என் மலர்
நீங்கள் தேடியது "Sweden"
- பெற்றோரை நாட்டின் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
- 15 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லை.
ஸ்டாக்ஹோம்:
குழந்தைகள் செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை செல்போனை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் பெற்றோரை நாட்டின் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே செல்போன் மற்றும் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும்.
6 முதல் 12 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு பார்க்கலாம். 13 முதல் 18 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மட்டுமே செல்போன் மற்றும் தொலைக் காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும்
குழந்தைகள் தூங்க செல்வதற்கு முன் செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம். இரவில் படுக்கையறைக்கு வெளியே செல்போன் மற்றும் டேப்லெட்டுகள் வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதார மந்திரி ஜாகோப் போர்ஸ்மெட் கூறும்போது, 13 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணிநேரம் பள்ளி நேரத்திற்கு வெளியே செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுகிறார்கள்.
மிக நீண்ட காலமாக, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் மீடியா குழந்தைகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி நடவடிக்கைகள், உடல் செயல்பாடு, போதுமான தூக்கம் ஆகியவற்றிற்கு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. 15 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என்றார்.
- மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிப்பு
- மைக்ரோ RNA கண்டுபிடிப்பு தொடர்பாக விருது அளிக்கப்பட்டுள்ளது.
சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது 'கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்' எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம்.
இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களை கொண்ட 'நோபல் அசெம்பிளி' (Nobel Assembly) எனும் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.
2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை விளக்குவதற்கு இவர்கள் இருவரின் கண்டுபிடிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, கொரோனா தடுப்பூசி தயாரிக்க உதவிய கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் இணைந்து வழங்கப்பட்டது.
மருத்துவத்திற்காக நோபல் பரிசு இதுவரை மொத்தம் 227 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 13 பெண்கள் மட்டுமே மருத்துவத்திற்காக நோபல் பரிசை பெற்றுள்ளனர். நோபல் பரிசு தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.3 கோடியாகும்.
விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக இந்த பரிசு வருடம் தோறும் வழங்கப்படுகிறது. நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று வெற்றியாளர்கள் தங்களின் விருதுகளைப் பெறுவார்கள்.
இந்த வாரத்தில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம்
- எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் உள்ள ஸ்வீடன் நாட்டின் பாலின சமத்துவம் மற்றும் வொர்க் லைஃப் அமைச்சர் பவுலினா பிராட்பெர்க் [Paulina Brandberg]. இவருக்கு வாழைப்பழங்களைக் கண்டால் பயம் ஏற்படும் போபியா [Phobia] உள்ளது.
உயரமான இடங்களைக் கண்டு பயப்படுவது Acrophobia, ரத்தத்தைக் கண்டு பயப்படுவது Hemophobia என பல போபியாக்கள் இருப்பது போல் வாழைப்பழங்களைக் கண்டு பயப்படுவதற்கு பெயர் bananaphobia ஆகும்.
இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பவுலினா பிராட்பெர்க் தனது அலுவலகத்தில் தான் கலந்து கொள்ளும் மீட்டிங்களில் வாழைப்பழங்கள் தனது கண்ணில் படவே கூடாது என்று ஸ்டிரிக்டாக தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு ஸ்டிரிக்ட்டாக உத்தரவு போட்டுள்ளார்.

அவருக்கும் அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் இடையிலாக பரிமாறிக்கொள்ளப்பட்ட ஈமெயில்கள் லீக் ஆனதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எஸ்பிரசென் [Expressen] செய்தி நிறுவனம் இந்த ஈமெயில்களை பொதுவெளியில் வெளியிட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் தேதியிட்ட ஈமெயில் ஒன்றில், ஸ்வீடன் சபாநாயகர் அலுவலகத்தில் தான் கலந்துகொள்ள உள்ள மீட்டிங்கில் வாழைப்பழகளுக்கான எந்த தடையும் இருக்கக்கூடாது, அவை எனக்கு அதிக அலர்ஜி என்று பவுலினா தெரிவித்துள்ளார்.
பவுலினா கலந்துகொள்ள உள்ள மற்றொரு மீட்டிங் தொடர்பான ஈமயிலில், நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம், எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல ஈமெயில் உரையாடல்கள் வெளியாகி அந்நாட்டில் பேசுபொருளானது.

இதையடுத்து பவுலினாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் [Ulf Kristersson], பவுலினாவின் போபியா அரசு நிர்வாக செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை, போபியாக்களால் அவதிப்படும் மனிதர்களையும் அவர்களின் சிரமங்களையும் நான் மதிக்கிறேன், அதை கிண்டல் செய்யக் கூடாது, கடினமாக உழைக்கக்கூடிய ஒரு அமைச்சரை மக்கள் கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
- ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்துக்கு இடையில் உள்ள வான் பரப்பில் பறந்தது.
- சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இந்த டர்புலன்ஸ் ஏற்பட்டது
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்ம் [Stockholm] விமான நிலையத்திலிருந்து அதிகாலை 12.03 மணிக்கு அமெரிக்காவின் மியாமி நகருக்கு ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் [ SAS ] நிறுவனத்தின் SAS SK957 விமானம் புறப்பட்டது.
வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்துக்கு இடையில் உள்ள வான் பரப்பின் மீது வந்தபோது மோசமான வானிலை காரணமாகக் கடுமையான டர்புலன்ஸை எதிர்கொண்டுள்ளது.

சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இந்த டர்புலன்ஸ் காரணமாகப் பயணிகள் தங்கள் இருக்கையில் தூக்கி மேல் நோக்கி தூக்கி வீசப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
பல மணி நேரங்களாக டர்புலென்ஸ் நீடித்ததால் மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாமல் விமானம் மீண்டும் ஐரோப்பாவுக்கே திரும்பியுள்ளது. பயணிகளுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர் காயமுற்றதாகப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்கு உக்ரைனுக்கு கணிசமான நிதியுதவியை ஸ்வீடன் அறிவித்துள்ளது.
- சர்வதேச சட்டத்தின்படி, உக்ரைன் அதன் எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் தற்காத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது
உக்ரைன் போர்
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார்.
இதனை பயன்படுத்தி அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

புதின் மிரட்டல்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவி ரஷியா பரிசோதனை செய்துள்ளது. ஒரேஷ்னிக் என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கியதாக புதின் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்கள் மீது ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் இராணுவ தளங்களுக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் தகுதியுடையவர்கள் என்று தெரிவித்தார்.
ஸ்வீடன்
இந்நிலையில் ரஷியாவின் இந்த மிரட்டலுக்கு ஸ்வீடன் பயப்படாது அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் இன்று தெரிவித்தார்.நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்கு உக்ரைனுக்கு கணிசமான அளவு நிதியுதவியை ஸ்வீடன் அளிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஆதரிப்பதிலிருந்து எங்களைப் பயமுறுத்தும் முயற்சிதான், ரஷியாவின் மிரட்டல், அது தோல்வியடையும் என்று ஜான்சன் தெரிவித்துள்ளார். உக்ரேனிய பிரதிநிதி ருஸ்டெம் உமெரோவுடன் ஸ்டாக்ஹோமில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் ஜான்சன் இதை கூறினார்.

உக்ரைனை ஆதரிப்பது சரியான மற்றும் புத்திசாலித்தனமான விஷயம், மேலும் இது நமது சொந்த பாதுகாப்பிற்கான முதலீடு, ஏனெனில் (உக்ரைனின்) பாதுகாப்பும் எங்கள் பாதுகாப்பு என்று அவர் கூறினார்.
சர்வதேச சட்டத்தின்படி, உக்ரைன் அதன் எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் தற்காத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது, மேலும் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்களை உற்பத்தி செய்யும் உங்கள் திறனை நாங்கள் மேலும் மேம்படுத்த முடிந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஜான்சன் உமெரோவிடம் கூறினார்.
ஒரேஷ்னிக்
ரஷியா கண்டுபிடித்துள்ள ஒரேஷ்னிக், அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்டது. நொடிக்கு 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. நவீன ஏர் பாதுகாப்பு சிஸ்டங்கள் கூட இதை தடுத்து நிறுத்த முடியாது. தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. இன்றைய நிலவரப்படி, இந்த ஏவுகணையை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை என புதின் கூறுகிறார்.

- ரஷியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேட்டோ கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.
- கடற்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது.
ஸ்டாக்ஹோம்:
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ கடலுக்கு அடியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வயர்களை பொருத்தி வருகிறது. அதன்படி பால்டிக் கடற்பகுதி வழியாக ஐரோப்பிய நாடான லாட்வியாவுக்கு மின்சார வயர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த வயர்களை மர்ம கும்பல் சேதப்படுத்தியது.
இதில் ரஷியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேட்டோ கூட்டமைப்பு குற்றம்சாட்டியது. எனவே பால்டிக் கடற்பகுதியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது. அப்போது பால்டிக் கடற்பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற ஒரு கப்பலை சுவீடன் கடலோர போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் பின்லாந்து-எஸ்டோனியா இடையே செல்லும் மின்சார வயர்களை கடந்த மாதம் ரஷிய கப்பல் சேதப்படுத்தியதாக பின்லாந்து குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்வு முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான பள்ளிக்கூடம் உள்ளது.
கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளி, 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்வு முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பினர்.
எனினும் ஒரு சில மாணவர்கள் பள்ளியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த பள்ளிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 10 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
- அமெரிக்க செனட் சபை தனது ஒப்புதலை இன்று அளித்துள்ளது.
வாஷிங்டன்:
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 150 நாட்களாக போர் செய்து வருகிறது.
இதற்கிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுவீடன் நாட்டில் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, கிரீன் கட்சி கூட்டணியின் சிறுபான்மை ஆட்சி நடக்கிறது.
அங்கு செப்டம்பர் 10-ந் தேதி (நேற்று) நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயக கட்சி, சுவீடன் ஜனநாயக கட்சி, மிதவாத கட்சி இடையே முக்கிய போட்டி உள்ளது. அகதிகள் குடியேற்றப்பிரச்சினை முக்கிய பிரச்சினையாக பிரசாரத்தில் இடம் பிடித்தது.

சுவீடன் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும் ஆபத்தானது என பிரதமர் ஸ்டீபன் லோப்வென் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரத்தை மறுத்து சுவீடன் ஜனநாயக கட்சி தலைவர் ஜிம்மி ஆகெஸ்ஸான் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. ஆரம்பத்தில் மந்தமாக தொடங்கிய ஓட்டுப்பதிவு பின்னர் விறுவிறுப்பு அடைந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.
பிரதமர் ஸ்டீபன் லோப்வென் மனைவி உல்லாவுடன் வந்து ஸ்டாக்ஹோமில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.
இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆளும் சமூக ஜனநாயக கட்சி கூட்டணி, பிற கட்சிகளை விட கூடுதல் இடங்களைப் பிடித்து ஆட்சியை தக்க வைக்கிற வாய்ப்புகள் இருப்பதாக அவை தெரிவிக்கின்றன. #Sweeden #ParliamentElection
சமரா:
உலககோப்பை கால்பந்து போட்டியில் 3-வது மற்றும் 4-வது கால்இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.
சமரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவீடன் ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியா (1-0), மெக்சிகோவை (3-0) வென்று ஜெர்மனியிடம் (1-2) தோற்று, கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் துனிசியா (2-1), பனாமா (6-1) அணிகளை வென்று பெல்ஜியத்திடம் தோற்று (0-1) இருந்தது. 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டிஷூட்டில் தான் வென்றது.
1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி சுவீடனின் அதிரடியை சமாளிப்பது சவாலானது. அந்த அணி பின்களத்தில் வலுவாக இருக்கிறது.
இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து- 8, சுவீடன்-7-ல் வெற்றி பெற்றுள்ளது. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து அணியில் ஹாரிகேன் முதுகெலும்பாக இருக்கிறார். ஸ்டெர்லிங், லிங்கார்டு போன்ற முன்னணி வீரர்களும் உள்ளனர். சுவீடன் அணியில் கிரண்விஸ்ட், போர்ஸ்பெர்க், பெர்த் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.
ரஷியா ‘லீக்’ ஆட்டத்தில் சவுதி அரேபியா (5-1), எகிப்து (3-1) அணிகளை தொடர்ந்து உருகுவேயிடம் 0-3 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.
குரோஷியா அணி தோல்வி அடையவில்லை. 2-0 என்ற கணக்கில் நைஜீரியாவையும், 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவையும், 2-1 என்ற கணக்கில் ஐஸ்லாந்தையும் தோற்கடித்தது. 2-வது சுற்றில் டென்மார்க்கை பெனால்டிஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
குரோஷியா அணி பலம் பொருந்தியவை என்பதால் அரை இறுதிக்கு தகுதி பெறலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். இதேபோல கோல்கீப்பர் அகிள்பீவ் முதுகெலும்பாக இருக்கிறார். குரோஷியா அணியில் மோட்ரிச், மென்டிச், ரகட்டிச் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகள் மோதிய போட்டியில் குரோஷியா 1 ஆட்டத்தில் வென்றது. 2 ஆட்டம் ‘டிரா’ ஆனது. #WorldCup2018


