிறுத்திவிட்டனர்.

    ரெயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திருமங்கலம் ரெயில்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங்மீனா, இயக்க கட்டுப்பாட்டாளர் முருகானந்தம் ஆகிய 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து கோட்ட மேலாளர் லெனின் உத்தரவிட்டார். 
    லஞ்ச புகாரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட காஞ்சீபுரம் மற்றும் கூடலூர் நகராட்சி கமி‌ஷனர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நகராட்சியில் கமி‌ஷனராக பணியாற்றி வந்தவர் சர்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஊட்டி நகராட்சியில் கமி‌ஷனராக வேலை பார்த்த போது, கட்டிட அனுமதி, வரைபட அனுமதி போன்றவற்றில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

    அப்போது அதே அலுவலகத்தில் மேலாளராக பார்வதி பணியாற்றினார். தற்போது அவர் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியில் கமி‌ஷனராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் சர்தாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    அதேபோல் பார்வதி தங்கி இருந்த நகராட்சி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுபற்றி விரிவான விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

    அதன்படி காஞ்சீபுரம் கமி‌ஷனர் சர்தார், கூடலூர் நகராட்சி கமி‌ஷனர் பார்வதி ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    காஞ்சீபுரம் நகராட்சி பொறுப்புக்கு செயற் பொறியாளர் மகேந்திரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கூடலூர் நகராட்சி கமி‌ஷனர் பார்வதியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளதால் விசாரணைக்கு ஏதுவாக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தான் தெரிவித்து உள்ளார்.

    எனவே பார்வதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. இதேபோல் சர்தாரிடமும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தொடர்பாக 3 ஹாங்காங் வீரர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘சஸ்பெண்டு’ செய்துள்ளது. #ICC #MatchFixing
    துபாய்:

    ஹாங்காங் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நதீம் அகமது, இர்பான் அகமது (சகோதரர்கள்), ஹசீப் அம்ஜத் ஆகியோர் சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து இந்த 3 வீரர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘சஸ்பெண்டு’ செய்துள்ளது.

    2015-ம் ஆண்டு உலக கோப்பை தகுதி சுற்றில் கனடா, ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.



    இர்பான், நதீம் ஆகியோர் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பையிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதில் நதீம் அகமது சமீபத்தில் நடந்த ஆகிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியவர் ஆவார்.

    பாகிஸ்தானை சேர்ந்த இந்த 3 வீரர்களும் 2 வார காலத்துக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். #ICC #MatchFixing
    சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கியதில் ரூ.3½ கோடி முறைகேடு செய்தது தொடர்பாக 5 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் கடந்த 2012-17-ம் ஆண்டில் வீடுகளுக்கு புதிதாக மீட்டருடன் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக ரூ.1  கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

    சிதம்பரம் நகராட்சியில் ஏற்கனவே 5 ஆயிரத்து 300 இணைப்புகள் இருந்தன. ஆனால், புதிதாக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்து அதற்கான பணம் முறைகேடு செய்யப்பட்டது தெரிய வந்தது.

    அதேபோல் சிதம்பரம் கனகசபை, பஸ் நிலையம் பகுதிகளில் நீர் உந்துநிலையம் அமைக்க ரூ.11 லட்சத்து 49 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் குடிநீர் அளவீட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை.

    நல்லாம்புத்தூரில் சேதமடைந்துள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ரூ.4 லட்சத்து 23 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆழ்துளை கிணற்றை சீரமைக்காமலேயே சீரமைத்ததாக கணக்கு காண்பித்து அதற்குரிய செலவின தொகை பெறப்பட்டுள்ளது.

    பழுது மற்றும் பராமரிப்புக்காக ரூ.1 கோடியே 36 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் தரமற்ற பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் இடத்தில் பொருத்த வேண்டிய குடிநீர் வால்வுகள் அமைக்கப்படவில்லை.

    சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் மொத்தம் ரூ.3½ கோடி அளவில் மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய சிதம்பரம் உதவி செயற்பொறியாளர்கள் அசோகன், பாண்டியன், விஜயகுமார், உதவி பொறியாளர்கள் விஜயலட்சுமி, காசிநாதன், சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக 5 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு லஞ்சம் கேட்ட துப்புரவு ஊழியரை சஸ்பெண்டு செய்து டீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    கோவை:

    கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கோவை மட்டுமன்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.

    தற்கொலை மற்றும் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவ்வாறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஒரு உடலை பிணவறையில் இருந்து வெளியே எடுத்து வந்து உறவினர்களிடம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஊழியர் லஞ்சம் கேட்கும்போது அருகில் போலீஸ்காரர் ஒருவர் நிற்கும் காட்சியும் அதில் பதிவாகி உள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும்போது 2 ஆயிரம், 3 ஆயிரம் பணம் கேட்பதாக ஏற்கனவே புகார் வந்து இருந்தது.

    இந்த நிலையில் பிணத்தை ஒப்படைக்க போலீசார் முன்னிலையில் ஊழியர் லஞ்சம் கேட்ட விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தினார். அப்போது லஞ்சம் கேட்டது அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வரும் பரமசிவம்(42) என்பது தெரிய வந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து டீன் அசோகன் உத்தரவிட்டார். பரமசிவம் லஞ்சம் கேட்டபோது அங்கு இருந்த போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
    ‘நான் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அப்பீல் செய்வேன்’ என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு தெரிவித்தார். #weightlifting #SanjitaChanu
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

    இந்த நிலையில் சஞ்சிதா சானுவிடம் போட்டி இல்லாத நேரத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததாகவும், இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று முன்தினம் தெரிவித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தான் சஞ்சிதா சானு தோல்வி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.


    ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘நான் அப்பாவி. எந்தவித தவறும் செய்யவில்லை. தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எதுவும் நான் எடுத்து கொள்ளவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் ஆதரவுடன் அப்பீல் செய்வேன்’ என்று தெரிவித்தார். #commonwealthgames2018 #weightlifting #SanjitaChanu
    ×