என் மலர்
நீங்கள் தேடியது "tag 127529"
இந்தாண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.
திருப்பூர்:
ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவின் போது, வீரம் மற்றும் சாகச செயல்களை செய்த துணிச்சல் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 'கல்பனா சாவ்லா' விருது, பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.
பெயர், முகவரியுடன், தங்களின் விரிவான சாதனைப்பட்டியல், அதற்குரிய ஆவணங்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பொதுத்துறை முதன்மை செயலருக்கு, ஜூன், 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருதுக்கு தகுதியுள்ளவர்களை, அரசு நியமித்துள்ள குழு ஆய்வு செய்யும். அவர்களால் பரிந்துரைப்பவருக்கு விருது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் விருதுநகர் கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
விருதுநகர்
சாத்தூர் சின்ன காமன் பட்டியைச் சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் மேட்ட மலையில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் திடீரென மாயமானார். சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம் பட்டியைச் சேர்ந்தவர் பரலோக தாஸ். இவரது மூத்த மகள் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கூமாபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியை சேர்ந்த வர் மனோஜ்குமார் (21). இவர் விருதுநகர் அருகே ஆமத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மார்க்கெ ட்டிங் செல்வதாக கூறி விட்டு சென்ற மனோஜ் குமார் அதன் பின்னர் எங்கு சென்றார்? என தெரிய வில்லை.
பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து அவரது சகோதரர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நரிக்குடி அருகே உள்ள நல்லுக்குறிச்சி சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 21). சம்பவத்தன்று இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை வீரசோழன் போலீசில் புகார் செய்துள்ளார்.
அதில், எனது மகன் கீழசெம்பூரை சேர்ந்த இளம் பெண்ணுடன் மாயமானது தெரிய வந்துள்ளது. எனவே எனது மகனை மீட்டு தருமாறு தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் விருதுநகர் கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021-22-ம் ஆண்டிற்கான (1.4.2018 முதல் 31.3.2021 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் “முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு ‘‘உறுப்பினர்செயலர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரிய மேடு, சென்னை -3’’ என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்-10.6.2022 ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 2019ம் ஆண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்படமாக சிங்கங்களின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. #BestPhotographyAward #BondOfBrothers
வாஷிங்டன்:



இந்த புகைப்படத்திற்கு அடுத்தபடியாக, மேலும் சில புகைப்படங்களுக்கு அதிக வாக்குகள் பதிவாகின. அவற்றில் ஃபாக்லேண்ட் பகுதியில் மூன்று பென்குயின்கள் சூரிய அஸ்தமனத்தின்போது உற்சாகமாக நடனமாடும் படம் (விம் வான் டென் ஹீவர்), லண்டனில் நரி ஒன்று சாலையோரம் நடந்து செல்லும் படம் (மேத்யூ மாறன்), மூன்று ஓநாய்கள் ஒன்று சேர்ந்து எலும்பினை கவ்வுவது போன்ற படம் (பென்ஸ் மாட்டே, ஹங்கேரி) ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. #BestPhotographyAward #BondOfBrothers
அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கு விருது வழங்கும் விழாவில், 45000க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்கள் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில் 25 புகைப்படங்கள் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டன. இவற்றுள் மக்களின் ஆதரவை அதிகம் பெறும் புகைப்படத்துக்கு விருது வழங்கப்படும். இதையடுத்து இந்த அருங்காட்சியகத்தில் தேர்வு செய்யப்பட்ட 25 புகைப்படங்கள் மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு , வாக்குகள் பெறப்பட்டன.

இந்த வாக்குகளின் கணக்கெடுப்பில், இரண்டு ஆண் சிங்கங்களின் பாசத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த 'பாண்ட் ஆஃப் ப்ரதர்ஸ்' எனும் தலைப்பில் வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு அதிக வாக்கு கிடைத்தது. நியூசிலாந்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் டேவிட் லாய்ட் இந்தப் புகைப்படத்தை எடுத்திருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு அடுத்தபடியாக, மேலும் சில புகைப்படங்களுக்கு அதிக வாக்குகள் பதிவாகின. அவற்றில் ஃபாக்லேண்ட் பகுதியில் மூன்று பென்குயின்கள் சூரிய அஸ்தமனத்தின்போது உற்சாகமாக நடனமாடும் படம் (விம் வான் டென் ஹீவர்), லண்டனில் நரி ஒன்று சாலையோரம் நடந்து செல்லும் படம் (மேத்யூ மாறன்), மூன்று ஓநாய்கள் ஒன்று சேர்ந்து எலும்பினை கவ்வுவது போன்ற படம் (பென்ஸ் மாட்டே, ஹங்கேரி) ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. #BestPhotographyAward #BondOfBrothers
சிறந்த எலக்ட்ரானிக் சேவைக்காக கேரள போலீஸ் செயலிக்கு உலக அரசு உச்சி மாநாட்டில் அமீரக துணை பிரதமர் மேதகு ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் விருதை வழங்கினார். #KeralaPolice #TrafficGuruApp #MobileApplication
துபாய் மதினத் ஜுமைராவில் 3 நாட்கள் நடந்த உலக அரசு உச்சி மாநாடு நேற்று நிறைவடைந்தது. மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் அரசுத்துறைகளின் எதிர்காலம் குறித்து பல்வேறு சொற்பொழிவுகளும், விவாதங்களும் நடந்தது. 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள்.
அமீரக துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான மேதகு ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான் நேற்று நடந்த இறுதிநாள் நிகழ்ச்சியில் ‘வெற்றிப் பயணம்’ என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அமீரகம் சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் 50 திட்டங்களை அறிவித்தது. இதன் மூலம் உலக நாடுகளில் அமீரகம் முதலிடத்தை பெற்றுள்ளது. துபாய் நகரின் மறைந்த ஆட்சியாளர் மேதகு ஷேக் ராஷித் சிறப்பான எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு ராஷித் துறைமுகத்தை ஏற்படுத்தினார். இன்று இந்த துறைமுகம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 80 துறைமுகங்களை கையாண்டு வருகிறது’’ என குறிப்பிட்டார்.
அமீரக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல் ஜயூதி பேசும்போது, “கடல்களை நாம் பாதுகாக்க வேண்டும். கடல்களின் மூலம் உலகில் 10 கோடி மக்களுக்கு தேவையான வாழ்வாதாரம் கிடைத்து வருகிறது” என்றார்.
அமீரக கலாசாரம் மற்றும் அறிவு மேம்பாட்டுத் துறைக்கான மந்திரி நூரா பிந்த் முகம்மது அல் காபி, நமது கலை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க எந்த வகையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசினார்.
மாநாட்டில், சிறந்த எலக்ட்ரானிக் சேவைக்காக கேரள போலீசின் ‘டிராபிக் குரு’ என்ற செயலிக்கு அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான மேதகு ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் விருது வழங்கி கவுரவித்தார். மேலும் அரசுத்துறைகளின் பல்வேறு சிறப்பான சேவைகளுக்கும் விருது வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அதிகாரிகளுடன் அமீரக அரசு பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
இந்த மாநாட்டில் துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபரும், பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசரின் மகள் ஷேக்கா மரியம் பிந்த் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #KeralaPolice #TrafficGuruApp #MobileApplication
இதில் அரசுத்துறைகளின் எதிர்காலம் குறித்து பல்வேறு சொற்பொழிவுகளும், விவாதங்களும் நடந்தது. 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள்.
அமீரக துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான மேதகு ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான் நேற்று நடந்த இறுதிநாள் நிகழ்ச்சியில் ‘வெற்றிப் பயணம்’ என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அமீரகம் சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் 50 திட்டங்களை அறிவித்தது. இதன் மூலம் உலக நாடுகளில் அமீரகம் முதலிடத்தை பெற்றுள்ளது. துபாய் நகரின் மறைந்த ஆட்சியாளர் மேதகு ஷேக் ராஷித் சிறப்பான எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு ராஷித் துறைமுகத்தை ஏற்படுத்தினார். இன்று இந்த துறைமுகம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 80 துறைமுகங்களை கையாண்டு வருகிறது’’ என குறிப்பிட்டார்.
அமீரக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல் ஜயூதி பேசும்போது, “கடல்களை நாம் பாதுகாக்க வேண்டும். கடல்களின் மூலம் உலகில் 10 கோடி மக்களுக்கு தேவையான வாழ்வாதாரம் கிடைத்து வருகிறது” என்றார்.
அமீரக கலாசாரம் மற்றும் அறிவு மேம்பாட்டுத் துறைக்கான மந்திரி நூரா பிந்த் முகம்மது அல் காபி, நமது கலை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க எந்த வகையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசினார்.
மாநாட்டில், சிறந்த எலக்ட்ரானிக் சேவைக்காக கேரள போலீசின் ‘டிராபிக் குரு’ என்ற செயலிக்கு அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான மேதகு ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் விருது வழங்கி கவுரவித்தார். மேலும் அரசுத்துறைகளின் பல்வேறு சிறப்பான சேவைகளுக்கும் விருது வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அதிகாரிகளுடன் அமீரக அரசு பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
இந்த மாநாட்டில் துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபரும், பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசரின் மகள் ஷேக்கா மரியம் பிந்த் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #KeralaPolice #TrafficGuruApp #MobileApplication
ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு என்ற செய்திகளை மக்களுக்கு சென்றடையச் செய்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. #HealthyBharat
சென்னை:
காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை யொட்டி இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் “சரிவிகித, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்” என்னும் கருத்தை அனைவரையும் சென்றடைய 1930-ல் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக தண்டியாத்திரையை நினைவு கூரும் வகையில் உலக உணவு நாளான அக்டோபர் 16 அன்று தொடர் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் தொற்றாநோய்களை வருமுன் தடுக்க இயலும். பாதுகாப்பான உணவை உண்பதன் மூலம் உணவு சார்ந்த நோய்களை தடுக்க இயலும் மேலும், செறிவூட்டப்பட்ட உணவுகளை உண்பதால் நுண்ணிய சத்துக்களின் குறைபாட்டை தவிர்க்க இயலும் என்பதை மையப்படுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 12 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையானது, இந்திய தரநிர்ணய ஆணையம், பங்குதாரர்கள், உணவு வணிகர்கள் மற்றும் பல்வேறு துறையினருடன் கைகோர்த்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு என்ற செய்திகளை மக்களுக்கு சென்றடையச் செய்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் தமிழகத்துக்கு சிறந்த மாநிலத்துக்கான விருதை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுடான், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தலைவர் ரீட்டா டியோட்டியா, முதன்மைச் செயல் அலுவலர் பவன்குமார் அகர்வால், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் இயக்குநர் மரு. வனஜா மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர். #HealthyBharat
காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை யொட்டி இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் “சரிவிகித, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்” என்னும் கருத்தை அனைவரையும் சென்றடைய 1930-ல் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக தண்டியாத்திரையை நினைவு கூரும் வகையில் உலக உணவு நாளான அக்டோபர் 16 அன்று தொடர் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் தொற்றாநோய்களை வருமுன் தடுக்க இயலும். பாதுகாப்பான உணவை உண்பதன் மூலம் உணவு சார்ந்த நோய்களை தடுக்க இயலும் மேலும், செறிவூட்டப்பட்ட உணவுகளை உண்பதால் நுண்ணிய சத்துக்களின் குறைபாட்டை தவிர்க்க இயலும் என்பதை மையப்படுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 12 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையானது, இந்திய தரநிர்ணய ஆணையம், பங்குதாரர்கள், உணவு வணிகர்கள் மற்றும் பல்வேறு துறையினருடன் கைகோர்த்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு என்ற செய்திகளை மக்களுக்கு சென்றடையச் செய்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் தமிழகத்துக்கு சிறந்த மாநிலத்துக்கான விருதை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுடான், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தலைவர் ரீட்டா டியோட்டியா, முதன்மைச் செயல் அலுவலர் பவன்குமார் அகர்வால், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் இயக்குநர் மரு. வனஜா மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர். #HealthyBharat
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை மறுநாள் ஊட்டிக்கு வருகை தரஉள்ளார். அப்போது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். #TNGovernor #Banwarilalpurohit
ஊட்டி:
இந்தியாவில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய மண்வள பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், வல்லுனர்களை கொண்டு இயங்கி வருகிறது.
இந்த சங்கம் மற்றும் ஊட்டியில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மண் மற்றும் நீர்வள தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகள் 25 பேருக்கு விருதுகளை வழங்குகிறார்.
மண் மற்றும் நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவு, மழைநீர் சேகரிப்பு மற்றும் காலநிலை மாற்ற சூழலில் அதன் பன்முக பயன்பாடு, மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு மதிப்பீடு செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம், தோட்டக்கலை பயிர்கள், வனங்கள் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், எந்திரமயமாக்கப்பட்ட மண் மற்றும் நீர் வள மேலாண்மை துல்லிய பண்ணையம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு உள்பட 10 தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கிறது.
கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
கருத்தரங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய மண்வள பாதுகாப்பு சங்க தலைவர் சுராஜ் பான், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதியம் 2 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க விருப்பம் உள்ளவர்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். #TNGovernor #Banwarilalpurohit
இந்தியாவில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய மண்வள பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், வல்லுனர்களை கொண்டு இயங்கி வருகிறது.
இந்த சங்கம் மற்றும் ஊட்டியில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மண் மற்றும் நீர்வள தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகள் 25 பேருக்கு விருதுகளை வழங்குகிறார்.
மண் மற்றும் நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவு, மழைநீர் சேகரிப்பு மற்றும் காலநிலை மாற்ற சூழலில் அதன் பன்முக பயன்பாடு, மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு மதிப்பீடு செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம், தோட்டக்கலை பயிர்கள், வனங்கள் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், எந்திரமயமாக்கப்பட்ட மண் மற்றும் நீர் வள மேலாண்மை துல்லிய பண்ணையம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு உள்பட 10 தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கிறது.
கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
கருத்தரங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய மண்வள பாதுகாப்பு சங்க தலைவர் சுராஜ் பான், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதியம் 2 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க விருப்பம் உள்ளவர்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். #TNGovernor #Banwarilalpurohit
குலசேகரன்பட்டினம் சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆசியாவிலேயே அதிகமான பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து கலந்துகொண்டதை சிறப்பிக்கும் வகையில் விருதுக்கான சான்றிதழ்கள் கோவில் நிர்வாக அலுவலரிடம் வழங்கப்பட்டது. #Kulasekarapattinam #MutharammanTemple
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி, 21-ந் தேதி நிறைவு பெற்றது. விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர்.
இந்த நிலையில் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய அமைப்புகள் சார்பில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வேடம் அணிந்து வந்த பக்தர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது.
இதில் ஆசியாவிலேயே அதிகமான பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தெரியவந்தது. இதை அங்கீகரிக்கும் விதமாக வழங்கும் விருதுக்கான சான்றிதழ்களை அந்த அமைப்பினர், கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியனிடம் வழங்கினர். கோவிலுக்கு வேடம் அணிந்து வந்த பக்தர்களின் எண்ணிக்கை பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர். #Kulasekarapattinam #MutharammanTemple
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி, 21-ந் தேதி நிறைவு பெற்றது. விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர்.
இந்த நிலையில் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய அமைப்புகள் சார்பில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வேடம் அணிந்து வந்த பக்தர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது.
இதில் ஆசியாவிலேயே அதிகமான பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தெரியவந்தது. இதை அங்கீகரிக்கும் விதமாக வழங்கும் விருதுக்கான சான்றிதழ்களை அந்த அமைப்பினர், கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியனிடம் வழங்கினர். கோவிலுக்கு வேடம் அணிந்து வந்த பக்தர்களின் எண்ணிக்கை பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர். #Kulasekarapattinam #MutharammanTemple
அமெரிக்காவில் சட்டமீறலான ஆள் கடத்தலை தடுத்து நிறுத்த சேவையாற்றிய இந்திய - அமெரிக்க பெண்ணான மினால் பட்டேல் டேவிஸ் அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதைப் பெற்றார். #IndianAmericanawarded #WhiteHouse #humantrafficking #USPresidentialaward #MinalPatelDavis
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டன் நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறுமிகள், பெண்கள் உள்பட சட்டமீறலாக நடந்துவரும் ஆள் கடத்தலை தடுக்க அந்நகர மேயர் தலைமையில் தனி குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
இந்த குழுவில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணான மினால் பட்டேல் டேவிஸ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். ஆள் கடத்தலை தடுப்பது தொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு கருத்தரங்கங்களில் உரையாற்றியுள்ள மினால் பட்டேல் டேவிஸ், தனது துறையில் ஆற்றிய சேவைக்காக அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ அவருக்கு இந்த விருதினை அளித்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நான் ஹுஸ்டன் நகர மேயர் அலுவலத்துக்கு செல்வேன். பெருமைக்குரிய இந்த வெள்ளை மாளிகைக்குள் நுழைவேன் என்று முன்னர் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததுகூட இல்லை என விருது வழங்கும் விழாவில் பேசிய மினால் பட்டேல் டேவிஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். #IndianAmericanawarded #WhiteHouse #humantrafficking #USPresidentialaward #MinalPatelDavis
தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர். #Modi #Amritanandamayi #SwacchBharat
புதுடெல்லி:
சர்வதேச தூய்மை மாநாடு புதுடெல்லி கலாசார மையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.
அவர் வழங்கிய ரூ.100 கோடி மூலமாக கங்கைக்கரையில் வசிக்கக் கூடிய ஏழை, எளிய மக்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஆசிரமத்தின் தூய்மைத் திட்டங்கள் குறித்த காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மாநாட்டில் மத்திய மந்திரிகள் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ், மனோஜ் சின்கா, ஹர்தீப்சிங்பூரி மற்றும் 50 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். #Modi #Amritanandamayi #SwacchBharat
சர்வதேச தூய்மை மாநாடு புதுடெல்லி கலாசார மையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.
அவர் வழங்கிய ரூ.100 கோடி மூலமாக கங்கைக்கரையில் வசிக்கக் கூடிய ஏழை, எளிய மக்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஆசிரமத்தின் தூய்மைத் திட்டங்கள் குறித்த காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மாநாட்டில் மத்திய மந்திரிகள் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ், மனோஜ் சின்கா, ஹர்தீப்சிங்பூரி மற்றும் 50 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். #Modi #Amritanandamayi #SwacchBharat
மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது முதியோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவையா துணை ஜனாதிபதியிடம் விருது பெற்றார். #VicePresident #VenkaiahNaidu #VeeraRaghavaRao
புதுடெல்லி:
மத்திய அரசு சார்பில் உலக முதியோர் தின விழா நேற்று டெல்லி விஞ்ஞான பவனில் நடந்தது. விழாவில் 2017-2018-ம் ஆண்டில் முதியோருக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவையாவும் விருது பெற்றார். இவர் மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது முதியோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
விழாவில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தாவர் சந்த் கெலாட், இணை மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, கிருஷ்ணா பால் குர்ஜர், விஜய் சாம்பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். #VicePresident #VenkaiahNaidu #VeeraRaghavaRao
மத்திய அரசு சார்பில் உலக முதியோர் தின விழா நேற்று டெல்லி விஞ்ஞான பவனில் நடந்தது. விழாவில் 2017-2018-ம் ஆண்டில் முதியோருக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவையாவும் விருது பெற்றார். இவர் மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது முதியோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
விழாவில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தாவர் சந்த் கெலாட், இணை மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, கிருஷ்ணா பால் குர்ஜர், விஜய் சாம்பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். #VicePresident #VenkaiahNaidu #VeeraRaghavaRao
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் பொன் மாணிக்கவேலுக்கு, அரசு விருது வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #BJP #PonRadhakrishnan #PonManickavel
நாகர்கோவில்:
சுசீந்திரத்தை அடுத்த தேரூரில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக நாடுகள் மத்தியில் ஒரு நாட்டிற்கு பெருமை கிடைக்க வேண்டும் என்றால் அந்த நாடு தூய்மையாக இருக்க வேண்டும். இதற்காகவே மத்திய அரசு தூய்மை பாரதம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
காந்தி கண்ட கனவை நனவாக்க பிரதமர் மோடி நேரடியாக தூய்மை பாரத திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எனவே தான் தெருக்களை நேரடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் பொது மக்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 6 கோடி கழிவறைகளே அமைக்கப்பட்டிருந்தன. மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று கூறிவருகிறார். அவர் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என எண்ணுகிறேன்.
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரி பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரை போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு மாநில அரசு முன்வர வேண்டும்.
கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தேரூர் பேரூராட்சியில் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார். #BJP #PonRadhakrishnan #PonManickavel
சுசீந்திரத்தை அடுத்த தேரூரில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக நாடுகள் மத்தியில் ஒரு நாட்டிற்கு பெருமை கிடைக்க வேண்டும் என்றால் அந்த நாடு தூய்மையாக இருக்க வேண்டும். இதற்காகவே மத்திய அரசு தூய்மை பாரதம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
காந்தி கண்ட கனவை நனவாக்க பிரதமர் மோடி நேரடியாக தூய்மை பாரத திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எனவே தான் தெருக்களை நேரடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் பொது மக்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 6 கோடி கழிவறைகளே அமைக்கப்பட்டிருந்தன. மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் குட்கா போன்ற போதை பொருட்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சனையில் இப்போது சிறுதுளிதான் வெளிவந்துள்ளது. மாநில அரசு இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரி பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரை போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு மாநில அரசு முன்வர வேண்டும்.
கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தேரூர் பேரூராட்சியில் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார். #BJP #PonRadhakrishnan #PonManickavel