என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 136029"

    இளையன்குடியில் புதிய பஸ் நிலையத்தை திட்டமிட்ட இடத்தில் அமைக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி யில் புதிய பஸ்நிலையம் அமைக்க சிவகங்கை ரோட்டில் கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். நகருக்கு வெளியே அமைப்பதாக பஸ்நிலைய எதிர்ப்பு  குழுவினர் பஸ்நிலையம்  அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இந்த நிலையில் அரசு சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டது. புதிய பஸ்நிலைய ஆதரவாளர்கள் குழு கூட்டம் தி.மு.க. நகர செயலாளர் நஜீமுதின் தலைமையில் நடைபெற்றது. இதில் திட்டமிட்ட இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். 


    தற்போது உள்ள பஸ் நிலையமும் தொடர்ந்து 5 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும். தற்போது உள்ள பஸ்நிலையத்தில் இருந்து புதிதாக அமைக்க உள்ள பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ்களும் மகளிர் கட்டணம் இல்லாத பஸ்களும் அதிக அளவில் இயக்க வேண்டும் என புதிய பஸ்நிலைய ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்ய பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. 

    நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் 228 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த  மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் வட்டக்கிணறு நடைமேடை மண் சரிந்து புதையுண்டு இறந்தவரின் வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 ஆயிரத்து 341 மதிப்பீட்டில் சலவை பெட்டியும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் தையல் எந்திரங்களையும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் கலால்துறை சார்பில் நடத்தப்பட்ட மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி களில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணே சன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரையில் 460 தெருநாய்களை பிடிக்க ரூ.3.22 லட்சம் செலவு செய்ததாக தகவல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில்,   துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை பரபரப்பாக காணப்பட்டது. கூட்டத்தில் 38 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தீர்மானமாக இந்துக்கள் மயான கரையில் மின்மயானம் ரூ.1கோடியே 41 லட்சம் செலவில் அமைப்பது குறித்து தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்ததை தொடர்ந்து அத்தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.கூட்டத்தில் 460 தெரு நாய்கள் பிடிக்க ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் செலவு செய்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டதால் நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். 

    கடந்த முறை ஒரு நாயை பிடிக்க ரூ.350 வழங்கிய நிலையில் தற்போது ரூ.700 வழங்கியதால் கடும் வாக்கு வாதம் நடந்து, பின்னர் தீர்மானம் நிறைவேறியது. 

    மேலும் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய்களை பழுது நீக்கி. குடிநீர் வழங்குவது குறித்தும், சாலைகள் அமைப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமலே பல பணிகளை நிறைவேற்றுவதாக கவுன்சிலர்கள்  குற்றம் சாட்டினர்.  அதைத்தொடர்ந்து மற்ற அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    கூட்டத்தில் கவுன்சிலர்கள், பொறியாளர் மீரான் அலி, மேலாளர் பத்மநாதன், துப்புரவு ஆய்வாளர் பூபதி உள்பட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மதுரை

    மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் கே.கே.நகர் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்  அண்ணாநகரில் பகுதி செயலாளர் அக்ரி கே.பி.டி.கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. அவைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். 

    இக்கூட்டத்தில் 10 வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.


    இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-


    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (3-ந் தேதி) அனைத்து வட்டங்களிலும் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு கலைஞர் பஸ் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும். இதற்காக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 


    மதுரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நகர் கே.கே.நகர் என அழைக்கப்படுகிறது. இதற்கு அரசாணை பெற வேண்டும். 


    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கலைஞர் ரெயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மதுரை வேளாண்  கல்லூரியை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தும் போது அதற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.
    • குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பாக, மாதம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து புகார் மனுக்களை பெற்று மக்களின் குறைதீர்க்கப்படுகிறது.

    அதன்படி ஜூலை மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 13-ந் தேதி மாலை 3 மணிக்கு பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 20-ந் தேதி மாலை 3 மணிக்கு திருச்செங்கோடு செயற் பொறியாளர் அலுவலகத்திலும், 27-ந் தேதி மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிர்வர்த்தி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ததால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. #Pongal
    சென்னை:

    பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கிடைத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னை கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் (மெப்ஸ்), தாம்பரம் ரெயில் நிலையம், பூந்தமல்லி, கே.கே.நகர் என சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து 3 ஆயிரத்து 529 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

    சென்னையில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணி நிமித்தமாக தங்கி உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் என பலரும் நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஆம்னி பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. பயணிகள் கூட்ட நெரிசலை தங்களுக்கு சாதகமாக்கி கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையடுத்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஊர்களுக்கும் வசூலிக்கப்படும் கட்டண பட்டியல் குறித்து ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் உள்ள கட்டணம் வழக்கத்தை விட கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் சார்பில் இயக்கப்படும் சொகுசு பஸ்களின் கட்டண விவரமும் தனியாக இடம் பெற்றுள்ளன.

    சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தென் மாவட்ட ரெயில்கள் அனைத்தும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது.

    பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வழிப்பறி திருடர்கள் யாரேனும் உலா வருகிறார்களா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம், மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம் இயக்கப்பட்டதால், கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னையில் இருந்து இன்று (சனிக்கிழமை) 3 ஆயிரத்து 741 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. #Pongal
    விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.
    விழுப்புரம்:

    நாட்டின் 72-வது சுதந்திர தின விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப்-கலெக்டர்கள் சாருஸ்ரீ, மெர்சிரம்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

    சுதந்திர தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும் செய்திட வேண்டும், சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கவுரவிப்பதோடு அவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும், கல்வித்துறையினர் மாணவ- மாணவிகள் மூலம் சிறப்பான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை தேர்வு செய்து பரிசு வழங்க வேண்டும். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
    காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எம்.பி.க்களுக்கு பரிசு வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூரு:

    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகம், நாடாளுமன்றத்தில் விவாதித்து, அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. பாராளுமன்றம் தொடங்கும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாளை டெல்லியில் கர்நாடக மாநில எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் (ஐ–போன்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்கள் வைக்கும் வகையில் விலை உயர்ந்த பேக் வழங்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.



    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம் நாளை(இன்று) மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அழைப்பிதழுடன் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போன் பரிசாக வழங்கியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு செல்போன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு செல்போன் வழங்கப்பட்டு இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி நான் விசாரிக்கிறேன்” என்றார்.

    இதற்கிடையே  என்னுடைய சொந்த செலவில் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை தான் வழங்கியதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். வழங்கப்பட்ட செல்போனை பா.ஜனதாவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. திருப்பி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக முதல்–மந்திரி குமாரசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டி இருப்பதாக எனக்கு கர்நாடக அரசிடம் இருந்து அழைப்பு வந்தது. அத்துடன் ரூ.1 லட்சம் விலை மதிப்புள்ள ஒரு ‘ஐ போன்‘ அதாவது செல்போனை அனுப்பி இருக்கிறீர்கள்.

    அரசின் வீண் செலவுகளை குறைப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை பரிசாக வழங்கி இருக்கிறீர்கள். இது சரியா?. துப்புரவு தொழிலாளர்களுக்கு மாநில அரசால் சம்பளம் வழங்க முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் நான் அரசு வழங்கியுள்ள செல்போனை ஏற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளேன். அந்த போனை உங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன். நமது நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள தொடர்ந்து உழைத்து வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 
    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

    ஏற்கனவே, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறிவந்தார். இந்த எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. மேலும், பழைய உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளவும் உறுப்பினர்கள் புதுப்பிப்பு பணியும் நடைபெற்றது.

    ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, டி.டி.வி.தினகரன், திவாகரன், ஜெ.தீபா ஆகியோர் தலைமையில் புதிய அணிகள் உருவானதால், எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்த முடியவில்லை. இதனால், உறுப்பினர்கள் சேர்க்கைக்கான காலக்கெடு அதிகரிக்கப்பட்ட போதிலும், அந்தப் பணி மந்தகதியிலேயே நடைபெற்றது.

    நேற்று முன்தினம் வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்கள் புதுப்பிப்பு என 90 லட்சம் பேர் மட்டுமே அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த 1½ கோடி தொண்டர்களில் இருந்து பெரும் பாலானவர்கள் விலகியதை கேட்டு, அ.தி.மு.க. தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

    இந்த நிலையில்தான், அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்கள் சேர்க்கை குறைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருத்து கேட்க இருக்கின்றனர். அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை அ.தி.மு.க. தலைமை எடுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
    கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #KamalHaasan
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க.வுக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?.

    பதில்:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும் பயன்படுத்தி, எந்தளவுக்கு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே நாடறிந்த உண்மை. அதேநிலையை, இப்போது கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அரங்கேற்றி இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பிரதமராக இருக்கும் மோடி இப்படி தொடர்ந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.



    கேள்வி:-திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், 19-ந் தேதி (நாளை) கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா?.

    பதில்:-தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநில கவர்னர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

    சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×