என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ருட்டி"

    • கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உழவர் சந்தை களில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது.
    • பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி அதிக மானதால் அதை விவ சாயிகள் கீழே கொட்டும் அளவிற்கு நிலைமை இருந்தது, இதனையடுத்து தர்மபுரி விவசாயிகள் தர்மபுரி வேளாண்மை விற்பனை மற்றும் வணி கத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) பாலசுப்பிர மணியத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அந்தக் கோரிக்கையை ஏற்று தர்மபுரியில் கூடுத லாக உற்பத்தியாகும் தக்கா ளியை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தக திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்து உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு மூலமாக சேலத்தில் உள்ள சூரமங்க லம், அஸ்தம்பட்டி தாத காப்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர் ஆகிய உழவர் சந்தைகளில் வெள்ளோட்ட மாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உழவர் சந்தை களில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. உழவர் சந்தைகளில் தர்மபுரி தக்காளி இதுவரை 150 டன் தக்காளி விற்பனை ஆகி உள்ளது. இதனை விவசா யிகளும் பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்,

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது. விவசாயிகள் பயனபெறும் வகையில் கடலூரில் உற்பத்தியாகும் பலாப்ப ழங்கள் சேலம் உழவர் சந்தை களில் தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்ய வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிர மணியம் நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதனையடுத்து நேற்று சூரமங்கலம் உழவர் சந்தையில் பலாப்பழம் விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரம ணியம் கலந்து கொண்டு பலாப்பழ விற்பனை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சூரமங்கலம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் பசுபதி, ஸ்ரீதேவி ,சரோஜினி உள்பட விவசாயிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், இன்னும் ஒரு சில வாரங்க ளில் மலைப்பிரதேசத்தில் விலை கூடிய பீட்ரூட், கேரட் பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய நடவ டிக்கை எடுத்து வருகிறோம். இதே போல் சேலத்தில் உற்பத்தியாகும் மாம்பழம் பழங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

    • முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார்.
    • 2 பேர் உள்பட 4 பேர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வல்லம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அன்புச்செல்வன் (வயது 23) இவர் மேல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த பட்டுராசா மகன் சிவமணி யிடம்கடனாக முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார்.

    தற்போது சொந்தமாக வாகனம் வாங்கி முந்திரி பயிர்ஏற்றி வருகிறார். இதனால் இவர்களுக்குள் தொழில் ரீதியாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அன்புச்செல் வனை சிவமணி, வெங்கடேசன் மற்றும் 2 பேர் உள்பட 4 பேர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த அன்புச்செல்வன் பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து மேல்மேட்டுக்குப்பம்சிவமணி, வெங்கடேசன்ஆகிய இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.

    • தன்வந்திரி பகவானுக்கான கோவில்கள் அபூர்வம்.
    • மூலிகைகளின் வாசனை தெய்வீகமாகக் கமழ்கிறது.

    கோவில் தோற்றம்

    மனிதனுக்கு உண்மையான செல்வம் நோய் நொடி இல்லாத வாழ்க்கைதான். அப்படி ஒரு வாழ்க்கையை நமக்கு அளிப்பவர் தன்வந்திரி பகவான். மகாவிஷ்ணுவின் அம்சமான அவரை, வேதங்கள் `தேவர்களின் மருத்துவர்', `ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள்' என்றெல்லாம் குறிப்பிடுகிறது. இருப்பினும் தன்வந்திரி பகவானுக்கான கோவில்கள் அபூர்வம். அப்படி அமைந்த சில ஆலயங்களில் பண்ருட்டியில் உள்ள தன்வந்திரி ஆலயமும் ஒன்று.

    நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பண்ருட்டியில் வாழ்ந்த பெருமாள் பக்தர் ஒருவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல ஊர்களுக்குச் சென்று பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவர் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் எந்த வெளியூருக்கும் சென்று பெருமாளை தரிசிக்க முடியவில்லை. பல நாட்களாக பிணி தொடர்ந்து நிலையில், தாம் இருந்த இடத்தில் இருந்தே திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருக்கும் தன்வந்திரி பகவானிடம், "என்னை நோய் நொடியில் இருந்து மீட்டெடுப்பாய் எம்பெருமாளே..." என மானசீகமாக வேண்டிக்கொண்டார். அதன் பலனாக அவர் மிக விரைவிலேயே குணமடைந்தார்.

    சிலநாட்களுக்குப் பிறகு அவர் கனவில் தோன்றிய தன்வந்திரி பகவான், "நான் எங்கும் இருக்கிறேன். எனவே திருவரங்கம் நேரில் வரமுடியவில்லையே என கவலை கொள்ளாதே! உங்கள் ஊரிலே எனக்குக் கோவில் அமைத்து வழிபடுங்கள். எல்லோரையும் நோய் நொடியில் இருந்து காக்கிறேன்" என்று கூற, அதன்படி கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில் என்று கூறப்படுகிறது.

     நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பு வாசல் வழியே நுழைந்தால், வியந்து போவீர்கள். அங்கே எழில் கொஞ்சும் மூலிகைத் தோட்டம், அதன் நடுவில் எம்பெருமாளின் அழகுமிகு ஆலயம் அமைந்திருக்கிறது. கோவில் வளாகத்திற்குள் பலவிதமான மூலிகைகளின் வாசனை தெய்வீகமாகக் கமழ்கிறது. அதை சுவாசிக்கும் பொழுது, மிகப்பெரிய ஆற்றலும், புத்துணர்ச்சியும் நம்மை தொற்றிக்கொள்ளும். ஆகவே இங்கே ஏராளமான பக்தர்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.

    கருவறையில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப் பூச்சியை கரங்களில் ஏந்தி, மார்பில் அமிர்த லட்சுமியோடு சேவை சாதிக்கிறார், மூலவரான தன்வந்திரி வைத்திய நாராயணப்பெருமாள். இவரது திரு உருவம் திருமலை திருப்பதி சிற்பக் கல்லூரியில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பு. இந்த ஆலயத்தில் இரவு நேரத்தில் நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்கே அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். காரணம், தினந்தோறும் இந்த ஆலயத்திலேயே நாட்டு வைத்தியரைக் கொண்டு தயாரிக்கப்படும் அமிர்த கசாயத்தை, சுவாமியின் அர்த்தஜாம பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

    அதுதவிர மாதம்தோறும் அமாவாசை அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அப்போதும் ஆயுர்வேத லேகியம் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதைப் பெற வெளியூர்களில் இருந்தும் பத்தர்கள் வருகிறார்கள். ஒருமுறையாவது இத்தலம் வந்து அமிர்த கசாயத்தையும், ஆயுர்வேத லேகியத்தையும் பெற்று உட்கொண்டால் எந்தவிதமான நோயும் நம்மை தாக்காது என்பது நம்பிக்கை.

    தினசரி சுப்ரபாத பூஜை, கோ பூஜையும் செய்யப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்ட வைகுண்ட பால மூர்த்தியை ஆண்டுக்கு ஒருமுறை, வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும். இந்த சிறப்பான நிகழ்வைக் காண பெருமளவில் பக்தர்கள், வைகுண்ட ஏகாதசி அன்று இவ்வாலயத்திற்கு வருகை தருவார்கள். அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி, தமிழ்மாத பிறப்பு, சுவாதி நட்சத்திர நாட்களில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தன்வந்திரி பகவானை மனதார பிரார்த்தனை செய்துகொள்ள, அவர்களுக்கு சுவாமியின் திருப்பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தாம்பூலம் பிரசாதமாகத் தரப்படுகிறது. அதை கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தில் கலந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். பெருமாள் கோவில்களில் முக்கிய பிரசாதம் புளியோதரை. ஆனால் இங்கு மருத்துவராக இருக்கும் தன்வந்திரி வைத்திய நாராயணப் பெருமாளுக்கு, தன்வந்திரி ஜெயந்தி அன்று ஒருநாள் மட்டுமே புளியோதரை நிவேதனமாக செய்யப்படுகிறது. புளி, மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால், அது பத்தியமாகவும் சொல்லப்படும். அதையொட்டியே இங்கே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே புளியோதரை நைவேத்தியம் செய்யப் படுகிறது.

    இவ்வாலயத்தில் கருடாழ்வாருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு உகந்த மூலிகைகள் நவக்கிரக சன்னிதியாக அமைக்கப்பட்டுள்ளது, வேறு எங்கும் காணமுடியாத சிறப்பம்சம். உங்களால் முடிந்தபோது இந்தக் கோவிலுக்கு ஒருமுறை வாருங்கள். உங்களுக்கு நல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் தந்து தன்வந்திரி பகவான் ஆசிர்வதிப்பார். இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே இருக்கும் நான்கு முனை சாலை அருகில் இந்த தன்வந்திரி கோவில் உள்ளது.

    • நாளோடை பலாதோப்பில் பலாபழ திருவிழா நேற்று நடந்தது.
    • வருமானத்தை பன்மடங்காகப் பெருக்குவது விளக்கப்பட்டது.

    பண்ருட்டி:

    பண்ருட்டியை அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தில் நாளோடை பலாதோப்பில் பலாபழ திருவிழா நேற்று நடந்தது.

    விழாவில் வேளாண், தோட்டக்கலை திட்டங்கள், பயிர் சாகுபடி, பலா ரகங்கள் குறித்தும், பயன்கள் குறித்தும், மத்திய, மாநில அரசின் பங்களிப்புகள் குறித்து வேளாண் அதிகாரிகள் பேசினர்.

    நிகழ்ச்சியில், பண்ருட்டி பலாவின் சிறப்புகளை அறிந்து கொள்ளவும். பலாவினுடைய இலை, பிஞ்சு, காய், பழம், பழத்தின் ஈக்கு, சுளை, கொட்டை, தொப்புள். மரம் இவைகளை மதிப்புக்கூட்டுதல் செய்து சந்தைப்படுத்துவது, வருமானத்தை பன்மடங்காகப் பெருக்குவது விளக்கப்பட்டது.

    பலாவின் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், கண்காட்சியில் பலாச்சுளை சாறு, பலாவத்தல், பலாச்சுளை, பலாகொட்டை அவியல், பலாச்சுளை அல்வா, பலா பிரியாணி, பலாச்சுளை பனிக்கூழ் (ஐஸ்கிரீம்)ஆகியவை இடம் பெற்றது.

    நாட்டு பலா கன்றுகள், பலா சாக்லேட், பலா பிஸ்கட், பலா பஜ்ஜி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி, அவல் வகைகள், நாட்டுச் சர்க்கரை, மரசெக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், நாட்டு காய்கறி, கீரை விதைகள், கண்காட்சியில் இடம் பெற்றது. இது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. மேலும் மரபு நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் மரபு மரங்களின் விதைகள் கண்காட்சி இடம்பெற்றது.

    முடிவில் அதிக சுவையுடைய பலா மற்றும் அதிக எடையுடைய பலாவின் உரிமையாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி பலா மேம்பாட்டுக் குழுவினர் செய்திருந்தனர். 

    • 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி மனு அளிக்க வந்தார்.
    • அக்கடவல்லி ஊராட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

    இன்று காலை இவர் ஏற்கனவே அளித்த 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அளிக்க வந்தார்.

    அந்த மனுவில், அக்கடவல்லி ஊராட்சியில் கடந்த 1.5.2011 முதல் 28.4.2021 வரை ரூ.9 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை என பல்வேறு துறை அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேலும் கடந்த 2021-ம் ஆண்டு கடலூர் வந்த முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில், எங்கள் பகுதிக்கு விசாரணை நடத்த வந்த அதிகாரிகளும் ஊராட்சியில் முறைகேடுகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. அதனால் இதனை எங்களால் விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.

    அதன் பிறகு தற்போது வரை விசாரணை நடைபெறவில்லை. அதனால் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ஒரகடம்-வாலாஜாபாத் சாலையில் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை என்ற இடத்தில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் சில உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

    கார் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக வந்து பள்ளத்தை கண்டதும் திடீரென பிரேக் போடுவதால் பின்னால் வரும் வாகனம் மோதி விபத்துகள் ஏற்படுகின்றது. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க இப்பகுதி மக்கள் பல முறை நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
    • சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களின் நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் வண்ணம் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    இதுவரை 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பழந்தமிழ் மக்களின் வாழ்வு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. கீழடிப் பகுதி அகழாய்வுகளில் சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான நிறைய நமக்கு தரவுகள் கிடைத்திருக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல் குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாட பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

    பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக வெம்பக்கோட்டை அகழாய்வில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி மற்றும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கழுத்தில் அணியும் நீல நிற கண்ணாடி மணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

    மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பகண்டை தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் நடந்துவரும் மேற்புற கள ஆய்வில் பழங்கால சுடுமண் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    • கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்ற பண்ருட்டி இளம் பெண் மாயமானார்.
    • கடலூர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எஸ்.கே.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மகள் வினிதா (19). இவர் பிளஸ்- 2 படித்துவிட்டு வீட்டில்இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடலூர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் இதுகுறித்து பண்ருட்டிபோலீசில் புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் சந்திரன் இதுகுறித்துவழக்கு பதிவு செய்து காணாமல் போன வினிதாவை தீவிரமாக தேடி வருகிறார்.

    ×