என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 110142"

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது சமூக அறிவியல் தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
    சேலம் :

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கவில்லை.

    நடப்பு  ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில்,  எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்  நடத்தப்பட்டுள்ளன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது.

    தேர்வு முடிவடைந்தது இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர்.
     
    கடைசி நாளான இன்று (30-ந்தேதி) திங்கட்கிழமை  சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெற்றது. காலை  10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. 

    வாழ்த்துக்கள்... தேர்வு  நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்பில்  பயின்றவர்களை சந்தித்து,   ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் புகைப்படம் எடுத்தும்,  சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும்   மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதினர்.
    சேலம்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி  தொடங்கி 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நேற்றுடன் (30-ந்தேதி) நிறைவடைந்தது.

    பிளஸ்-1 பொதுத் தேர்வு  கடந்த  10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. குறிப்பாக சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்றது.
    இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர். 

    கடைசி நாளான இன்று  (31-ந்தேதி) செவ்வாய்க்கிழமை  இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழிற்நுட்பம் ஆகிய 3  பாடங்களுக்கு தேர்வு நடந்தது. காலை  10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. இதனால் பிளஸ்-1 பொதுத்தேர்வு அனைத்தும் இன்றுடன்  நிறைவடைந்தன.

    தேர்வு  நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகம் மகிழ்ச்சியில் பூத்துக்குலுங்கியது. மாணவிகள் துள்ளிக்குதித்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். 

    தங்கள் வகுப்பில்  பயின்றவர்களை சந்தித்து,   ஒருவருக்ெகாருவர் வாழ்த்துக்கள்  ெதரிவித்தனர்.  மேலும் புகைப்படம் எடுத்தும்,  சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், வண்ணப்பொடிகள் தூவியும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது.
    8 நாள் கொண்டாட்டத்திற்கு பின் ஏற்காடு கோடை விழா இன்றுடன் நிறைவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஏற்காடு:

    ஏற்காட்டில் 45- வது  கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ெதாடர்ச்சியாக 8 நாட்கள் நடத்தப்பட்டது.   முதல் நாளான கடந்த  25-ந் தேதி (புதன்கிழமை)  அன்று கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.

    கோடை விழாவின் 7-வது நாளான நேற்று ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெடல் படகு போட்டியும், படகோட்டிகளுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது. போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

    போட்டியை நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் ஏற்காடு படகு இல்ல மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 

    8-வது நாளான இன்று (புதன்கிழமை) கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நிறைவடைந்தது. காலை 11 மணிக்கு  விளையாட்டு துறை சார்பாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கலை நிகழ்ச்சி,  பிற்பகலில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக  இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெற்றது.
    விழா நிறைவு நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.   விழாவுக்கு சேலம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.  

    சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், பெரும்பாலானவர்கள் மலர் சிற்பங்கள், பழ உருவங்கள் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.   அதுபோல் மலர்கள் முன்பாக தங்கள் பெற்றோரை மழலைகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

    படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பய ணிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஏரியில் படகு சவாரி  செய்து மகிழ்ந்ததோடு, மலர் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். காய்கறிகளால் ஆன காட்டெருமை, விமானம்,  அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீருற்று, மலர்களால் வடிவமைக்கப்பட்ட   மேட்டூர் அணை, பெண்களுக்கான இலவச பஸ், மாட்டு வண்டி, சின்-சான் பொம்மை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

    இதேபோல் ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கோடை விழா- மலர் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு துறைகள் சார்பில் பல்வேறு கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

    இதில் சிறந்த கண்காட்சி அரங்கங்கள் எவை? என தேர்வு செய்யப்பட்டு, அந்த அரங்கங்களுக்கு சேலம் மாவட்ட  கலெக்டர் கார்மேகம்  சான்றிதழ்கள் வழங்கினார்.  மேலும் அரங்கங்களை சிறப்பாக அமைத்த  துறை அலுவலர்களையும் பாராட்டினார்.

    விழா நிறைவு நாளான இன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட சிறப்பு பஸ்கள் அதிக எண்ணிக்கையில்  விடப்பட்டன. அதுபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், ஏற்காடு அடிவா ரத்திற்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    பாராளுமன்றத்துக்கான 4-வது கட்ட தேர்தலில் 72 தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. #Loksabhaelections2019
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
     
    முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 18-ம் தேதி 95 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 23-ம் தேதி 117 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவரை 303 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கான 4-வது கட்ட ஓட்டுப்பதிவு வரும் 29-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.



    இதில் மத்தியப்பிரதேசம் மாநிலம் முதல் மந்திரி கமல்நாத் மகன் நகுல் நாத் போட்டியிடும் சிந்த்வாரா தொகுதி உள்பட பீகார் (5), ஜம்மு காஷ்மீர் (1), ஜார்க்கண்ட் (3), மத்தியப்பிரதேசம் (6), மகாராஷ்டிரா (17), ஒடிசா (6), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8) உள்ளிட்ட மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.

    இதையொட்டி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் பாதுகாப்பு உள்பட அனைத்து பணிகளிலும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. #Loksabhaelections2019
    உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த போட்டியில் 40 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். #Jallikattu #AlanganallurJallikattu
    மதுரை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதும், ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன.

    வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நடைமுறைகள் முடிந்தபின்னர் பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. பொங்கல் தினத்தன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் நாளான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு பிரமாண்டமாக நடைபெற்றது.

    இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் பச்சைக் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

    வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கினர். இந்த போட்டியில் 730 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.  படுகாயமடைந்த 15பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


    15 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. சிறந்த காளையாக தேர்வான பரம்பப்பட்டி செல்லியம்மன் கோவில் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மாலையில் நடைபெற்ற இறுதிக்கட்ட விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

    ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.  #Jallikattu #AlanganallurJallikattu
    ஜெகன் மோகன் ரெட்டி இன்று சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார். #JaganmohanReddy #Yatra
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பாதயாத்திரை மேற்கொண்டார்.
     
    கடந்த அக்டோபர் 25-ம்  தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.



    இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டி நவம்பர் 12-ம் தேதி மீண்டும் சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் இச்சாபுரம் பகுதியில் தனது பாதயாத்திரையை இன்று நிறைவு செய்தார்.

    இதுவரை அவர், சுமார் 341 நாட்களில் 13 மாவட்டங்களில் உள்ள 134 சட்டசபை தொகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 648 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார்.  

    கடந்த சில ஆண்டுகளில் இதுபோல் 3 ஆயிரம் கி.மீ. தொலைவு நடந்தவர்களில் ஜெகன்மோகன் ரெட்டி முதல் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. #JaganmohanReddy #Yatra 
    கிருஷ்ணகிரி அணையில் புதிய ஷட்டரில் வெல்டிங் பணிகள் நிறைவடைந்தன.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் பிரதான முதல் மதகில் உள்ள ஷட்டரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்பில், 12 அடி உயரத்திற்கு தற்காலிக ஷட்டர் அமைக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய ஷட்டர் அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்காலிக ஷட்டர் அகற்றும் பணிகள் கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கி, 10-ந் தேதி நிறைவடைந்தது.

    இதைத்தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக, 40 அடி அகலத்திற்கு 20 அடி உயரத்திற்கு தகடுகள், ரோலர்கள், இணைப்பு சங்கிலி, பக்கவாட்டு சுவர் சீரமைப்பு பணிகள் கடந்த 7-ந் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து மதகில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தளவாடங்களை கியாஸ் வெல்டிங் மூலம் இணைக்கும் பணிகள் நடந்தன. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ஈடுபட்டனர். இந்த பணிகள் நேற்றுடன் முடிந்தன.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வெல்டிங் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, வெல்டிங் வைக்கப்பட்ட இடத்தில் கிரைன் செய்யும் பணிகள் நடக்கிறது. ஒரிரு நாட்களில் அப்பணிகள் முடிவடையும். தொடர்ந்து ஷட்டரில் வர்ணம் பூசும் பணிகள் நடக்கும்.

    இந்த மாத இறுதிக்குள் முழுமையாக பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். தற்போது கிருஷ்ணகிரி அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுறக்கால்வாய் மூலம் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
    கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் நேற்றுடன் நிறைவடைந்தது. தலைநகர் சென்னை 100 டிகிரியை தொடாமல் தப்பியது. #AgniNatchathiram
    சென்னை:

    வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் கடந்த 4–ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அக்னி நட்சத்திர காலம்  நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்தக் காலகட்டத்தில் கோடை வெயில் வறுத்து எடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு தமிழகத்தில் இந்த காலத்தில் வெயில் அதிகமாக இருந்தது.

    ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. திருத்தணி, வேலூர், மதுரை, திருச்சி, கரூர் போன்ற இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

    தலைநகர் சென்னையை பொறுத்தவரை வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் 104, 105 டிகிரி என வெளியில் கொளுத்தும். இந்த ஆண்டு 100 டிகிரியை எட்டாமலேயே சென்னை நகரம் தப்பியது.

    அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 9–ம் தேதி 98.6 டிகிரி வெயில் பதிவானது. சென்னை புறநகரான மீனம்பாக்கத்தில் ஒரு சில நாட்களில் 100 டிகிரியை எட்டியது.

    தமிழகத்தில் இந்த பருவத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 108.6 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திர இறுதி நாளான நேற்று திருத்தணியில் 105 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 97.16 டிகிரியும் வெயில் பதிவானது. #AgniNatchathiram
    ×