என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா"

    • போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
    • நாட்டின் மீது குற்றம்சாட்டப்படுவது முதல் முறை.

    அமெரிக்க தேசிய உளவுப்பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆண்டு அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் ஃபெண்டாலின் தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் இந்தியா மற்றம் சீனாவில் இருந்து அதிகளவில் தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்தியா மீது இத்தகைய குற்றம்சாட்டப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இந்தியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பல்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. எனினும், ஒட்டுமொத்த நாட்டின் மீது குற்றம்சாட்டப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு சமீப காலங்களில் பெருமளவு அதிகரித்து வருகிறது. போதை பொருள் பயன்பாட்டை குறைக்கவும், சட்டவிரோத போதை பொருள் கடத்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில், போதை பொருள் தயாரிப்புக்கான ஃபெண்டானில் என்ற ரசாயன கடத்தலில் சீனா மற்றும் இந்தியா தான் முன்னிலையில் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ஃபெண்டானில் என்ற ரசாயனக் கலவை வலி நிவாரணி வடிவில் வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    ஃபெண்டானில் ரசாயம் செயற்கை போதையை உருவாக்கும் தன்மை கொண்டது ஆகும். சில வகை அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் ஃபெண்டானில் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்து இருக்கிறது. எனினும், இதன் அளவு சற்று அதிகரித்தாலும் போதைப் பொருளாக மாறும் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து பயன்படுத்தும் போது, மக்கள் இதற்கு அடிமையாகவும் வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக போதை பொருள் தயாரிக்கும் கும்பல்கள் இந்த ரசாயனத்தை போதைப் பொருளாகவே மாற்றியுள்ளன. இது பொடி மற்றும் மாத்திரை வடிவில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமெரிக்க போதை பொருள் கடத்தல் கும்பல்கள் ஃபெணடானில் தயாரிப்பதற்கான ரசாயனங்களை பெரும்பாலும் சீனாவில் இருந்து அதிகளவில் வாங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஃபெண்டானில் போதை பொருளை அதிகம் எடுத்துக் கொண்டதால் 52 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பதை அடுத்து, இதனை ஒழிக்கும் முயற்சிகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்காகவே ஃபெண்டானில் தயாரிப்பதற்கான ரசயானங்களை தயாரிக்கும் சீனா மீது அதிபர் டிரம்ப் அதிக வரி விதிப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும், போதை பொருள் கடத்தலை தடுத்த தவறியதாக கனடா மற்றும் மெக்சிகோ மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

    • இந்தியாவில் 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
    • இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ராஜீவ் ரஞ்சன்சிங் பேசினார். அவர் பேசியதாவது:-

    மோடி அரசு கடந்த 2014-ம் ஆண்டு ராஷ்டிரீய கோகுல் மிஷன் என்ற திட்டத்தை தொடங்கியது. அப்போது இருந்து நாட்டில் பால் உற்பத்தி 63.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில், பால் உற்பத்தி மேலும் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

    தற்போது, உலகிலேயே பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு இந்தியாதான். 23 கோடியே 90 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில், பால் உற்பத்தியை 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    இந்தியாவில், 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 75 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம் ஆகும்.

    ராஷ்டிரீய கோகுல் மிஷனின் நோக்கம், உள்நாட்டு கால்நடை இனங்களை பராமரித்து, மேம்படுத்துவதுடன், பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரித்து, பால் உற்பத்தியை உயர்த்துவது ஆகும். இதன்மூலம், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் சேவை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.

    2024-ம் ஆண்டில் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவர்களில் 4-ல் ஒரு பங்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் ஆவார்கள் என்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    நாய்க்கடி பாதிப்புக்கு மருந்து இருக்கிறது என்றாலும், வெறிநாய்க் கடியால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் பிழைப்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. அதாவது, நாய்க்கடியால் பாதிக்கப்படும் ஒருவர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் அதில் இருந்து மீண்டு விடுகிறார்.

    ஆனால் அதுவே நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் கிருமிகள் (வெறிநோய்) நேரடியாக மூளையை தாக்கும்போதுதான் அந்த நபர் மரணத்தை தழுவும் சூழல் ஏற்படுகிறது. இதனை வெறிநாய்க்கடி பாதிப்பு என்றும் சொல்கிறார்கள்.

    இப்படியாக உலகளவில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறிநாய்க்கடி பாதிப்பால் மரணம் அடைவதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    உலகளவில் இந்தியாவை எடுத்துக்கொண்டால், நாய்க்கடி பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருவதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    அதன்படி, இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் 5 லட்சத்து 19 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.

    நாய்க்கடி பாதிப்பில் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக தமிழகம்தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த 2024-ம் ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 4 லட்சத்து 41 ஆயிரத்து 804 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 54 ஆக இருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு 2023-ம் ஆண்டில் 50 ஆகவும், 2022-ம் ஆண்டில் 21 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது 61.8 கோடிக்கு ஏலம் போனது.
    • எம்.எப்.ஹூசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் இது ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ஓவிய கலைஞர் எம்.எப்.ஹூசைன். இந்தியாவின் பிகாசோ என போற்றப்படும் உலக புகழ்பெற்ற இவர் உலகம் முழுவதும் கலை மற்றும் உரையாடல்களை ஊக்குவிக்கும் இந்தியாவின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

    இவர் கடந்த 1954-ம் ஆண்டு வரைந்த பெயரிடப்படாத ஓவியம் (கிராம யாத்திரை) என்ற ஓவியம் அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற கிறிஸ்டி ஏலத்தில் பங்கேற்றது. சுதந்திர இந்தியாவின் பன்முக தன்மை மற்றும் சுறுசுறுப்பை கொண்டாடும் எம்.எப்.ஹூசைனி படைப்பாக கருதப்படும் இந்த ஓவியம் 13.8 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.119 கோடி) ஏலம் போய் உள்ளது. இது முந்தைய சாதனையான அமிர்தா ஷெர்-கில்லின் தி ஸ்டோரி டெல்லர் படத்தை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாகும்.

     

    ரூ.119 கோடிக்கு ஏலம்போன ஓவியம்.

    கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது 61.8 கோடிக்கு ஏலம் போனது. இந்த சாதனையை தற்போது எம்.எப்.ஹூசைனின் படைப்பு முறியடித்துள்ளது.

    ஏலத்தை நடத்திய நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எம்.எப்.ஹூசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் இது ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஒரு முக்கியமான தருணம் என்றார்.

    இந்த ஓவியத்தை இந்தியாவின் முக்கிய கலை சேகரிப்பாளரான கிரன் நாடாரின் கலை அருங்காட்சியகம் (கே.என்.எம்.ஏ.) ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆர்.பி.ஜி. நிறுவன தலைவரும், கலை சேகரிப்பாளருமான ஹர்ஸ்கோயங்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், எம்.எப்.ஹூசைனின் கிராம் யாத்திரா ஓவியம் ரூ.100 கோடி தடையை உடைத்து கிரன் நாடாருக்கு 13.8 மில்லியன் டாலருக்கு விற்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

    • இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம்.
    • முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இந்தியாவின் முதல் எடைக்குறைப்பு மருந்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின் எடைக்குறைப்பு மருந்தான மவுஞ்சாரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Eli Lilly நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த எடை குறைப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மருந்தை தயாரித்துள்ள Eli Lilly நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    உடல் பருமன், நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளதால் அதற்கு தீர்வு காணும் வகையில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    • இந்தியாவுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.
    • எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    மேலும், இந்தியா அதிக வரி விதிக்கிறது. எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன என தெரிவித்தார்.

    டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்பால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது என சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

    இந்நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.

    ஆனால், இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர்.

    அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என நான் நம்புகிறேன்.

    ஏப்ரல் 2-ம் தேதி அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை நாமும் அவர்களிடம் வசூலிப்போம் என தெரிவித்தார்.

    • அந்த தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது.
    • இந்தியர்களிடமிருந்து அன்பை உணர்கிறார்.

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த ஒன்பது மாதங்கள் சிக்கத் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

    சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியது குறித்து அவரது குடும்பத்தார் (அண்ணி) தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர். அப்போது, "அந்த தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது. எங்களிடம் அவர் எப்போது இந்தியா வருவார் என்ற தகவல் இல்லை. ஆனால் அவர் நிச்சயமாக விரைவில் இந்தியாவுக்கு வருவார் என நம்புகிறேன்," என்று சுனிதா வில்லியம்ஸ் அண்ணி ஃபல்குனி பாண்ட்யா தெரிவித்தார்.

    "அவர் இந்தியா மற்றும் இந்தியர்களிடமிருந்து அன்பை உணர்கிறார். அவர் திரும்பி வருவார் என்பது எனக்குத் தெரியும். இது நேரம், அட்டவணை மற்றும் தளவாடங்களின் விஷயம்" என்று திருமதி பாண்ட்யா கூறினார்.

    சுனிதா வில்லியம்ஸ் வீடு திரும்பிய பிறகு, கோவிலில் இருந்து பேட்டியளித்த பாண்ட்யா, "எல்லாம் நன்றாக நடந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்ததாக," கூறினார்.

    • முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
    • இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தனர்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் வென்ற அணிக்கும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசு தொகையை வழங்கினர்.

    9 ஃபோர்கள் அடித்த விருது- அம்பதி ராயுடு - 50 ஆயிரம் ரூபாய்

    அதிக சிக்ஸ் அடித்த விருது- அம்பதி ராயுடு - 50 ஆயிரம் ரூபாய்

    கேம்சேஞ்சர் ஆஃப் தி மேட்ச் விருதை ஷபாஸ் நதீம் வென்றார்

    சிறந்த பவுலருக்கான விருதை ஷபாஸ் நதீம் வென்றார்

    ஆட்ட நாயகன் விருதை 50 பந்துகளில் 74 ரன்கள் அடித்த அம்படி ராயுடு வென்றார்.

    இந்த சீசனில் அதிக ஃபோர் எடுத்த குமார் சங்கக்காரா (38 ஃபோர்ஸ்) 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.

    இந்த சீசனில் அதிக சிக்ஸ் எடுத்த ஷேன் வாட்சன் (25 சிக்ஸ்) 5 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.

    சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெற்றி பெற்ற இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு 1 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    இரண்டாவது இடம் பிடித்த ரன்னர் அப் அணியான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    • கடந்த 11-ந் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    புதுடெல்லி:

    தற்போது, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் அமலில் உள்ளன.

    இந்நிலையில், மேற்கண்ட 4 சட்டங்களுக்கு பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. கடந்த 11-ந் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    இந்த மசோதாவில், தற்போதைய 4 மசோதாக்களில் ஏற்கனவே உள்ள பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், குடியுரிமை தொடர்பான எந்த அம்சமும் இடம்பெறவில்லை.

    இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுதல், அனுமதிக்கப்பட்ட நாட்களை தாண்டி வெளிநாட்டினர் தங்கியிருத்தல் ஆகிய பிரச்சினைகளை கையாள இம்மசோதா பயன்படுகிறது.

    இந்த மசோதா நிறைவேறியவுடன், பழைய 4 மசோதாக்களும் ரத்து செய்யப்படும். சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கேற்ப இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    இந்தியாவில் நுழைவதற்கும், தங்குவதற்கும், வெளியேறுவதற்கும் போலி பாஸ்போர்ட்டையோ அல்லது போலி விசாவையோ அல்லது முறைகேடாக பெறப்பட்ட பயண ஆவணங்களையோ பயன்படுத்தினால் அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு குறையாமலும், 7 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    அத்துடன், ரூ.1 லட்சத்துக்கு குறையாமலும், ரூ.10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

    உரிய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள்வரையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும்.

    வெளிநாட்டினர் தங்கியிருக்கும் தகவலை ஓட்டல்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தெரிவிப்பது கட்டாயம் ஆகும். அதன்மூலம் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.

    மேலும், விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம்.

    வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ராய்ப்பூர்:

    முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது.

    • 2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது.
    • தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையை நாம் அமல்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையில் மும்மொழி கொள்கையை திணிப்பது எந்த விதத்தில் நியாயம். வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். பேச்சு மொழி இந்தி, அரசு மொழி, பயிற்சி மொழி, பாட மொழி என்று அனைத்தும் இந்தி தான்.

    2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களையே நியமிக்கவில்லை. தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நான் பார்த்தவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படவில்லை. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டை மட்டும் குற்றம் சாட்டி, மும்மொழி கொள்கையை அமல்படுத்தாததால் நிதி தரமாட்டோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளிலும் தமிழையே கற்றுக் கொடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இந்த பிரச்சனையில் பா.ஜ.க.வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்.

    பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

    • உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது
    • குவாட் கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

    உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக இருப்பதால், தடுப்பூசிகளின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான குவாட் (QUAD) கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது என்றும் கூறினார்.

    உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பனா ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவு குறித்து பேசிய அவர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கும் என்றார்.

    ×