search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைக்காலம்"

    • சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.
    • சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    கோடை காலம் தொடங்கியதையடுத்து தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.

    பொதுவாக கத்திரி வெயில் காலத்தில்தான் வெப்பம் வாட்டி வதைக்கும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.

    பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கேழ்வரகு கூழ், கம்பங் கூழ், மோர், இளநீர், பதநீர், நுங்கு போன்ற வற்றை பருகி வருகின்றனர்.

    பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்களில் மக்கள் தாகத்தை தணித்து வருகின்றனர்.

    சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வெயில் அதிகமாக இருக்கக் கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளன.

    சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா நகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.

    அதில் உயரம் அதிகமாக இருந்த காரணத்தால் கிழிய கூடிய சூழல் உருவான காரணத்தால் இந்த ஆண்டு அதன் உயரம் குறைக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் கற்க, கசடற கல்வி அறக்கட்டளை மற்றும் வி டீம் சமூக சேவை அமைப்பு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

    இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் தாளாளர் எம்.எம்.கே. முஹைதீன் இபுராஹிம் தலைமை வகித்தார். கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா ஷேக் தாவூத், திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலர் உஷாராணி, திருப்புல்லாணி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சேதுபதி, இல்லம் தேடி கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகவேல் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாமில் கலந்துகொண்ட 70-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஆளுமைத்திறன், ஆங்கில பயிற்சி, கைவினைப் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளை அளித்ததால் குழந்தைகள் பெரிதும் பயன் அடைந்ததாக குழந்தை களின் பெற்றோர்கள் தெரிவித்தனர். 

    இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை வி டீம் சமூக சேவை அமைப்பு நிர்வாகி எம்.எம்.கே.பாத்திமா நவ்ரா கற்க, கசடற கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஆய்சத் ஷிபான் செய்தனர்.
    ×