என் மலர்
நீங்கள் தேடியது "கன்னியாகுமரி"
- குளச்சல், இரணியல், அடையாமடை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
- திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இந்தநிலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. நாகர்கோவிலில் நேற்று மாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது.
கனமழையின் காரணமாக பீச்ரோடு, இருளப்பபுரம், வைத்தியநாதபுரம், வடலிவிளை, புன்னைநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் நள்ளிரவு அதை சரி செய்து மின் இணைப்பை வழங்கினர்.
கோழிப்போர்விளை பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 195 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
குளச்சல், இரணியல், அடையாமடை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கன மழை பெய்தது. பேச்சிப்பாறை அணைப்பகுதியில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, களியல், குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30 அடியாக இருந்தது. அணைக்கு 793 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25.70 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 125.4, பெருஞ்சாணி 37.6, சிற்றாறு 1-60.2, சிற்றாறு 2-56.6, கொட்டாரம் 2.2, மயிலாடி 1.2, நாகர்கோவில் 44.6, கன்னிமார் 7.6, ஆரல்வாய்மொழி 3.6, பூதப்பாண்டி 5.2, முக்கடல் 18, பாலமோர் 38.2, தக்கலை 49, குளச்சல் 14, இரணியல் 74, அடையாமடை 128.4, குருந்தன்கோடு 23, கோழிப்போர்விளை-195, மாம்பழத்துறையாறு 57, ஆணைக்கிடங்கு 55.6, களியல் 46.4, குழித்துறை 32.4, சுருளோடு 61.4, திற்பரப்பு 5.4, முள்ளங்கினாவிளை 16.6.
- திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர்.
- சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர். அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.
அதேபோல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது.
- விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது
நாகர்கோவில்:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு, கோதையாறு, தடிக்காரண்கோணம், கீரிப்பாறை, கொட்டாரம், மயிலாடி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. கொட்டாரத்தில் 3.4, சிற்றாறு-1 பகுதியில் 1.8 மில்லி மீட்டர், சிற்றாறு-2 பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
இந்த மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். நாகர்கோவில் மாநகர் பகுதியில் இன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.
காலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்குச் சென்று ஆண்-பெண் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
- சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பேரணியை வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிறைவு செய்து வைக்கிறார்.
கன்னியாகுமரி:
மத்திய தொழில் பாதுகாப்புப்படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 125 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜா ஆதித்ய சோழன் ஆர்.டி.சி.மையத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.
"சுரக்ஷித் தட் சம்ருத் பாரத்" எனப்படும் பாதுகாப்பான கடல் வளம் செழிப்பான இந்தியா என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்த சைக்கிள் பேரணி ஒரு விளையாட்டு நிகழ்வாக மட்டுமின்றி தேசப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்தியாவின் கடற்பாதி பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கடத்தல் போன்ற அபாயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது இதன் முக்கிய நோக்கம். வடக்கு, தெற்கு 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேரணி நடந்து வருகிறது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கடந்து மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 553 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் வருகிற 31-ந்தேதி நிறைவு செய்கின்றனர்.

இந்த பேரணியை வருகிற 31-ந்தேதி கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நிறைவு செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா 31-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். இதைத்தொடர்ந்து இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) தென் மண்டல ஐ.ஜி. சரவணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கூடங்குளம் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் மாங்கா சவுத்ரி, உதவி கமாண்டர் அசீம் பரத்வாஜ், ஆய்வாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ெரயில் பெட்டிகளுக் கான இணைப்பு துண்டிக் கப்பட்டதையடுத்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துண் டிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஏற்பட்டதால் ரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் ெரயிலை விட்டு இறங்கினர்.
- பின்னர் அவர்கள் நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலமாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றனர்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட இணைப் பை சரி செய்தனர்.
நாகர்கோவில், அக்.27-
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வரு
கிறது.
இணைப்பு துண்டிப்பு
நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு நாகர்கோவில் ெரயில் நிலையத்தை வந்த டைந்தது. இதையடுத்து ெரயிலில் இருந்து பயணிகள் இறங்கினார்கள். கன்னியா குமரிக்கு செல்லும் ெரயில் பயணிகள் மட்டும் ெரயிலில் அமர்ந்திருந்தனர்.
நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து நீண்ட நேரம் ஆகியும் ெரயில் கன்னியாகுமரிக்கு புறப்பட வில்லை. ெரயிலில் இருந்த பயணிகள் ெரயிலை விட்டு இறங்கினர். இது குறித்து விசாரித்த போது என்ஜின் பெட்டிக்கும் அதனுடைய இணைப்பு பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக் கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
சரி செய்தனர்
ெரயில் பெட்டிகளுக் கான இணைப்பு துண்டிக் கப்பட்டதையடுத்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துண் டிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஏற்பட்டதால் ெரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் ெரயிலை விட்டு இறங்கினர்.
பின்னர் அவர்கள் நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலமாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றனர்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட இணைப் பை சரி செய்தனர்.
தாமதம்
இதைத் தொடர்ந்து ெரயிலை கன்னியாகுமரிக்கு கொண்டு செல்ல நடவ டிக்கை எடுக்கப்பட்டது. காலை 7.40 மணிக்கு நாகர்கோவில் ெரயில் நிலை யத்திலிருந்து புறப்பட்டு கன்னியா குமரிக்கு சென்றது. சுமார் 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக சென்றது.
ெரயிலில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்த னர். ெரயில் நிலையத்தில் இணைப்பு துண்டிக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. நடுவழியில் இதே போன்று சம்பவம் நடந்திருந்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டிருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்த னர்.
- தொழிலாளர்களை பாதிக்கும் சட்டங்களை கண்டித்து நடக்கிறது
- நவம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது
நாகர்கோவில்:
இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ.) மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன் இன்று நாகர்கோவிலில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தொழிற்சங்க மைய(சி.ஐ.டி.யூ)த்தின் 15-வது மாநில மாநாடு வருகிற 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கி றது. தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மக்களை பாதிக்கும் அரசின் கொள்கைகள் ஆகியவை சம்பந்தமாகவும் எதிர் கால நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் திட்டமிடப்படும்.
பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதனை கைவிட வேண்டும். மேலும் மத்திய அர சின் பல்வேறு சட்டத்திரு த்தங்கள் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது.
பெட்ரோல்- டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஒரு புறம் இருக்க, படித்த இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தவறி விட்டது.
தி.மு.க. அரசு தொழிலா ளர் சம்பந்தமான பிரச்சினை களில் உாிய தீர்வுகள் காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் சம்பந்தமான தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதற்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்படும்.
குமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் தகவல் தொழில் நுட்ப பூங்கா ஆகிய வற்றை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தோட்டங்களை அதிகாித்தி டவும், முந்திரி தொழிலை பாதுகாத்திடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மீண்டும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமை, அமைதி, வளர்ச்சியை மையமாக வைத்து வருகிற 3-ந் தேதி யன்று சிறப்பு கருத்த ரங்கம், கலைவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெறஉள்ளது.
முன்னதாக சமூக ஒருமைப்பாட்டை முன்வைத்து வருகிற 2-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மினி மாரத்தான் நடைபெற உள்ளது. வருகிற 6-ந் தேதி நாகர்கோவிலில் சுமார் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணி, பொதுக்கூட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநாடு வரவேற்புக்குழு தலைவர் செலஸ்டின், செயலாளர் தங்கமோகன் மற்றும் நிர்வாகிகள் சித்ரா, அகமது உசேன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
- கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சு கூட்டு விலை அருந்ததியார் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார். விஜய் வசந்த் எம். பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியவில்லை
- போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தின மும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி யில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலை யில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத் துடன் பயணம் செய்து விவே கானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமரா ஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்க ரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.
+2
- தீயணைக்கும் படை வீரர்கள் மீட்டனர்
- 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய அந்த லிப்டில் அதிகப்படியாக 9 நபர்கள் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி வடக்குத் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வட மாநில சுற்றுலா பயணிகள் 9 பேர் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியைக் காண கன்னியாகுமரி கடற்கரைக்கு சென்றனர்.
அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு காலை 6.30 மணிக்கு அவர்கள் தங்கி இருக்கும் லாட்ஜுக்கு திரும்பி வந்தனர். இந்த லாட்ஜில் 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய "லிப்ட்" அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிகப்படியாக 9 நபர்கள் அந்த லிப்டில் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.அப்போது"லிப்ட்" பழுதாகி பாதிவழியில் நின்றது.
இதனால் அவர்கள் 9 பேரும் அந்த லிப்டில் சுற்றி தவித்துக் கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயனைக்கும் படை வீரர்கள் அந்த லாட்ஜுக்கு விரைந்து வந்தனர்.
தீயணைக்கும் படை வீரர்கள் மீட்பு கருவி மூலம் லிப்டில் சிக்கி இருந்த 9 வடமாநில சுற்றுலா பயணிகளை சுமார் 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
- 3-ந்தேதி தொடங்குகிறது
- கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுஉள்ளது.
இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது. இந்த கோவில் கட்டி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த கோவில் கட்டப்பட்ட பிறகுமுதல் முறையாக இந்த கோவிலில் பவித்ர உற்சவம் என்ற திருவிழா வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழா 6-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு ஆச்சாரிய ருத்வின்யம் நிகழ்ச்சியும் மாலை 6.30 மணிக்கு அங்குர அர்ப்பனமும்நடக்கிறது.
2-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. பின்னர் காலை 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்குயாகசாலை பூஜைநடக்கிறது.3-ம்திருவிழாவான 5-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது.
பகல் 12.00 மணிக்கு பவித்ர சமர்ப்பனமும் மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. 4-ம் திருவிழா வான 6-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் எழுந்தருளி நான்குமாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது. பின்னர் 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும் இரவு 8.30 மணிக்கு பூர்ணா குதி மற்றும் சிறப்பு மணி ஒலியுடன் விசேஷ பூஜையும் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து பகுமானம் அர்ச்சனையும் வெங்கடாஜலபதி சுவாமி யின் தலையில் அணி விக்கப்படும் கிரீடம் மூலம் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு ஏகாந்த சேவை யும் நடக்கிறது. இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வைகானசா ஆகம ஆலோ சகர் ஸ்ரீ விஷ்ணு பட்டாச் சார்யலு தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள 7 அர்ச்ச கர்கள் நடத்துகிறார்கள்.
இந்த பவித்ர உற்சவத்துக் கான ஏற்பாடுகளை சென் னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கன்னியாகுமரி வெங்கடா ஜலபதி கோவில் ஆய்வாளர் சாய்கிருஷ்ணா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
- பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
- குமரி மாவட்ட ரெயில்வே இருப்புப் பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக வட மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தக் கோரிக்கை புறக்கணி க்கப்பட்டு விடப்படும் புதிய ரெயில்கள், வழக்கம் போல் கேரளாவை மையப்ப டுத்தியே அறிவிக்கப்ப டுகின்றன. இதற்கான காரணம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநிலத்தின் கீழ் உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் தங்கள் மாநி லத்திற் குட்பட்ட பகுதிகள் வழியாக ரெயில்கள் இயக்க வேண்டும் என்று விரும்பு கிறார்கள்.
ஆனால் குமரி மாவட்ட ரெயில்வே இருப்புப் பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது.
தெற்கு ரெயில்வே மண்ட லத்தில் பொது மேலாளர், ரெயில்கள் இயக்கம் அதிகாரி, முதன்மை வணிக அதிகாரி பயணிகள் பிரிவு என முக்கிய பொறுப்புகளில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் முழுக்க முழுக்க பணிபுரிந்து வருகின்றனர். இதனால் தான் வட மாநில ரெயில்கள் கேரளா வழியாக இயக்கப்படுகின்றன.
தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியை தலைமை யிடமாக கொண்ட வட கிழக்கு எல்லை ரெயில்வே மண்டலம் சார்பாக திப்ருகர்-கன்னியாகுமரி அறிவிக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரெயிலும் கேரளா வழியாகத் தான் செல்கிறது.
இந்த ரெயிலை திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்க வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கை. இந்த ரெயிலுக்கு 2-ம் கட்ட பிட்லைன் பராமரிப்பு, நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தான் செய்யப்படுகிறது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பிட்லைன் பராமரிப்பு இட நெருக்கடி ஏற்படுகிறது.இதன் காரணமாக தென் மாவட்ட பயணிகள் பயன்படுத்தும் விதமாக புதிய ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் கன்னியாகுமரியில் இருந்து தற்போது வாராந்திர ரெயில்களாக இயக்கப்படும் திருக்குறள், ஹவுரா, மும்பை போன்ற ரெயில்களை தினசரி ரெயில்களாக மாற்றம் செய்து இயக்க முயற்சிகள் மேற்கொள்ளும் போது பிட்லைன் இட நெருக்கடியை காரணம் காட்டி இயக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்.
நாகர் கோவில்-ஷாலிமார் ரெயிலும் கேரள பயணிகள் வசதிக்காக தான் இயக்கப் படுகிறது. இந்த நிலையை மாற்ற, இந்த ரெயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என்றும் அவ்வாறு முடியாவிட்டால், அந்த ரெயில்களை கொச்சுவேலியுடன் நிறுத்தி விடலாம் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு திருவனந்தபுரம் கோட்டம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.
இந்த வழியில் புதிய ரெயில்களை இயக்கா விட்டாலும் பரவாயில்லை. கேரள பயணிகளுக்கு பயன்படும் வகையில் சுற்று ரெயில்களை நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இயக்காமல் இருந்தால் போதும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
மேலும் இது போன்ற ரெயில்கள் இயக்குவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டுமானால், நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரியில் இருந்து பால ராமபுரம் வரை யிலும் நாகர்கோவில்-திருநெல்வேலி வரையிலும் உள்ள இருப்புப் பாதைகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இதற்கு தமிழக எம்.பி.க்கள் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றனர்.
- நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குமரிக்கு வந்து செல்வார்கள்.
- தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய தொடர் விடுமுறைக்கு சுற்றுலா பயணிகள் வருவர்.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.
இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சபரிமலை சீசன் கால மாக கருதப்படுகிறது. மேலும் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசன காலங்களில் இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருப்பார்கள்.
அதுமட்டுமின்றி பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய தொடர் விடுமுறை காலங்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.
இந்த சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி களுக்கு வசதியாக கன்னியா குமரியில் நடைபாதை களில் சீசன் கடைகள் அமைப்பதற்கான அனு மதியை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் மூலம் வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி யில் சீசன் கடைகள் நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதனால் கன்னியா குமரியில் சீசன் கடைகள் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரியில் பேரூராட்சி நிர்வாகம் சீசன் கால முன்னேற்பாடுகளை செய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் முற்றிலுமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் 2 ஆண்டு களுக்கு பிறகு வருகிற 17-ந்தேதி கன்னியா குமரியில் சபரிமலை சீசன் தொடங்க உள்ளது. இதற்கிடையில் கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது குறித்து மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப் பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.இத னால் இந்த ஆண்டும் கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பதில் பேரூராட்சி நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
சீசன் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கன்னியா குமரியில் சீசனுக்கான எந்தவித முன்னேற்பாடு களும் செய்ய முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதாகவும் அதன் பிறகு தான் சீசனுக்கான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்ப டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.