என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிழா"

    • நாளை வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
    • 3-ந்தேதி முருகன் ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 37-வது ஆண்டு ஆராட்டு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு வெற்றிவேலனுக்கு அலங்காரம், 6 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பரமார்த்தலிங்கபுரம் சீதாலட்சுமி பொன்னுசாமி, காமராஜர் நகர் தாமரைசெல்வி வேல்முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைக்கிறார்கள். தொடர்நது 6.30 மணிக்கு நடைபெறும் சமய உரை நிகழ்ச்சிக்கு கவிஞர் ஈஸ்வரன் தலைமை தாங்குகிறார். இதில், தாணு மூர்த்தி, கவிஞர் ராஜன் ஆகியோர் "கந்தன் கருணை" என்ற தலைப்பில் உரை ஆற்றுகின்றனர். நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடக்கிறது.

    3-ந்தேதி தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி ஊர்வலமானது பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு அருகில் அமைந்துள்ள பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் தளத்தை சென்றடைகிறது.

    அங்கு உள்ள நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாயில் இரவு 7 மணிக்கு முருகனுக்கு ஆராட்டு, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், வான வேடிக்கை, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து சமய கருத்தரங்கு நடக்கிறது. கருத்தரங்குக்கு மயூரி சீதாராமன் தலைமை தாங்கிகிறார். அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் "வள்ளி தெய்வானை திருமணம்" என்ற தலைப்பிலும், ரேணுகா ராமச்சந்திரன் "கந்தபுராணம் ஆராட்டு" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை திருவிழா முடிந்து 30-வது நாளில் வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு விழா நடப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் முருகன் ஆராட்டு விழா கமிட்டி பொறுப்பாளர்கள் பொன்னுசாமி, வேல்முருகன், குமாரசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • 4-ந் தேதி கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 5-ந்தேதி மஞ்சள் நீராடல் நடக்கிறது.

    ராசிபுரம் அருகே அத்திப்பலகானூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் பூவோடு பற்ற வைத்தல் நடந்தது. நேற்று காலையில் பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர்.

    அப்போது கோவில் பூசாரி பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கினார். இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாட்டையடி வாங்கினர். இதையடுத்து இன்று (புதன் கிழமை) அம்மை அழைத்தல் நடக்கிறது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (வியாழக்கிழமை) வண்டி வேடிக்கை, எருதாட்டம் நடைபெறுகிறது. அதையடுத்து 4-ந் தேதி கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.

    • அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 18-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக் கிறது.
    • “பாக்கும்படி” நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல முற்றத்தில் வைத்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் அமைந்து உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத் தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.

    இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 18-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக் கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறை யுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை, மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 8-ம் திருவிழா வான 16-ந்தேதி இரவு சப்பர பவனியும் 9-ம் திருவிழாவான

    17-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் 10-ம் திருவிழாவான 18-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

    இந்த திருவிழாவை யொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்வி ளக்கு அலங்காரம், வாண வேடிக்கை, மெல்லிசைக் கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல முற்றத்தில் வைத்து நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணி யாளர் ஆன்றனி அல்காந் தர், பங்குப்பேரவை துணைத்த லைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள், 92 அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • இன்று வண்டி வேடிக்கை நடக்கிறது.
    • நாளை இரவு மாரியம்மன் சாமி புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல் நடக்கிறது.

    ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தகோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி ஊர்வலம் சென்றது.

    கடந்த 31-ந் தேதி பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர். தொடர்ந்து நேற்றுமுன்தினம் அம்மை அழைத்தல் நடந்தது. பின்னர் காலை முதல் இரவு வரை நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதையடுத்து நேற்று அதிகாலையில் தீமிதி விழா நடந்தது.

    விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிவித்தும், கையில் வேப்பிலையுடனும் தீ மிதித்தனர். சில பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தையுடன் தீ மிதித்தனர். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி நேற்று மாலையில் மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) வண்டி வேடிக்கை நடக்கிறது. பின்னர் நாளை (சனிக்கிழமை) இரவு மாரியம்மன் சாமி வர்ண விளக்கு ஜோடனை மற்றும் வாண வேடிக்கையுடன் புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல், சத்தாபரணம் நடக்கிறது. ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும் நடைபெற்றது.
    • பொங்கல், மாவிளக்கு படைத்தல், அன்னதானம் நடந்தது.

    பரமத்தியில் உள்ள சேத்துக்கால் மாரியம்மன் கோவிலில் திருவிழா கடந்த 16-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சேத்துக்கால் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. 28-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    31-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும் நடைபெற்றது. பின்னர் மாலை பொங்கல், மாவிளக்கு படைத்தல், அன்னதானம் மற்றும் வண்டி வேடிக்கை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை சேத்துக்கால் மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வருதல் மற்றும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி சேத்துக்கால் மாரியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • திரளான பங்கு மக்கள் பங்கேற்பு
    • பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் அமைந்து உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 18-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 16-ந்தேதி இரவு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவான 17-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும், 10-ம் திருவிழாவான 18-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், தேர்அலங்காரம், வான வேடிக்கை, மெல்லிசைக் கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், தலைமை தாங்கினார். பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள் சேவியர்அருள்நாதன், மேக்சன், ஜாண்போஸ்கோ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் தேர் அலங்காரத்துக்கான முன்பணம் செல்வம் என்பவ ருக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு மாதா தேர் மற்றும் சூசையப்பர் தேர் ஆகிய இரண்டு தேர்களும் பவனிக்கு தயார்படுத்துவதற்காக தேர் கூடத்தில்இருந்து பங்கு மக்களால் இழுத்து வெளியே கொண்டு விடப்பட்டது.

    • திருக்கல்யாணம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
    • தேர்திருவிழா 16-ந்தேதி நடக்கிறது.

    மயிலாடுதுறையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் துலா உற்சவம் 10 நாட்கள் நடப்பது வழக்கம்.

    காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் முக்கிய உற்சவமான துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு துலா உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பட்டாச்சாரியார்கள் கருடக்கொடியை ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 15-ந் தேதியும்(செவ்வாய்க்கிழமை), தேர்திருவிழா 16-ந் தேதியும்(புதன்கிழமை), கடைமுக தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் நெல் அறுவடை திருவிழா நடந்தது.
    • நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கோடை நெல் அறுவடைத்திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கி சுற்று வட்டார கிராம விவசாயிகளை வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் கருணாநிதி பண்ணையில் பயிரிட்ட திருச்சி -1 மற்றும் திருச்சி-3 ஆகிய நெல் இரகங்களின் சிறப்புகளை விவசாயிகளுக்கு விளக்கினார். விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நெல் அறுவடையில் கலந்துகொண்டனர். நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

    இவ்விழாவில் நெல் சாகுபடி மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். எஸ்.ஆர் பட்டினம், விசாலயன் கோட்டை, கலிப்புலி, காளையார்கோவில் மற்றும் புலிக்குத்தியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர், கல்லூரியின் இயக்குநர் கோபால் நன்றியுரை வழங்கினார்.

    • விருதுநகரில் புத்தகத் திருவிழா தொடங்கியது. விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி, சந்தை வீதி, தெப்பம் வழியாக, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

    விருதுநகர்,

    விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் முதல் முறையாக வருகிற 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாத ரெட்டி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்து, நடைபயணமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல்துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த புத்தகக் கண்காட்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    முதலாவது விருதுநகர் புத்தக திருவிழா குறித்து இந்த பேரணியில் விழிப்புணர்வு பதாகைகள் மூலமும், தப்பாட்டம், பொய் கால் குதிரை, உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி, சந்தை வீதி, தெப்பம் வழியாக, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ஷாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், நகர்மன்ற தலைவர் மாதவன், ஆணையாளர் ஸ்டான்லி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலைக்காய் திருவிழா வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
    • 15 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவமும் நடக்கிறது.
    • 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    பெங்களூரு பசவனகுடியில் தொட்ட கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் கடலைக்காய் திருவிழா வரலாற்று சிறப்புமிக்கதாகும். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடலைக்காய் திருவிழா தொடங்கி நடைபெறும். இந்த கடலைக்காய் திருவிழாவில் பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பிற மாவட்டங்கள், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் கடலைக்காயை விற்பனைக்காக கொண்டு வருவது உண்டு.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான கடலைக்காய் திருவிழா வருகிற 21-ந்தேதி தொடங்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கடலைக்காய் திருவிழாவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடலைக்காய் வியாபாரிகள், உணவு பொருட்கள் உள்பட 2 ஆயிரம் கடைகள் திறக்கப்படலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பசவனகுடி தொட்ட கணபதி கோவிலில் நடைபெறும் இந்த கடலைக்காய் திருவிழாவின் போது கெம்பாபுதி ஏரியில் தெப்ப உற்சவமும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. ஏரியில் தண்ணீர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 15 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை.

    ஆனால் இந்த ஆண்டு பெங்களூருவில் பரவலாக நல்ல மழை பெய்திருந்தது. இதன் காரணமாக கெம்பாபுதி ஏரியும் நிரம்பி இருக்கிறது. இதையடுத்து, கடலைக்காய் திருவிழாவுடன் தெப்ப உற்சவம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருவதாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ரவி சுப்பிரமணியா தெரிவித்துள்ளார்.

    மழையின் காரணமாக பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா, ராமநகர் மாவட்டம் கனகபுரா, மாகடி, சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலைக்காய் விளைச்சலும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடலைக்காய் திருவிழாவில் அதிகம் பங்கேற்க வாய்ப்புள்ளது. கடலைக்காய் திருவிழா 21-ந் தேதி தொடங்கினாலும், அதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பாகவே பசவனகுடியில் உள்ள நடைபாதைகளில் வியாபாரிகள் கடலைக்காய் விற்பனையை தொடங்கி விடுவார்கள்.

    இதனால் பசவனகுடி தொட்ட கணபதி கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளது.

    • கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கோகர்ணா பகுதியில் பிரசித்தி பெற்ற மகாபலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது 4-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும். இது பாரம்பரிய திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் அரபிக்கடலை நோக்கி அமைந்துள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் ஆண் பக்தர்கள், மேலாடை இன்றி அதாவது சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள், மகாபலேஸ்வரரை தரிசனம் செய்ய செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு தான் ெசல்கிறார்கள்.

    இந்த நிலையில் கோவில் நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கோவில் அமைந்துள்ள மேற்கு வாசல் ரத வீதியில் பக்தர்கள் அரைகுறை ஆடையுடன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் அறிவிப்பு பேனரும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்றால் கோவிலின் மேற்கு வாசல் வழியாக தான் சென்றாக வேண்டும். சுற்றுலா வருபவர்களும் கோவிலின் மேற்கு வாசல் வழியாக தான் கடற்கரைக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பனியன் உள்ளிட்ட அரைகுறை ஆடையுடன் தான் சென்று வருகிறார்கள்.

    தற்போது மேற்கு வாசல் ரத வீதியில் அரைகுறை ஆடையுடன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர்.
    • அனைத்து கோவில்களிலும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திருச்செங்கோட்டில் பழமைவாய்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இதுதவிர மண்ணுக்குட்டை மாரியம்மன், தொண்டிக்கரடு மகா மாரியம்மன், சேலம் சாலை சாட்டை மாரியம்மன், நாமக்கல் சாலை சமயபுரத்து மாரியம்மன், 5 ரோடு அழகுமுத்து மாரியம்மன், சி.எச்.பி. காலனி மாரியம்மன் கோவில் என நகரை சுற்றி உள்ள 15 மாரியம்மன் கோவில்களிலும் கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி கம்பங்கள் நடப்பட்டன.

    தினமும் ஏராளமான பெண்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். இதையடுத்து தீர்த்தகுடம் எடுத்தல், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    திருவிழா நிறைவாக அனைத்து கோவில்களிலும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கம்பம் எடுக்கப்பட்டு தெற்கு ரத வீதியில் ஒன்றாக இணைந்து ஊர்வலமாக சென்று திருச்செங்கோடு- ஈரோடு ரோட்டில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் கம்பங்கள் விடப்பட்டன. கம்பங்களுக்கு முன்பு பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சென்றனர். வழி நெடுகிலும் குவிந்திருந்த திரளான பக்தர்கள் கம்பங்களின் மீது உப்பு, மிளகு போட்டு அம்மனை வழிபட்டனர்.

    ×