என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர்"
- அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது
- இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் சில கும்பல்கள் ஈடுப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடுமையான நடவ டிக்கைகள் எடுத்து வரு கிறது. குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தினமும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்து உள் ளார்.
திருவட்டார் அருகே குமரன்குடி பகுதியில் மறை வான பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்யப்படு வதாக திருவட்டார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று மாலை திருவட் டார் போலீசார் குமரன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் நிற்பதை பார்த்து விசாரனை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
உடனே அவரை திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொண்டு விசாரனை செய்ததில் அவர் குலசேகரம் அருகே பழவிளை ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்த வினோத் (வயது 23) என்று தெரிய வந்தது. அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட் டலம் எங்கிருந்து வருகிறது. இதன் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள்.
இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.
- ஆடை வடிவமைப்பு குறித்த போட்டோ சூட் நடத்தி வருகிறேன்.
- தலையணை உறை, திரைச்சீலைகள் போன்றவை பொதுவாக ஒவன் துணியில் தயாரிக்கப்படும். ஆனால் நான் பின்னல் துணியில் தயாரிக்கிறேன்.
திருப்பூர்:
திருப்பூரை சேர்ந்த வாலிபர் விக்னேஷ் பின்னலாடையில் அசத்தலான நவீன ரக ஆடைகளை உருவாக்கி அசத்தி வருகிறார். திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலைப் பார்த்துக் கொண்டே கொரோனா காலத்தில் வைரசை விரட்டும் வகையில் வேப்பிலை, வாழையிலை முககவசத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், திருப்பூரில் பேஷன் டிசைனிங் கல்லூரியில் பட்ட படிப்பு படித்துள்ளேன். குடும்பத்தில் வறுமை நிலை இருந்தாலும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் கொரோனா சூழலில் பாதுகாப்பாக என் துறை சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று வேப்பிலை துணி முககவசம் தயாரிக்க திட்டமிட்டேன். வேப்பிலையை காயவைத்து அரைத்து பொடியாக்கி கெமிக்கல் கலக்காத சாயமாக மாற்றி அதில் துணிகளை நனைத்து எம்பிராய்டரி தைப்பது போல் தைத்து காதுகளில் அணிந்து கொள்ளும் அளவுக்கு மாஸ்க் தயாரித்தேன்.
மேலும் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை தயார் செய்துள்ளேன். அதன் படி கொரோனா உருவம் செய்து பிரிண்டிங் இட்டு செய்துள்ளேன். தலையணை உறை, திரைச்சீலைகள் போன்றவை பொதுவாக ஒவன் துணியில் தயாரிக்கப்படும். ஆனால் நான் பின்னல் துணியில் தயாரிக்கிறேன். இதை தவிரவும் புது வித ரகங்களில் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் என்னிடம் ஆலோசனை பெற வருவோருக்கு மார்டன் வடிவமைப்பு குறித்து விளக்கம் அளிக்கிறேன். பேஷன் ஷோக்களுக்கு வடிவமைப்பு செய்து தருகிறேன். ஆடை வடிவமைப்பு குறித்த போட்டோ சூட் நடத்தி வருகிறேன். பெண்களுக்கு் பிரத்யேக முறையில் மயில் தோகை முறையில் அலங்கார ஆடைகளை தயாரித்து கொடுக்கிறேன். சென்னையில் நடந்த நட்சத்திர மாடல் அழகுப்போட்டியில் நான் தயாரித்த ஆடைகளை அணிந்தவருக்கு பரிசு கிடைத்தது .இதனை அங்கீகரமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- காதலி உள்பட 4 பேர் மீது போலீசில் புகார்
- சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
குமரி மேற்கு மாவட்டம் வேர் கிளம்பி பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் டிப்ளமோ படித்து விட்டு தற்போது வெல்டிங் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதி யைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட் டது. இதையடுத்து இருவ ரும் நேரில் சந்தித்து பேசி னார்கள். தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில் காதல் விவகாரம் இருவர் வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது.
இந்த நிலையில் பெற் றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 2 ஆண்டு களுக்கு பிறகு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதையடுத்து காதலர்கள் இருவரும் உல்லாச வானில் சிறகடித்து பறந்தனர். காதலிக்கு ஏராள மான பரிசு பொருட்க ளையும் அவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவி கடந்த சில மாதங்களாக தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் காதலனுக்கு தனது காதலி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை சில நாட்களாக பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது கல்லூரி மாணவி அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் நெருங்கி பழகுவது தெரிய வந்தது. இருவரும் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தனர்.
இது குறித்து அந்த வாலிபர் தனது காதலியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதுடன் எனது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மனமுடைந்தார்.
பின்னர் தனது காதலி யிடம் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.இந்த நிலையில் நேற்று கல்லூரி மாணவி தனது முன்னாள் காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது வேர் கிளம்பி பகுதிக்கு வருமாறும் தான் பரிசுப் பொருட்களை திரும்ப தருவதாகவும் கூறி னார்.
இதையடுத்து அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வேர் கிளம்பி பகுதிக்கு வந்தார். அப்போது கல்லூரி மாணவி தனது புதிய காதலனுடன் மோட் டார் சைக்கிளில் வந்து இறங்கினார். அப்போது தனது பழைய காதலனிடம் பரிசு பொருட்களை தர முடியாது என்று கூறி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். உடனே இவரும் அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றார்.
திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினார்கள். அப்போது கல்லூரி மாணவி யும் அவரது காதலனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.படுகா யம் அடைந்த வாலிபர் சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார்.
இது குறித்து கொற்றி கோடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் தன்னை தாக்கிய இரண்டு வாலிபர்கள் மீதும் தனது காதலி மற்றும் டிரைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யுள்ளார். மேலும் அவர்கள் தாக்குவது போன்ற சி.சி.டி.வி. காட்சிகளையும் அவர் போலீசாரிடம் ஒப்ப டைத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள். பரிசுப் பொருட் களை வாங்க வரவழைத்த இடத்தில் காதலனை வாலி பர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
- அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகி றார்கள். போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக கஞ்சா புழக்கம் தற்போது குறைந்துள்ளது.
இந்த நிலையில் வடசேரி போலீசார் வடசேரி பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்த னர். அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த 350 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் விபரீத முடிவு
- வீடு கட்டிய கடன் இருப்பதால் சில மாதங்கள் கழித்து வாங்கி தருவதாக தந்தை கூறியதால் மனமுடைந்தார்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே உள்ள கொல்லாறை கைதக்கல் காலணியை சேர்ந்த வர் செல்வன். இவரது இளைய மகன் சஜின் (வயது 20). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு வெல்டிங் தொழில் செய்து வந்தார்.
இவர் தனது தந்தையிடம் புதியதாக ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி தர கேட்டு உள்ளார். வீடு கட்டிய கடன் இருப்பதால் சில மாதங்கள் கழித்து வாங்கி தருவதாக தந்தை செல்வன் கூறி உள்ளார். இதனால் சஜின் மனமுடைந்தார்.
நேற்று செல்வம் தனது மனைவி மற்றும் மூத்தமகனுடன் புதிய வீட்டில் தங்கி உள்ளார்.சஜின் பழைய வீட்டில் தூங்க சென்றார்.
இன்று காலையில் செல்வன், அவருக்கு காப்பி கொடுப்பதற்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டு கிடந்தது. கதவை தட்டிய போதும் சஜின் திறக்கவில்லை.
இதனை தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்த போது படுக்கை அறையில் வீட்டின் உத்திரத்தில் தூக்குபோட்டு சஜின் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு செல்வன் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சஜின் உடலைக் கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 29 )
- நாகூர் மீரான் தனது சகோதரியுடன் பேசி கொண்டு இருந்த போது 4 பேர் அவரை கடத்தி சென்றனர்.
திருச்சி,
திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவரது மகன் நாகூர் என்கிற நாகூர் மீரான் (வயது 29 ).இவர் சம்பவத்தன்று இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெரு ஆர்ச் அருகே தனது சகோதரி தாஜ் நிஷாவுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த திருச்சி பட்டவர்த்ரோடு பகுதியை சேர்ந்த சக்திவேல், விருமாண்டி, அரசு, டேஞ்சர் பாலா ஆகிய 4 பேரும் நாகூர் மீரானை கடத்தி சென்றனர். இதுகுறித்து நாகூர் மீரானின் சகோதரி தாஜ் நிசா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிந்து நாகூர் மீரானை கடத்திச் சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- வெடிகுண்டு வீசுவதாக பேசிய வீடியோ பதிவு காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரில் வசிப்பவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் மகன்கள் வீரமணி(வயது 23) மற்றும் அன்புமணி(20). இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ந்தேதி, நீலகிரி மாவட்டம் மசனகுடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் என்பவரின் மகன் பூபாலகிருஷ்ணன் கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற போது அவரை வழிமறித்து, ரூ.20 ஆயிரம்,செல்போன் ஆகியவற்றை வீரமணி, அன்புமணி, மேலும் 2 கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளனர். இந்த நிலையில், செந்தில் நகர் பகுதியில் இவர்களால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், புகார் அளித்தவர்களை கொலை செய்வதாகவும், போலீஸ் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசுவதாகவும் இவர்கள் பேசிய வீடியோ பதிவு காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வந்தது. இதையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- கைதான வாலிபர் மீது ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் வீரகனூர் அருகே உள்ள வடக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவினில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது பெயரில் அவரது உறவினரான தெற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் வீரமுத்து பெயரில் போலியாக பாஸ்போர்ட் 2002-ம் ஆண்டு எடுத்து சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து வீரமுத்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி இளமுருகன் மற்றும் போலீசார், ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜேஷ் நாடு திரும்பும் போது தகவல் கொடுக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையத்துக்கு அனுப்பினர்.
இதையடுத்து ராஜேஷ் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் பிடித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் எனக்கு 17 வயது என்பதால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. எனவே வீரமுத்து ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடி பாஸ்போர்ட் எடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ராஜேசை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் ெரயில் நிலையத்திலிருந்து இன்று அரசு பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றது. பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர். செட்டிகுளம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் திடீரென பஸ்ஸின் மீது கல்வீசினார்.
இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.அந்த வாலிபர் அந்த பஸ்ஸின் பின்னால் வந்த மற்றொரு பஸ் மீதும் கல்வீசி தாக்கினார். அந்த பஸ்ஸின் கண்ணாடியும் உடைந்தது. இரு பஸ்களின் கண்ணாடியும் உடைந்ததையடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை மீட்டு கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.உடைக்கப்பட்ட இரண்டு பஸ்களும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் எதற்காக கல்வீசி பஸ்சை உடைத்தார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் பிடிபட்ட வாலிபர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இரண்டு பஸ்களில் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் கோட்டாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2 செல்போன்கள், ரூ.13ஆயிரம் பறிமுதல்
- கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் ஆன்லைன் மூலம் கேரளா மற்றும் பூட்டான் மாநில லாட்டரிகள் விற்பனை செய்து பணம் வசூலித்து வருவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் முகமது அசாருதீன் (வயது 23) என்பதும், தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஆன்லைன் லாட்டரிகளை விற்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை கைது செய்தனர். அவர் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள கரிய கோவில் குன்னூர் அடியனூர் கிராமத்தில் கரியகோயில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர்.
- இதையடுத்து 2 டியூப்களில் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் அவரது வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி யையும் பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள கரிய கோவில் குன்னூர் அடியனூர் கிராமத்தில் கரியகோயில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் லாசர்கென்னடி தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, தங்கராஜ் (வயது 41) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 டியூப்களில் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் அவரது வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி யையும் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- தளவாடப் பொருட்களில் இருந்த 20 அடி நீளமுள்ள 37 இரும்பு குழாய்கள் காணாமல் போனது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமம் பட்டணத்தான் தோட்டத்தைச் சேர்ந்த கவின் குமார் என்பவர் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வைத்திருந்த 2 பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கவின் குமார் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்,பருவாய்ஊராட்சி இடையர்பாளையம் கிராமத்தில் திருப்பதி கார்டன் பகுதியில், சதீஷ் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்கான தளவாடப் பொருட்களை வீட்டின் முன்பு போட்டுள்ளார். இந்த நிலையில் தளவாடப் பொருட்களில் இருந்த 20 அடி நீளமுள்ள 37 இரும்பு குழாய்கள் காணாமல் போனது.இதுகுறித்து சதீஷ் காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள கரடிவாவி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது, அந்த வழியே வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்த போலீசார், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, பசுமாடுகள் மற்றும் இரும்பு கம்பிகளை அவர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் மேலும் விசாரணை செய்த போது அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாதாளமுருகன் மகன் பார்த்திபன்(வயது 25) என்பதும் தற்போது கோவை மாவட்டம் சிங்காநல்லூரில், இரும்பு ஆலையில் பணிபுரிந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 பசுமாடுகள் மற்றும் 37 இரும்பு கம்பிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.